tag:blogger.com,1999:blog-10907608683991007992024-03-17T03:48:08.536-07:00சமஸ்சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger591125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-42189505072305052302021-09-29T06:28:00.002-07:002021-09-29T06:30:40.706-07:00அன்பு வாசகர்களே ‘அருஞ்சொல்’லுக்கு வாருங்கள்!<p style="-webkit-text-stroke-width: 0px; color: black; font-family: "Mukta Malar", Arial, sans-serif; font-size: 16px; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: start; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-decoration-thickness: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"></p><table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto;"><tbody><tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUoMJYWRwBT9pWyNwNSQd4jCHynTTV_IUCSaPbiGrMLMTt9M9goohKp9QEMluh6eS1TNJTUScUTc_ePm1moCIAkPrhS2AgmmmsEfZ0_eMk-UdYNO36fD6K01ag8wzQ4il3sISy4pEqH01r/s1200/Arunchol-FB.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="530" data-original-width="1200" height="176" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUoMJYWRwBT9pWyNwNSQd4jCHynTTV_IUCSaPbiGrMLMTt9M9goohKp9QEMluh6eS1TNJTUScUTc_ePm1moCIAkPrhS2AgmmmsEfZ0_eMk-UdYNO36fD6K01ag8wzQ4il3sISy4pEqH01r/w400-h176/Arunchol-FB.jpg" width="400" /></a></td></tr><tr><td class="tr-caption" style="text-align: center;">www.arunchol.com<br /></td></tr></tbody></table><br /><br /><p></p><p style="-webkit-text-stroke-width: 0px; color: black; font-family: "Mukta Malar", Arial, sans-serif; font-size: 16px; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: start; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-decoration-thickness: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"><span face=""Mukta Malar", Arial, sans-serif" style="-webkit-text-stroke-width: 0px; color: black; display: inline; float: none; font-size: 16px; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: start; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-decoration-thickness: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;">என் அன்புக்குரிய வாசகர்களுக்கு, வணக்கம்!</span></p><p style="-webkit-text-stroke-width: 0px; color: black; font-family: "Mukta Malar", Arial, sans-serif; font-size: 16px; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: start; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-decoration-thickness: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"><span face=""Mukta Malar", Arial, sans-serif" style="-webkit-text-stroke-width: 0px; color: black; display: inline; float: none; font-size: 16px; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: start; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-decoration-thickness: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"> </span>‘தி இந்து’ தமிழ் நாளிதழிலிருந்து விலகும்போது அடுத்த முயற்சியை உங்களிடம் தெரிவிப்பேன் என்று கூறியிருந்தேன். அந்த முயற்சி இப்போது கை கூடியிருக்கிறது. ‘அருஞ்சொல்.காம்’ - <span style="color: #0b5394;"><a href="http://www.arunchol.com">www.arunchol.com</a></span> தளம்தான் அது!</p><p style="-webkit-text-stroke-width: 0px; color: black; font-family: "Mukta Malar", Arial, sans-serif; font-size: 16px; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: start; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-decoration-thickness: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;">இனி அன்றாடம் என்னுடைய எழுத்துகளை இங்கே வாசிக்கலாம். கூடவே தமிழின் முக்கியமான ஆளுமைகளின் கருத்துகள், படைப்புகளையும் வாசிக்கலாம். அன்றாடம் ஒரு ‘தலையங்கம்’, ஒரு ‘சிறப்புக் கட்டுரை’ அல்லது ‘சிறப்புப் பேட்டி’, தளத்தில் வெளியாகும் படைப்புகளை முன்வைத்து வெளியாகும் வாசகர்கள் - ஆளுமைகளின் விமர்சனங்களைத் தாங்கி வரும் ‘இன்னொரு குரல்’… இப்படி மூன்று பதிவுகள் மட்டுமே வெளியாகும்.</p><p style="-webkit-text-stroke-width: 0px; color: black; font-family: "Mukta Malar", Arial, sans-serif; font-size: 16px; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: start; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-decoration-thickness: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;">தமிழில் நேரடிக் கட்டுரை ஒருநாள் என்றால், மொழிபெயர்ப்புக் கட்டுரை மறுநாள் என்கிற அளவுக்கு மொழிபெயர்ப்புகளுக்கு முக்கியத்துவம் தரவிருக்கிறோம். இந்தியாவின் முக்கியமான அறிவாளுமைகள், சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றும் தமிழ் அறிஞர்கள் பலரும் பங்களிக்கவிருக்கிறார்கள். </p><p style="-webkit-text-stroke-width: 0px; color: black; font-family: "Mukta Malar", Arial, sans-serif; font-size: 16px; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: start; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-decoration-thickness: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;">மூன்று பதிவுகளுக்கு மேல் வெளியிடக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருக்கிறோம். நுகர்வோர் இல்லை வாசகர்கள்; அவர்கள் மீது குப்பைகள்போல பதிவுகளைத் திணிக்கக் கூடாது என்ற எண்ணமே அடிப்படை. “அன்றாடம் அரை மணி நேரம் எங்கள் தளத்தில் செலவிடுங்கள்; உங்களுடைய மதிப்புமிக்க அறிவை மேலும் செறிவூட்டிக்கொள்ள உதவுகிறோம் என்ற உத்தரவாதத்தை நாங்கள் தருகிறோம்” என்பதே ‘அருஞ்சொல்’ முன்வைக்கும் வேண்டுகோள்.</p><p style="-webkit-text-stroke-width: 0px; color: black; font-family: "Mukta Malar", Arial, sans-serif; font-size: 16px; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: start; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-decoration-thickness: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;">என் மதிப்புமிக்க வாசகர்கள் உங்கள் ஒருவரையும் அருஞ்சொல் தளத்துக்கு வரவேற்கிறேன். இனி அங்கு நாம் உரையாடுவோம்!<br /></p>சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-80319393509459862822021-06-13T07:58:00.002-07:002021-06-13T11:02:45.905-07:00விடைபெறுகிறேன்: நன்றி தி இந்து!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjO3YssYJx4szzpRO9DGJ7H5iz5Jt3IzaMmuqC5xWhq52h-0KX8WeZVb6IiPBfSKsDMZ4P4KodwGQER8M5bR_rxxEUUYOIqGmYuJe02AlUddGHkCvIJjNGeGYJ2KkrxbP5LdZPCTNUQh6Bz/s2048/dayone.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1364" data-original-width="2048" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjO3YssYJx4szzpRO9DGJ7H5iz5Jt3IzaMmuqC5xWhq52h-0KX8WeZVb6IiPBfSKsDMZ4P4KodwGQER8M5bR_rxxEUUYOIqGmYuJe02AlUddGHkCvIJjNGeGYJ2KkrxbP5LdZPCTNUQh6Bz/w640-h426/dayone.jpg" width="640" /></a></div><p style="text-align: left;">எனது அன்புக்குரிய நண்பர்கள், வாசகர்களுக்கு, வணக்கம்!</p><p style="text-align: left;">இந்த வாரத்தோடு ‘இந்து தமிழ்’ நாளிதழிலிருந்து விடைபெற்றுக்கொண்டேன். 2013 ஜூன் மாதத்தில் ‘தி இந்து’ குழுமத்தில் தொடங்கிய என்னுடைய பணி, 2021 ஜூன் மாதத்தோடு நிறைவுக்கு வந்திருக்கிறது. நெகிழ்வான மனதுடனேயே வாழ்வின் அடுத்த கட்டம் நோக்கி நகர்கிறேன். </p><p style="text-align: left;"><span face="Arial, Helvetica, sans-serif" style="background-color: white; color: #222222; font-size: small;">ర</span></p><p><b><span></span></b></p><a name='more'></a><p style="text-align: left;"><b>ம</b>ன்னார்குடி போன்ற ஒரு சிறு நகரப் பின்னணியில், ‘அன்றாடம் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழைப் படி’ என்ற தன்னுடைய தாத்தாவின் கிடுக்குப்பிடியிலிருந்தும், ஆங்கிலத்தின் அவஸ்தையிலிருந்தும் தப்பிக்க, “ஐயா, நீங்கள் ஏன் தமிழில் உங்கள் நாளிதழைக் கொண்டுவரக் கூடாது?” என்று கேட்டு அந்தப் பத்திரிகையின் ஆசிரியருக்குக் கடிதம் எழுதிய ஒரு பள்ளிக்கூடச் சிறுவனுக்குப் பின்னாளில் அதே பத்திரிகையின் அலுவலகத்திலிருந்து, “தமிழில் நாங்கள் ஒரு பத்திரிகை தொடங்கவிருக்கிறோம். எங்கள் சிஇஓ உங்களைச் சந்திக்க விரும்புகிறார். உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறோம். ஹோட்டல் ட்ரைடென்ட்டில் சந்திக்கலாமா?” என்று செல்பேசி அழைப்பு வந்தால் எப்படி இருக்கும்? விதிபோலவே இருந்தது அது!</p><p style="text-align: left;">அப்போது இதழியலில் 135 வருடங்களைக் கடந்திருந்த ‘தி இந்து’ குழுமமானது ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்துத் தன்னுடைய தமிழ் நாளிதழை உருவாக்கும் பணியை ஒப்படைத்தது. அப்போது என் வயது 33. ஆசிரியர்அசோகன், நண்பர்கள் அரவிந்தன், கோலாகல சீனிவாசன், கவிதா முரளிதரன் நால்வரை ஒப்பிட, வயது, படிப்பு, அனுபவம் எல்லாவற்றிலும் சிறியவன். </p><p style="text-align: left;">இந்த உருவாக்க அணியை இங்கே குறிப்பிடக் காரணம் உண்டு. ஒரு நாளிதழில் எவ்வளவு உயரிய பதவிக்கும் சென்று பணியாற்றுவதும், ஒரு நாளிதழை உருவாக்குவதும் ஒன்றல்ல. நூறாண்டுகளுக்கு மேல் இதழியலில் ஒரு பெரிய அனுபவத்தையும், சர்வதேசப் பார்வையையும் கொண்டிருந்தாலும் ‘தி இந்து’ குடும்பத்தினர் தங்களை முழுமையாக விலக்கிக்கொண்டு எங்களிடம் இந்த உருவாக்கப் பணியை ஒப்படைத்தனர். முழு சுதந்திரத்தையும் அளித்தனர். ஆள் தேர்வு உட்பட எதிலும் அவர்கள் தலையீடு இல்லை. 1878 செப்டம்பரில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் ஆறு இளைஞர்களால் தொடங்கப்பட்ட வரலாற்றுப் பின்னணி அறிந்த ஒருவருக்கு, 2013 செப்டம்பரில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழைத் தொடங்க ஐந்து பேரைத் அவர்கள் தேர்ந்தெடுத்து, பணியை ஒப்படைத்ததன் ஒப்புமை புரியவரும்.</p><p style="text-align: left;">வெறும் இரு மாதக் காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை நேர்கண்டு, நூற்றுச் சொச்சம் பேரைத் தேர்ந்தெடுத்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களையும் அணைத்துக்கொண்டு இந்தப் பத்திரிகைக்கு ஓர் உருவத்தைக் கொடுத்தோம். குறைகள், நிறைகள் நிறைந்ததாயினும் 2013 செப்டம்பர் 16-ல் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் வெளியானபோது அது தனித்துவமானதாக இருந்தது. </p><p style="text-align: left;">இதன் பின்னர் என் கவனத்தை நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட நடுப்பக்கங்களில் செலுத்தலானேன். பத்திரிகையில் பத்தோடு ஒரு பக்கமாக அல்லாமல் நடுப்பக்கங்கள் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் தனித்துவமான அடையாளமாக மிளிர அபாரமான ஒரு சுயாட்சித்தன்மை எனக்கும் என்னுடைய அணியினருக்கும் கிடைத்தது. நாங்கள் உருவாக்கிய பக்கங்கள், நூல்களோடு மட்டுமல்லாமல், முன்னெடுத்த நிகழ்ச்சிகள், விருதுகள் என்று எல்லா முயற்சிகளிலும் அந்த சுதந்திரம் தொடர்ந்தது. தமிழில் வேறு எந்தப் பத்திரிகையிலும் இதுவரை நிகழ்ந்திராதது இது. இப்படியொரு ஜனநாயக வெளி இங்கு உருவாக ‘தி இந்து’ நிறுவனத்துக்கும், அதன் இயக்குநர்களுக்கும், அந்த ஜனநாயக வெளியைக் கண்ணியத்தோடு பாதுகாத்த ஆசிரியர் அசோகனுக்கும் நான் நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.</p><p style="text-align: left;">மிகச் சிறந்த நண்பர்கள் - அவர்களில் பலர் தனித்துவம் மிக்க ஆளுமைகள்; என்னைக் காட்டிலும் பல்வேறு சிறப்புத் திறன்களைப் பெற்றிருப்பவர்கள் - வ.ரங்காசாரி, எஸ்.சிவசுப்பிரமணியன், தே.ஆசைத்தம்பி, செல்வ புவியரசன், த.ராஜன், எஸ்.சண்முகம் ஆகியோர் எனக்கு அணியினராக வாய்த்தார்கள். அதேபோல, அணிக்கு வெவ்வேறு காலங்களில் பங்களித்தவர்களான வெ.சந்திரமோகன், நீதிராஜன், ம.சுசித்ரா, கே.கே.மகேஷ்; வடிவமைப்பாளர்கள் ஏழுமலை, ரீகன் இவர்கள் எப்போதும் உடன் இருந்தார்கள். அணிக்கு வெளியிலும், அரவிந்தன் தொடங்கி ஷங்கர்ராமசுப்ரமணியன் வரை ஒரு நீளமான நண்பர்களின் பட்டியல் இருந்தது. ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் என்றாலோ, நடுப்பக்கம் என்றாலோ என்னுடைய பெயர் தெரிய இவர்கள் அத்தனை பேருடைய அபாரமான உழைப்பும், அர்ப்பணிப்பு மிக்க அணிச் செயல்பாடுமே முக்கியமான காரணங்கள். </p><p style="text-align: left;">மிகத் தெளிவாக, தமிழ்ச் சமூகத்தின் அரசியல், பண்பாட்டு வெளியில் ஒரு பெரிய குறுக்கீட்டை ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்கங்கள் நிகழ்த்தின. காந்தி அதன் ஆன்ம வழிகாட்டலாக இருந்தார்.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnZ37VumFY-lbH4tFjNrMs9SyyFR1mnaibMGyCITODGDTDFbkPiNnMeWsJQDU57fCyYuGrjJV13SF7GJFTVfQyipBlLaM4ywbBvoyh5Kh6svbKI_15h2wTBZp-vdqp_mvzXv9Hj1oo4wJ3/s1200/gandhi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="778" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnZ37VumFY-lbH4tFjNrMs9SyyFR1mnaibMGyCITODGDTDFbkPiNnMeWsJQDU57fCyYuGrjJV13SF7GJFTVfQyipBlLaM4ywbBvoyh5Kh6svbKI_15h2wTBZp-vdqp_mvzXv9Hj1oo4wJ3/w414-h640/gandhi.jpg" width="414" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><p style="text-align: left;">பொதுவாக, நடுப்பக்கங்கள் என்றாலே பண்பாட்டு மேட்டுக்குடிகளும், வெறும் தரவுகள் அடங்கிய கட்டுரைகளும் புழங்கும் இடம் அது என்பதை உடைத்தெறிந்தோம். எவர் வேண்டுமானாலும் இங்கு எழுத முடியும் என்ற சூழலை உருவாக்கினோம். களத்துக்குச் சென்று, மக்களுடைய குரலைப் பதிவுசெய்து அதை அந்தந்த மக்களின் வட்டார மொழியிலேயே எழுதுவது என்பதில் தொடங்கி, வார்த்தைகளின் அரசியல் வரை கவனம் அளித்தோம். எல்லாக் கட்சியினரும் வாசித்து, விவாதிக்கும் களம் ஆக்கினோம்.</p><div class="separator" style="clear: both; text-align: left;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidWCQbbSk_4Ec3kSR0dyrwKfXufK3pF_vvXTFdw-t40bGhJBBU1LggRp9yNsRoAD7JlA0I08dgiDqQAehUoQFGOf0wlSY46uiVnMAIHNyyXFtSiMQ0qikZo8nOSt6DhYqRU626LhFZJ2JD/s2048/face+book1+3.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1152" data-original-width="2048" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidWCQbbSk_4Ec3kSR0dyrwKfXufK3pF_vvXTFdw-t40bGhJBBU1LggRp9yNsRoAD7JlA0I08dgiDqQAehUoQFGOf0wlSY46uiVnMAIHNyyXFtSiMQ0qikZo8nOSt6DhYqRU626LhFZJ2JD/w640-h360/face+book1+3.jpg" width="640" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKw0LNN-LEGLeevnOPp67I_sWIA6e3iSfiEzXqqhF2rAklPEi1lK_hIIMCqICHv3YWe04OBqpI2SHu39yOPtyFGGorM-omulcWWYeY0bwvMe6P8mQcx6OTQfiySZ3LV5MkzyYnxp4xmCwC/s2048/face+book1+7.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1152" data-original-width="2048" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKw0LNN-LEGLeevnOPp67I_sWIA6e3iSfiEzXqqhF2rAklPEi1lK_hIIMCqICHv3YWe04OBqpI2SHu39yOPtyFGGorM-omulcWWYeY0bwvMe6P8mQcx6OTQfiySZ3LV5MkzyYnxp4xmCwC/w640-h360/face+book1+7.jpg" width="640" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAo9QUKK6oCxWRnejIi6fQbQf8j3CvqcQ9DApQbALhj5MFakE5JkGLUtqgmVxICCv9ronTK87f_OWpsX0tQ3H-iqJd6th2fBD3gJc7Vj6NJVj0orOYzW0PttN9b7RIPCY9RTufEs4fblFj/s2048/face+book1+.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1152" data-original-width="2048" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAo9QUKK6oCxWRnejIi6fQbQf8j3CvqcQ9DApQbALhj5MFakE5JkGLUtqgmVxICCv9ronTK87f_OWpsX0tQ3H-iqJd6th2fBD3gJc7Vj6NJVj0orOYzW0PttN9b7RIPCY9RTufEs4fblFj/w640-h360/face+book1+.jpg" width="640" /></a></div><p style="text-align: left;">தமிழ்நாட்டில் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவது இன்றைக்குப் பேச்சாகியிருக்கிறது. அதற்குப் பிள்ளையார் சுழி போட்டது நடுப்பக்கங்கள்தான்; சில ஆண்டுகளாகவே ‘ஒன்றிய அரசு’ எனும் வார்த்தையைப் பயன்படுத்திவந்ததை வாசகர்கள் அறிவார்கள். கூட்டாட்சி, அதிகாரப் பரவலாக்கம் என்று பேசும்போது, அதைப் பேசுவோரின் சிந்தனை, உள்ளடக்கம், மொழியில் முதலில் கூட்டாட்சியுணர்வு வர வேண்டும் என்று எண்ணினோம்.</p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-UDNs03S63p9sk7bN_XFz6vychG87CmlKCcDMfXx8i9v1WzJCp_f37EypClzcQrfEHW-w5P-GP1-glTOf-u2yd4790D_TD-G7WsN_l1Sr8nRzfTDiA1_kRwL4rZu6Jlz614lYKFvGPduq/s1200/delhi.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="778" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-UDNs03S63p9sk7bN_XFz6vychG87CmlKCcDMfXx8i9v1WzJCp_f37EypClzcQrfEHW-w5P-GP1-glTOf-u2yd4790D_TD-G7WsN_l1Sr8nRzfTDiA1_kRwL4rZu6Jlz614lYKFvGPduq/w414-h640/delhi.jpg" width="414" /></a></div><br /><div style="text-align: left;">தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகு மீண்டும் விவாத அரங்கின் மையத்துக்குக் கூட்டாட்சி வந்ததில் நடுப்பக்கங்கள் பெரும் பங்காற்றின. தமிழ்நாட்டின் உரிமைகளை நடுப்பக்கங்கள் உரக்கப் பேசின. இந்த 8 ஆண்டுகளில் அதிகாரப்பரவலாக்கல் - கூட்டாட்சியம் தொடர்பில் ‘இந்து தமிழ்’ வெளியிட்டிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், தலையங்கங்களைத் தொகுத்து ஒப்பிட்டால் இந்தியாவின் எந்த வெகுஜனப் பத்திரிகையும் அதன் பக்கத்திலேயே வர முடியாது என்பது புரியவரும். </div><p></p><p style="text-align: left;">மனித குலத்தையும், இந்த நாட்டையும் தாங்கி நிற்கக்கூடிய அடிப்படை விழுமியமான பன்மைவியத்தைப் பேணுவதில் உறுதியாக நின்றோம். சமத்துவம், சமூகநீதிக்கு எங்களால் இயன்றவரை குரல் கொடுத்தோம். வெறுப்பு அலையில் மூழ்கிவிடாமல் தாக்குப்பிடித்தோம். முக்கியமாக, குமரியிலிருந்து சென்னை வரை ஒரு சாமானியரின் குரல் எங்களை வந்தடைந்தால் அவருடைய நியாயம் மேடை ஏறும் எனும் சூழலை உருவாக்கினோம். தமிழில் ஆகிவந்த இதழியல் வரையறைகளை எங்களால் இயன்றவரை விஸ்தரித்தோம்.</p><p style="text-align: left;">நான் முதல் முறையாக சிஇஓ அருண் ஆனந்திடம் பேசுகையில் சொன்னேன், “தமிழில் அறிவுக்குப் பஞ்சம் இல்லை; ஆனால், அறிவுலகுக்கும் ஊடகவுலகுக்கும் இடையே பெரிய பாலைவனம் விரிந்து கிடக்கிறது. முக்கியமான ஒரு விவகாரத்தில் ஒரு சின்ன அறிக்கையைப் பொதுவெளியின் கவனத்துக்கு எடுத்துச்செல்ல முடியவில்லை என்று புழுங்கினார் சுந்தர ராமசாமி. நோபல் விருதாளர்களை விஞ்சும் பல எழுத்தாளர்கள் நம்மிடம் உண்டு. ஆனால், அவர்கள் இறந்தால்கூட ஒரு பத்தி செய்திக்கு மேல் இங்குள்ள தினசரிகளுக்கு அவர்கள் பொருட்டு அல்ல. இந்த நிலையை மாற்ற வேண்டும்!”