tag:blogger.com,1999:blog-1090760868399100799.post8555650271663963795..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: அன்புதான் என்னிடமுள்ள ஒரே செய்தி - இரோம் ஷர்மிளாசமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-38891993481184249022016-09-10T10:04:24.912-07:002016-09-10T10:04:24.912-07:00ஒப்பனையற்ற முகம். வாஞ்சையான பார்வை. இடையிடையே அவரு...ஒப்பனையற்ற முகம். வாஞ்சையான பார்வை. இடையிடையே அவருடைய நினைவு பரபரவென்று எங்கோ செல்வதையும் சடாரென்று மோதி பழைய இடம் நோக்கித் திரும்புவதையும் அவருடைய பார்வைகளின் போக்கினூடே யூகிக்க முடிகிறது. ஆங்கிலத்தில் உரையாடுகையில், நிதானமாக யோசித்து யோசித்துப் பேசுபவராகவும், மணிப்பூரியில் பேசுகையில் கடகடவென்று கொட்டுபவராகவும் தெரிந்தார். சிரிக்கும்போது சத்தமாக வாய்விட்டுச் சிரிக்கிறார். இக்கட்டான விஷயங்களைப் பேசுகையில், மௌனத்தில் ஆழ்ந்துவிடுகிறார். மூழ்கடிக்க முயலும் விரக்தி, ஏமாற்றம், வலி, எதிர்காலம் குறித்த குழப்பம், நிச்சயமின்மை... இவை யாவற்றின் மத்தியிலிருந்தும் விதியின் கைப்பற்றி விடுதலையை நோக்கி பிய்த்துக்கொண்டு பாய்பவர்போல இருந்தார். அரசியலைக் காட்டிலும் ஆன்மிகமே அவரை வழிநடத்துவதாகத் தோன்றியது. மணிப்பூர் களச் சூழலை உணர்ந்தபோது, அரசியல்ரீதியாக அவர் எடுக்கும் முடிவுகள் சரியானவைதானா என்று சொல்லத் தெரியவில்லை. அவரிடம் நிறைய அறியாமை (innocence) வெளிப்பட்டது. அதுவே அவரிடம் அறத்தைத் தாங்கி நிற்கும் அடிவேராகவும் தோன்றியது.#<br /><br />அரசியலை அரசியல்வாதிகள் மட்டும் கெடுக்கவில்லை. நம் எல்லோருக்குமே அதில் பங்கிருக்கிறது.#<br /><br />நாமெல்லாம் கேவலம் மனிதர்கள். நானும் ஒரு மனுஷி. ஒரு உயிரின் இயற்கையான, இயல்பான உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.#<br />இந்திய அரசாங்கம் என்னுடைய குரலுக்குச் செவி கொடுத்திருந்தால், அதை ஒரு நியாயமாக முன்வைத்து நான் என் மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான தரப்புகளின் வன்முறை எதிராகப் பேசியிருக்க முடியும். அவர்களின் போக்கையும் மாற்ற என்னால் ஒரு முயற்சி எடுத்திருக்க முடியும்#<br /> அரசாங்கம் என்னுடைய குரலுக்குச் செவிசாய்த்திருக்கலாம். வன்முறை வழியில் போராடிக்கொண்டிருப்பவர்கள் மத்தியில் அது ஒரு புது நம்பிக்கையை விதைத்திருக்கும்.#<br /><br /><br />முழுக்கட்டுரையையும் பேட்டியையுமே quote செய்யலாம் போல சமஸ்!<br /><br />கட்டுரை முலம் எங்களைக் கையோடு ஷர்மிளாவிடம் அழைத்துச் செல்கிறீர்கள்.பேட்டி முடியும் வரை(முடிந்த பின்னும் கூட) எங்களை கூடவே அமர்த்தியிருக்கிறீர்கள்.<br /><br />ஒரு பெண்ணின் வாழ்வில் 16ஆண்டுகள் என்ன சாதாரணமானதா? இந்தப் போராட்ட வாழ்வில் எத்தனை மனச்சிக்கல்கள் ஏற்பட்டிருக்கும். அவருக்கு உடல் பலமும் ஆன்ம பலமும் தொடர்ந்து கிட்டட்டும். நலம் வாழட்டும். அவரும் அவரது மணிப்பூர் சகோதர சகோதரிகளும் இயல்பு வாழ்க்கை வாழும் நாள் விரைவில் திரும்பட்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/01797481678698466529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-40954878788065931522016-09-09T20:47:04.926-07:002016-09-09T20:47:04.926-07:00தங்கள் மூலமாக வாசகர்கள் இந்தியாவின் முக்கிய ஆளுமைய...தங்கள் மூலமாக வாசகர்கள் இந்தியாவின் முக்கிய ஆளுமையாளரை மிகவும் நெருக்கமாகக் காணும் வாய்ப்பினைப் பெற்றோம். Courtesy: The Hindu (Tamil) என்ற குறிப்புடன் ஆங்கில இதழ்கள் மொழிபெயர்த்து வெளியிடுமளவு மிகவும் சிறப்பாக அமைந்துள்ள பேட்டிக்கு எனது வாழ்த்துகள். தமிழில் இந்த அளவு ஒரு பேட்டி என்பதானது முன்னணி ஆங்கில இதழ்கள்கூட புருவத்தை உயர்த்துமளவு ஆக்கியுள்ளது என்பதே உண்மை. எந்த ஒரு முயற்சியும் தோற்றதாக வரலாறு இல்லை. ஆத்மார்த்தமாக அவர் மேற்கொண்ட முயற்சிக்கும், அவரது மன உறுதிக்கும், அவரது இலக்கிற்கும் வெற்றி கிடைக்கும் என்று நம்புவோம். காலம் அதற்கான பதிலைக் கூறும். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-38114381681042128012016-09-09T03:48:44.733-07:002016-09-09T03:48:44.733-07:00சகோதரி இரோம் சர்மிளாவின் அடுத்த கட்ட போராட்டம் வெற...சகோதரி இரோம் சர்மிளாவின் அடுத்த கட்ட போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். தங்களின் 16 வருட தியாகத்திற்க்கு, ஒருநாள் நிச்சயம் பலன் கிட்டும். <br /><br />மிக நெடுதூரம் சென்று, சகோதரியினை பேட்டிகண்டதற்கு சகோதரர் சமஸ் அவர்களுக்கு நன்றி மேலும் தங்களுது பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்.Ismail Bin Haneefahttps://www.blogger.com/profile/02046619763978818870noreply@blogger.com