</p><p style="text-align: left;">வாய்ப்புக் கிடைத்தபோது மாற்றினோம். </p><p style="text-align: left;">ஒரு சமூகத்தின் மிகுந்த மதிப்புக்குரியவர் எழுத்தாளர் என்பதை அவர்களுக்கு அளித்த முதல் மரியாதையின் வழி திரும்பத் திரும்பச் சமூகத்துக்குச் சொன்னோம். ஜெயகாந்தன், அசோகமித்திரன் முதல் ந.முத்துசாமி, கி.ராஜநாராயணன் வரை பல ஆளுமைகளுக்கான இறுதி அஞ்சலி இரு முழுப் பக்கங்களுக்கு நிறைந்தது. </p><div class="separator" style="clear: both; text-align: left;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKaoHf-prRK3t_beKe-QUdC7PS0cXfJUU0m1ABRMP8zitFwXk9gpq6gtsC2hJc7JkHnecc9XPx8YgSAcUUGmkPelOhq2t-jlPpbItpXWVzpyvcXO_ZFeyxM8Y440ea6S9-mL8qELQxurZp/s2048/face+book1+5.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1152" data-original-width="2048" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKaoHf-prRK3t_beKe-QUdC7PS0cXfJUU0m1ABRMP8zitFwXk9gpq6gtsC2hJc7JkHnecc9XPx8YgSAcUUGmkPelOhq2t-jlPpbItpXWVzpyvcXO_ZFeyxM8Y440ea6S9-mL8qELQxurZp/w640-h360/face+book1+5.jpg" width="640" /></a></div><p style="text-align: left;">புத்தக வாசிப்பைத் தொடர் இயக்கம் ஆக்கினோம். ‘தினமணி’யின் சென்னைப் பதிப்பு நீங்கலாக, ஏனைய பத்திரிகைகளில் தொடக்க நாள், நிறைவு நாள் செய்திகள், வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் இரு புகைப்படங்கள் என்பதாக முடிக்கப்பட்ட சென்னை புத்தகக்காட்சி அனைத்து ஊர்களுக்கும் தொடர்ந்து 15 நாட்களுக்கும் மேலாக நடுப்பக்கத்தில் வெளியானபோது ஏனைய பத்திரிகைகளும் கண் விழித்தன. இன்று செய்தித் தொலைக்காட்சிகள் நேரலைக்குப் புத்தகக்காட்சித் திடல் நோக்கி வருகின்றன. மூன்று தசாப்தங்கள் சென்னையை மையமிட்டிருந்த பபாசி, தமிழ்நாட்டின் சிறுநகரங்கள் நோக்கிப் புத்தகக்காட்சிகளை முன்னெடுத்துச் செல்லலானது. </p><p style="text-align: left;">உள்ளூர் செய்திகளையே ‘முந்நூறு சொற்களுக்கு மிகாமல் எழுதுங்கள், இது ட்விட்டர் காலம்’ என்று பத்திரிகைகள் வலியுறுத்தலான காலகட்டத்தில் முழுப் பக்கக் கட்டுரைகள், பேட்டிகள் என்று எதிர்ப்பாதையில் தனி வாசகர் கூட்டத்தை உருவாக்கினோம். ‘நியு யார்க் டைம்ஸ்’, ‘கார்டியன்’, ‘டான்’ என்று ஒரு புதிய அலை மொழிபெயர்ப்புகளை உள்ளே கொண்டுவந்தோம். அறிவியல் கட்டுரைகளுக்கும் பேட்டிகளுக்கும் தொடர்ந்து இடம் அளித்தோம். விளையனூர் ராமச்சந்திரனின் முழுப் பக்கப் பேட்டி; ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து நீண்ட திருமாவளவனின் பேட்டி எல்லாம் வெகுஜன ஆங்கில தினசரிகளில்கூட இன்று சாத்தியம் இல்லை என்பதே உண்மை. </p><div class="separator" style="clear: both; text-align: left;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhib_2Y4dfd_DB-vX7-HZ3TPeYCJO12nGJc3Saf36E3hvTtFrGi8tpDg_o55ev6MgUTjNxcfg_YdNk9IqLxbBXxu9tefHim5LlfEZYAhi9HZZfezqylcNn814ZtniYhB3Xo4Yo5Bq15S4Gx/s2048/face+book1+6.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1152" data-original-width="2048" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhib_2Y4dfd_DB-vX7-HZ3TPeYCJO12nGJc3Saf36E3hvTtFrGi8tpDg_o55ev6MgUTjNxcfg_YdNk9IqLxbBXxu9tefHim5LlfEZYAhi9HZZfezqylcNn814ZtniYhB3Xo4Yo5Bq15S4Gx/w640-h360/face+book1+6.jpg" width="640" /></a></div><p style="text-align: left;">விருதுகள், இலக்கிய நிகழ்ச்சிகள் என்றாலே குழு அரசியல் சர்ச்சைகளில் பிறப்பிடங்கள் என்றாகிவிட்டிருக்கும் தமிழ்ச் சூழலில் நாங்கள் முன்னெடுத்த இலக்கியத் திருவிழாக்களும், ‘தமிழ் திரு’ விருதுகளும் தமிழுக்காக வெவ்வேறு வகைகளில் உழைக்கும் எல்லோரையும் உள்ளடக்கும் பார்வையைக் கொண்டிருந்தன. இந்த விருதுகளில் ஐராவதன் மகாதேவனும் இருந்தார், கி.ராஜநாராயணனும் இருந்தார்; கீரனூர் ஜாகீர் ராஜாவும் இருந்தார், சீனிவாச ராமாநுஜமும் இருந்தார்; கோவை ஞானியும் இருந்தார், பா.வெங்கடேசனும் இருந்தார். </p><p style="text-align: left;">பதிப்புத் துறையில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழானது, ‘தமிழ்த் திசை பதிப்பக’த்தின் வழி கால் வைத்தபோது நடுப்பக்க அணி ஆண்டுக்கு ஒரு அரசியல் ஆளுமையின் வரலாற்று நூலைக் கொண்டுவரும் திட்டத்தைக் கையில் எடுத்தது. அப்படி அது தொகுத்த தமிழ்நாட்டின் நெடுநாள் முதல்வர் மு.கருணாநிதி, இன்றைய இரு திராவிடக் கட்சிகளினுடைய ஆட்சியின் பிதாமகர் அண்ணா இருவரது வரலாற்றையும் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ இரு நூல்களும் 60,000 பிரதிகளை இன்று கடந்திருக்கின்றன; அரசியலில் அந்நூல்கள் இன்று உண்டாக்கியிருக்கும் தாக்கம் வெளியிலுள்ளோரால் பேசப்பட வேண்டியது.</p><p style="text-align: left;">இளையோர் எப்போதும் எங்கள் மையக் கவனத்தில் இருந்தனர். தமிழ்நாட்டிலிருந்து அகில இந்திய நிர்வாகப் பணிக்குச் செல்லும் மாணவர்களின் கருத்தறிந்து அவர்களுக்கான களமாகவும் இடையில் நடுப்பக்கங்களை மாற்றியபோது போட்டித் தேர்வுகளுக்கு உத்வேகப்படுத்தும் நிகழ்ச்சிகள் எங்களை நோக்கி வந்தன. ஆண்டுக்குக் குறைந்தது இருபத்தைந்தாயிரம் மாணவர்களைச் சந்திக்கும் வாய்ப்புகளை இந்நிகழ்ச்சிகள் உருவாக்கின; அவர்களிடத்தில் வாசிப்பியக்கத்தைக் கொண்டுசென்றோம். இதேபோல வாசகர்களுடன் தொடர் உரையாடல்களை முன்னெடுத்தோம்; அவர்கள் சொன்ன கருத்துகளுக்கு மதிப்பளித்து அவ்வபோது பக்கங்களைப் புதுப்பித்துக்கொண்டேயிருந்தோம்.</p><p style="text-align: left;">குற்றம் குறைகள் இல்லாமல் இருக்க முடியாது. நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டோம்; இயன்றவரை தவறுகளைத் திருத்திக்கொண்டோம். விமர்சனத்தின் அடிப்படையில் தனிநபர்களிடம் வெறுப்பு பாராட்டியதும் இல்லை; பகையாக முரண்பாடுகளை நீட்டித்துக்கொண்டதும் இல்லை.</p><p style="text-align: left;">ஆண்டுகள் வளரும்போது எந்தப் பணியிலும் தேக்கங்கள் உண்டாவது இயல்பு. அதை உடைத்துச் சிதறடிக்கவில்லை என்றால், மனதையும் பிற்பாடு உடலையும் மெல்ல பனிமூட்டம்போல சோர்வு ஆக்கிரமித்து, அழுத்தி, புதைத்துவிடும். டிஜிட்டல் ஊடகங்களின் பாய்ச்சல், ஜனநாயகத்தின் பின்னடைவு, கொடுந்தொற்றின் பரவல் இந்தப் பின்னணியில் இந்திய ஊடகச் சூழல் நிலைக்குலைவுக்குள்ளான காலகட்டத்தில் அப்படியொரு தேக்கத்தை நான் உணரலானேன்; உளச்சோர்வு மெல்லச் சூழ்ந்து உடலையும் சோர்வு நோக்கித் தள்ளலானது. </p><p style="text-align: left;">ஆக, சில மாதங்களாகவே இந்த முடிவில் இருந்தேன். நிறைய எழுத வேண்டும்; முக்கியமான தமிழ் ஆளுமைகளை ஆவணப்படுத்த வேண்டும்; ஊடகத் துறையில் அடுத்த கட்டம் நோக்கிச் செல்ல வேண்டும் என்ற எண்ணங்கள் துரத்தியபடி இருந்தன. இனி அதில் கவனம் செலுத்த உத்தேசித்திருக்கிறேன்.</p><p style="text-align: left;">என்னைப் பொறுத்த அளவில் எட்டாண்டுகள் என்பது ஒரு குறிப்பிடத்தக்க காலகட்டம். என்னுடைய கடந்த கால வாழ்வை அறிந்தவர்களுக்கு இந்த முடிவை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். ‘தினமலர்’, ‘தினமணி’, ‘விகடன்’, ‘புதிய தலைமுறை’ என்று நான் கடந்துவந்திருக்கும் பாதையில் இதுவே அதிகபட்ச பணி வாழ்க்கை. இதுவரையிலான எல்லா நிறுவனங்களிலுமே ஆசிரியர்களின் மதிப்புக்குரியவனாக, விசேஷ இடம் அளிக்கப்பட்டவனாகவே இருந்திருக்கிறேன். மரியாதைக்குரிய சேகர், வைத்தியநாதன், கண்ணன், கைலாசம், அசோகன் யாவருமே எனக்கென்று ஒரு சிறப்பான இடத்தைத் தந்திருந்தார்கள். ஒரு நிறுவனத்தில் பிரகாசமான நிலையில் இருக்கும்போதே அடுத்த இடம் நோக்கி நகர்ந்திருக்கிறேன். ஆயினும், பணம் அல்லது பணி அந்தஸ்து இதில் முக்கியப் பங்கு வகித்தது இல்லை. நிச்சயமாக, கருத்து வேறுபாடுகளும் விலகலுக்கான காரணங்களில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றாலும், அது மட்டுமே எங்கும் காரணமாக இருந்தது இல்லை. </p><p style="text-align: left;">பெரும்பாலும் பணி வாழ்க்கை ஒரு தேக்க நிலையை அடையும்போது, மனம் சோம்பும்போது, அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி ஒன்றுக்கு என்னுடைய எழுத்து துடிக்கும்போது வெளியேறுவதே வழக்கமாக இருந்திருக்கிறது. அந்த வரிசையில், இப்போது ‘இந்து தமிழ்’ அனுபவமும் அமைகிறது. ஒவ்வொரு நிறுவனத்திலும் பல்வேறு அனுபவங்கள், பல்வேறு படிப்பினைகள். இவற்றில் ‘இந்து தமிழ்’ நாளிதழில் இந்த எட்டு ஆண்டுகளில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் அளப்பரியன. அது எனக்குக் கொடுத்த மேடைகளும், கொண்டுசென்ற உயரங்களும் மறக்க முடியாதவை. ஒரு பத்திரிகையில் ஒரு தனிநபருக்கு கிடைத்த இடம் என்று இதைச் சுருக்கிட முடியாது. தமிழ் ஊடகச் சூழலில் நிகழ்ந்த அரிய சாத்தியங்களில் ஒன்றும் அது. </p><div class="separator" style="clear: both; text-align: left;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilRJW1oi3ion16CaPtWDatW4XI3qB7WscTO3d3ePPO9WgjclAPx7ZVtMMWfvlCboPnyvOZxrC-zZqR7EfHauvTMjf-v6sUwJgbm_l4XE1fnT69jyfJnoeUtsACyxjShlyVMlDcA6B3blZB/s2048/face+book1+2.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1152" data-original-width="2048" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilRJW1oi3ion16CaPtWDatW4XI3qB7WscTO3d3ePPO9WgjclAPx7ZVtMMWfvlCboPnyvOZxrC-zZqR7EfHauvTMjf-v6sUwJgbm_l4XE1fnT69jyfJnoeUtsACyxjShlyVMlDcA6B3blZB/w640-h360/face+book1+2.jpg" width="640" /></a></div><p style="text-align: left;">இதுவரை எத்தனையோ நிறுவனங்கள் நான் பணியாற்றியிருந்தாலும் ‘இந்து தமிழ்’ நாளிதழின் நாட்களை அந்த வரிசையில் இணை வைத்துவிட முடியாது. நாங்கள் கூடி உருவாக்கிய குழந்தை அது; ஒரு பெரும் கனவு; அந்தக் கனவில் நானும் இருந்தேன்; என்னுடைய கடமைகளை நெறிப்படி முடித்தேன்; என்னால் இயன்றவரை, என்னுடைய எல்லைக்குட்பட்டு என்னுடைய மதிப்பீடுகளை இழக்காமல் காப்பாற்றினேன் என்ற மகிழ்ச்சி என் வாழ்நாள் முழுக்க நிலைத்திருக்கும். ‘இந்து தமிழ்’ நாளிதழ் எல்லா வகைகளிலும் செழித்திடவும், மேன்மேலும் வளர்ந்து தமிழ்ச் சமூகத்துக்கான அதன் நற்பங்களிப்புகளைத் தொடர்ந்திடவும் உளமாரப் பிரார்த்திக்கிறேன்.</p><p style="text-align: left;"><span face="Arial, Helvetica, sans-serif" style="background-color: white; color: #222222; font-size: small;">ర </span></p><p style="text-align: left;"><b>ச</b>ரி, அடுத்தது என்ன?</p><p style="text-align: left;">சில ஆண்டுகளாக, நிர்வாக நிமித்தமான பணிகள் நிறைய என்னைச் சூழ்ந்துகொண்டிருந்த இடத்திலிருந்து விடுபட்டு, தீவிரமாக எழுதுவது என்ற இடம் நோக்கி நகர்கிறேன். நெடுநாட்களாகக் கொண்டுவரத் திட்டமிட்டிருந்த சில புத்தகங்கள் முன்னுரிமையில் முன்வரிசையில் நிற்கின்றன. இந்திய ஜனநாயகத்தை இருள் சூழ்ந்திருக்கும் இந்நாட்களில் எந்த நிறுவனத்துக்கும் வேலைக்குச் செல்வதைக் காட்டிலும், என்னுடைய எழுத்தியக்கத்துக்குத் தடை நிற்காத வகையில் சுயாதீனமான ஒரு சிறு டிஜிட்டல் ஊடகத்தை உருவாக்கவும் விழைகிறேன். “நாற்பதுகளின் தொடக்கத்தில் இருக்கிறாய்; பள்ளி செல்லும் குழந்தைகள் முக்கியமான பருவத்தில் இருக்கிறார்கள்; இதுபோன்ற பலப்பரீட்சை தேவைதானா?” என்று நிறைய நண்பர்கள் கேட்கின்றனர். காந்தி சொன்னதையே பதிலாகச் சொல்லிக்கொள்கிறேன்: ‘மகிழ்ச்சி என்பது எதுவென்றால், உங்களுடைய சிந்தனை, உங்களுடைய பேச்சு, உங்களுடைய செயல் யாவும் ஒத்திசையும் தருணம்!’</p><p style="text-align: left;">தமிழில் பேசப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. தமிழ் ஊடகச் சூழல் அடுத்தடுத்த பாய்ச்சலுக்காகக் காத்திருக்கிறது. என்னாலான சிறு முயற்சிகளை மேற்கொள்வேன். காந்தியிடமிருந்து எளிமையான வாழ்க்கை முறையை மட்டுமல்ல; தீர்க்கமான இலக்கை நோக்கிய பயணத்துக்கான உறுதிப்பாட்டையும் கற்றிருக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேல் சமூகத்தையும் மக்களையும் நம்புவன் நான். தமிழ் மக்கள் எனக்குத் துணை நிற்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.</p><p><span face="Arial, Helvetica, sans-serif" style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #222222; font-size: small; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: left; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-decoration-thickness: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"></span></p><p style="-webkit-text-stroke-width: 0px; color: black; font-family: "Times New Roman"; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: left; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-decoration-thickness: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;">இந்த சமயத்தில் வாசகர்களாகிய உங்களுடைய அன்பை ஒருபோதும் நான் மறந்திட முடியாது. ஏனென்றால், வாசகர்களிடம் நான் பெற்றிந்த அன்புதான் எந்தப் பத்திரிகையிலும் எனக்கு இருந்த செல்வாக்குக்கான அடியுரமாக இருந்தது. வாசக நண்பர்கள் தரும் உற்சாகமும் உத்வேகமும்தான் அடுத்தடுத்த எல்லைகளை நோக்கி சிந்திக்கவும் வைக்கிறது. ஆகையால், இந்தத் தருணத்தில் உங்கள் ஒவ்வொருவருக்கும் என் இரு கரங்களையும் கூப்பி நன்றி கூறுகிறேன்!</p><p style="text-align: left;"><b>ஜூன், 2021</b></p><p style="text-align: left;"><span style="background-color: #f4cccc;"><b>பின்குறிப்பு: </b>நிறைய நண்பர்களிடமிருந்து செல்பேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. அடுத்த முயற்சியை எப்படி அறிந்துகொள்வது; எழுத்துகளைத் தொடர்ந்து எப்படி வாசிப்பது என்று கேட்கின்றனர். ஒரே பதில்: என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு உங்களுடைய பெயர், அஞ்சல் முகவரி, செல்பேசி எண், உங்கள் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பி வையுங்கள். என்ன முயற்சிகளை மேற்கொண்டாலும் தெரியப்படுத்துகிறேன். அனைவருக்கும் என் அன்பு.<br />என்னுடைய மின்னஞ்சல் முகவரி: writersamas@gmail.com </span></p>சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.com163tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-59394096538468047322021-06-01T06:31:00.000-07:002021-06-09T11:21:25.204-07:00 உலக எழுத்தாளர் கி.ரா.<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYGsTXqKhtqOUg-dDrWMyR1jnlWlEMgE20n1fyMDcAUmFTBD4bobVF8TvMX9YAPq6U_oItc7qaRyW0HIdMYzkD60DvA2G24ql2Pd2clQJobaOMuz26WemElAWNpO2sMrZV0BY5U-eb1I9D/s4464/kira.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2976" data-original-width="4464" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYGsTXqKhtqOUg-dDrWMyR1jnlWlEMgE20n1fyMDcAUmFTBD4bobVF8TvMX9YAPq6U_oItc7qaRyW0HIdMYzkD60DvA2G24ql2Pd2clQJobaOMuz26WemElAWNpO2sMrZV0BY5U-eb1I9D/w320-h213/kira.jpg" width="320" /></a></div><br />தமிழ்நாட்டில், அகிலனுக்கு 1975-ல் அளிக்கப்பட்ட பிறகு ‘ஞானபீடம்’ விருதுக்காக கால் நூற்றாண்டு இருவரது பெயர்கள் அவ்வப்போது பேசப்பட்டுவந்தன. ஜெயகாந்தன், அசோகமித்திரன். ஒருசமயம், சுந்தர ராமசாமி எழுதினார், “ஒவ்வொரு வருடமும் ஜெயகாந்தன் பெயரையோ, அசோகமித்திரன் பெயரையோ மாற்றி மாற்றிப் பரிந்துரைக்கிறேன். ஒருவேளை, நான் பரிந்துரைப்பதை நிறுத்திக்கொண்டால் கொடுப்பார்களோ என்னவோ!”<p></p><p>ஜெயகாந்தனுக்கு 2002-ல் ‘ஞானபீடம்’ கொடுக்கப்பட்ட பிறகு, அசோகமித்திரன் முன்னிறுத்தப்பட்டார்; அடுத்த இடத்தில் கி.ரா. மெல்லப் பேசப்படலானார். ஊடாகவே இந்திரா பார்த்தசாரதி முதல் வைரமுத்து வரை வெவ்வேறு பெயர்களும் அடிபட்டுவந்தன என்றாலும், 2017-ல் அசோகமித்திரனும் மறைந்த பிறகுதான் கி.ரா.வின் பெயர் பெரிதும் பேசப்படலானது. கி.ரா.வுக்கு இதில் வருத்தம் உண்டு. ஜெயகாந்தன், அசோகமித்திரன் தொடங்கி ‘ஞானபீடம்’ விருதுக்காக முன்னிறுத்தப்பட்ட பலர் மீதும் அவருக்கு நன்மதிப்பு இருந்தது; அதேசமயம், தான் எந்த விதத்தில் குறைந்துபோனோம், இத்தனை ஆண்டுகள் பின்வரிசைக்குத் தள்ளப்பட்டோம் என்ற கேள்வி அவருக்கு இருந்தது. ஜெயகாந்தனைவிட அசோகமித்திரன் 3 வயது மூத்தவர்; கி.ரா. 11 வயது மூத்தவர் என்பதையும், ஒருவேளை 80 வயதை ஒட்டி மறைந்திருந்தால், பத்ம விருதுகளைப் போல ஞானபீட விருதுக்கும் பேசப்படும் இடத்தில்கூடத் தன் பெயர் இருந்திருக்காது என்ற கி.ரா.வின் கவலையையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் அவருடைய துயரத்தின் வலி புரியும்.</p><p>இந்த விருதுக்கான பேச்சு ஒரு பெரிய விஷயம் இல்லை. அது இங்கே இருந்த ஒரு முன்வரிசையைச் சுட்டுவதாகும். வயது அல்லது பங்களிப்பு அடிப்படையிலானது அல்ல இந்த முன்வரிசை; அது ஒரு ‘பொது அடையாளம்’ சார்ந்தும் உருவாக்கப்பட்டிருந்தது. அன்றைய பாரதி, புதுமைப்பித்தனில் தொடங்கி இன்றைய ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் வரை இந்தப் பொது அடையாளப் பட்டியலில் வந்துவிடுவார்கள். கி.ரா. இந்த வட்டத்துக்குள் வர மாட்டார்; இமையம், ஜோ டி குரூஸ் வர மாட்டார்கள். பெருமாளுக்கும் அய்யனாருக்கும் இடையே உள்ள வேறுபாடு மாதிரிதான்; சாமியின் மகிமை மீது யாருக்கும் சந்தேகம் கிடையாது; மரியாதைக்கும் குறைச்சல் இல்லை; ஆனால், அந்தஸ்தில் அது பொது சாமி; இது நாட்டுப்புறச் சாமி.</p><p>வாழ்நாள் முழுவதும் இந்தப் பாகுபாட்டை அனுபவித்தார் கி.ரா. அவர் எழுதிய கிராமத்தையும் வாழ்வையும் ஒரு வட்டாரத்தின், ஒரு சமூகத்தின் குரலாகக் குறுக்கும் அரசியல் இங்கே தொடர்ந்து நடந்தது. ஒரு உரையாடலில் கி.ரா. கேட்டார், “சரி, என்னோட கதைகள் ஒரு வட்டாரத்தோட, ஒரு சாதியோட கதைகள்னா மத்தவங்களோடதெல்லாம் என்ன?” அடுத்து கி.ரா. கேட்க வரும் கேள்வி புரிந்துகொள்ள முடியாததா என்ன? ‘ஜெயகாந்தனோ, அசோகமித்திரனோ தன் படைப்புகளில் வெளிக்கொணர்ந்த வாழ்க்கையை மட்டும் எப்படி ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கான அல்லது உலகளாவிய மானுடப் பரப்புக்கானதாகச் சொல்லிட முடியும்?’<span></span></p><a name='more'></a><p></p><p>இலக்கியத்தை வகைப்படுத்துவது விமர்சன அழகியலின் முக்கியமான அங்கம். வகைமைகளின் அடிப்படையில் படிநிலையை உருவாக்குவது அரசியல், வணிகம். கி.ரா.வின் கரிசல் கதைகளும், ‘கோபல்ல கிராமம்’ நாவலும் ஒரு சின்ன வட்டாரத்தின் புள்ளி என்றால், ஹார்டியின் வெஸ்ஸக்ஸ் நாவல்களையும், மார்குவெஸின் மகோந்தோ புனைகிராமத்தையும் எந்த வரையறைக்குள் அடக்குவது? அப்படியென்றால், ஆர்.கே.நாராயணன் தன்னுடைய மனிதர்கள், அனுபவங்கள், கற்பனைகள் எல்லாவற்றையும் மால்குடி புனைநகரத்தின் மீது ஏவிவிட்டதுபோல, கி.ரா. தன்னுடைய மனிதர்கள், அனுபவங்கள், கற்பனைகள் எல்லாவற்றையும் வெவ்வேறு பெயர்களிலான கரிசல் கிராமங்கள் மீது ஏற்றிவிட்டாரா? “ஆமா, அப்படித்தானே இருக்க முடியும்!” என்று சொன்னார் கி.ரா.</p><p>தன்னுடைய 98 வருட வாழ்க்கையில் மூன்றில் இரு பங்கு காலம் மரபார்ந்த இடைசெவல் கிராமத்தில் வாழ்ந்த கி.ரா. ஒரு பங்கு காலம் படுநவீனமான புதுச்சேரியில் வாழ்ந்தார்; பல்கலைக்கழகச் சிறப்புப் பேராசிரியர் பணிநிமித்தமாக வந்தவர், ஊரும் மக்களும் பிடித்துப்போனதாலேயே கடைசி வரை புதுச்சேரியிலேயே வாழ்ந்தார். பண்பாட்டுரீதியாக பிரெஞ்சு மனநிலையை அவர் உன்னதமானதாகக் கருதினார். “இந்தப் பொறப்பு எடுத்த நோக்கம் என்ன? சந்தோஷமா வாழணும். அப்படின்னா பறவைகளை மாதிரி சுதந்திரமா, சந்தோஷமா மனுஷங்களும் வாழணும். எந்தக் கட்டுப்பாடும் கூடாது. அதுக்கு இந்தியக் கலாச்சாரம் இடம் கொடுக்கலையே? அட, விருப்பப்பட்ட ஒருத்தரோட சேர்ந்து வாழ இந்தக் கலாச்சாரம் இடம் கொடுக்கலையே!” என்றவர் கிராமங்களைப் புனித மதிப்பீடுகளுக்குள் வைத்துப் பார்க்கப்படுவதை வெறுத்தார். “ஒருகாலத்துல கிராமங்கள்ல அந்தக் கலாச்சாரம் இருந்துச்சு. விருப்பம்போல புடிச்சவங்களோட வாழலாம்; புடிக்கலைன்னா அத்துக்கிட்டு போய்ட்லாம்; இன்னொன்னு சேத்துக்கிடலாம். புள்ளைங்களுக்கும் இது தெரியும். ஊருக்கும் தெரியும். யாரும் தப்பா நெனைக்கிறது இல்லை. இப்ப நகரத்துக்காரன் எல்லாம் சேர்ந்து கிராமத்தைப் புனிதமாக்கிட்டான். கட்டுப்பாடு, கட்டுப்பாடுன்னு பேசி ஆளாளுக்குப் பைத்தியம் பிடிச்சு அலையுறோம்.”</p><p>குடும்பம் என்கிற அமைப்பே உடைய வேண்டும்; ஒரு கலாச்சாரத்தை மதிப்பிட பாலியல் சுதந்திரம்தான் அளவுகோல் என்று பேசிய கி.ரா., நவீன தமிழ் இலக்கியத்துக்குக் கொடுத்த முக்கியமான பங்களிப்பு நாட்டார் மரபின் கதைசொல்லல் முறையை இதோடு கொண்டுவந்து இணைத்ததோடு முடியவில்லை; நாட்டார் மரபின் கலகத்தன்மையையும் அப்படியே கொண்டுவந்து சேர்த்தார். நவீன தமிழ் எழுத்தாளர்களில் கி.ரா. அளவுக்குப் பாலுறவை நுட்பமாகவும் விரிவாகவும் கையாண்டவர்கள் யாரும் இல்லை. மிக வலுவானவர்கள் அவருடைய பெண் பாத்திரங்கள். இந்தச் சமூகத்தின் சிக்குப்பிடித்த கலாச்சாரப் பாறையில் விரிசலை உண்டாக்குவதற்குப் பாலியல் கதையாடலை ஒரு சுத்தியலாக அவர் பயன்படுத்தினார் என்ற எண்ணம் எனக்கு உண்டு. ‘வயது வந்தவர்களுக்கு மட்டும்’, ‘நாட்டுப்புறப் பாலியல் கதைகள்’, ‘கெட்ட வார்த்தைகள் அகராதி’ என்றெல்லாம் கி.ரா. மேற்கொண்ட, திட்டமிட்டிருந்த தொகுப்பு முயற்சிகளை அவர் சமூகத்தை நோக்கி வீசியெறிந்த கற்களாகவும் பார்க்கலாம்.</p><p>கிராமங்கள் முழுமையாகக் கட்டுப்பெட்டித்தனத்துக்கும், நேரெதிரே நகரங்கள் முழுமையாகத் தாராளத்தனத்துக்கும் கருப்பு வெள்ளை வடிவங்களாக முன்னிறுத்தப்படுவதை கி.ரா. புறங்கையால் தள்ளினார். நவீனத்தின் மீதான விமர்சனத்தை நவீனத்தின் கருவிகளைக் கொண்டே கையாள முற்பட்ட ஏனைய எழுத்தாளர்கள் மத்தியில், நவீனத்துக்கு முற்பட்ட கருவிகளாலான விமர்சனத்தை நவீனத்துக்குப் பிந்தைய காலகட்டத்தின் மொழிக்கு அருகில் கி.ரா. கொண்டுவந்து நிறுத்தினார். “காலமும் இடமும் கணக்கு இல்லை. மனுஷன் இருக்குற இடமெல்லாம் மனுஷ நாத்தம் இருக்கும்!”</p><p>மனித வாழ்வின் ஒரு சின்ன நிகழ்வை எழுதக்கூட மனிதரைச் சுற்றிலும் உள்ள உலகம் கி.ரா.வுக்குத் தேவைப்பட்டது. இதற்குத் தனக்கு நன்கு பரிச்சயமான ஒரு களமே வசதியாகப் பட்டதாக அவர் கருதினார்.</p><p>மனிதர்களின் மேன்மையை எழுதும்போது எழுதுகிறவர் யார், எழுதப்படுகிறவர் யார் என்பது இங்கே ஒரு பொருட்டு இல்லை; மனிதர்களின் கீழ்மையை எழுதும்போது எழுத்தாளன் விசாரணைக் கூண்டில் ஏற்றப்பட்டுவிடுவான். அவனது சகலப் பின்னணிகளும் அவனோடு கூண்டுல் ஏற்றப்படும். கி.ரா. இதை உணர்ந்திருந்தார். “ஒரு பொண்ணோட உடல் வதனத்தைக்கூட இங்கெ நாம கொஞ்சம் கூடக்கொறைச்சலா எழுதிட முடியாது. எதுல இங்கே சாதி - மதம் இல்லை?”</p><p>இதையெல்லாம் காட்டிலும் மானுடத்தின் ஆதார சுருதியைப் பிடிப்பதையே தன்னுடைய எழுத்தின் குறி என்று அவர் நம்பினார். அதில் காலமோ இடமோ மனிதர்களோ வேறுபடவில்லை என்று அவர் கூறினார். “மேல்வயித்துப் பசி, கீழ்வயித்துப் பசி இது ரெண்டு மட்டும்தான் நெஜம். மிச்ச எல்லாமே கற்பனையும் கருத்துகளும் மட்டும்தான். எவ்வளவோ ஜனங்களைப் பாத்துருக்கேன். மனுஷங்களோட ஆதார குணங்கள்ல எந்த வேறுபாட்டையும் நான் பார்க்கலை. தலைமுறைகள் தாண்டியும் இது மாறலை.”</p><p>நீண்ட காலம் இதை மனதுக்குள் அசை போட்டிருக்கிறேன். மனிதர்களின் ஆதார குணங்கள் எல்லாக் காலங்களிலும், உலகெங்கும் ஒன்றுபோலவேதான் இருக்கின்றனவா? தலாய் லாமாவுக்கும் ராமின் ஜஹான்பெக்லூவுக்கும் இடையிலான ஓர் உரையாடலை வாசித்தபோது, கி.ரா. சொன்னதை தலாய் லாமா விரித்துப் பேசியதுபோல இருந்தது. “இத்தனை ஆயிரம் வருஷங்கள் எப்படி இருந்தோமோ அப்படிதான் அடுத்தடுத்து வரும் ஆயிரம் வருஷங்களிலும் இருப்போம். எவ்வளவு காலமானாலும் மனிதர்களின் உணர்வுகளிலோ, மானுடத்தின் மனநிலையிலோ எந்த மாற்றமும் இல்லை.”</p><p>கி.ரா.வின் ‘கன்னிமை’ கதையை எதேச்சையாக சென்ற வாரத்தில் மீண்டும் வாசித்தேன். தோட்டத்தில் பருத்திச்சுளையை எடுத்துவிட்டான் என்ற காரணத்துக்காக, நாச்சியாரம்மாளின் தகப்பனாரால் ஊணுக்கம்பால் அடித்து நொறுக்கப்பட்டு, ரத்தக் காயங்களோடு படுக்கையில் படுத்திருக்கும் சிறுவனை நாச்சியாரம்மாள் அவன் வீடு தேடிச் சென்று பார்க்கும் காட்சியை என்னால் கடந்துவர முடியவே இல்லை. சிறுவனின் தகப்பன் சுந்தரத்தேவன் சரியான போக்கிரி. கொலைகாரன். பிள்ளையைக் காயப்படுத்தியவனை வெட்டிப்போடுவதற்காகக் கையில் அரிவாளுடன் தயாராகிக்கொண்டிருக்கிறான். மூர்ச்சையாகிக் கிடக்கும் சிறுவனைச் சூழ்ந்து நிற்கும் பெண்கள் அவன் தாயோடு சேர்ந்து அழுதுகொண்டிருக்கிறார்கள். இந்தச் சமயத்தில் அங்கே வருகிறாள் நாச்சியாரம்மாள். யாரை அங்கே கருவிக்கொண்டிருக்கிறார்களோ அந்த வீட்டின் பெண். கூட்டம் விலகுகிறது. சிறுவனைப் பார்த்ததும் நாச்சியாரம்மாள் சிலையாகிறாள். தாரை தாரையாக அவளுக்குக் கண்ணீர் கொட்டுகிறது. சிறுவனின் அருகில் அமரும் அவள் ரத்தம் உறைந்த சிறுவனின் முகத்தைத் தன் முந்தானையால் துடைக்கிறாள். மூர்ச்சை தெளிவிக்கிறாள். இதைக் காணும் சுந்தரத்தேவன் அரிவாளைக் கீழே விட்டுவிட்டு முகத்தைக் கையால் புதைத்து ஒரு குழந்தையைப் போல் குமுறிக் குமுறி அழுகிறான். மானுடத்தின் மகத்தான தருணங்களில் ஒன்றாக எனக்கு இந்தக் காட்சி தோன்றுகிறது. இந்த உணர்வைப் பகிர்ந்துகொள்ள ஏதேனும் எல்லைத் தடைகள் இருக்கின்றனவா என்ன?</p><p>ஆக, கி.ரா.வின் எழுத்துலகை நான் இப்படிப் புரிந்துகொள்கிறேன், இந்தப் புவியிலுள்ள நிலப்பரப்பின் நாற்புறமும் கடல் சூழ்ந்திருக்கிறது. கி.ரா. தன்னுடைய ஊர்க்கரையின் பின்னணியில் அந்தக் கடலை எழுதினார். சிற்றூரின் பின்னணியிலிருந்து எழுதப்பட்டதால் அந்த நீர்ப்பரப்பு குளம் அல்ல; பெரும் சமுத்திரத்தின் ஒரு சிறு பகுதி அது. ஐந்நூறு ஆண்டுகளில் இந்தத் தமிழ் நிலத்துக்கு வந்த ஒரு சமூகம் இந்த மண்ணில் ஏற்கெனவே நிலைபெற்றிருந்த பல்லாயிரம் ஆண்டு தொன்மரபோடு கலந்தபோது பீறிட்டெழுந்த பண்பாட்டுப் படைப்பாற்றலின் முகிழ் வெளிப்பாடு அது.</p><p>கி.ரா.வும் அப்படியே எண்ணினார். புதிதாக எழுந்துவரும் கருத்துகள், கோட்பாடுகள், போக்குகள் எல்லாவற்றையுமே அக்கறையோடு அவர் கவனித்தார். அதேசமயம், ஆழ்மன ரசனையையே கலையை மதிப்பிட சரியான அளவுகோலாக அவர் எண்ணினார். நம்பும் மதிப்பீடுகளைவிடவும், சமூகத்தில் நிலவும் உண்மைகளுக்குக் கதைகள் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். பல நவீன எழுத்தாளர்களைப் போலன்றி பண்டைத் தமிழ் இலக்கியத்திலும் தேர்ச்சி பெற்றிருந்த அவர் கருத்துகள், கோட்பாடுகளால் நியாயமற்ற வகையில் வெகு நீண்ட காலத்துக்கு எந்தவொரு படைப்பையும் தூக்கிப் பிடித்திருக்கவோ, மறைத்து வைத்திருக்கவோ முடியாது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். சொல்லப்போனால், எழுத்து வடிவக் கதையாடல் மீதே நம்பிக்கையற்றிருந்தவர் அவர். பேச்சுவழக்கை அப்படியே எழுத்துவழக்குக்கு மாற்றுபவராக அவர் இல்லை; ஒரு கதை எழுத பல அமர்வுகள் உட்கார்ந்து அடித்து அடித்துத் திருத்தித் திருத்தி எழுதும் வழக்கத்தையே கொண்டிருந்தார்; பேச்சுவழக்கின் அனுகூலமான தொனியை எழுத்துவழக்கின் அனுகூலமான கச்சிதத்துடன் கலந்து அவர் பயன்படுத்தினார் என்றாலும், செவிவழி உள்ளே நுழையும் வாய்மொழி வழக்காறே காலத்துக்கும் நீடிக்கும், எழுத்து வடிவில் நாம் படிக்கும் எல்லாமும் கால ஓட்டத்தில் மறைந்துபோகும் என்று அவர் திரும்பத்திரும்பச் சொன்னார். ஆகையால், அழகியலை நாட்டாரியல், செவ்வியல், நவீனவியல் என்றெல்லாம் பாகுபடுத்திச் சுருக்குவதை அவர் ஒரு கசந்த புன்னகையோடு கடந்தார். உள்ளபடி இவை எல்லாவற்றிலும் ஊடாடும் படைப்புகளைக் கொடுத்ததே அவருடைய தனித்துவம். காலத்திலும் வெளியிலும் வேர் பிடித்திருந்ததே அவருடைய படைப்புகளின் பெரும் பலம்.</p><p>கி.ரா.வின் கதைகளில் முற்போக்குக் கூறுகள் குறைவு என்ற குற்றச்சாட்டு உண்டு; வீட்டில் தன் கருத்துக்கேற்ப வாழ்ந்தார். அவருடைய பேத்தி முஸ்லிம் நண்பனை மணந்துகொள்ள விரும்பியபோது பேத்திக்கு முதல் பக்கபலமாக வீட்டில் அவர் நின்றார். ஒருசமயம் வீட்டுக்குச் சென்றிருந்தபோது இருவரையும் அறிமுகப்படுத்திவிட்டு, அவர்கள் சென்ற பின் சொன்னார், “இதுக ரெண்டும் சேர்ந்து வந்து நிக்குறப்போல்லாம் இந்த எடம் முழுக்க சந்தோஷத்தையும் கூட்டுக்கிட்டு வந்துடுதுங்க. வேறுபாடுகள் ஒண்ணுகூடி மறையும்போது ருசி மிகுந்துடுது. சேர்க்கைதான் மனுஷ வாழ்வின் பெரிய ருசி.”</p><p>கி.ரா.வின் மரணம் தமிழக வெகுஜனத் தளத்தில் ஒரு பெருஞ்சாவாக எதிர்கொள்ளப்பட்டது. இதுவரை நவீன எழுத்தாளர்கள் யாருக்கும் கிடைத்திருக்காத அங்கீகாரமாக தமிழ்நாடு அரசு மரியாதையுடன் அவர் இறுதிச் சடங்கு நடைபெற்றது; புதுச்சேரி அரசும் தன் பங்குக்கு மரியாதை செய்தது. சொந்த ஊரில் கி.ரா.வுக்குச் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இலக்கிய உலகிலோ எல்லாப் புகழுரைகளுக்கும் மத்தியில் வழக்கம்போல அவரைக் குறுக்கும் வார்த்தைகளும் ஊடாடின. மிகக் கவனமாக, ‘கரிசல் எழுத்தாளர்’ என்ற சிமிழ் சிலரால் பயன்படுத்தப்பட்டது.</p><p>கன்னட எழுத்தாளரும், அறிவுஜீவியுமான யு.ஆர்.அனந்தமூர்த்தி ஒருமுறை சொன்னதை இந்தச் சமயத்தில் நம் சமூகத்துக்கு நினைவுப்படுத்தலாம் என்று தோன்றுகிறது. “என்னைப் பொறுத்தவரை ஒரு எழுத்தாளராக இருப்பதானது, ஒரு சமூகத்தின் எழுத்தாளராக அவர் இருப்பதையே குறிக்கிறது. ஹெமிங்வே ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் எழுத்தாளர்; அதாவது, முழு அமெரிக்காவுக்குமான எழுத்தாளர் அல்ல அவர். இதுதான் ஒவ்வொரு எழுத்தாளருக்குமே உண்மை… எந்த எழுத்தாளரும் ஒட்டுமொத்த நாட்டுக்குமான எழுத்தாளர் கிடையாது; எல்லோருமே ஒரு நாட்டுக்குள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள். இப்படிக் குறிப்பிட்ட மொழியைப் பேசும் சமூகத்தை, குறிப்பிட்ட நிலப்பரப்பை, குறிப்பிட்ட கலாச்சாரத்தைச் சார்ந்தவராக இருப்பதென்பது ஒருவருடைய இலக்கியத்தின் மகத்துவத்தை எந்த வகையிலும் குறைத்துவிடாது… அந்த வகையில் பேந்த்ரேவை தார்வாட்டைச் சார்ந்த ஒரு உலக எழுத்தாளர் என்று சொல்வேன்; குவெம்புவை மலநாட்டைச் சார்ந்த ஒரு உலக எழுத்தாளர் என்று சொல்வேன்.”</p><p>ஆகவே, கி.ரா.வைக் கரிசலைச் சார்ந்த ஒரு உலக எழுத்தாளர் என்று நாம் சொல்வோம்!</p><p><b>- மே, 2021, ‘இந்து தமிழ்’ </b></p>சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-35069073270950242822021-06-01T06:30:00.006-07:002021-06-09T11:21:20.637-07:00 சரியான முடிவா முழு ஊரடங்கு?<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5G7h2dXEokW822rhQ4PpKZmgjAHwA6W6BQGu5-obA_eOYw6cfwIuDtPRx4KEPMD33WzuRB4MLPfAbUB43m8OWwmrqOvvyZKbruDlmKzODp4YkdKurQi7pjiEBTAIxkJ3RI0QnL5-rmgSz/s960/lockdown.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="639" data-original-width="960" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5G7h2dXEokW822rhQ4PpKZmgjAHwA6W6BQGu5-obA_eOYw6cfwIuDtPRx4KEPMD33WzuRB4MLPfAbUB43m8OWwmrqOvvyZKbruDlmKzODp4YkdKurQi7pjiEBTAIxkJ3RI0QnL5-rmgSz/w320-h213/lockdown.jpg" width="320" /></a></div><br />பலதரப்பு மனிதர்கள் கருத்துச் சொல்லும் காணொளி ஒன்றைப் பார்த்தேன். திமுக ஆட்சி அமைந்த ஒரு வாரத்தில் எடுக்கப்பட்டது அது. எதிர்பார்த்ததைவிடவும் மேலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக அதில் பலரும் சொல்கிறார்கள். ஆச்சரியப்பட ஏதும் இல்லை. அரசியலர்கள் வட்டாரத்திலேயே கட்சி வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டு அப்படி ஒரு பேச்சு இருப்பதைக் கேட்கிறேன். வெகுமக்கள் மனம் கவரும் அறிவிப்புகள் மட்டுமே இதற்குக் காரணம் என்று நான் நம்பவில்லை. முன்னதாக தமிழக மக்களின் உணர்வுகளைப் பொருட்படுத்தாத ஒரு ஆட்சி இங்கே இருந்தது; அரசியல் தலைமை என்பதே காணாமல்போயிருந்தது; நான் முன்பே பல முறை சுட்டியிருக்கிறபடி கே.பழனிசாமி ஆட்சியின் ஆகப் பெரிய வீழ்ச்சி அதுதான்.<p></p><p>நல்லதோ, கெட்டதோ; பெரும்பான்மை முடிவுகளை மாநிலத்தில் அரசு அதிகாரிகளே எடுத்தனர். நாடு தழுவிய பிரச்சினைகளில் பாஜகவின் முடிவுகளுக்கேற்ப பழனிசாமியின் அரசு ஒத்திசைந்து செயல்பட்டது. கொள்ளைநோய்க் காலகட்டத்தில் இது மேலும் வெளிப்பட்டது. உலகெங்கும் கரோனா பரவியது. தொற்றுக்குள்ளானோரின் வீடுகள் தகரத் தட்டிகளால் அடைத்துத் தடுக்கப்பட்டதையும், வீதிகள் இரும்புக் கம்பிகளால் மறிக்கப்பட்டதையும் இங்கேதான் கண்டோம். ஊரடங்கின்போது தவறி வெளியே சென்றவர்கள் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இவ்வளவையும் பொருட்படுத்தாதவராக பழனிசாமி இருந்தார். தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்து, மக்கள் செத்துக்கொண்டிருந்த சமயத்திலேயே “நானும் உங்களைப் போல டிவி பார்த்துதான் தெரிந்துகொண்டேன்” என்று சொன்ன வரலாறு அவருக்கு இருந்ததால் மக்கள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டார்கள்.</p><p>மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் நடந்த முதல் நல்ல விஷயம், வெகுமக்களின் உணர்வுகளுக்கு இந்த அரசு செவிசாய்க்கும் என்ற சமிக்ஞை வெளியானது; அதுதான் மக்களின் வரவேற்புக்கு முக்கியமான காரணம். ஊரடங்கின் கேடுகளை எதிர்க்கட்சித் தலைவராக நன்கு உணர்ந்திருந்தவர் என்பதால், மிகுந்த தயக்கத்துடனேயே ஊரடங்கு அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டார். நாட்டிலேயே அதிகமான பரவல் எனும் இடத்தை நோக்கி தொற்று பரவிவந்தது; மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன; ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் அலைக்கழிந்தனர்; மருத்துவர்கள் பெரும் பணி நெருக்கடிக்கு ஆளாயினர்; அனைத்துக் கட்சிகளிடத்திலிருந்தும் ஊரடங்குக்கான அழுத்தம் பெருகிவந்தது; ஆட்சிப் பொறுப்பேற்கும்போது இவ்வளவு நெருக்கடியானச் சூழல்கள் ஸ்டாலினுக்கு முந்தையவர்கள் எவரும் எதிர்கொண்டிராதது; ஆக, ஊரடங்கு முடிவு நோக்கி அவர் நகர்ந்த நியாயம் புரிந்துகொள்ளக்கூடியது.</p><p>சரி, இந்த ஊரடங்கை எப்படி அமலாக்குவது? இதில்தான் நமக்குப் பெரிய தெளிவு தேவைப்படுகிறது. உலக நாடுகள் பெரும்பான்மையும் ஊரடங்கை அமல்படுத்தினாலும், மோசமான முன்னுதாரணம் பிரதமர் மோடி 2020 மார்ச் 24-ல் அறிவித்தது என்பதை வரலாறு சொல்லும். போதிய அவகாசம் கொடுக்காமல், மக்களை அல்லோலகல்லோலப்படுத்தி அலைக்கழித்து வதைத்த ஊரடங்கு அது. ஊரடங்கு எப்படி அமலாக்கப்படக் கூடாது என்பதை அதிலிருந்தும், எப்படி அமலாக்கப்பட வேண்டும் என்பதை உலகளாவிய அனுபவங்களிலிருந்தும் இந்த ஓராண்டில் இந்திய மாநிலங்கள் கற்றிருக்கின்றன.</p><p>பிரிட்டனில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த காலகட்டத்திலேயேகூட அத்தியாவசியப் பொருள்களுக்கான அங்காடிகள், கடைகள் முழுமையாக மூடப்படவில்லை. லண்டன் மெட்ரோ உட்பட பொதுப் போக்குவரத்து தொடர்ந்து இயங்கியது. ஆயினும், அங்கேயே பொதுமுடக்கத்தைக் கையாண்ட விதம் தொடர்பில் தீவிரமான விவாதங்கள் இன்று நடக்கின்றன. இந்த விவகாரத்தைத் தொடக்கத்திலிருந்தே மாறுபட்ட கவனத்துடன் ஸ்வீடன் அணுகிவருகிறது. சாத்தியப்பட்ட அனைவரும் வீட்டிலிருந்தபடி பணியாற்றுவதை அது உத்வேகப்படுத்தியது; திரளான கூடுகைகளுக்கு அது தடை விதித்திருந்தது; மக்கள் விழிப்புணர்வுடன் அணுகத் தொடர்ந்து அது வலியுறுத்திவந்தது; அதேசமயம், அன்றாடச் செயல்பாடுகளை ஸ்வீடன் முடக்கவில்லை. தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை விகிதம் பிரிட்டனைக் காட்டிலும் ஸ்வீடனில் அதிகமாக இருந்தபோதிலும், தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை விகிதம் ஸ்வீடனில் குறைவாகவே இருந்தது. மேலும், பொருளாதாரத்தில் ஸ்வீடன் 3% வீழ்ச்சியை எதிர்கொள்ள பிரிட்டன் 10% வீழ்ச்சியை எதிர்கொண்டது. தீவிரமாக ஊரடங்கை அமலாக்குவது மொத்தமாக மக்களுடைய வாழ்க்கைத்தரத்திலும், மரணங்களிலும், நெடுங்காலத்துக்குப் பொருளாதாரத்திலும் ஏற்படுத்தும் விளைவுகளோடு ஒப்பிடப்பட்டு இன்று அங்கு விவாதங்கள் நடக்கின்றன.<span></span></p><a name='more'></a><p></p><p>இந்தியா போன்ற பாரதூர ஏற்றத்தாழ்வு மிக்க சமூகத்தில் பொதுமுடக்கம் உண்டாக்கும் விளைவுகளை முன்னேறிய நாடுகளைப் போல எண்களில் அளவிட்டுவிட முடியாது. வலுவான ஒரு நிறுவனத்தில் ஏற்படும் இழப்பு அதன் ஆண்டு நட்டக் கணக்கோடு முடிந்துவிடும். பலகீனமான ஒரு நிறுவனத்தில் ஏற்படும் இழப்பு அதன் இயக்கத்தையே நிறுத்திவிடும்.</p><p>சென்னைக்கு நான் வந்த புதிதில் எனக்கு அறிமுகமான உணவகங்களில் ஒன்று கௌரி நிவாஸ். உடுப்பிக்காரர்கள் பாரம்பரியத்தில் வந்த உணவகம். சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயிலுக்குச் சென்றால், திரும்பும்போது கௌரி நிவாஸ் சென்று மசாலா தோசை சாப்பிட்டு வருவது ஒரு சம்பிரதாயமாகவே ஆகியிருந்தது. சென்னை பெருவெள்ளம் சைதாப்பேட்டையைச் சூழ்ந்திருந்தபோது, சீக்கிரமே சுதாகரித்துக்கொண்டு சேவையை மறுபடி ஆரம்பித்தார்கள். ‘மக்கள் அவதிப்படும்போது கடைகளைத் திறப்பது காசுக்காக அல்ல, அது ஒரு கடமை’ என்று அதன் மேலாளர் சொன்னார். இன்று ‘கௌரி நிவாஸ்’ கிடையாது. கரோனா ஊரடங்கோடு மூடப்பட்டது; அதன் பின்னர் திறக்கப்படவே இல்லை. பத்துப் பேர் அதில் வேலை பார்த்தார்கள். சென்னையில் மட்டும் 1,500 உணவகங்கள் இப்படி மூடப்பட்டுவிட்டன என்று ஒரு செய்தி படித்தேன். சென்ற ஆண்டில் கரோனாவை ஒட்டி வெளியேறியவர்களில் கணிசமானோர் திரும்பவில்லை. நகரத்தில் எந்த வீதிக்குச் சென்றாலும், நான்கு வீடுகளேனும் ‘வாடகைக்கு’ எனும் அறிவிப்புப் பலகையுடன் பூட்டிக் கிடக்கின்றன. இதைத்தான் சிஎம்ஐஇ போன்ற ஆய்வு நிறுவனங்கள் ‘இந்தியாவில் ஒரு மாதத்தில் 73.2 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன’ என்றும், ‘சென்ற ஆண்டில் பொதுமுடக்கம் விலக்கிக்கொள்ளப்பட்ட இரண்டு மாதங்கள் கழித்தும் மூன்றில் இரண்டு பங்கு குடும்பங்கள் பொதுமுடக்கத்துக்கு முந்தைய காலத்தைவிடக் குறைவாகவே சாப்பிட்டார்கள்; ஆரோக்கியமான உணவை உண்பது குறைந்துவிட்டது’ என்று சமூக ஆய்வு அமைப்புகளும் அவர்களுக்கே உரிய மொழியில் தெரிவிக்கின்றன.</p><p>முன்னதாக, ஸ்டாலின் அரசு வெளியிட்ட முதல் ஊரடங்கு உத்தரவான ‘நண்பகல் 12 மணி வரையிலான இயக்கம்’ மேம்பட்ட ஒரு முடிவு. அடித்தட்டு மக்கள் மீதான கரிசனம் அதில் வெளிப்பட்டது. போலீஸார் முற்றாகவே விதிமீறல்களில் ஈடுபடுவோரைக் கண்டும் காணாமலும் விட்டதே அந்த ஏற்பாடு எதிர்பார்த்த விளைவை உண்டாக்காததற்குக் காரணம். நிறையப் பேர் சாலைகளில் தேவையில்லாமல் சுற்றியது அப்போது கடும் விமர்சனத்துக்கு வழிவகுத்தது. நேர் எதிர் நடவடிக்கையாகப் பாலகங்கள், உணவுக் கடைகள், மருந்தகங்கள் தவிர எல்லாவற்றையும் மூடி மக்களை முழுமையாக வீட்டுக்குள் அடக்கும் இப்போதைய ஊரடங்கு சரியான முறைமை அல்ல.</p><p>எல்லோர்க்கும் அவரவர் உயிர் மீது அக்கறை உண்டு. விதிகளை மீறுவோர் விதிவிலக்குகள், அவர்களுடைய எண்ணிக்கை குறைவு; அவர்களின் பொருட்டு நடைமுறைகளை வகுக்க முடியாது. சென்னையில் நான் வசிக்கும் பகுதியில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வசிக்கின்றனர். சற்றேறத்தாழ 25 ஆயிரம் குடும்பங்கள். அரசாங்கம் குறிப்பிட்ட நேரத்துக்குள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என்று கூறினால், வீட்டுக்கு ஒருவராவது வெளியே வந்தால்தான் முடியும். ஒரு சின்ன வட்டாரத்தின் ஐந்தாறு கடைவீதிகளில் குறிப்பிட்ட நேரத்தில் ஆயிரம் பேர் வந்து சென்றால் அது எப்படிக் காட்சி அளிக்கும்? பெரிய கூடுகைபோலத்தான் காட்சி அளிக்கும்; அப்போதும்கூட இதற்குக் காரணம் யார், மக்களா?</p><p>அச்சம் அல்ல; விழிப்புணர்வே நோய்களுக்கு முடிவு கட்டும். துரதிர்ஷ்டவசமாக, நாம் ஆரம்பம் தொட்டே கரோனாவை அச்சத்தின் வழியிலேயே அணுகிவருகிறோம். இந்த அச்சம்தான் மக்களை வீட்டுச் சிறைக்குள் வைக்கும் அளவுக்குத் தீவிரமான கட்டுப்பாடுகளுக்கும், கட்டுப்பாடுகள் நீங்கும்போது முற்றிலுமாக உடைத்துக்கொண்டு கும்பமேளா கொண்டாடும் அளவுக்குத் தீவிரமான தான்தோன்றித்தனத்துக்கும் வழிவகுக்கிறது. அரசும், அரசியல் கட்சிகளும் அச்சத்தில் உறையும்போது மக்களையும் அது பீடிப்பது சகஜம். தொலைக்காட்சிகளிலும், சமூகவலைதளங்களிலும் ‘மக்கள் சுற்றுகிறார்கள், சுற்றுகிறார்கள்’ என்று கூக்குரலிடுபவர்களின் பதற்றத்தில் வெளிப்படும் அச்சத்தை அடையாளம் காண அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப்பாட்டுக்குள் செல்ல வேண்டும்.</p><p>அரசின் மருத்துவத் துறை, தொழில் துறை, நிர்வாகத் துறை ஒவ்வொன்றின் அதிகாரிகளும் தத்தமது கவலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமக்கேற்ற முடிவுகளை ஆட்சியாளரிடமிருந்து பெற முயற்சிப்பது ஒரு அரசாங்கத்தில் அன்றாட ஆட்டம். இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் ஒரு நல்ல சமநிலையைக் கண்டறிவதிலேயே அரசியல் தலைமையின் சாதுரியம் இருக்கிறது. அந்தச் சமநிலைக்கான சரியான அளவுகோல் எளிய மக்களின் வாழ்வைத் தவிர வேறு இல்லை.</p><p>சென்னையில் சாலை நடைபாதையில் முடங்கிக்கிடக்கும் பெரியவர்களில் ஒருசிலரை நேற்று சந்தித்தேன். “பொழப்புப் போச்சு. கையேந்துறோம். நாலு இட்டிலி கெடச்சாக்கூட ஒரு நாள் ஓடிரும். இன்னைக்குக் கையில ரெண்டு வாழப்பழத்துக்குத்தான் காசு இருக்கு. ஆனா, வாழப்பழத்துக்கு வழியில்லை. தள்ளுவண்டி என்ன பாவம் பண்ணிச்சு?”</p><p><b>- மே, 2021, ‘இந்து தமிழ்’</b></p>சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-44905082748321380022021-06-01T06:28:00.002-07:002021-06-09T11:21:14.139-07:00 திமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன?<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbY6AbhADWyp3RNo6o6dC7buOepc2KNvuSA6mMScE7YvKcDpyMIjqpUeAm811mdM-3o9VniE_wT7vOP-TG0-KiazfC7HQcB1P3cU75AfJEF-vIvP8XSNrtxm3oaMzjufe50mGLv6Y5Hqvn/s299/dmk.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="168" data-original-width="299" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbY6AbhADWyp3RNo6o6dC7buOepc2KNvuSA6mMScE7YvKcDpyMIjqpUeAm811mdM-3o9VniE_wT7vOP-TG0-KiazfC7HQcB1P3cU75AfJEF-vIvP8XSNrtxm3oaMzjufe50mGLv6Y5Hqvn/w320-h180/dmk.jpg" width="320" /></a></div><br />புது டெல்லியின் கருத்துருவாக்கர்கள் 2021 ஐந்து மாநிலத் தேர்தலை எப்படி அணுகுகிறார்கள்? தேர்தல் ஆய்வாளரும், சமூகவியலாளருமான யோகேந்திர யாதவ் விரிவான ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார், ‘பாஜகவின் அஸ்வமேத யாகத்தை நிறுத்தி இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது வங்கம்!’ முதல்வர் மம்தா இந்த வார்த்தைகளுக்குப் பொருத்தமானவர் என்பதில் சந்தேகமே இல்லை. கட்டுரையில் ஓரிரு வரிகளில் தமிழ்நாட்டைக் கடந்திருக்கிறார் யோகேந்திர யாதவ்.<p></p><p>பத்திரிகையாளர் சேகர் குப்தா ட்விட்டரில் தன்னுடைய இணையப் பத்திரிகையின் இரு தலையங்கங்களைப் பகிர்ந்திருந்தார். வங்கத்தைப் பற்றிய தலையங்கம் சொல்கிறது, ‘வங்கத் தேர்தலில் மூன்று முக்கியமான விஷயங்களைக் காண முடிகிறது. முதலாவது, மோடி யுகத்தில் பாஜக அடைந்த பெரிய தேர்தல் தோல்வி இது. பிரிவினை, வகுப்பியச் செயல்திட்டங்கள் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை வெல்ல பாஜகவுக்கு உதவாது. மூன்றாவது, எல்லாம் வல்ல நரேந்திர மோடி என்ற ஆளுமை வழிபாடு இந்தி மாநிலங்கள், குஜராத் போன்றவற்றில் எடுபடலாம். அது ஏனைய பகுதிகளை ஈர்க்காது.’ அதேசமயம், சேகர் குப்தாவின் தமிழ்நாட்டைப் பற்றிய தலையங்கம் இப்படிச் சொல்கிறது, ‘தமிழ்நாட்டில் திமுகவின் வெற்றி ஒன்றும் ஆச்சரியமானதல்ல. ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரின் சுரத்தே இல்லாத, சீரற்ற ஆட்சிக்குப் பிறகு ஜெயலலிதா இல்லாமல் அதிமுகவுக்குத் தொடர்ச்சியான மூன்றாவது வெற்றி சாத்தியமற்றதாகவே இருந்தது!’ அதே ஊடகத்தின் இன்னொரு ஆசிரியர் ராம லக்ஷ்மி – ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையின் முன்னாள் செய்தியாளரும்கூட - இவர் ட்விட்டரில் இப்படி ஒரு வாக்கியத்தைப் பகிர்ந்திருந்தார்: ‘தமிழ்நாட்டின் பப்புவை வாக்கு இயந்திரமாக பிரஷாந்த் கிஷோர் எப்படி மாற்றினர் என்பதை வாசியுங்கள்... முரட்டுத்தனமான மாணவர் தலைவர் என்பதிலிருந்து முதல்வராகும் சாத்தியமுள்ளவராக - திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் இயல்பான உருமாற்றம்.’</p><p>இது வாடிக்கைதான். திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, திராவிடக் கட்சிகள் ஆட்சியின் ஐம்பதாண்டு, அதன் தளகர்த்தர்களில் ஒருவரான கருணாநிதியினுடைய சட்டமன்றப் பணியின் அறுபதாண்டு முத்தருணங்களை ஒட்டி ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூலை உருவாக்குகையில் கட்டுரைக்காக அணுகியபோது, நவீன இந்தியாவின் வரலாற்றாய்வாளர் என்று தன்னை வரையறுத்துக்கொள்ளும் ராமசந்திர குஹா மறுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், ‘எனக்குத் தமிழ்நாட்டைப் பற்றித் தெரியாது!’ அது சரி, பேசவோ எழுதவோ விருப்பமற்ற ஒன்றை ஒருவர் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்!</p><p>என்னைப் பொறுத்த அளவில், வங்கத்தில் மம்தாவின் வெற்றிக்கு இணையானதாகவே தமிழ்நாட்டில் ஸ்டாலினின் வெற்றியையும் காண்கிறேன்.</p><p><span></span></p><a name='more'></a>வங்கத்தைத் தன் கைவசம் கொண்டுவருவதற்கு நேரடியாக யுத்தத்தை நடத்திய பாஜக, தமிழ்நாட்டைத் தன் கைவசம் கொண்டுவருவதற்காக ஒரு நிழல் யுத்தத்தை நடத்தியது. வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸிலிருந்து முக்கியமான ஆட்களைத் தூக்குவதன் வாயிலாக அந்தக் கட்சியைப் பலவீனப்படுத்துவதோடு, புதிய தலைவர்களின் வழியே தன்னைப் பலப்படுத்திக்கொள்ளும் வியூகமானது பாஜக பல மாநிலங்களிலும் கையாளும் வழக்கமான நடைமுறை. தமிழ்நாட்டில்தான் விசேஷமான ஒரு முயற்சியை பாஜக கையாண்டது. ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஒரு பேரியக்கத்தின் தலைவருடைய மறைவைப் பயன்படுத்திக்கொண்டு, அதன் முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்தைத் தனதாக்கிக்கொண்டது.<p></p><p>வங்கத்தில் ஒருவேளை திரிணமூல் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும்கூட ஆட்சி மட்டும்தான் பாஜகவின் கைகளுக்குச் சென்றிருக்கும்; தமிழ்நாட்டில் திமுக தோற்கடிக்கப்பட்டிருந்தால் இரு திராவிடக் கட்சிகளில் ஒன்று உண்டு செரிக்கப்பட்டிருக்கும், மற்றொன்று பெரும் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டிருக்கும். இதை உணர்ந்திருந்ததால்தான் இரு கட்சிகளுமே அதிகபட்ச இடங்களில் போட்டியிட்டன.</p><p>ஆக, தேர்தல் வெற்றியின் வழி திமுக, அதிமுக இரு திராவிடக் கட்சிகளையும் சேர்த்தே காப்பாற்றியிருக்கிறார் ஸ்டாலின். கூடவே மம்தாவைப் போல பாஜகவின் மூர்க்கப் பயணத்துக்கு முட்டுக்கட்டை போட்டு ஜனநாயகத்தையும் காப்பாற்றியிருக்கிறார்.</p><p>இன்னொரு சிறப்பும் ஸ்டாலினின் வெற்றியில் உண்டு. வங்கத்திலாவது மாநில அரசு மம்தாவின் கைகளில் இருந்தது; தமிழகத்தில் மாநிலத்திலும் ஒன்றியத்திலுமாக சகல அதிகாரங்களையும் கையில் வைத்திருந்த ஒரு கூட்டணியை எதிர்கொண்டு இந்த வெற்றியை ஸ்டாலின் சாதித்திருக்கிறார். தமிழக வரலாற்றையே எடுத்துக்கொண்டால், சுதந்திரத்துக்குப் பிந்தைய 15 சட்டமன்றத் தேர்தல்களில் 1967, 1996, 2001 மூன்று தேர்தல்கள் மட்டுமே இதற்கு முன்னோடி. அந்த வகையில், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா வரிசையில் இரட்டைச் சவாலை எதிர்கொண்டு வென்றிருக்கிறார் ஸ்டாலின்.திமுகவின் வெற்றி வேறு மூன்று காரணங்களாலும் தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் முக்கியமானதாகிறது.</p><p>தமிழ்நாட்டின் இன்றைய முன்னேற்றத்துக்கு முக்கியமான காரணம், பரவலாக்கப்பட்ட அனைவருக்குமான வளர்ச்சிக்கான முனைப்பு. இந்த லட்சியத்தில் பயணிக்க வேண்டிய தொலைவு வெகுதூரம் என்றாலும், வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவுக்கும், அதற்கு அடுத்த பெரிய நகரங்களான அசன்சால், சிலிகுரி, துர்காபூருக்கும் இடையில் கட்டமைப்பு வசதிகளில் உள்ள பாரிய வேறுபாடுகளை நேரில் கண்டால்தான் ஒரு தமிழர் சென்னைக்கு அடுத்து பெரிய நகரங்களான கோவை, மதுரையில் தொடங்கி நெல்லை, நாகர்கோவில் வரை தமிழ்நாட்டில் வளர்ச்சி எவ்வளவு பரவலாக முன்னெடுத்துச்செல்லப்பட்டிருக்கிறது என்பதை உணர முடியும்.</p><p>சமூகநீதி என்ற சொல் ஏதோ இடஒதுக்கீட்டை மட்டும் குறிப்பதானது அல்ல; எல்லா நிலைகளிலும் வாய்ப்புகளையும் உரிமைகளையும் சமமாகக் கொண்டுசெல்வதையும் ஓர் ஆட்சியாளர் எல்லாச் சமூகங்களுக்கும் எல்லா பிராந்தியங்களுக்கும் சமமானவராக நடந்துகொள்வதையும் அது உள்ளடக்குகிறது. எல்லோரையும் அரவணைப்பதை சமூகநீதியாகப் பேசும் தமிழ்நாட்டு அரசியலையும், அதிமுக போன்ற ஒரு பேரியக்கத்தையும் சாதிய மற்றும் பிராந்தியயிய அடிப்படையிலான குறுகிய பாதை நோக்கி பழனிசாமி இழுத்துச்சென்றார். முதல்வர் என்பதையும் மறந்து ஓட்டுகளுக்காக ஒருகட்டத்தில் சாதி மாநாடுகளில் எல்லாம் அவர் பங்கேற்றது தமிழக அரசியலுடைய வீழ்ச்சியின் உச்சம். இந்தத் தேர்தல் முடிவானது இந்த அபாயகரமான அரசியல் போக்கைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது.</p><p>இந்தியாவில் கூட்டாட்சிக்கான உரத்த குரல் தமிழ்நாடு. பாஜகவால் வங்கமும் மம்தாவும் எப்படியான அழுத்தத்தை எதிர்கொண்டார்களோ அதற்குச் சற்றும் குறைவில்லாத அழுத்தத்தையே வேறு ரூபத்தில் தமிழகமும் பழனிசாமியும் எதிர்கொண்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் பழனிசாமியிடம் மம்தாவிடமிருந்து வெளிப்பட்ட அணுகுமுறையையே எதிர்பார்த்தார்கள். முன்னதாக ஜெயலலிதா காலத்தில் அதிமுக இந்த எதிரடிக் கலாச்சாரத்தைக் கொண்டிருந்தது. பழனிசாமி தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தன்னுடைய பதவியின் மாண்பையும் தமிழ்நாட்டின் உரிமைகளையும் பறிகொடுத்தார்.</p><p>ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவி வெறும் நிர்வாகப் பதவியாக பழனிசாமி காலத்தில் சுருங்கியது. இயல்பாகவே பலவீனமான கூட்டாட்சி அமைப்பைக் கொண்டதான இந்தியாவில் மாநிலங்களின் அதிகாரங்கள் சில்லுசில்லாகப் பெயர்க்கப்படும் காலகட்டத்தில் அவர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பவராக இருந்தார். அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என்று நீடித்த ஒரு மரபு நசிந்துகொண்டிருந்தது. இந்தத் தேர்தல் முடிவானது இந்தச் சிதைவைத் தடுத்து நிறுத்தி அந்த மரபு மீட்டெடுக்கப்படும் நம்பிக்கையை அளிக்கிறது.</p><p>தமிழக மக்களின் உணர்வுகளைச் சரியாகவே உணர்ந்திருந்ததால்தான் ‘இந்தத் தேர்தல் தமிழ்நாட்டின் சுயமரியாதையைக் காப்பதற்கான யுத்தம்’ என்று குறிப்பிட்டார் ஸ்டாலின். தம்மைத் தேர்ந்தெடுத்த மக்கள் தீர்ப்புக்கு நன்றி தெரிவித்திருக்கும் அவர் ‘தமிழகம் வெல்லும்’ என்று சொல்லியிருக்கிறார்; அது இந்திய ஒன்றியத்தின் ஜனநாயகத்தோடும் பிணைக்கப்பட்டதுதான்!</p><p><b>- மே, 2021, ‘இந்து தமிழ்’</b></p>சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-49526904516450573722021-06-01T06:15:00.010-07:002021-07-10T01:47:23.973-07:00 தமிழ்நாட்டைப் பிரிக்கலாமா?<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSttUzL9kMlTiFtDshb4BSqQ8JvpunX90iEfaFX6doxMNamjblQe5eYVIkLE5pStxITpGL0kp8u4HWWwd_aY1B-pah1XAhkkAF7qpM1lEuHwCu0SOrfjZ3PuiD7RxaZtGCpa9IJkGTn-Q-/s806/Madurai-alanganallur-jallikattu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="500" data-original-width="806" height="199" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSttUzL9kMlTiFtDshb4BSqQ8JvpunX90iEfaFX6doxMNamjblQe5eYVIkLE5pStxITpGL0kp8u4HWWwd_aY1B-pah1XAhkkAF7qpM1lEuHwCu0SOrfjZ3PuiD7RxaZtGCpa9IJkGTn-Q-/w320-h199/Madurai-alanganallur-jallikattu.jpg" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div style="text-align: left;">பனிமேகப் பழுப்பு மலைக் குன்றுகளும், பசும்புல்வெளிகளும் நிரம்பியதான சிக்கிம் ஞாபகம் வரும்போதெல்லாம், ‘இந்த நாட்டில் சிக்கிமர் ஒருவர் பிரதமராகும் நிலை என்றாவது வருமா?’ என்று பிரதீப் பாஞ்சுசோபாம் கேட்ட கேள்வியும் நினைவுக்கு வரும். ‘சிறிய மாநிலங்களே சிறந்தது’ என்று சொல்லி மாநிலங்களை உடைக்க வாதிடுபவர்களிடம் எல்லாம் அவசியம் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும் என்றும் தோன்றும்.</div><p style="text-align: left;"></p><p style="text-align: left;">இந்தியாவின் சிறிய மாநிலம் சிக்கிம். 7,096 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்ட சிக்கிமின் மொத்த மக்கள்தொகை வெறும் 6.10 லட்சம். தமிழ்நாட்டோடு ஒப்பிட 18-ல் ஒரு பங்கு நிலப்பரப்பையும், 139-ல் ஒரு பங்கு மக்கள்தொகையையும் கொண்டது.</p><p style="text-align: left;">சிறிய மாநிலங்களே வளர்ச்சிக்கு உகந்தது என்று சொல்லி தமிழ்நாட்டின் பிரிவினைக்குப் பொது அறிவுஜீவியான ஞாநி போன்றவர்களே வாதிட்டிருக்கும்போது, பாமக நிறுவனர் ராமதாஸ் போன்றவர்கள் தொடர்ந்து இதைப் பேசுவதில் ஆச்சரியம் இல்லை. </p><p style="text-align: left;">இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களுக்கு முன்னத்தி ஏரான ஆந்திர பிரதேசம் பிளவுண்டதில் சாதிக் கணக்குகளுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தெலுங்கர்கள் ஒரே மொழியினராய்ச் சிந்தித்தபோது இந்தியாவில் இந்திக்கு அடுத்து அதிகமாகப் பேசப்படும் மொழியின் தாய்நிலமாக சக்திமிக்க ஆந்திர பிரதேசம் பிறந்தது. அதே தெலுங்கர்கள் ரெட்டிகளாகவும் கம்மாக்களாகவும் காப்புக்களாகவும் மீண்டும் பிளவுண்டபோது ஆந்திரம், தெலங்கானா இரண்டு மாநிலங்கள் உருவானதோடு, அடுத்து ‘ராயலசீமா’வுக்கான மூன்றாவது கங்கும் கனன்றுகொண்டிருக்கிறது. </p><p style="text-align: left;">முன்னதாக வடதமிழ்நாடு, தென்தமிழ்நாடு என்று பேசிவந்த ராமதாஸ் அடுத்து கொங்குநாடு என்ற பிளவையும் சேர்ப்பதும், சமூகவலைதளங்களில் இந்த விவாதம் தீயெனப் பரவுவதும் தமிழர்களை மறைமுகமாகச் சாதிரீதியாகப் பிளப்பதே ஆகும். நேரடியாக வன்னியர் நாடு, கவுண்டர் நாடு, தேவர் நாடு, நாடார் நாடு என்றும் அடுத்தடுத்து இதைப் பேசலாம்.</p><p style="text-align: left;"><span></span></p><a name='more'></a><p style="text-align: left;"></p><p style="text-align: left;">இந்தியாவில் வளர்ச்சி என்ற பெயரில் மாநிலப் பிரிவினையையும், சின்ன மாநிலங்களுக்கான தேவையையும் நிர்வாகரீதியாகப் பேசுபவர்கள் வசதியாக ஒரு விஷயத்தை மக்கள் பார்வைக்கு அப்பால் கொண்டுசெல்கிறார்கள். தமிழ்நாடுபோல மொழியாலும் இனத்தாலும் பண்பாட்டாலும் உணர்வாலும் பிணைக்கப்பட்ட ஏழு கோடி சொச்ச மக்களையே நிர்வாக வசதிக்காக மூன்றாகப் பிரிக்கலாம் என்றால், நூற்றுமுப்பத்தைந்து கோடி மக்களோடு ஆயிரம் வேற்றுமைகள் இடையே ஒற்றுமையைப் பேச முனையும் இந்தியாவை நிர்வாகரீதியாக எப்படி அணுகலாம்? ‘ஐயோ பிரிவினை… அபாயம்! நம்முடைய ஒற்றுமைதானே நம்முடைய வளம்; இந்தப் பெரும் மக்கள்தொகைதானே சர்வதேச அளவில் இந்தியாவின் பலம்!’ என்ற குரல் உடனே ஒலிக்கிறதல்லவா? மாநிலங்களுக்கு மட்டும் அது எப்படிப் பொருந்தாமல்போகும்? வட்டங்கள், மாவட்டங்கள் மாதிரி மாநிலமானது இந்தியாவில் வெறும் நிர்வாக அலகு அல்ல. ரத்தமும் சதையும் கனவுகளும் லட்சியமும் நிரம்பிய இறையாண்மைமிக்க உயிர் அது.</p><p style="text-align: left;">நிர்வாகரீதியாகவே பேச வேண்டும் என்றாலும்கூட ஒரு மாநிலத்தின் வளமும் பலமும் வெறும் பொருளாதார வரவுசெலவுக் கணக்குகளில் மட்டும் இல்லை. </p><p style="text-align: left;">இந்தியாவின் 9 பிரதமர்கள் உத்தர பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும், நாட்டின் மக்களவையில் மாநிலங்களிலேயே அதிக பிரதிநிதித்துவமான 80 இடங்களை உத்தர பிரதேசம் கொண்டிருப்பதும் ஒன்றுக்கொன்று பிணைந்தவை. இன்னும் நூறாண்டுகளானாலும் சிக்கிமிலிருந்து ஒரு பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சாத்தியம் குறைவு என்று சிக்கிமர்கள் குறிப்பிடக் காரணம் மக்களவையில் அது பெற்றிருக்கும் பிரதிநிதித்துவம் ஒரே இடம். ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களுமே இன்று வரை இந்திய அரசியலின் பெரும் போக்கிலிருந்து புறந்தள்ளியே வைக்கப்பட்டிருப்பதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, வடகிழக்கின் 8 மாநிலங்களுக்கும் சேர்த்து மக்களவையிலுள்ள பிரதிநிதித்துவம் 25 இடங்கள். பிரதமர்களின் உருவாக்கத்தில் மட்டுமல்ல; இந்தியா போன்ற சமத்துவமற்ற ஒரு கூட்டாட்சியில் எந்த ஒரு திட்டத்திலும், நிதி ஒதுக்கீட்டிலும் தனக்கான பங்கைப் பெற மாநிலங்கள் கொண்டிருக்கும் பெரும் பேர சக்தி அவை கொண்டிருக்கும் ஜனத்தொகையின் வழியிலான பிரதிநிதித்துவம்தான்.</p><p style="text-align: left;">மேலும், இந்தியாவில் சிறிய மாநிலங்கள் பெரும் வளர்ச்சி பெற்றிருக்கின்றன, பெரிய மாநிலங்கள் எல்லாமே பின்தங்கியிருக்கின்றன என்பதற்கு இங்கு வலுவான ஆதாரமும் இல்லை. இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் இன்று முதல் வரிசையில் நிற்கும் மஹாராஷ்டிரம், குஜராத், கர்நாடகம், தமிழகம் எதுவுமே சிறிய மாநிலம் கிடையாது. நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தர பிரதேசம் வளர்ச்சியில் பின்தங்கியிருப்பதற்கும்கூட அதன் அளவு முக்கியமான காரணி இல்லை என்பதை வரலாற்றை அறிந்தவர்கள் உணர்வார்கள். இன்றைக்கு ஒப்பிட சுதந்திர இந்தியாவின் தொடக்கக் காலகட்டத்தில் நன்றாக நிர்வகிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று அது. சாதியமும் மதவியமும் தோய்க்கப்பட்ட வெறுப்பு அரசியலால் ஒரு சமூகமாக அது பிளவுண்டிருப்பதும், எப்போது வேண்டுமானாலும் வன்முறை, கலவரச் சுழலில் மக்கள் தள்ளப்படும் கலாச்சாரத்துக்கு அது ஆட்பட்டிருப்பதுமே உத்தர பிரதேசம் கீழே தள்ளப்பட பிரதான காரணம்.</p><p style="text-align: left;">இந்தியாவில் எப்போது ஒரு மாநிலத்தின் எல்லை தனித்து வரையறுக்கப்படுகிறதோ அப்போதே அதன் ஆன்மாவிலும் பிளவு உண்டாகிவிடுகிறது. ஓர் உதாரணத்துக்கு, புதுச்சேரியின் அரசியல் சூழலை எந்த அளவுக்குத் தமிழக மக்கள் அக்கறையில் கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்ளலாம்; புதுச்சேரியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவரின் பெயர் தமிழ்நாட்டில் எத்தனை பேருக்குத் தெரியும்? </p><p style="text-align: left;">வளர்ச்சியின் பெயரால் மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற மாநகரங்களைத் தனி ‘பெருநகர மாநிலங்கள்’ ஆக்கிவிட வேண்டும் என்று பேசும் மேட்டிமையர்களும் இதை யோசிக்க வேண்டும். இந்தியாவிலுள்ள ஒவ்வொரு பெருநகரமும் அது சார்ந்த மாநிலத்தின் பெட்டகம். ஒரு பெருநகரத்தை அதன் மாநிலத்திலிருந்து பிரிப்பது ஒரு துண்டிப்பு என்பதோடு அந்த மாநில மக்களின் அர்ப்பணிப்புக்கும் தியாகத்துக்கும் இழைக்கப்படும் வரலாற்றுத் துரோகமும் ஆகும். எல்லாவற்றிலும் முக்கியம், மனித வளத்தில் உண்டாகும் இழப்பு. தமிழகத்தை மூன்றாகப் பிரித்தால் மூன்று ராஜாஜிக்கள், மூன்று பெரியார்கள், மூன்று காமராஜர்கள், மூன்று அண்ணாக்கள் உருவாகிவிடுவார்களா?</p><p style="text-align: left;">சுதந்திர இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கான தேவை பிரிட்டிஷார் தங்களுடைய காலனியாதிக்க நிர்வாக வசதிக்காக வைத்திருந்த கோளாறான பகுப்பின் விளைவாக உருவானது. இனியும்கூட மாநிலங்களை நாம் பிரிக்கலாம். அது எங்கோ உள்ளடக்கும் பண்பைக் கொண்டிருக்க வேண்டும்; மக்களைப் பிளப்பதாகக் கூடாது. மேலும், ஒரு நல்ல நிர்வாகத்துக்கான சிறப்பு, பிராந்தியம் சிறியதா பெரியதா என்பதைக் கொண்டு அமைவதில்லை. அந்தப் பிராந்தியத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் வளர்ச்சியும் வாய்ப்புகளும் சமமாகக் கொண்டுசெல்லப்படுவதிலும், மக்கள் பாகுபாடின்றி அணுகப்படுவதிலும், நிர்வாகமும் அதிகாரமும் பரவலாக்கப்படுவதிலும் இருக்கிறது. பிளவுக்கும் பிரிவினைக்கும் மறுபெயர் பரவலாக்கம் அல்ல!</p><p style="text-align: left;"><b>- மார்ச், 2021, ‘இந்து தமிழ்’ </b></p>சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-79915742694749495952021-06-01T06:11:00.003-07:002021-06-09T11:21:02.549-07:00 இது தமிழ்நாட்டின் சுயமரியாதையை மீட்பதற்கான போர்: ஸ்டாலின் பேட்டி<p><table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto;"><tbody><tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkcX3EDlS5_JGTlRwpoG6exyodu_GUSi8Xano2JrYkqMeu-KkDGJibfE3A3gGSHw1Z6Ls0pZJZBZTFsmqqBm99hqnbSxFzeEkPVvBPbkHtyYXmvONdwSlJToOj7PHWwcetsyxfU33NUxmU/s750/stalin.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="500" data-original-width="750" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkcX3EDlS5_JGTlRwpoG6exyodu_GUSi8Xano2JrYkqMeu-KkDGJibfE3A3gGSHw1Z6Ls0pZJZBZTFsmqqBm99hqnbSxFzeEkPVvBPbkHtyYXmvONdwSlJToOj7PHWwcetsyxfU33NUxmU/w320-h213/stalin.jpg" width="320" /></a></td></tr><tr><td class="tr-caption" style="text-align: center;"></td></tr></tbody></table><br />சித்திரை உச்சிவெயில். உடல் முழுக்க வியர்வையில் நனைந்திருந்தாலும் அசராமல் காத்திருக்கிறது கூட்டம். அலரும் ஒலிபெருக்கியின் முழக்கங்களுக்கும், தொண்டர்களின் ஆரவாரத்துக்கும் இடையில் கிழித்துக்கொண்டு நுழையும் பிரச்சார வேனிலிருந்து வெளிப்படும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மூன்றாண்டுகளுக்கு முன்புபோல பலராலும் சாதாரணமாக மதிப்பிடப்பட்டவராக இல்லை; 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி உட்பட எதிரில் உள்ள அத்தனை நட்சத்திரப் பிரச்சாரகர்களின் பிரதான இலக்கும் அவரே. ஆளுங்கட்சியின் தலைவரை அல்லது முதல்வரைப் பிரதான இலக்காக்கி நடக்கும் பிரச்சாரங்களிலிருந்து இந்தத் தேர்தல் முழுவதுமாக மாறுபட்டிருக்கிறது; எதிர்க்கட்சித் தலைவரையே எல்லோரும் குறிவைக்கிறார்கள். ஜாம்பவான் கருணாநிதியின் மறைவுக்குப் பின் திமுகவில் அதிகார மாற்றத்தைச் சுமுகமாகக் கைமாற்றிக்கொண்டதோடு, ஒட்டுமொத்தக் கட்சியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ஸ்டாலின் கூட்டணியையும் ஜாக்கிரதையாகக் கையாள்கிறார்.</p><p>தன்னுடைய தவறுகள், போதாமைகளை ஸ்டாலின் தீர்வுகள் வழி எதிர்கொள்கிறார். தான் கருணாநிதிபோல வசீகரமான பேச்சாளர் அல்ல என்பதை உணர்ந்திருப்பவர் திமுகவின் கூட்டங்களை மக்களுடன் உரையாடும் களமாக மாற்றியிருக்கிறார். எல்லோருக்கும் பொறுமையாகக் காது கொடுப்பதும், குறைகளுக்கு முகம் கொடுப்பதும், சரியானவர்களிடம் பொருத்தமான பொறுப்புகளை ஒப்படைப்பதும் ஸ்டாலினின் பெரிய பலம் என்கிறார்கள் கட்சியினர். சரியான தருணத்தில் கட்சியைத் தகவல் தொழில்நுட்ப யுகத்துக்கும் நகர்த்தியவர் மாறிவரும் புதிய சூழல்களுக்கு ஏற்ப கட்சிக்குப் புது உருவம் கொடுத்திருக்கிறார். 2014 மக்களவைத் தேர்தலில் அத்தனை இடங்களிலும் தோற்ற கட்சி 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் வென்றது பெரிய திருப்பம். 2021 சட்டமன்றத் தேர்தல் ஸ்டாலினுடைய வாழ்வில் முக்கியமான தேர்தல். கடுமையாக உழைக்கிறார். 20 நாட்களில் அவருடைய பிரச்சார வாகனம் 12,000 கி.மீ. பயணித்து 234 தொகுதிகளையும் சுற்றிவந்திருக்கிறது. தங்கும் ஊர்களில் வீதிகளில் மக்களுடன் நடப்பவர் தொடர் பயணங்களுக்கு இடையே பேசினார்.</p><p><b>இந்த நாட்களில் உங்களுடைய ஒரு நாள் எப்படியிருக்கிறது?</b></p><p>உண்மையில், எந்த ஊருல இருக்கேன், எந்த ஊருல தூங்குறேன்னு என்னாலேயே யூகிக்க முடியாத அளவுக்கு ஓடிக்கிட்டே இருக்கேன். பொதுவா, ஒரு திட்டமிட்ட வாழ்க்கை முறை என்னுடையது. காலையில அஞ்சரை மணிக்கு எழுந்துடறது, பத்திரிகைகளை வாசிக்கிறது, ஐஐடி வளாகத்துல நடைப்பயிற்சி, அடுத்ததாக வீட்டுல உடற்பயிற்சி, காலை உணவு, விருந்தினர் சந்திப்பு, அப்புறம் ‘முரசொலி’ அலுவலகத்துக்குப் போறது, அதன் பிறகு அறிவாலயம், அப்புறம் வீட்டுல மதிய உணவு, சின்ன தூக்கம், மீண்டும் சந்திப்புகள், திரும்பவும் மாலையில் அறிவாலயம், இரவு பொதுக்கூட்டங்கள், அப்புறம் வீடு, இரவு உணவு, கொஞ்ச நேரம் வாசிப்பு, தூக்கம்னு இருக்கும். ஆனா, தேர்தல் எல்லாத்தையும் மாத்திருச்சு. தேர்தல்னாலே அப்படித்தானே! அதுவும் இது தேர்தலா இல்லை; யுத்தமா ஆயிடுச்சு.</p><p><b>நீங்கள் செய்த முதல் தேர்தல் பிரச்சாரம் எது? இன்றிலிருந்து அன்றைய தமிழகத்தை நினைவுகூர்ந்தால், நாம் எதையெல்லாம் பெற்றிருக்கிறோம், எதையெல்லாம் இழந்திருக்கிறோம், என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்?</b></p><p>எனக்குப் பன்னிரண்டு வயசு இருக்கும். சென்னை மாநகராட்சிக்கு அப்போ தேர்தல் நடந்துச்சு. எங்க பகுதியிலேர்ந்து கவுன்சிலர் பதவிக்கு ஜேசுதாஸ்ங்கிறவர் திமுக சார்புல நின்னார். நானும் நண்பர்களும் சேர்ந்துக்கிட்டு சைக்கிள்ல முன்னாடி மைக்கைக் கட்டிக்கிட்டு உதயசூரியனுக்கு ஓட்டு கேட்டு கோபாலபுரம் தெருக்கள்ல போனோம். அப்படித்தான் என் பேச்சு மைக்ல ஆரம்பிச்சுச்சு. கோபாலபுரத்துல சண்முகம் அண்ணன்னு நாங்க சொல்வோம், அவரோட சலூன்தான் எங்க கூடுகைக்கான இடம். அங்கேதான் ‘இளைஞர் திமுக’னு மன்றம் ஆரம்பிச்சோம். அடுத்து, 1967 சட்டமன்றத் தேர்தல்லேயும் கொடி புடிச்சோம். 1971 தேர்தல்ல நாடகம் போட்டோம். பெரிய ஆளாகி தமிழ்நாடு முழுக்கச் சுற்றுப்பயணம் செஞ்சது அப்படிங்கிறது 1984-ல் நடந்துச்சு. இளைஞரணியைப் பெரிசாக் கட்டுற வேலையையும் சேர்த்து அப்ப பார்த்தோம். பரிதி இளம்வழுதி, திருச்சி சிவா இவங்களையெல்லாம் உள்ளடக்கி ஒரு குழு. கார்லேயே தமிழ்நாடு முழுக்கப் போனோம். இரவுல பயணம்; பகல்ல கூட்டங்கள். நான்தான் காரை ஓட்டுவேன். அன்னைக்குப் பார்த்த தமிழ்நாட்டுக்கும் இன்னைக்குப் பார்க்கிற தமிழ்நாட்டுக்கும் இடையில நிறைய நல்ல மாற்றங்கள் இருக்கு. முக்கியமா வறுமையை, பசியைப் பெரிய அளவுல ஒழிச்சுருக்கோம். ஆனா, இன்னும் நிறைய நாம முன்னேறியிருக்கணும். அது நடக்காமல் போக முக்கியமான ஒரு காரணம் அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஏற்படக்கூடிய தேக்கநிலை; திமுக கொண்டுவர்ற நல்ல திட்டங்களைத் திமுக கொண்டுவந்ததுங்கிற ஒரே காரணத்துக்காக அவங்க நிறுத்துறது தொடர் வளர்ச்சியில பெரும் முட்டுக்கட்டை. தமிழகம் இழந்திருக்கிறதா நான் நினைக்கிறது நல்ல சுற்றுச்சூழலை. இதை மாத்தணும்னுதான் கட்சியிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குன்னு ஒரு அணியை உருவாக்கினோம். வளர்ச்சின்னு பேசும்போதெல்லாம் சுற்றுச்சூழல் நலனையும் கவனத்துல எடுத்துக்கணும்னு நெனைக்கிறேன். அதுதான் நீடித்த வளர்ச்சிக்கான வழி, இல்லையா?</p><p><b><span></span></b></p><a name='more'></a><b>ஐம்பதாண்டுகள் அரசியல் வாழ்க்கையில், உங்கள் தலைமையிலான ஒரு ஆட்சிக்காக நீங்கள் பிரச்சாரம் செய்யும் முதல் தேர்தல் இது. சகல அமைப்பு பலங்களையும் கொண்ட மத்திய அரசு – மாநில அரசு இரண்டும் சேர்ந்த ஒரு கூட்டணியை எதிர்க்கிறீர்கள். அழுத்தத்தை எப்படி உணருகிறீர்கள்?</b><p></p><p>என் தலைமையிலான ஆட்சி வரணுங்கிறதைவிடவும், திமுக ஆட்சிக்கு வரணுங்கிறதுக்காகத்தான் உழைச்சிக்கிட்டிருக்கேன். தலைவர் கலைஞர் இல்லாத சூழல்ங்கிறதுதான் கூடுதல் பொறுப்பு. இதுவரைக்கும் அவரே எல்லாமுமாகவும் இருந்தார், அவர் சிந்திப்பார், நாங்க அவர் சொல்றதைச் செஞ்சாப் போதும்; இப்போ சிந்திக்கிறது, செயல்படுத்துறது ரெண்டையும் செய்ய வேண்டியிருக்கு. மத்தபடி தமிழர் விரோத சக்தியும், தமிழர் துரோக சக்தியும் கூட்டணி அமைச்சிருக்கிறது எங்களுக்கு வசதிதான்.</p><p><b>பொதுவாக, திமுக - அதிமுக இரண்டுமே தேர்தல்களை நடைமுறைரீதியாக அணுகுவதும், தேர்தல்களில் நிர்வாகரீதியிலான விஷயங்களைப் பேசுவதுமே வழக்கம். மாறாக, இந்தத் தேர்தலைச் சித்தாந்தப் போராக நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். என்ன காரணம்?</b></p><p>இது திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையிலான தேர்தல் இல்லை; தமிழ் மக்களுக்கும் பாசிஸ சக்திகளுக்கும் இடையில நடக்குற யுத்தங்கிறதாலதான் அப்படிக் குறிப்பிடுறேன். இந்திய ஒன்றியத்துல ஏற்கெனவே மாநிலங்களுக்கு இருக்கிற அதிகாரங்கள் குறைவு. அண்ணா காலத்துலேர்ந்து மாநிலங்களை மையப்படுத்தினதா இந்தியாவை மாற்றியமைக்கணும்னு நாம பேசிக்கிட்டிருக்கோம். கலைஞர் நிறைவேற்றின மாநில சுயாட்சி தீர்மானத்தைத் தொடர்ந்து வலியுறுத்திக்கிட்டு இருக்கோம். மாநிலங்களுக்குன்னு மிச்சம் இருக்குற கொஞ்சநஞ்ச உரிமைகளையும் வேட்டையாடிட்டுருக்குற அரசா மோடியோட பாஜக அரசு இருக்கு; அதுகிட்ட தன்னோட சொந்த சுயநலன்களுக்காகத் தமிழ்நாட்டோட எல்லாத் தனித்துவங்களையும் உரிமைகளையும் பலிகொடுக்குற அரசா பழனிசாமியோட அதிமுக அரசு இருக்கு. நாம என்ன மொழி பேசணும், நாம என்ன சாப்பிடணும்கிறதுல தொடங்கி நம்ம குழந்தைங்களை என்ன படிக்க வைக்கணும், என்ன வேலைக்கு அவங்களை அனுப்பணும்கிறது வரைக்கும் டெல்லி தீர்மானிக்கும்னா அப்போ நாம எல்லோரும் அடிமைகளா? மாநிலங்களோட நிதி உரிமையை ‘ஜிஎஸ்டி’ மூலமாப் பறிச்சாங்க. கல்வி உரிமையைப் பறிக்குறதுக்குத் தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு முறையையும் புதிய கல்விக் கொள்கையையும் கொண்டுவந்தாங்க. அடுத்து, வேலைவாய்ப்புகளையும் குறிவைச்சிட்டாங்க. தன்னுடைய ஆதிக்கப் பலத்தால் ஒட்டுமொத்தமா மாநிலங்களைக் கீழே தள்ளக்கூடிய அக்கிரமம் இது. மாநிலங்களுக்கான வலுவான குரல் தமிழ்நாடு. ஆனா, அதிமுகவை பாஜக கொத்தடிமை ஆக்கிட்டதாலேயே இன்னைக்குத் தமிழ்நாடு தன்னுடைய குரலை இழந்து உரிமைகளைப் பறிகொடுத்து நிக்குது. இது தமிழ்நாட்டுக்கு பாஜகவும் அதிமுகவும் இழைச்சுருக்குற மாபெரும் அவமானம். இந்த அவமானம் துடைக்கப்படணும். அதனாலதான், இது தமிழ்நாட்டோட சுயமரியாதையை மீட்டெடுக்கும் போர்னு குறிப்பிடுறேன்.</p><p><b>கடந்த காலத்தில் தமிழ்நாட்டில் டெல்லி ஆதிக்கம் ஓரளவேனும் மட்டுக்குள் இருக்க மாநிலக் கட்சிகளே இங்கு பிரதான இடத்தில் நீடிப்பதும் காரணம். திமுக எதிர் அதிமுக என்கிற சமன்பாட்டை இதற்கு முன் இரு கட்சிகளுமே அனுசரித்துவந்திருக்கின்றன. இம்முறை ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்கிற அளவுக்கு அதீதமான நிலைப்பாட்டுக்குத் திமுக சென்றது வியப்பளிப்பதாக இருந்தது. வெற்றிடம் என்று ஒன்றில்லை. அதிமுக இல்லாவிட்டால் அந்த இடத்தை பாஜகதானே நிரப்பும்?</b></p><p>ஏற்கெனவே நிரப்பிடுச்சு. இன்னைய பழனிசாமியோடஅதிமுக முன்னைய அதிமுக இல்லைங்கிறதையும், அது அதிமுக முகமூடி போட்டுக்கிட்டுருக்கிற பாஜகங்கிறதையும் புரிஞ்சுக்கிட்டீங்கன்னா பதில் கிடைச்சுரும். தமிழ்நாட்டுல பாஜகவால வேரூன்ற முடியாது. அதனாலதான், அதிமுகவை அது உண்டு செரிச்சு அந்த இடத்தைத் தன்னோட இடமா மாத்திக்கிற முயற்சியில இருக்கு. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னால் அதிமுகவுல நடந்த ஒவ்வொரு விஷயத்துலேயும் பாஜகவின் சதிவலைப் பின்னல்கள் இருக்கு. பழனிசாமியும் அவரோட அமைச்சரவை சகாக்களும் அடிச்சு வைச்ச கொள்ளைக்கான ஆதாரங்களைக் காட்டி மிரட்டியே இன்னைக்கு அதிமுகவைத் தன் கைக்குள்ள கொண்டுவந்துடுச்சு பாஜக; தன்னோட சுயநலனுக்காகக் கட்சியோடு சேர்த்து, தமிழ்நாட்டோட அத்தனை உரிமைகளையுமே காவுகொடுத்துடுச்சு பழனிசாமி அரசாங்கம். ஆக, அதிமுகவோட முதுகுக்குப் பின்னால பாஜக பதுங்கி இருக்கு. பாஜகவின் நோக்கம் சம்ஸ்கிருதமயமா இருக்கு. இந்திமயமா இருக்கு. அது மட்டுமல்ல; தமிழ் விரோதமாகவும் தமிழர் விரோதமாகவும் இருக்கு. விளைவா, உரிமைக்குக் குரல் கொடுக்குற தமிழகம், இன்னைக்கு மத்திய அரசோட எல்லா எதேச்சதிகாரச் செயல்பாடுகளையும் ஏத்துக்க வேண்டிய கீழ்நிலையை அடைஞ்சுருக்கு. இந்த நிலைமையிலேர்ந்து நாம மீளணும்னா ரெண்டும் ஒண்ணாகி நிக்கிற அதிமுக – பாஜக கூட்டணி முற்றிலுமா தோற்கடிக்கப்படணும். தப்பித்தவறி அதிமுக சில இடங்கள்ல ஜெயிச்சாலும் அதையும் தேர்தலுக்குப் பிறகு பாஜக கபளீகரம் பண்ணிடும்கிறதுதான் உண்மை. அதனாலதான் ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்.’ திமுகவோட இந்த முழக்கத்தை முழு சங்கியா மாறி நிக்குற பழனிசாமியோட இன்னைய அதிமுகவை நிராகரிக்கிற முழக்கமாகவே பார்க்கணும்.</p><p><b>தொலைநோக்கைக் கொண்டது என்றாலும், திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற ஐந்தாண்டுகள் போதவே போதாது என்ற பேச்சு நிபுணர்கள் மத்தியில் இருக்கிறது. குறிப்பாக, பெரிய கடன் சுமையில் தமிழகம் தத்தளிக்கும் நிலையில், புதிதாக ஆட்சிக்கு வரும் எந்த அரசுக்கும் பெரும் பொருளாதாரச் சுமை காத்திருக்கிறது. இத்தகு சூழலில் திமுகவால் இவ்வளவு வாக்குறுதிகளையும் எப்படி நிறைவேற்ற முடியும்?</b></p><p>ஒவ்வொரு வாக்குறுதியையும் தனித்தனியா எடுத்து வைச்சு பரிசீலிச்சா இந்தக் கேள்விக்குப் பதில் கிடைச்சுரும். எல்லா வாக்குறுதிகளும் நிதி சம்பந்தமானவை கிடையாது. பல வாக்குறுதிகள் ஒரு அரசாங்கத்தின் கவனம் பெறாதவையா இருக்கு; அதையெல்லாம் நிறைவேற்ற நிதி அவசியம் இல்லை; கவனம்தான் அவசியம். அப்புறம் சில வாக்குறுதிகள் சங்கிலித் தொடர் விளைவாக நடக்கக்கூடியதா அடுக்கப்பட்டிருக்கு. உதாரணமா, ‘ஆண்டுக்குப் பத்து லட்சம் பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்’னு திருச்சியில் அறிவிச்சேன். தமிழ்நாட்டோட பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கத்துல கொண்டுபோற திட்டத்தோடு இணைஞ்சது இது. இந்த ஒரு விஷயத்தைச் செஞ்சுட்டாலே பல விஷயங்கள் தானா நிறைவேறிடும்.</p><p><b>தொடர்ந்து, ‘ஆளுமைத்திறன் அற்றவர் ஸ்டாலின்’ என்று முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் இந்தத் தேர்தலில் மேலும் பெரிதாக ஒலிக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?</b></p><p>திராவிட இயக்கத் தலைவர்களைச் சித்தாந்தரீதியா எதிர்க்கத் தெரியாத சில்லறைகள் எப்போதும் இது போன்ற கொச்சைப்படுத்துதல்கள்ல இறங்குறது வழக்கம். இந்த மாதிரி இழிவுபடுத்தல்களால என்னைப் பலவீனப்படுத்த முடியாது; ஏன்னா, தொடக்கக் காலத்துலேர்ந்து இந்த மாதிரி வசைகளை மிதிச்சுக் கடந்துதான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். ஆனா, இப்படிப் பேசுறவங்களை நோக்கி ஒரு கேள்வி கேட்கலாம்னு நெனைக்கிறேன், ‘ஆளுமைத்திறன் ஸ்டாலினுக்கு இல்லைன்னு சொல்றீங்க. அப்புறம் எதுக்காகப்பா ஆளுமைத்திறனற்ற ஒரு ஸ்டாலினை எதிர்க்க இத்தனை பேர் ஒண்ணுகூடி நிக்குறீங்க?’</p><p><b>கூட்டங்களில் பேசும்போது சொற்கள் அல்லது எண்ணிக்கையைத் தவறவிடுவது உங்களுக்கு அதிகம் நடக்கிறது. இதற்கு என்ன காரணம்? இதை உங்கள் தலைமைப் பண்போடு இணைத்துப் பேசுபவர்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?</b></p><p>தவறுதல் மனுஷ இயல்பு. குறிப்பா, மேடைகள்ல இப்படியான தவறுதல் ஏற்படுற வாய்ப்பு ரொம்ப அதிகம். இது பலருக்கும் நடந்திருக்கு. இன்னைக்குக் காட்சி ஊடகங்களோட காலத்துல இது அதிக வெளிச்சத்துல தெரியுது. நான் சொல்றதுல கருத்துப்பிழைகளோ, அரசியல் விமர்சனங்களோ இருந்தால் அதைத் தாராளமா சொல்லுங்க, விவாதிக்கலாம். ஆனா, வார்த்தைகளைத் தவறவிடுறதை விமர்சிக்கிறேன்கிற பேருல நான் பேசுற விஷயத்தை இருட்டடிக்கிறது அறிவு நாணயம் கிடையாது. அதோட பேச்சுத்திறன் மட்டுமே தலைமைப் பண்பும் கிடையாது, அது பல்வேறு திறன்களோடு தொகுப்பு.</p><p><b>சமூக வலைதளங்களில் உங்களைக் கேலிசெய்து வரும் காணொளிகளைக் காண்கிறீர்களா? அவற்றையெல்லாம் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றும்?</b></p><p>பார்ப்பேன், எதாச்சும் திருத்திக்கொள்ள வேண்டியது இருந்தா திருத்திக்கிறேன். மற்றதுக்கு சிரிச்சுட்டு அப்படியே கடந்து மறந்துபோறேன்!</p><p><b>திரும்பத் திரும்ப, ‘இந்து மதத்துக்கு எதிரான கட்சி திமுக’ என்று குற்றஞ்சாட்டுவதன் மூலம், கிட்டத்தட்ட ‘இந்துக்களுக்கான கட்சி திமுக’ என்று சொல்லும் நிலைக்கு உங்களைத் தள்ளிவிட்டதா பாஜக? கையில் வேலோடு நீங்கள் நின்றது அரசியல் உத்தியாக எடுபட்டாலும் சித்தாந்தரீதியாகத் திமுகவுக்கு அது சறுக்கல் என்கிற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?</b></p><p>திருத்தணிக்குக் கிராம சபைக் கூட்டத்துக்குப் போயிருந்தேன். அந்த ஊரோட அடையாளமாக வேல் என் கையில மக்களால கொடுக்கப்பட்டுச்சு. வாங்கிக்கிட்டேன். இதுல சித்தாந்தச் சறுக்கல் எங்கே வருதுன்னு புரியலை. ஒருவேளை நான் அதை வாங்க மறுத்திருந்தா அப்போ என்ன சொல்லியிருப்பாங்க? சரி, கையில வேலை வாங்கினாலும் தவறு, வாங்காட்டினாலும் தவறுன்னா நான் என்னதான் செய்யணும்னு நெனைக்கிறாங்க? கடவுள் – மதம் சம்பந்தமா என்னோட நிலைப்பாட்டைப் பல இடங்கள்ல தெளிவுபடுத்தியிருக்கேன். அது ஒவ்வொருத்தருடைய விருப்பம், சுதந்திரம். இந்து மதத்துக்கு மட்டும் இல்லை; எந்த மதத்துக்கும் எதிரானது இல்லை திமுக. அதே சமயம், அரசியல்லேயும் அரசு நிர்வாகத்துலேயும் மதத்தைக் கலக்கிறதை உறுதியா திமுக எதிர்க்கும். திமுக எப்போவெல்லாம் ஆட்சிக்கு வந்ததோ அப்போவெல்லாம் எல்லாத் துறைகளையும்போல அறநிலையத் துறையும் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டதுங்கிறதுதான் வரலாறு. அது அடுத்து வர்ற ஆட்சிலேயும் தொடரும்.</p><p><b>திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து ரௌடியிஸம் வளர்ந்துவிடும்; பெண்கள் பாதுகாப்பாக வெளியே செல்ல முடியாது; சுதந்திரமாகத் தொழில் செய்ய முடியாது என்ற குற்றச்சாட்டை இப்போது அதிமுக பிரதானத் தாக்குதலாக மாற்றியிருக்கிறது. இத்தகு குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் பதில் என்ன?</b></p><p>மிக மோசமான அவதூறு இது. திமுகவை இழிவுபடுத்துறேன்கிற பேர்ல உண்மையில் மக்களை பழனிசாமி அச்சுறுத்துறார். ஒரு முதலமைச்சருக்கு இது அழகல்ல. சிதம்பரம் காவல் நிலையத்துல பெண் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டது திமுக ஆட்சியிலா நடந்தது? பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடங்கி காவல் துறை உயரதிகாரியால ஒரு பெண் காவல் துறை அதிகாரிக்கே பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது வரைக்கும் தன்னுடைய ஆட்சியில் பெண்களுக்கு எதிரா நடந்த அட்டூழியங்களுக்கு பழனிசாமி அரசாங்கம் எப்படி எதிர்வினையாற்றுச்சுன்னு மக்களுக்குத் தெரியும். அதிமுகவினருக்கு இதுபற்றிப் பேசவே அருகதை கிடையாது. ஆனாலும், மக்களுக்கு நான் உறுதிமொழி தர்றேன், சட்டம் ஒழுங்குக்கு எந்தப் பாதிப்பும் வராது. சட்டமீறல்களை இரும்புக் கரம் கொண்டு திமுக அரசு அடக்கும்.</p><p><b>தேர்தலில் திமுக வென்றாலும், சட்டமன்ற உறுப்பினர்களை உடைத்துத் தம் பக்கம் அவர்களை இழுத்து, பாஜக ஆட்சி அமைக்கலாம் என்ற பேச்சு சகஜமாக இருக்கிறது. இதை எதிர்கொள்ள என்ன வியூகம் வைத்திருக்கிறீர்கள்?</b></p><p>எதிரிகளை எதிர்கொள்ள முழு பலத்தோடேயே திமுக இருக்கு. நான் பலம்னு சொல்லும்போது அது ரெண்டு விதமா அர்த்தப்படுத்துறேன். ஒண்ணு, எண்ண பலம்; மத்தொண்ணு, எண்ணிக்கை பலம். பலரையும்போல பாஜகவையும் வெறும் ஒரு அரசியல் கட்சியா திமுக பார்க்கலை. நாம வேற, அவங்க வேற. பாஜக இந்தத் தமிழ் மண்ணுக்கு எதிரி, தமிழர்களின் எதிரி. இந்தப் புரிதல் ஒவ்வொரு திமுககாரருக்கும் இருக்கு. அதை மேலும் வலுப்படுத்துவோம். இதையும் தாண்டி பாஜக விளையாட முயற்சிக்கலாம்னுதான் வெறும் 118 இடங்கள் போதாது; 234 இடங்கள்லேயும் கூட்டணி ஜெயிக்கணும்னு உயிரைக் கொடுத்து வேலை பார்த்துக்கிட்டிருக்கோம். திமுக எதையும் எதிர்கொள்ளும்!</p><p><b>பிரதமர் மோடியின் பிரச்சாரத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?</b></p><p>பாஜக வேட்பாளர்களே மோடி படத்தைத் தவிர்த்துட்டு, ஜெயலலிதா படத்தோடு ஓட்டு கேட்கப்போறாங்கன்னா அதுக்கு மேல அவருடைய பிரச்சாரத்துக்குத் தமிழ்நாட்டுல உள்ள மதிப்பைப் பத்தி நான் சொல்ல என்ன இருக்கு?</p><p><b>மாறிக்கொண்டிருக்கும் சூழலில், வெறும் நிர்வாகத்தை மட்டுமே முன்னிறுத்தி அரசியலில் நீடித்து நிற்க முடியாது. பண்பாட்டுத் தளத்தில் ஆர்எஸ்எஸ் செயலாற்றுவதன் மூலம் உண்டாக்கும் சிந்தனை மாற்றங்களுக்கான பலன்களையே மேலே அரசியல் தளத்தில் பாஜக அறுவடை செய்கிறது. ஆக, அதற்கு எதிர்ச் சிந்தனைகளைப் பேசுவதற்குப் பண்பாட்டுத் தளத்தில் திமுகவும் செயலாற்ற வேண்டும்; திமுகவுக்கும் இதற்கென ஓர் அமைப்பு வேண்டும் என்ற குரல் இருக்கிறது. இப்படி நீண்ட கால நோக்கில் பாஜகவை எதிர்கொள்ள என்ன செய்யப்போகிறீர்கள்?</b></p><p>சாதிய, மதவிய சக்திகளின் கொட்டத்தை அடக்க அரசியல்ரீதியா தேர்தல் களத்தில் மட்டுமல்லாமல், தத்துவார்த்தரீதியா பண்பாட்டுத் தளத்திலும் வேலைசெய்ய வேண்டிய கட்டாயத்தை முழுமையா உணர்ந்திருக்கோம். திமுக தேர்தல் அறிக்கையில் ‘சென்னையில் திராவிடர் இயக்க தீரர்கள் கோட்டம் அமைக்கப்படும்’னு சொல்லிருக்கோம் இல்லையா, தமிழர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான வரலாற்றைச் சொல்றதா அதை அமைப்போம். கழகத்தோட பாசறைகளுக்கு மீண்டும் புத்துயிர்ப்பு கொடுப்போம். பாசறைக் கூட்டங்களைக் கிராமங்கள்ல தொடங்கி சமூக வலைதளங்கள் வரை கொண்டுபோவோம். இது பெரியார், அண்ணா, கலைஞர் மண்… திராவிட மண்… எல்லாப் பிளவு சக்திகளையும் தமிழை வெச்சு திருப்பியடிப்போம்!</p><p><b>பாலின, சாதி, மதச் சமத்துவத்தை முழுமையாக ஏற்றவர்களாக எப்படிக் கட்சியைத் தயார்செய்யப்போகிறீர்கள்?</b></p><p>சமூகநீதி - சுயமரியாதை - சமத்துவம் – சகோதரத்துவம் இதெல்லாம்தான் திராவிட இயக்கத்தோட அடிப்படைக் கொள்கைகள். இதை ஆழமாக் கட்சியினர் மனசுல விதைக்கணும்னு நெனைக்கிறேன். தமிழுணர்வு இதற்கான கருவியா அமையணும்.</p><p><b>ஒவ்வொரு தலைவருக்கும் தான் சார்ந்திருக்கும் சமூகம் தொடர்பில் ஒரு கனவு இருக்கும். உங்கள் கனவில் உள்ள தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்?</b></p><p>அனைத்து அதிகாரங்களையும் கொண்டதா நம்ம தமிழ்நாட்டை மாத்தணும். எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்கிறதா தமிழ்நாடு இருக்கணும். இதுதான் என்னோட தமிழ்நாடு!</p><p><b>- மார்ச், 2021, ‘இந்து தமிழ்’</b></p><div><br /></div>சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-67930929539976522022021-06-01T06:04:00.001-07:002021-06-09T11:20:57.915-07:00 காலமும் மக்களும் கொண்டுவந்துவிட்ட இடம் இது: கமல் பேட்டி<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsUBHkVyX1oaejiW4UhEVfFi7dR91TM1yxx-PwQ8oBFbN20pDAZ40n3PW54fCr8HzlEJUgORFvau50mYtBIrkqSDZJiSgTtgwm48I_KCIl368uNd2rqtLiN6OakCjeKaSuAN8_f2mB0ReB/s2048/kamal.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2048" data-original-width="1726" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsUBHkVyX1oaejiW4UhEVfFi7dR91TM1yxx-PwQ8oBFbN20pDAZ40n3PW54fCr8HzlEJUgORFvau50mYtBIrkqSDZJiSgTtgwm48I_KCIl368uNd2rqtLiN6OakCjeKaSuAN8_f2mB0ReB/w270-h320/kamal.jpg" width="270" /></a></div><br />அரசியல் தலைவர்களுடன் தேர்தல் பிரச்சார வாகனத்தில் பயணிப்பது ஒரு சுவாரஸ்யமான அனுபவம். ஒவ்வொரு தலைவரின் பேச்சையும் கேட்கவும் மக்களில் எந்தெந்தத் தரப்பினர் கூடுகின்றனர், தலைவர்கள் பேசும் எந்த விஷயங்களுக்கு மக்கள் முக்கியத்துவம் அளிக்கிறார்கள், முக்கியமாகத் தலைவர்களுக்கும் மக்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு. அரசியலர் அவதாரம் எடுத்திருக்கும் நடிகர் கமல்ஹாசன், மக்களிடம் இயல்பான ஒரு உரையாடலை உருவாக்கிக்கொள்கிறார். இதுவரை திரையில் மட்டுமே பார்த்திருந்த மகத்தான கலைஞரை, அதுவும் ஒப்பனையற்ற முதிர்ந்த தோற்றத்தில் நேரில் காண்கையில் மக்கள் வாஞ்சையோடு ஓடிவருகிறார்கள். அன்போடு அவருடன் பேசவும், ஆசையோடு படம் எடுத்துக்கொள்ளவும் முந்துகிறார்கள். அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு கூட்டமாகவே அது தெரிகிறது. ஆனால், அங்கே அரசியலும் தொழிற்படுகிறது.<p></p><p><b>மக்கள் நீதி மய்யத்தின் கொள்கையாக நீங்கள் குறிப்பிடும் ‘மையவியம்’ – அதாவது இடது, வலது இரண்டும் கலந்த நடுநிலையான சென்டரிஸம் – பேசும் கட்சிகள் உலகம் முழுக்க வெவ்வேறு போக்குகளை வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக, இஸ்ரேலில் உள்ள மையவியக் கட்சிகளும் பிரேசிலிலுள்ள மையவியக் கட்சிகளும் ஒரேவிதமான சிந்தனைகளை, வெளிப்பாடுகளைக் கொண்டவை அல்ல. இடதுசாரிகளையோ வலதுசாரிகளையோ வரையறுப்பதுபோல மையசாரிகளைத் துல்லியமாக வரையறுக்கவோ புரிந்துகொள்ளவோ முடியவில்லை; பெரும்பாலும் அவர்களுடைய போக்கு சமரசமாகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் நீங்கள் முன்னிறுத்தும் மையவியத்துக்கான அர்த்தப்பாடு என்ன?</b></p><p>ஜனநாயகம் என்று சொல்லும்போது சாக்ரடீஸ் சொன்னதும் இன்றைக்கு இருப்பதும் வேறுவேறு; இன்னும் சொல்லப்போனால், பிரிட்டனில் பேசுவதும், அமெரிக்காவில் பேசுவதும், நாம் இங்கே புழக்கத்தில் வைத்திருப்பதும் வேறுவேறு. சென்டரிஸமும் அப்படித்தான். இங்கே புழக்கத்தில் நமக்கானதை உருவாக்குவோம். தமிழில் சொல்ல வேண்டுமென்றால் நடுநிலைமை; அரசியலற்ற நிலை அல்ல இது. வள்ளுவர் போற்றும் நிலை. ஒரு திறந்த மனப்பாங்கு. மரபோ நவீனமோ பகுத்தறிந்து நமக்கான விஷயங்களை எடுத்துக்கொள்வோம்.</p><p><b>பிரான்ஸில், ‘மன்னராட்சியானது புரட்சி மூலம் தூக்கி வீசப்பட வேண்டும்’ என்று முடிவெடுத்தவர்களை இடதுசாரிகளாகவும், ‘மன்னராட்சியே நீடிக்கட்டும், புரட்சி தேவையற்றது’ என்று முடிவெடுத்தவர்களை வலதுசாரிகளாகவும் வரையறுத்துக்கொண்டால், ‘மன்னராட்சி போக வேண்டும், அதே சமயம் புரட்சி வேண்டியது இல்லை’ என்று முடிவெடுத்தவர்களை மையசாரிகள் என்று வரையறுக்கலாம். கேள்வி என்னவென்றால், புரட்சி நடக்காமல் எப்படி மன்னராட்சி முடிவுக்கு வரும்? புரட்சியை வன்முறை என்று வரையறுப்போமானால், மன்னராட்சியின் கொடுங்கோன்மையை என்னவென்று வரையறுப்பது? அப்படியென்றால், மையவியம் என்பது கிட்டத்தட்ட வலதுசாரிகளுக்கு அருகில் உள்ள நிலைப்பாடுதானே?</b></p><p>இல்லை. இருக்கும் அமைப்பிலுள்ள சமூகக் கொடுமைகள் அப்படியே நீடிக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு இல்லை. அதே சமயம், வன்முறை அல்லது அத்துமீறல் மூலம் அதை நிலைநாட்டுவதும் எங்கள் வழிமுறை இல்லை. நான் போராட்ட வடிவங்களுக்கும்கூட இதைத்தான் சொல்கிறேன், அரசு அலுவலகங்கள் மீதும், பேருந்துகள் மீதும் கல் எறிவதுதான் போராட்ட வடிவம் என்றால், அத்தகைய போராட்டத்தில் எங்கள் இயக்கத்தினர் ஒருநாளும் பங்கேற்க மாட்டார்கள். ஆயுதப் படைகள் இல்லாமல் புரட்சி நடக்காது என்பது ஒரு பழைய நம்பிக்கை. புரட்சி என்பது வன்முறை வடிவத்திலிருந்து வெளியேறி நிறையக் காலம் ஆகிவிட்டது. அது வெற்றி பெறுமா என்று கேட்காதீர்கள். அந்த நம்பாமைதான் சென்டரிஸத்துக்கு எதிரி. இதற்கு உதாரணப்படுத்தும்போது நான் காந்தியை அழைத்துக்கொள்வேன். தன் கருத்தை விளக்கத் தடுமாறும்போது மார்டின் லூதர் கிங்கும் காந்தியைத்தான் அழைத்துக்கொண்டார்.</p><p><b>இந்தியாவில் இன்று மையவியக் கட்சிகளாக நீங்கள் எதையெல்லாம் பார்க்கிறீர்கள்?</b></p><p>எங்களைத்தான் சொல்ல வேண்டும்.<span></span></p><a name='more'></a><p></p><p><b>உங்களுக்கு முன்பு மையவியக் கொள்கையோடு செயல்பட்டவர்களாக யாரையேனும் உணருகிறீர்களா?</b></p><p>இதுவரை சொல்லப்படவில்லை என்றாலும், நடுநிலைமைக்கு ஒரு பேருதாரணம் காந்தி.</p><p><b>காந்தி முன்னெடுத்த அரசியலை, அதாவது சித்தாந்தத்தின் அடிப்படையில் அரசியலை அணுகுவதைவிடவும், அனைத்து மக்களுடைய நலன்கள் மற்றும் அவர்களுடைய அன்றாட வாழ்க்கைப்பாட்டின் அடிப்படையில் அரசியலை அணுகுவது எனும் காந்திய அணுகுமுறையை மக்களியம் என்றும் நாம் சொல்லலாம். காந்தியை மையவியர் என்று சொல்ல முடியுமா?</b></p><p>பெயர் என்ன வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். மக்கள்தான் சித்தாந்தத்துக்கு ஊற்று. மக்களுக்காகத்தான் சித்தாந்தம். அது ஒரு குறிப்பிட்ட சமயத்தில் மக்களுக்குப் பயன்படவில்லை என்றால் அதைப் பிடித்துக்கொண்டு மக்களை விட்டுவிடக் கூடாது. மக்களுக்கு எது தேவைப்படுகிறதோ அது நோக்கி நகர வேண்டும். அவ்வளவுதான். தன்னை ‘சென்டரிஸ்ட்’ என்று காந்தி சொல்லிக்கொள்ளவில்லை என்றாலும், காந்தியின் காலகட்டத்தில் மக்கள் அந்த இடத்தை அவருக்குக் கொடுத்திருந்தார்கள் என்றே கருதுகிறேன். அதே சமயம், காந்தியை உதாரணப்படுத்துகிறேன் என்பதால், காந்தியம் என்றும் சென்டரிஸத்தை எடுத்துக்கொண்டுவிடக் கூடாது. இன்னும் எங்கள் கொள்கையைச் செழுமைப்படுத்த வேண்டியிருக்கிறது. ‘பணி தீராத வீடு’ என்று மலையாளத்தில் சொல்வார்கள். வேலை நடந்துகொண்டிருக்கிறது என்கிற அர்த்தத்தில். கிரஹ பிரவேசம் வந்துவிட்டீர்களே என்று கேட்டால், என்னுடைய தேவைக்காக வந்திருக்கிறேன்; ஆனால், இன்னும் வீடு இன்னும் கட்டி முடிந்த பாடில்லை.</p><p><b>ஒரு படைப்பாளி என்ற எல்லைக்குட்பட்டுப் பல சமயங்களில் துணிச்சலாக நீங்கள் குரல் கொடுத்திருக்கிறீர்கள். பாபர் மசூதி இடிப்புக்கு எதிராக அன்றைய பிரதமர் நரசிம்ம ராவுக்கு நீங்கள் கண்டனம் தெரிவித்ததை ஓர் உதாரணமாக இங்கே நினைவுகூரலாம். ஆனால், ஆட்சியாளர்களின் மறைமுகத் தாக்குதலில் எப்போது வேண்டுமானாலும் அடிபடலாம் எனும் எல்லைக்குக் கீழே இருக்கக்கூடிய ஒரு தனிப்பட்ட சினிமா கலைஞரின் மொழிக்கும், ஒரு அரசியல் கட்சியின் தலைவரின் மொழிக்கும் இடையில் பெரிய சுதந்திர வேறுபாடு உள்ளது. இப்போது நீங்கள் மேலும் துணிச்சலாகப் பேசலாம். ஆனால், உங்கள் மொழி பெரும்பாலான சமயங்களில் ஒரு பூடகத்தன்மையையே கொண்டிருக்கிறது. அச்சம்தான் அதற்குக் காரணமா?</b></p><p>அந்தப் பூடக மொழி ஆரம்பத்தில் இருந்தது; ‘ட்வீட்’ போடும்போது. ‘வேண்டாமே, சில பேருக்குப் புரியவே வேண்டாமே!’ என்று நினைத்திருக்கிறேன். இப்போது இறங்கிவிட்டேன். இந்த மொழி எல்லோருக்குமானது. வேண்டுமானால், என்னுடைய பழைய நகைச்சுவை இந்த மொழியில் குறைந்திருக்கலாம். நகைச்சுவைக்கு வேறு விதமாக – அவமானப்படுத்தலாக – அர்த்தம் கற்பிக்கப்படும் என்பதால் தவிர்க்கிறேன். மொழி ‘டாமினோ எஃபெக்ட்’ ஏற்படுத்தக்கூடியது. அளந்துதான் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். இனி நான் தனி ஆள் கிடையாது.</p><p><b>இந்தியாவில் மாநிலங்களுக்கான அதிகாரம் ஒரு சூப்பர் மாநகராட்சி அளவுக்குத்தான் இருக்கிறது; அதுவும் மாநிலங்களையும் மாவட்டங்களைப் போல வெறும் நிர்வாக அலகாக மாற்றிவிட எண்ணும் ஒரு ஆட்சியின் கீழ் இந்தியா இன்று இருக்கிறது. உங்கள் கட்சி அதிகமாக அரசாங்க நிர்வாகம், ஊழல் இவற்றை முன்னிறுத்தியே பேசுகிறது. இது அரசியலை வெறும் நிர்வாக விஷயமாகச் சுருக்கிவிடாதா?</b></p><p>இல்லை. ஒரு விரிவான அரசியலின் ஒரு பகுதியாகவே நிர்வாகத்தைப் பேசுகிறோம். மாநில சுயாட்சி என்பதும் நிர்வாகத்தோடு பிணைந்ததுதான், இல்லையா? இந்தியா எப்படி ஆளப்பட வேண்டும் என்பதை நிர்வாகமாகவும் பார்க்கலாம்; அரசியலாகவும் பார்க்கலாம்.</p><p><b>இந்திய அரசமைப்பை மக்கள் நீதி மய்யம் எப்படிப் பார்க்கிறது?</b></p><p>அரசமைப்பின்படி ஆட்சியாளர்கள் நடந்துகொண்டாலே போதும். ஆனால், அப்படி நடப்பதில்லை என்பதுதானே பிரச்சினை!</p><p><b>அப்படியென்றால், அரசமைப்பில் மாற்றம் ஏதும் தேவை இல்லை என்கிறீர்களா; ஏனென்றால், மாநிலங்களை மையப்படுத்தியதாக அரசமைப்பை மாற்ற வேண்டியது அவசியம் என்று பேசும் மாநிலம் தமிழ்நாடு...</b></p><p>முழுக் கூட்டாட்சி நாடாக இந்தியா அமைய வேண்டும் என்ற அண்ணாவின் நிலைப்பாட்டில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. நல்ல விஷயங்களை யார் சொன்னாலும் எனக்குப் பிடிக்கும். அண்ணாவையும் எனக்குப் பிடிக்கும். ஒருவேளை அண்ணாவைப் பிடிக்கவே இல்லை என்றாலும், அவரிடம் உள்ள நல்ல கருத்தை எடுத்துக்கொள்வேன் என்பதுதான் சென்டரிஸ்ட்டுகளின் நல்லத்தனம். அரசமைப்புச் சட்டம் ஒரு உயிருள்ள ஆவணம். குர்ஆன், பைபிள் மாதிரி அதை மாற்றி எழுத முடியாத நூலாக மாற்றிவிடக் கூடாது. அதே சமயம், நடப்பிலுள்ள ஆவணம் நமக்குக் காட்டும் வழிமுறைகளிலிருந்து ஆட்சியாளர்கள் வழுவக் கூடாது. அதுவே மக்களுக்கு அரசியலதிகாரத்தை உறுதிப்படுத்தும். அரசியலதிகாரத்திலிருந்தே எல்லா மாற்றங்களும் தொடங்குகின்றன.</p><p><b>அரசியலதிகாரம் முக்கியம் என்பதில் சந்தேகம் இல்லை; ஆனால், பண்பாட்டு அதிகாரம் அதைக் காட்டிலும் முக்கியம் இல்லையா? நீங்கள் தமிழ்நாட்டில் கடுமையாக எதிர்க்கும் திராவிட இயக்கக் கட்சிகளும் சரி; தேசிய அளவில் கடுமையாக எதிர்க்கும் பாஜகவும் சரி; பண்பாட்டுத் தளத்தில் அவர்களுடைய முன்னோடிகள் விதைத்ததன் பலன்களையே அரசியல் களத்தில் அறுக்கிறார்கள். பண்பாட்டுத் தளத்தில் வேர் கொள்ளாத எந்தக் கட்சியும் அரசியல் தளத்தில் தனித்துவத்தோடு நிலைத்திருப்பதும் இல்லை. நீங்கள் அரசியலில் மட்டும் பணியாற்றி மாற்றத்தை உண்டாக்கிவிட முடியும் என்று நம்புகிறீர்களா?</b></p><p>பண்பாட்டுத் தளத்தில் நான் தனியாகக் கட்சி நடத்திப் பாடங்கள் கற்பிக்க வேண்டியது இல்லை. அங்கு நடக்க வேண்டிய மாற்றங்களை ஒரு சமூகம் தன்னளவில் இயல்பாக நடத்திக்கொண்டே இருக்கிறது. கணவன் செத்தால் மனைவியும் கூடவே சாக வேண்டும் என்பது ஒருகாலத்தில் இந்தச் சமூகத்தின் பண்பாட்டில் இருந்திருக்கிறது, அது கொடுமை என்று சமூகம் உணர்ந்தபோது அது மாறி வழக்கொழிந்தும் போயிருக்கிறது.</p><p><b>ஆனால், அதை முன்னெடுக்க ஒருவர் தேவைப்படுகிறார், ஒரு இயக்கம் தேவைப்படுகிறது இல்லையா? சடங்குத் திருமணம் வேண்டாம் என்று சொன்னால் மட்டும் சமூகத்துக்குப் போதவில்லை; சுயமரியாதைத் திருமணம் என்று ஒரு வடிவத்தையும் கொடுக்க ஒருவர் தேவைப்படுகிறார் இல்லையா? நீங்கள் அதிகம் பேசும் காந்தி, பெரியார் இருவருமே பண்பாட்டுத் தளத்திலும்தானே பணியாற்றினார்கள்?</b></p><p>நான் அரசியலுக்கு வருவேன் என்றே நினைக்கவில்லை. தற்செயல். வரலாற்றின் தேவை. காலமும் மக்களும் கொண்டுவந்துவிட்ட இடம் இது. கோவைக்கு வந்து தேர்தலில் போட்டியிடுவேன் என்று நான் திட்டமிட்டேனா? கிடையவே கிடையாது. காலம் அழைத்துவந்திருக்கிறது. என் மக்கள் அழைத்துவந்திருக்கிறார்கள். காந்தியும் பெரியாரும்கூட அப்படித்தான். அவர்கள் ஈடுபட்ட காரியங்களுக்காகப் பிள்ளைப் பருவம் முதலாகத் தயாராகிவந்தவர்கள் அல்ல அவர்கள். அடுத்து, காலமும் மக்களும் நம்முடைய கலாச்சாரத்துக்கு எதிரான கொடுங்கோல் முறைகளைத் தகர்க்க வேண்டிய பணிக்கு என்னை அனுப்புவார்களேயானால், அதற்கான திட்டங்கள் தன்னால் உருவாகிவிடும்!</p><p><b>- மார்ச், 2021, ‘இந்து தமிழ்’</b></p>சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-4910745253579848932021-06-01T05:56:00.001-07:002021-06-09T11:20:52.296-07:00யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா: சீமான் பேட்டி<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZv5WJlC0ifl_DGfMc6nYkKaNcakh30YJir1uklF_WQNJUyidywQHT1uLSFa8R3Mc6RZ9HzoIdEw6qOT8P_G1aea2cj3XenpRAPZ-ZYMJ2upgUY9jsm5ZkLq5FeNMu5KOIRGA-BlksBYHq/s1200/seeman.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="667" data-original-width="1200" height="178" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZv5WJlC0ifl_DGfMc6nYkKaNcakh30YJir1uklF_WQNJUyidywQHT1uLSFa8R3Mc6RZ9HzoIdEw6qOT8P_G1aea2cj3XenpRAPZ-ZYMJ2upgUY9jsm5ZkLq5FeNMu5KOIRGA-BlksBYHq/w320-h178/seeman.jpg" width="320" /></a></div><br />நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வீட்டின் மாடியில் உள்ள அவருடைய அலுவலகமானது நூலகத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டிருக்கிறது. பிரச்சாரத்துக்குச் சென்றிருந்த சீமான், வீடு திரும்புவதற்காகக் காத்திருந்த நேரத்தில் நூலகத்தைப் பார்வையிட முடிந்தது. சங்கத் தமிழ் இலக்கியங்கள், பண்டைத் தமிழர் வரலாற்று நூல்கள் தொடங்கி நவீன இலக்கியங்கள், சூழலியல் நூல்கள் வரை விரிவான தொகுப்புகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. அண்ணாவின் வரலாற்றைப் பேசும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல் ஓரிடத்தில் தென்பட்டபோது, எடுத்துப் பிரித்துப் பார்த்தேன். குறிப்புகள் நிமித்தம் பக்கங்களின் ஓரங்கள் ஆங்காங்கே மடிக்கப்பட்டிருக்கின்றன. நம்மாழ்வார் நூல்களைப் பிரித்தபோது நிறைய அடிக்குறிப்புகளைக் காண முடிந்தது. ப.சிங்காரம் எழுதிய ‘புயலிலே ஒரு தோணி’ வாசிப்பில் இருக்கும் அறிகுறிகளுடன் வைக்கப்பட்டிருந்தது. மேஜையில் உள்ள ‘ஜென் கதைகள்’ நூலில் மடிக்கப்பட்டிருந்த பக்கத்திலுள்ள கதையை சீமானுடைய ஒரு பேச்சில் கேட்டது நினைவுக்கு வருகிறது. சீமான் வந்துவிட்டார்.<p></p><p><b>ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் வாசிப்பீர்கள்?</b></p><p>சாதாரண நாட்கள்ல காலையில் இரண்டு மணி நேரம் வாசிப்பேன். வாசிப்பைத் தவறவிடக் கூடாதுங்கிறதுக்காகவே மாலையில்தான் உடற்பயிற்சின்னு வெச்சுக்கிட்டேன். வருஷத்தில் சில நாட்கள் முழுக்க உட்கார்ந்துடுவேன். கணக்கு வழக்கில்லாமல் அப்போ வாசிப்பேன்.</p><p><b>இப்போது யாரை அதிகம் வாசிக்கிறீர்கள்?</b></p><p>அதிகம் எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகங்களை வாசிக்கிறேன். அவர் எங்க ஊர் பக்கம்கிறதாலோ என்னவோ ரொம்ப நெருக்கமா அவரோட எழுத்துகள் இருக்குது. அம்பேத்கர், நம்மாழ்வார் எழுத்துகளை அடிக்கடி எடுத்து வாசிப்பேன். என்னோட பழக்கம் என்னன்னா, இந்தப் புத்தகத்துல பத்துப் பக்கம், அந்தப் புத்தகத்துல பத்துப் பக்கம் அப்படின்னு வாசிப்பேன்; ஒரே புத்தகத்தோடு முழுசா உட்காருவது கிடையாது. நமக்கு ஒண்ணும் தெரியலைங்கிறதுதான் படிக்கப் படிக்கத் தோணுது. யாருக்கும் குறைவில்லாம நம்மாளுங்க சிந்திச்சுருக்காங்க, எழுதியிருக்காங்க. ஆனா, இந்த இனம் இப்படி அதிகாரம் அற்று இருக்குங்கிறதுதான் வரலாற்று முரணா இருக்கு.</p><p><b>ஒவ்வொரு இனமும் காலம் நெடுகிலும் மாறிவரும் அரசியல் சூழல்களுக்கு ஏற்ப தன்னுடைய சிந்தனைகளையும் போக்குகளையும் புதுப்பித்துக்கொண்டே வருகிறது. தமிழ்த் தேசிய அரசியலுக்கு இங்கே குறைந்தது நூறாண்டு அரசியல் வரலாறு இருக்கிறது. ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று பேசிய பெரியாரும், அண்ணாவும் பிற்பாடு ‘திராவிட நாடு’என்று பேசலானதும், பின்னர் இந்தியக் கூட்டாட்சியில் மாநில சுயாட்சியை முன்னிறுத்திப் பேசலானதும் சமரசங்கள் மட்டும் அல்ல; அடுத்தடுத்த கட்டப் பரிணாமங்கள். உங்களுடைய ‘நாம் தமிழர் கட்சி’யின் இலக்கு என்ன? கடைசியாக அண்ணா விட்டுச்சென்ற கூட்டாட்சி எனும் புள்ளியின் தொடர்ச்சியா அல்லது தமிழ்த் தேசிய அரசியலின் தொடக்கப் புள்ளியான தனிநாடு கனவா?</b></p><p>தனி நாடு அல்லது கூட்டாட்சி அதுஇதுன்லாம் நான் பேசப்போறதில்லை. என் இனத்துக்குத் தேவை அதிகாரம். பல்லாயிரம் ஆண்டுகளா இது தமிழ்த் தேசம்தான்; இந்தியாங்கிற நாடு எழுபது ஆண்டுகளுக்கு முன்பு எழுந்து உருவாவதற்கு முன்னாடியும் இது தமிழ்த் தேசம்தான்; இப்போதும் தமிழ்த் தேசம்தான். ஆட்சியாளர்கள் யாருங்கிறதை விடுங்க. இந்தியாங்கிறதே பல நாடுகளோடு ஒன்றியம்தானே! ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா’ மாதிரி ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா’. அப்படிச் செய்வோம்! ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி’ என்பது அண்ணா முன்வைத்த முழக்கம். எல்லா தேசிய இனங்களுக்கும் அதுதான் சரி. இப்போதுள்ள ஆட்சிமுறையில மாநில உரிமைகள் பறிபோய்க்கிட்டே இருக்கு. வட இந்தியர்கள்தான் நாட்டின் முதன்மை அமைச்சர்களாக ஆக முடியும்ங்கிற சூழல் போதாதா, இங்குள்ள அக்கிரமச் சூழலைச் சொல்ல? இந்த நிலை மாற்றப்படணும். என் மக்களுக்கும் அதிகாரம் வேணும். இதைத்தான் நான் பேசுறேன்.<span></span></p><a name='more'></a><p></p><p><b>சரி, நீங்கள் முன்னெடுக்கும் ‘நாம் தமிழர்’அரசியலிலுள்ள ‘தமிழர்கள்’யார்?</b></p><p>தமிழைத் தாய்மொழியாகவும் வாய்மொழியாகவும் கொண்டு வாழ்கிறவன் எவனோ அவன்தான் தமிழன். என் நிலத்தை நான் ஆள்வேன். தகப்பன் என்னைப் பெத்தவனாக இருக்கணும்; தலைவன் என் ரத்தவனாக இருக்கணும். என் மொழி புரியாதவன் எனக்கு இறைவனா இருக்க முடியாது; என் வலி உணராதவன் எனக்குத் தலைவனா இருக்க முடியாது. இதுதான் எங்க வரையறை.</p><p><b>தன் வாழ்வையே சமகாலத் தமிழுக்கு அர்ப்பணித்து, ஓர் அகராதியை உருவாக்கிய க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் பூர்வீகத்தால் ஒரு தெலுங்கு பிராமணர். இப்படி இந்த மண்ணுக்கு வந்து தமிழோடும், தமிழ்ச் சமூகத்தோடும் கரைத்துக்கொண்டவர்களை நாம் எப்படி வரையறுக்கப்போகிறோம்?</b></p><p>ஐயாவுடைய பணி வணக்கத்துக்குரியது. வணங்குவோம். ஆனா, ஏன் அவரை நீங்க இனம் மாத்துணும்னு ஆசைப்படுறீங்க? ஜி.யு.போப் இங்கே வந்து தேவாரத்தை, திருக்குறளை மொழிபெயர்த்தார். அதுக்கு அவரை மதிக்கலாம், சரி; ஏன் நம் நாட்டையே ஆளக்கொடுக்கணும்? ஒரு தோப்பு இருக்கு; நூத்துக்கணக்கான மாமரங்களைக் கொண்ட மாந்தோப்பு. அங்கே பத்து பலாமரமும் இருக்கு. ரொம்பக் காலமா அந்தத் தோப்பிலேயே இருக்கிறதால அந்தப் பலா மரங்களுக்கெல்லாம் பேரு மாமரம்னு மாத்திடுவீங்களா? யாராவது இந்தச் சமூகத்துக்கு வந்து சேவை செய்றாங்கன்னா மதமாற்றம் செய்ய மாட்டோம்தானே; ஏன் இனமாற்றம் செய்யணும்? உலகத்துல தமிழர்கள் இல்லாத நாடு இல்லை; அதனால, அங்கே அவங்க இனம் மாறிடுதா, இல்லை எல்லா நாடுகள்லேயும் ஆட்சித் தலைமையை அவங்க கையில ஒப்படைச்சுடுறாங்களா? எல்லா இன மக்களும் இங்கே மகிழ்ச்சியா வாழட்டும்; ஆனா, நம் தமிழ் இனத்தைத் தமிழர்கள்தான் ஆளணும். ஒருத்தர் மலையாளி, தெலுங்கர், கன்னடர் யாராகவும் இருக்கட்டும்; அவங்க அடையாளம், கலை, பண்பாட்டோடு வாழட்டும்; நமக்கு அவங்க சகோதர இனம்; பொண்ணு கொடுத்துப் பொண்ணுகூட எடுத்துப்போம். ஆனா, நம்ம இனத்தைத் தமிழர்கள்தான் ஆளணும். உலகம் முழுக்க இப்படித்தானே இருக்கு தம்பி? இங்கே தமிழ்நாட்டை மட்டும் ஏன் வெளியாட்களுக்கு எழுதிக்கொடுக்கணும்னு நெனைக்கிறீங்க? இதைக் கேட்டா, ‘சீமான் ஒரு பாஸிஸ்ட், சீமான் ஒரு சாவனிஸ்ட்!’ என்னை விடுங்க. ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் இப்போ முழிச்சுகிடுச்சு. இனியும் அதை ஏமாத்தவே முடியாது!</p><p><b>உங்கள் மேஜையில் இருந்த உங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையைப் பார்த்தேன். நீங்கள் முதல்வரானால் என்று கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் அதிகாரம் அமெரிக்க அதிபர் பதவியில் அமருபவருக்குக்கூட இருப்பதாகத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியும், கடந்த கால வரலாற்றைவிடவும் சமகாலப் பொருளாதாரமே அதிகம் அரசியலைத் தீர்மானிக்கும் வல்லமை பெற்றது. உலகமயமாக்கலும் தாராளமயமாக்கலும் உலக நாடுகளில் ‘அரசு’ எனும் அமைப்பின் எல்லையையே சுருக்கிவிட்டிருக்கும் காலகட்டத்தில் வாழ்கிறோம். இது உலகளாவிய எதார்த்தம்.சமகால நிதர்சனங்கள், நமக்குள்ள சாத்தியங்கள், வரையறைகள் இவற்றையெல்லாம் உணர்ந்துதான் பேசுகிறீர்களா? ஒரு தலைமுறையையே எதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட திசை நோக்கி இழுக்கிறீர்களா?</b></p><p>எது ஒண்ணுமே சாத்தியத்திலிருந்து பிறப்பது கிடையாது, தேவையிலிருந்துதான் பிறக்குது. என்னுடைய அரசியலும் அப்படித்தான். இது தமிழ் மக்களின் தேவையிலிருந்து பிறப்பது. சீமான் பிறந்தது காலத்தின் தேவை. நான் புரட்சியாளன். அடிப்படை மாற்றம், அமைப்பு மாற்றம், அரசியல் மாற்றம்னு பேசுறேன். அப்படின்னா எல்லாத்தையும் புரட்டிப்போடுறதுதான். பொருளாதாரம்தான் அரசியலை உந்தித்தள்ளுங்கிறது எனக்கும் தெரியும். ஆனா, இன்னைக்கு நாம ஏத்துக்கிட்டிருக்கிற பொருளாதாரக் கொள்கை சரியானதா? ஒரு நாட்டையே சந்தையாக்குறது எப்படிச் சரியாகும்? சந்தையில் வாழ்க்கை நடக்குமா, வர்த்தகம் நடக்குமா? ஜே.சி.குமரப்பா பேசினதை நான் பேசுறேன். ஆண்டொன்றுக்கு அம்பது லட்சம் கார் ஏற்றுமதி செய்றோம்கிறதை சாதனையா பேசுறோம். ஒரு டன் எடையுள்ள காரை உற்பத்திசெய்ய நாலரை லட்சம் லிட்டர் தண்ணீர் வேண்டும்; நீ காரை ஏற்றுமதி செஞ்சுட்டு வெங்காயம், பருப்பை இறக்குமதி செய்றே! கண்ணுக்குத் தெரியாத மறைநீரை நீ கணக்கிடவே இல்லை. அதனால, சந்தைப் பொருளாதாரத்தை ஏத்துக்கிட்ட ஒரு நாட்டின் தலைவன் உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளுக்குத் தரகனாக இருந்து சேவைசெய்யும்போது அவன் வரையறைக்கு உட்பட்டு பேசலாம். நான் எல்லாத்தையும் மாத்தணும்னு நெனைக்கிறேன். மக்களும் முடிவெடுத்துட்டா எல்லாம் மாறிடும். இன்னைக்குத் தனியா கத்துறேன், இப்பவே சித்தராமையா நான் பேசுறதைப் பேசுறார். நாளைக்கு முதலமைச்சரா ஆயிட்டேன்னா, ஜெகன்மோகன் ரெட்டியும் பினராயி விஜயனும் என்னோட சேர்ந்துக்குவாங்க, அப்புறம் மம்தா, இப்படி வரிசையா எல்லாரையும் சேர்த்துக்கிட்டு சண்டை செய்வோம்; எல்லாத்தையும் மாத்த வேண்டியதுதான்.</p><p><b>தமிழ்த் தேசியம் பேசும் குழுக்கள் வெறும் அழுத்தக் குழுக்களாகவே சுருங்கிவிடுவதற்கான காரணம், எதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட அவற்றின் அணுகுமுறை. உங்கள் இயக்கமும் அதே திசை நோக்கித்தான் செல்கிறது என்பதை உணர்கிறீர்களா?</b></p><p>அதெல்லாம் இல்லை. சரியான காலத்துல சரியான ஆட்கள் சரியான இடத்துல இல்லாமப்போனதுதான் இதுவரைக்கும் தமிழ்த் தேசிய இயக்கங்கள் ஆட்சியதிகாரத்தில் அமராத நிலைக்குக் காரணம். இப்போ அது சரியா அமைஞ்சுருக்கு. என் ஆட்டத்தை நின்னு கவனிங்க. அப்புறம் தீர்ப்பு எழுதுங்க. எங்களோட கொள்கை ஜெயிக்கிறதைப் பேசுறது இல்லை; சரியானதைச் செய்றது! பெண்ணுரிமை பேசுற கட்சியில எதுவாச்சும் இங்கே சரிபாதி தொகுதிகளை இந்தத் தேர்தல்ல பெண்களுக்குக் கொடுத்திருக்கா? வேணாம், மூன்றுல ஒரு பங்கு தொகுதியையாவது கொடுத்திருக்கா? நான் சரிபாதி கொடுத்திருக்கேன். இப்படி சமூகரீதியா பிரதிநித்துவம் கொடுத்திருக்கிறதையும் நான் பட்டியலிட முடியும். புதிய யதார்த்தத்தை நீங்க பார்ப்பீங்க!</p><p><b>பலர் ‘பாஜகவின் பி டீம்’ என்று உங்கள் இயக்கத்தை வர்ணிக்கிறார்கள். அதாவது, திராவிட இயக்கத்தைப் பலவீனப்படுத்த வந்தவர் நீங்கள் என்கிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?</b></p><p>யாரு, திமுககாரன்தான் அப்படிச் சொல்றான். நான் சொல்றேன், எந்தக் காலத்துலேயும் என்னோட இயக்கம் எந்தத் தேசியக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காது. என்னைப் பொறுத்த அளவில் காங்கிரஸ் என் தமிழினத்தின் விரோதின்னா, பாஜக ஒட்டுமொத்த மனித குலத்துக்குமே விரோதி. இதைத் திமுகவால சொல்ல முடியுமா?</p><p><b>உங்கள் பேச்சைக் கேட்க ஒரு பெரிய இளைஞர் கூட்டம் கூடுவதைக் காண முடிகிறது. தனிப்பட்ட முறையில் அவர்களோடு பேசுகிறீர்களா? என்ன எதிர்பார்க்கிறார்கள்?</b></p><p>பேசுறேன், அவங்க மாறுதல் வேணும்னு நெனைக்கிறாங்க. உலக நாடுகளோட தானும் தமிழ்நாடும் எங்கே இருக்கோம்னு ஒப்பிடறாங்க. தமிழனுக்கு அதிகாரம் வேணும்; அப்படின்னா டெல்லியில உள்ள அதிகாரமும் நிர்வாகமும் உடைஞ்சு பரவலாகணும்னு கருதுறாங்க. இதுக்கெல்லாம் நான் பேசுற அரசியல்தான் சரின்னு நம்புறாங்க. அடுத்த அஞ்சு வருஷத்துல பாருங்க, என்னோட படைதான் தமிழ்நாட்டுலேயே பெரிசா இருக்கும்!</p><p><b>- மார்ச், 2021, ‘இந்து தமிழ்’</b></p>சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-89492199477636656422021-06-01T05:50:00.000-07:002021-06-09T11:20:45.912-07:00சமூகநீதியை அடுத்த கட்டத்துக்கு பாஜக கொண்டுசெல்லும்: எல்.முருகன் பேட்டி<div class="separator" style="clear: both;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrqyimGMhAWHF70kow0MymBcHGfck7uv_q24C_9dVxV0e__SzHIQkTMdzGXjCz64ElpMyU05Rfzzp1LV-F8xlKaZDAtf1YSulLt2EK4bV7SuuzQXZuPdrU6064t1OVLSwKf8Hk5UxqHecT/s595/murugan.jpg" style="display: block; padding: 1em 0px; text-align: center;"><img alt="" border="0" data-original-height="446" data-original-width="595" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrqyimGMhAWHF70kow0MymBcHGfck7uv_q24C_9dVxV0e__SzHIQkTMdzGXjCz64ElpMyU05Rfzzp1LV-F8xlKaZDAtf1YSulLt2EK4bV7SuuzQXZuPdrU6064t1OVLSwKf8Hk5UxqHecT/w320-h240/murugan.jpg" width="320" /></a>
</div>
ஓராண்டுக்கு முன் தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் அறிவிக்கப்பட்டபோது ‘யார் இவர்?’
என்று பலர் ஆச்சரியத்தோடு கேட்டார்கள். சொந்தக் கட்சியிலேயே அதிருப்தியில் சில
முன்னணித் தலைவர்கள் பாஜக தலைமை அலுவலகமான ‘கமலாலய’த்துக்கு அன்றாடம் வருவதை
நிறுத்திக்கொண்டதைக் கேள்விப்பட முடிந்தது. இன்று நிலைமை தலைகீழ் ஆகியிருக்கிறது.
மிகக் குறுகிய காலத்தில் கட்சிக்குள் தன்னை வலுவாக நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார்
முருகன்; கட்சிக்கு வெளியிலும் செயல்படும் தலைவராகப் பார்க்கப்படுகிறார். 2021
சட்டமன்றத் தேர்தல் ஒருவகையில் முருகனின் தலைமையைப் பரிசோதிக்கும் களமும்
ஆகியிருக்கிறது. <div><br /></div><div><b>ஒருகாலத்தில் ‘பிராமண - பனியா கட்சி’ என்று சொல்லப்பட்டுவந்த பாஜகவின் முகம்
மோடி - ஷா காலகட்டத்தில் குறைந்தபட்சம் மேல்பூச்சு அளவிலேனும் மாறியிருக்கிறது;
கட்சிக்குள் சமூகங்களுக்கு இடையிலான பொறுப்புப் பகிர்வு முன்னர் இல்லாத அளவுக்கு
நடந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. கேள்வி என்னவென்றால், உங்களால் சுதந்திரமாகச்
செயல்பட முடிகிறதா?</b> </div><div><br /></div><div>முழுச் சுதந்திரமாகவே செயல்படுகிறேன். என்னை எல்லோருமே
புரிந்துகொண்டிருக்கிறார்கள். காலையில் ஆறு மணிக்கு எழுந்தால் இரவு பன்னிரண்டு
மணிக்குத்தான் படுக்கச் செல்கிறேன்; மதியத் தூக்கம்கூடக் கிடையாது. கட்சியினர்
என்னுடைய எதிர்பார்ப்பை அறிந்திருக்கிறார்கள். அதனால், எனக்கு இணையாக ஓட வேண்டும்
என்ற எண்ணம் அவர்களுக்கும் இருக்கிறது. எந்த விஷயத்திலும் சுதந்திரமாகவே
முடிவெடுக்கிறேன் என்றாலும், எல்லா விஷயங்களுக்கும் மூத்தவர்களிடம்
கலந்தாலோசிக்கிறேன். கீழிருந்து வந்த மோடிஜி மேலே இருப்பது இன்றைய கட்சிக்கு உள்ள
பெரிய உத்வேகம். நீங்கள் எந்தச் சமூகத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், கட்சிக்காக
நேர்மையாக உழைப்பவர்களுக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும் என்ற நிலை பாஜகவில்
மட்டுமே இருக்கிறது. </div><span><a name='more'></a></span><div><br /></div><div><b>தலைமைப் பொறுப்புக்கு நீங்கள் வந்த ஒரு வருட காலத்திலேயே தேர்தலை
எதிர்கொள்கிறீர்கள். எப்படியிருக்கிறது அனுபவம்?</b> </div><div><br /></div><div>இந்த ஓராண்டுக்குள் கணிசமான காலகட்டத்தை கரோனா ஊரடங்கு ஆக்கிரமித்துக்கொண்டது பெரிய
சங்கடம். ஆனாலும், நிறைய வேலை செய்திருக்கிறோம். முன்பு விழுப்புரத்துக்கோ
கடலூருக்கோ சென்றால், எங்களை வரவேற்கக்கூட ஆட்கள் இருக்க மாட்டார்கள். இன்றைக்குத்
தமிழ்நாட்டில் பாஜக கிளை இல்லாத கிராமங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு
வளர்ந்திருக்கிறோம். கட்சியின் அறுபது மாவட்ட அமைப்புகளிலும் ஐந்தாயிரம் பேருக்குப்
பொறுப்புகள் வழங்கி செயல்தளத்துக்கு வந்திருக்கிறோம். வெறும் ஒரு நாள், இரண்டு நாள்
இடைவெளியில் ஒரு கூட்டத்தைத் திட்டமிட்டால்கூட இன்றைக்கு எந்த ஊரிலும் ஐந்தாயிரம்
பேர் வரையில் திரளுகிறார்கள். இது எல்லாவற்றையும்விட சித்தாந்தத் தளத்தில் பாஜக
பெரிய தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தன் கைகளில் வேல்
பிடித்து நிற்பதும், திமுக தேர்தல் அறிக்கையில் கோயில்கள் மேம்பாடு பேசப்படுவதும்
பாஜக கொண்டுவந்திருக்கும் மாற்றம்தான் இல்லையா? </div><div><br /></div><div><b>தமிழ்நாட்டு மக்கள் தங்களுக்கான முடிவுகள் தமிழ்நாட்டுத் தலைவர்களால் எடுக்கப்பட
வேண்டும் என்று கருதுபவர்கள். தேசியக் கட்சிகள் இங்கு எடுபடாமல் போக
டெல்லியிலிருந்தே அவை ஆட்டுவிக்கப்படும் நிலை ஒரு முக்கியமான காரணம். இன்றைய
பாஜகவில் மாநில அமைப்புகளுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் எந்த அளவுக்கு
இருக்கிறது?</b> </div><div><br /></div><div>எங்களுடைய பணிக் கலாச்சாரத்தை ‘அணிச் செயல்பாடு’ என்று சொல்லலாம். கோர் கமிட்டி
இருக்கிறது. அதில் 14 பேர் இருக்கிறோம். இந்தக் குழு எடுக்கும் முடிவை மேலிடம்
பெரும்பாலும் அப்படியே ஏற்றுக்கொள்கிறது. சில சமயங்களில் சில ஆலோசனைகள்
கொடுப்பார்கள். அது எங்கள் முடிவுகளை மேம்படுத்துவதாகவே இருக்கும். </div><div><br /></div><div><b>தமிழ்நாட்டு பாஜக தலைவர்களால் பிரதமரையோ, கட்சியின் தேசியத் தலைவர்களையோ எளிதாக
அணுக முடிகிறதா? மோடி, ஷா, நட்டாவுடன் எத்தனை முறை உங்களால் இந்த ஓராண்டில்
கலந்து பேச முடிந்திருக்கிறது?</b></div><div><br /></div><div>
மோடிஜி பிரதமர். அவரிடம் கட்சி விஷயங்களை எடுத்துச்செல்வது இல்லை. அது எங்கள்
மரபும் அல்ல. அப்படியும் தமிழ்நாட்டுக்கு இரண்டு முறை வந்திருந்தபோதும் மோடிஜியுடன்
ஐந்து நிமிடங்கள் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அமித் ஷாஜி இங்கு இரண்டு நாட்கள்
தங்கி எங்கள் நிர்வாகிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டங்களை நடத்தினார். அப்போதெல்லாம்
மாநிலத் தலைவருடன், எங்களுடைய கோர் கமிட்டியுடன், மாநிலச் செயலாளர்களுடன் என்று
ஒவ்வொருவருடனும் தனித்தனியாக உட்கார்ந்து பேசினார். நிறைய யோசனைகள் சொன்னார்.
நட்டாஜி மதுரைக்கு வந்திருந்தபோது ஒரு நாள் முழுக்க எங்களுடன் இருந்தார். அவருடனும்
கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் குழுவாகவும் தனித் தனியாகவும் உரையாடினோம்.
கட்சிக்குள் பேசுவதற்கு எல்லோருக்குமே இடம் இருப்பதுதான் பாஜகவின் சிறப்பம்சம்.
தலைவர்கள் ஒரு வார்த்தை பேசுவதற்கு முன் நாம் சொல்லும் எல்லா விஷயங்களையும்
உள்வாங்குவார்கள்.
<br /><b><br /></b></div><div><b>அமித் ஷாவுடன் கணிசமான நேரம் செலவிட்டிருக்கிறீர்கள்; அவர் சொன்ன எந்த ஆலோசனை
முக்கியமானது என்று கருதுகிறீர்கள்?</b> </div><div><br /></div><div>இரண்டு விஷயங்கள் வெகுவாக ஈர்த்தன. ஒன்று, பொறுமையுடன் கூடிய உழைப்பு. முதல் நாள்
காலை 11 மணிக்கு சென்னை வந்தவர் நள்ளிரவு 3 மணி வரை எங்களுடன் நிகழ்ச்சிகளில்
பங்கெடுத்தார்; மறுநாள் காலை 7 மணிக்கெல்லாம்கூட எங்களோடு நிகழ்ச்சிக்குத்
தயாராகிவிட்டார்; எல்லோரையும் பேசவிட்டு கவனமாகக் கேட்டார். இரண்டாவது, சின்ன
விஷயங்களில் அவர் கவனம் செலுத்துவது. அகில இந்தியத் தலைவர்; அதனால் பெரிய பேரணி,
பெரிய கூட்டம் என்றெல்லாம் மாஸாக ஆலோசனை சொல்வார் என்று எதிர்பார்த்தால், மைக்ரோ
லெவலில் கட்சியைப் பலப்படுத்துவதையே பிரதானமாகப் பேசுவார். ‘ஃபர்ஸ்ட் வீ ஹேவ் டு
ஸ்ட்ரென்த் தி பூத்’ என்பதே அவர் திரும்பத் திரும்பச் சொல்லும் மந்திரம். </div><div><br /></div><div><b>நீங்கள் எந்த அளவுக்கு வாக்குச்சாவடிக் குழு அமைப்பில் கவனம்
செலுத்தியிருக்கிறீர்கள்?</b></div><div><br /></div><div>
ஒரு பூத் கமிட்டி என்பது 25-30 பேரைக் கொண்டது. நான் தலைமைப் பதவி ஏற்கும்போது
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு 42 ஆயிரம் பூத் கமிட்டிகள் இருந்தன; இப்போது 60 ஆயிரமாக
உயர்த்தியிருக்கிறோம். </div><div><br /></div><div><b>வெளியே தேசியம், இந்துத்துவம் பேசினாலும், மோடி – ஷா இருவருமே ஒருபோதும்
குஜராத்தை விட்டுக்கொடுக்காதவர்கள்; குஜராத்தி அடையாளத்தையும் பெருமிதத்தையும்
குஜராத்தி லாபியையும் தங்கள் வெற்றிக்கான கச்சாப்பொருளாகக் கொண்டவர்கள். கடைசியாக
நடந்த குஜராத் சட்டமன்றத் தேர்தலில்கூட ‘குஜராத்தி அரசியல்’ மோடியின் பிரச்சார
ஆயுதங்களில் பிரதானமானதாக இருந்தது. இந்துத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும்
தமிழக பாஜக, தமிழ் அரசியலுக்குக் கொடுக்க வேண்டிய இடத்தைக் கவனத்தில்
எடுத்துக்கொண்டிருக்கிறதா?</b> </div><div><br /></div><div>நிச்சயமாக. தமிழ், தமிழர், தமிழ்நாடு சார்ந்த எந்த விஷயத்தையும் விட்டுக்கொடுக்க
மாட்டோம். கந்த சஷ்டி கவசம் விவகாரமே இதற்கு ஒரு சான்று; அதைத் தமிழ் மக்களுடைய
கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே நாங்கள் பார்த்தோம்... </div><div><br /></div><div><b>நான் தேசிய அளவிலான விவகாரங்களில் நம்முடைய மாநிலத்தின் உரிமைகளையும், மக்களின்
உணர்வுகளையும் பற்றிக் கேட்கிறேன்... நீட், எய்ம்ஸ் போன்ற விஷயங்களில் உங்களுடைய
அணுகுமுறை இனி எப்படி இருக்கும்?</b> </div><div><br /></div><div>நான் தலைமைப் பொறுப்பேற்பதற்கு முன்பே நீட் விவகாரம் முடிந்துவிட்டது. நட்டாஜி
சென்னை வந்திருந்தபோது எய்ம்ஸ் தொடர்பில் பேசினேன். அவர் டெல்லி சென்ற கையோடு ஒரு
கமிட்டி அமைக்கப்பட்டது. சீக்கிரம் நல்ல செய்தி வரும். நிச்சயம் நம் மாநில
உரிமைகளைப் பாதுகாப்போம். </div><div><br /></div><div><b>அரசியல் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு, திராவிட இயக்கம் இந்த
நூறாண்டுகளில் தமிழ்நாட்டில் ஒரு சமூகநீதிப் பாதையை உருவாக்கியிருப்பதை நீங்களும்
ஏற்பீர்கள் என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் இந்த விஷயத்தைக்
கவனத்தில் கொண்டே செயலாற்ற வேண்டும்; அப்படியென்றால், இந்த விஷயத்தில் பாஜகவின்
செயல்திட்டம் என்ன?</b> </div><div><br /></div><div>நீங்கள் சொல்வதுபோல, நூறு வருஷங்களில் சமூகநீதிப் பாதையில் இங்கே நிறைய
நடந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அது ஓரிடத்தில் கெட்டிதட்டி நிற்கிறது.
முக்கியமாக அடித்தட்டு மக்கள் இருக்குமிடம் வரை அது செல்லவில்லை. திமுகவில் கட்சித்
தலைவராக ஒரு தலித் உட்கார முடியுமா? உயர் நீதிமன்ற நீதிபதியாக ஒரு தலித்
உட்கார்ந்ததையே ‘அது நாங்கள் போட்ட பிச்சை’ என்றுதானே பேசுகிறார்கள்? இப்படிக்
கெட்டிதட்டி நிற்கும் சமூகநீதியை அடுத்த கட்டத்துக்கு அடித்தட்டு மக்களை நோக்கிக்
கொண்டுசெல்வோம். அதுதான் பாஜகவின் செயல்திட்டமாக இருக்கும். </div><div><br /></div><div><b>வாக்குச்சாவடி அளவில் அமைப்புகளைக் கட்டியெழுப்புவது தொடங்கி அடித்தட்டு மக்களை
அதிகாரப்படுத்துவது வரை நீங்கள் ஆக்கபூர்வமாகப் பேசும் விஷயங்கள் மகிழ்ச்சி
அளிக்கின்றன. ஆனால், கட்சியை வளர்க்கிறேன் என்ற பெயரில் ரௌடிகளைக் கட்சியில்
இணைப்பது தொடங்கி பிற கட்சிகளிலிருந்து ஆட்களைத் தூக்குவது வரையிலான உங்களுடைய
நடவடிக்கைகளை எப்படிப் புரிந்துகொள்வது? கூட்டணிக் கட்சிகளின் கைகளை
முறுக்குகிறீர்கள் என்ற பேச்சு வெளிப்படையாகக் கேட்கிறது. தேர்தலுக்குப் பின்
கட்சிகளை உடைத்து ஆட்சிக்கு வர பாஜக முனையும் என்ற எண்ணம் திமுக – அதிமுக இரு
கட்சியினரிடமுமே இருக்கிறது...</b> </div><div><br /></div><div>நான் தலைவராகப் பதவியேற்ற அன்று, பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்ன விஷயத்தையே
இன்றைக்கு உங்களிடமும் சொல்கிறேன். என்னுடைய அரசியல் நேர்மறையானதாக இருக்கும்.
நெகடிவ் பாலிடிக்ஸ் கூடாது என்று நினைப்பவன் நான். பெரியாரை வைத்து சர்ச்சைகள்
போய்க்கொண்டிருந்தபோது, ‘சமூகநீதிக்காகப் போராடியவர் பெரியார்; அவரை வாழ்த்துவதில்
தயக்கம் இல்லை’ என்று கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தேன். கம்யூனிஸ்ட் கட்சியின்
மூத்த தலைவர் தா.பாண்டியன் இறந்தபோது அவருடைய வீட்டுக்கே சென்று இரங்கல்
தெரிவித்தேன். அண்ணன் ஸ்டாலின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, செல்பேசியில்
அழைத்து உடல்நலம் விசாரித்தேன். ஏனைய கட்சிகளைத் தொந்தரவுக்குள்ளாக்குவதிலோ,
மற்றவர்களை அழித்தொழிப்பதிலோ துளியும் எனக்கு விருப்பம் கிடையாது. அரசியலில்
கூட்டணி – ஆட்சிப் பொறுப்பு இவையெல்லாம் அந்தந்தக் காலச்சூழல், தேவைகள் அறிந்து
மேலே இருப்பவர்கள் எடுக்கக் கூடிய முடிவுகள். ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் யார்
வேண்டுமானாலும் கட்சி உறுப்பினர் ஆகிவிடலாம் என்கிற முறை பாஜகவில் இருக்கிறது.
தகவல் தொழில்நுட்பம் அனுகூலத்துடனேயே சங்கடங்களையும் கூட்டிக்கொண்டு வரும்போது
இப்படி நடந்துவிடுகிறது. ரௌடியிஸத்தை நாங்கள் ஒருபோதும் வளர்க்க மாட்டோம்; ரௌடிகள்
என்று சொல்லப்படுபவர்களுக்கு எந்தப் பதவியும் அளிக்க மாட்டோம். </div><div><br /></div><div><b>ஒவ்வொரு தலைவருக்கும் தன்னுடைய சமூகம் சார்ந்து ஒரு கனவு இருக்கும். தமிழ்நாடு
தொடர்பான உங்களுடைய கனவு என்ன?</b></div><div><br /></div><div>
எல்லாவற்றிலும் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு இருக்க வேண்டும்; எப்படி சுயசார்பு
பாரதம் எனும் கனவைப் பேசுகிறோமோ அப்படி சுயசார்பு தமிழ்நாடு உருவாக வேண்டும் என்று
நினைக்கிறேன். </div><div><br /></div><div><b>- மார்ச், 2021, ‘இந்து தமிழ்’
</b></div>சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-31375684326899129362021-06-01T05:49:00.003-07:002021-06-09T11:20:36.407-07:00கருணாநிதியின் பிள்ளை, ஜெயலலிதாவின் வாரிசு ஸ்டாலின் - திருமாவளவன் பேட்டி<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLh6JLGqfLQVvp9iOPWwwzFUow1RCmnAmhe4qFTLyKQ1ZMKeYoAK58d8lqEHIUv-nKmiZkOULiNjx4BoTxhqVe7vWmRBW_0vS3aLhnsT0mY5xbKUfhP1cmRz4mPLtt1CTRCEmqLWf3y3Hj/s750/thirumavalavan.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="500" data-original-width="750" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLh6JLGqfLQVvp9iOPWwwzFUow1RCmnAmhe4qFTLyKQ1ZMKeYoAK58d8lqEHIUv-nKmiZkOULiNjx4BoTxhqVe7vWmRBW_0vS3aLhnsT0mY5xbKUfhP1cmRz4mPLtt1CTRCEmqLWf3y3Hj/w320-h213/thirumavalavan.jpg" width="320" /></a></div><br /><p>விசிக தலைவர் திருமாவளவனை அந்தக் கட்சியின் தலைமையகத்தில் சந்தித்தபோது இரவு சரியாக 12 மணி ஆகியிருந்தது. அந்த நேரத்திலும் வரிசை கட்டி நிற்கும் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துக்கொண்டிருந்தார். தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காத சிலர் ஆவேசமாக அவரிடம் முறையிடுகின்றனர். பொறுமையாகப் பேசி ஆற்றுப்படுத்துகிறார். திருமாவளவனின் முகம் மட்டுமின்றிக் கை, கால்களிலும்கூட வீக்கத்தைக் கவனிக்க முடிந்தது. “நேரத்துக்குச் சாப்பிடறதும் இல்லை; ஒழுங்கா ஓய்வு எடுக்கிறதும் இல்லை; நேற்று தூங்கப் போகும்போது அதிகாலை நாலு மணி; இன்னைக்கும் எவ்ளோ நேரம் ஆகும்னு தெரியலை; இப்படித்தான் ஓடுது; ஆனா, ஓய்வொழிச்சல் பார்த்து உட்கார முடியாத யுத்தம் இது” என்று புன்னகைக்கிறார்.</p><p><b>நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை சனாதனத்துக்கு எதிரான போர் என்று அறிவித்திருக்கிறீர்கள். சனாதனம் என்பதை இன்றைய தேதியில் எப்படி அர்த்தப்படுத்துகிறீர்கள், உங்கள் அறிவிப்பை விளக்க முடியுமா?</b></p><p>சனாதனத்தின் உள்ளடக்கம் அசமத்துவம். பிறப்பின் அடிப்படையில் உயர்வு-தாழ்வைத் தீர்மானித்து இங்கே ஒரு கட்டுமானம் இருக்கிறது இல்லையா, அதை உருவாக்கியதும், அது அழிந்துவிடாமல் பராமரிப்பதும் சனாதனம். இந்தச் சாதியக் கட்டுமானத்தை அப்படியே பாதுகாத்திடவும், அதை உடைத்து நொறுக்கிவிட்டு சமூகநீதிக் கட்டுமானத்தை உருவாக்கிடவும் என்று இங்கே இரு தரப்பிலும் வேலைகள் நடக்கின்றன. சனாதனக் கட்டுமானத்தை அப்படியே நீட்டிக்கச்செய்ய உழைக்கும் அமைப்பாகவே நான் சங்கப் பரிவாரங்களைக் காண்கிறேன். தமிழர் என்ற அடையாளத்தின் கீழ் சாதி – மத வரையறைகளைக் கடந்து அமைப்புகளாக ஒருங்கிணைந்து, கீழே உள்ளவர்களையும் அதிகாரமயப்படுத்தும் சக்திகளை நாசப்படுத்த முற்படும் அரசியல் சக்தியாகவே பாஜகவைக் கருதுகிறேன். அதாவது, பாஜக என்பது சனாதனத்தின் அரசியல் வடிவம். அது தமிழ்நாட்டை இப்போது சூறையாட முற்படுகிறது. இங்குள்ள ஜனநாயக சக்திகளை அழிக்க முற்படுகிறது. ஆகையால்தான் அதற்கு எதிரான போர் என்று இந்தத் தேர்தலைக் குறிப்பிடுகிறேன்.</p><p><b>சமூகநீதியைத் தங்களுடைய மைய இலக்குகளில் ஒன்றாகப் பேசும் அமைப்புகளின் அரசியலை மோடியின் பாஜக இந்த ஏழாண்டுகளில் பல இடங்களிலும் உடைத்திருக்கிறது; குறிப்பாக, வட இந்தியாவில் இதை அதிகம் காண்கிறோம். இதில் தலித் அரசியல் இயக்கங்கள் பெரும் தேக்கத்தையும் சிதிலத்தையும் அடைந்திருப்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன். சொல்லப்போனால், தேசிய அளவில் விசிக அளவுக்குத் துடிப்போடு முன்னகரும் அம்பேத்கரிய இயக்கம் ஒன்று தென்படவில்லை. எங்கே தவறு?</b></p><p>தலித் இயக்கங்களை நாம் இரண்டு வகையாகப் பிரித்துப் பார்க்கலாம். முதல் வகை, அம்பேத்கரை வெறுமனே ஒரு தலைவராக உள்வாங்கிக்கொண்டு திரளும் இயக்கங்கள்; இவை அம்பேத்கரைக் கருத்தியல்ரீதியாக உள்வாங்குவதில்லை; அம்பேத்கர் என்ற சென்டிமென்ட், தலித் என்ற சென்டிமென்ட் இரண்டோடும் முடிந்துவிடுகின்றன; காலப்போக்கில் இவை சாதியுணர்வைப் பிரதிபலிக்கும் இயக்கங்களாகவும் ஆகிவிடுகின்றன. இரண்டாம் வகை, அம்பேத்கரைக் கருத்தியல்ரீதியாகப் படித்து உள்வாங்கி, காலத்துக்கு ஏற்ற மாற்றங்களோடு அமைப்பாகத் திரளும் இயக்கங்கள். அதிகாரத்தை நோக்கிய அணிதிரட்டல் ஒருபுறம்; புரட்சிகர மாற்றத்தை நோக்கிய அணிதிரட்டல் மறுபுறம். பொது நீரோட்டத்தில் இணைந்து பணியாற்றும்போது எங்கே சமரசம் செய்வது, எங்கே உறுதியாக நிற்பது; எது நட்பு முரண், எது பகை முரண் என்பதில் பெரிய தெளிவு தேவை. அந்த இடத்தில் ஏற்படும் சறுக்கலே இந்த நிலைக்குக் காரணம். இந்திய அளவில் அம்பேத்கரிய இயக்கங்கள் இன்று மெல்லக் கரைகின்றன என்றால், அதற்குக் கருத்தியல் சிதைவுதான் காரணம்.</p><p><b>அப்படியென்றால், காந்திபோல அம்பேத்கரும் ஆகிக்கொண்டிருக்கிறார் என்று சொல்லலாமா? அதாவது, சாராம்சத்துக்கு அப்பாற்பட்ட அடையாளமாக அவருடைய அரசியல் எதிரிகளாலும் எப்படி காந்தி சுவீகரிக்கப்படுகிறாரோ அப்படி அம்பேத்கரும் ஆகிவருகிறார் எனலாமா?</b></p><p>அதுதான் உண்மை. வெற்று அடையாள அரசியல் சீக்கிரமே நீர்த்துவிடும். அம்பேத்கரின் சிலைகளையும் படங்களையும் அவருடைய லட்சியத்தை உள்வாங்காமல் வெறுமனே நம்முடைய தேவைக்காகப் பயன்படுத்தினால் அம்பேத்கர் ஒரு கமர்ஷியல் கமாடிட்டி மாதிரி ஆகிவிடுவார். இது ஒரு சுரண்டல்தான்.</p><p><br /><span></span></p><a name='more'></a><p></p><p><b>எந்த ஒரு தலைவரின் லட்சியங்களையும் அடுத்தடுத்த காலகட்டத்துக்கு எடுத்துச்செல்லவும் விஸ்தரிக்கவும் தொடர் ஆளுமைகள் தேவைப்படுகிறார்கள். உதாரணமாக, பெரியாரியம் வெறும் கருத்துகளாகத் தேங்கிக் கெட்டிப்பட்டுவிடக்கூடிய இடத்தில் அதை மீட்டெடுத்து அதன் இடைவெளிகளை அண்ணா நிரப்புகிறார். திமுக அற்ற பெரியாரியத்தை நம்மால் கற்பனைசெய்ய முடியாது. அம்பேத்கரிடமிருந்து நீங்கள் முரண்படும் விஷயங்களையும் அப்படிச் சொல்ல முடியுமா? உதாரணமாக, ‘தலித்துகள் மதம் மாறுவது மேலும் அவர்களைப் பலவீனப்படுத்துகிறது என்பதால் அது தேவை இல்லை’ என்ற உங்கள் நிலைப்பாடோ, ‘அதிகாரம் மிக்க மாநிலங்களை மையப்படுத்திய முழுக் கூட்டாட்சி நாடாக இந்தியா மாற வேண்டும்’ என்ற நிலைப்பாடோ அம்பேத்கரின் நிலைப்பாடுகளிலிருந்தே ஒரு பெரிய தாவல் என்று சொல்லலாம். சரியா?</b></p><p>எந்த ஒரு சித்தாந்தமும் காலத்துக்கு ஏற்ற பரிணாம வளர்ச்சியை அடைய வேண்டும். அண்ணா இல்லையென்றால், பெரியாருடைய சிந்தனைகள் வெறும் சிந்தனைகளாகவே இருந்திருக்கும். இதற்கு அண்ணா அடைந்த அரசியல் அதிகாரம் முக்கியமான காரணம். பொது நீரோட்டத்தில் மிகப் பெரும் ஆளுமையாக அண்ணா உருவெடுத்ததால், பெரியாரின் சிந்தனைகள் பொது நீரோட்டத்தில் கலக்கின்றன, எழுச்சி பெறுகின்றன, பரந்துபட்ட அளவில் எல்லோரிடமும் சென்றுசேர்கின்றன. அம்பேத்கருக்கு அப்படியொரு அண்ணா கிடைக்கவில்லை. பெரியாருடைய கருத்துகளைப் பரப்புவதற்கு அரசியல் தளத்தில் ஒரு வலுவான மிஷனரி இருந்தது; அதுதான் திமுக. அதை வெறுமனே ஒரு அரசியல் கட்சியாக மட்டும் சுருக்கிப் பார்த்திட முடியாது. அம்பேத்கரின் கருத்துகளைப் பரப்புவதற்கு அப்படி ஒரு மிஷனரி உருவாகவில்லை என்பதே உண்மை. அம்பேத்கரியத்துக்கு ஒரு முழுமையான அரசியல் வடிவத்தைக் கொடுப்பதற்கும், செழுமைப்படுத்துவதற்குமான வாய்ப்பு கான்ஷிராம் தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்குக் கிடைத்தது. அவர்கள் அதற்காகக் கடுமையாக உழைத்தார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. எங்கே வழுக்கினார்கள் என்றால், அம்பேத்கர் எந்த சித்தாந்தத்தைக் கடுமையாக எதிர்த்தாரோ அந்த சித்தாந்த எதிரிகளுடனேயே அதிகாரத்துக்காகக் கூட்டணி கொண்டார்கள். கருத்தியல் சமரசம். பாஜகவுடனான கூட்டு என்பது பிராமணியத்துடனான கூட்டுதான். சமூகநீதி இயக்கங்களை இது வீழ்ச்சிக்குத்தான் இட்டுச்செல்லும். இதை முழுமையாக உணர்ந்திருப்பதால்தான் பாஜகவைக் கொள்கைப் பகைவர்களாக நான் கருதுகிறேன். அதனால்தான், என்ன பதவி கிடைத்தாலும் சரி, எந்தக் காலத்திலும் அவர்களுடன் கூட்டணி கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதே சமயம், அம்பேத்கரியத்தின் மைய லட்சியம் எதுவோ அந்தச் சமத்துவத்தை அடைவதற்கான சித்தாந்தப் பரிணாம வளர்ச்சிக்கான எல்லா வழிகளையும் முயல்கிறேன். ‘இந்தத் தேர்தலில் திமுகவுடன் வெறும் ஆறு இடங்களுக்கு ஒப்புக்கொண்டுவிட்டீர்களே!’ என்று கேட்பவர்களுக்கான பதிலும் இதில் உள்ளது.</p><p><b>பாஜகவுக்கு எதிரான யுத்தத்தில் திமுகவையும் ஸ்டாலினையும் எந்த அளவுக்கு நம்புகிறீர்கள்?</b></p><p>முழுமையாக நம்புகிறேன். ஸ்டாலினை நான் எப்படி மதிப்பிடுகிறேன் என்றால், அவர் ‘கருணாநிதியின் பிள்ளை, ஜெயலலிதாவின் வாரிசு’ என்று கூறுவேன். எப்படியென்றால், உறுதியான சனாதன எதிர்ப்பு என்று கருத்தியல் சார்ந்து ஒரு முடிவை எடுக்கும்போது கருணாநிதியின் பிள்ளை என்பதை அவர் நிரூபிக்கிறார்; திமுக கூட்டணியை விட்டு விசிகவை அகற்ற எத்தனையோ சக்திகள் முயன்றன; குறிப்பாக, ‘மநு’ விவகாரத்தை இதற்குச் சரியான வாய்ப்பாக அவை பயன்படுத்தின; ஸ்டாலின் பக்கபலமாக நின்றார். பகைவர்களை அடையாளம் கண்ட பின் அவர்களுக்கு எதிராக எதற்கும் அஞ்சாமல் முன்னோக்கிச் செல்வதிலும், கூடவே அது நோக்கி இயக்கத்தையும் கட்டுப்பாடாக நிர்வகித்துச் செல்வதிலும் ஜெயலலிதாவை அவர் பிரதிபலிக்கிறார். சனாதனத்துக்கு எதிராக அவர் முன்னெடுக்கும் போரில் விசிக உறுதியான பக்கபலமாக இருக்கும்.</p><p><b>தனித்த சாதிகளாக இருந்தவை பிற்பாடு ‘ஒடுக்கப்பட்டோர்’, ‘பிற்படுத்தப்பட்டோர்’ எனும் வரையறை நோக்கி ஒரு தொகுப்பாக நகர்ந்ததன் வழியாகவே சமூகநீதி அரசியலையும் சமவுரிமையையும் இங்கு பேச முடிந்தது. இன்று சமூகங்கள் மீண்டும் தனித்த சாதிகளாகப் பிளவுறுவதைப் பார்க்கிறோம். தலித் அரசியலையே எடுத்துக்கொண்டால், தேவேந்திரகுல வேளாளர் சமூகம் இன்று பட்டியலின வரையறையிலிருந்து வெளியேறுவதில் காட்டும் முனைப்பானது சமூகநீதி பேசும் இயக்கங்களுக்கு ஒரு பெரிய பின்னடைவுதான். இதற்கு என்ன காரணம்; சமூகநீதி சித்தாந்தத்தின் போதாமையா இது?</b></p><p>அப்படி இல்லை. சனாதனிகள் தங்கள் சித்தாந்தத்தை மக்களிடம் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்கிறார்கள்; ஜனநாயக இயக்கங்கள் அந்த இடத்தில் சறுக்கிவிட்டோம். இது சித்தாந்தத்தின் தோல்வி அல்ல; சித்தாந்தத்தை முன்னெடுத்துச்செல்வதில் அடைந்திருக்கும் பின்னடைவின் விளைவு. சமத்துவம் ஒரு பெரும் கனவு. இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பும், அதற்குப் பின் அரசு தன்னுடைய நிர்வாகத்துக்காகக் கொண்டுவந்த ‘முற்பட்டோர்’, ‘பிற்படுத்தப்பட்டோர்’, ‘பட்டியலினத்தார்’ போன்ற வரையறைகளும் உண்டாக்கிய அரசியல் மாற்றங்களின் அடிப்படையிலேயே நாம் சமூகநீதிக் கனவை முன்னகர்த்திவருகிறோம். அடிப்படையில், ஒவ்வொரு சாதியும் தனித்தனிச் சாதிதான். படையாச்சி வேறு, நாடார் வேறு, கவுண்டர் வேறு; ‘பிற்படுத்தப்பட்டோர்’ என்ற வரையறையின் கீழ் ஒன்றுபட்டு உரிமைகளுக்காகப் பாடுபடலாம் என்றாலும், பெரும் பகுதி இவர்கள் தனித்தனிச் சாதிகளாகத்தான் சிந்திக்கிறார்கள், செயல்படுகிறார்கள். பட்டியலினச் சாதிகளிலும் இதுவே நடக்கிறது. ஏன் தனித்த அடையாளத்தைத் தக்கவைக்க நினைக்கிறார்கள் என்றால் உரிமைகளுக்காக; ஏனென்றால், அந்த அடையாளங்களின் அடிப்படையில்தானே பாதிப்பையும் உணருகிறார்கள்? ஆக, ஒருவர் அருந்ததியராக உணர்கிறார் என்றால், அதை வெறும் சாதிய உணர்வு என்று நாம் கொச்சைப்படுத்திவிட முடியாது. அவருக்கு இங்கு இருக்கக்கூடிய அழுத்தப்படும் உணர்வு, பாதுகாப்பற்றதன்மை எல்லாமும் ஒன்றாகச் சேர்ந்தே ‘நாம் இந்த அடையாளத்தோடு இருக்க வேண்டும், அதுதான் நமக்குப் பாதுகாப்பு’ என்கிற உணர்வை உருவாக்கியிருக்கிறது என்று உணர வேண்டும். சாதி காரணமாகச் சுடுகாட்டில் இடம் மறுக்கப்படும் ஒரு சமூகம், ‘நான் இன்ன சாதி; எங்களுக்கு சுடுகாடு இல்லை’ என்றுதானே கேட்க முடியும்? ‘நான் தமிழர் அல்லது இந்தியர்; எனக்குச் சுடுகாடு வேண்டும்’ என்றா கேட்க முடியும்? ஆக, எவர் ஒருவரின் குழு உணர்வையும், எந்த ஒரு சமூகத்தினரின் கோரிக்கையையும் ஜனநாயக அடிப்படையில்தான் நாம் பார்க்க வேண்டுமே தவிர, அதை வெறுமனே குழுவுணர்வின் வெளிப்பாடாகச் சுருக்கிப் பார்க்கக் கூடாது. ஆனால், இது சீக்கிரமே அடுத்த கட்டம் நோக்கி நகர வேண்டும். சித்தாந்தரீதியாக ஒருவர் ஜனநாயகத்தைப் பயின்று சமத்துவம் நோக்கி வளரும்போது அது நடக்கும். வெவ்வேறு ஏழு உபசாதிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் ஒன்றிணைந்து ‘தேவேந்திரகுல வேளாளர்’ என்ற அடையாளத்துக்குள் வருகிறார்கள். இது சாதி ஒழிப்பு அல்ல என்றாலும், உட்சாதி ஒழிப்பு; எப்படிப் பல்வேறு உட்சாதிகளையெல்லாம் அழித்துவிட்டு ‘வன்னியர்’ என்ற அடையாளத்துக்குள் வந்தார்களோ அப்படி. அடுத்த கட்டத்தில் சாதி ஒழிப்பை நோக்கியும் அவர்கள் நகரலாம். மக்களை அந்த இடம் நோக்கி அழைத்துச்செல்ல வேண்டியது ஜனநாயக இயக்கங்களின், தலைவர்களின் பொறுப்பு. நல்ல கனவு வெல்லும்!</p><p><br /></p><p><b>- மார்ச், 2021, ‘இந்து தமிழ்’</b></p>சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-27579875501629617132021-06-01T05:48:00.001-07:002021-06-09T11:20:20.537-07:00 பாஜக மாதிரி ஆக வேண்டியது இல்லை காங்கிரஸ்: கே.எஸ்.அழகிரி பேட்டி<p><table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto;"><tbody><tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFHBvKNYPnxRThbFJWAhV_-1lRMcEF1o3zy-7ZIzEupUAiY4XKJp1aeVfRr7R4hM5x4wCukEB-H3Kz6WPtm6wk9Toib7DtGrJf67kHvyPhhXMXPudlKcBI76JR4iFsVeZbzNNRZUDGwWHD/s599/KS_Alagiri.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="450" data-original-width="599" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFHBvKNYPnxRThbFJWAhV_-1lRMcEF1o3zy-7ZIzEupUAiY4XKJp1aeVfRr7R4hM5x4wCukEB-H3Kz6WPtm6wk9Toib7DtGrJf67kHvyPhhXMXPudlKcBI76JR4iFsVeZbzNNRZUDGwWHD/w400-h300/KS_Alagiri.jpg" width="400" /></a></td></tr><tr><td class="tr-caption" style="text-align: center;"></td></tr></tbody></table><br />பரபரப்பும் படாடோபமும் கூடிய அரசியல் யுகத்திலிருந்து விலகிய நிதானச் சூழலில் இருக்கிறது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன். தமிழ்நாடு காங்கிரஸ் வரலாற்றில் இக்கட்டான ஒரு காலகட்டத்தில் தலைவர் ஆகியிருக்கும் கே.எஸ்.அழகிரி அதே நிதானத்தைப் பிரதிபலிக்கிறார். தொண்டர்கள் எளிதாக தலைவர் அலுவலகத்தின் உள்ளே செல்ல முடிகிறது, அவரைச் சந்திக்க முடிகிறது; கோஷ்டி அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லோர்க்கும் பொதுவான நிலையில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.</p><p><b>ஒரு கிராமத்திலிருந்து ஊராட்சித் தலைவர், ஒன்றியத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் என்று படிப்படியாக மேல் நோக்கி வந்தவரான நீங்கள் காங்கிரஸை அதன் பின்னடைவிலிருந்து மீட்டு மேல் நோக்கி உயர்த்த எது சரியான வழி என்று நம்புகிறீர்கள்?</b></p><p>காந்தி காட்டிய வழிமுறைதான்: செயல்பாடு, செயல்பாடு, செயல்பாடு.</p><p><b>இந்த ஓராண்டில் கட்சிக்குள் என்ன முக்கியமான மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறீர்கள்?</b></p><p>இரண்டு விஷயங்கள். பெரிய ஒற்றுமையைக் கொண்டுவந்திருக்கிறோம். எனக்கு என்று ஒரு கோஷ்டியை நான் பராமரிக்கவில்லை. முரண்பாடுகளை மதிப்பவன் நான். எல்லா விஷயங்களிலும் கருத்தொற்றுமை என்பது சாத்தியமே இல்லை. அது இயற்கையும் இல்லை. அதனால் நான் என்ன நினைப்பேன் என்றால், ‘இந்த இயக்கம் என்பது எல்லோரும் சேர்ந்ததுதான். நம்முடைய கருத்துகளிலிருந்து மாறுபட்டிருக்கிறார்கள் என்பதாலேயே அவர்கள் நமக்கு அந்நியமானவர்கள் அல்ல. எல்லோர் அறிவும் ஆற்றலும் இயக்கத்துக்கு முக்கியம். அதனால் அவரவருக்கு உரிய அங்கீகாரத்தைக் கொடுக்க வேண்டும்’ என்று நினைப்பேன். விளைவாக எந்த நிகழ்ச்சி என்றாலும், மேடையில் எல்லா முக்கியத் தலைவர்களும் ஒன்றாக அமரும் இணக்கம் உருவாகியிருக்கிறது. அடுத்து, புதிதாக மாநிலக் குழு அமைத்திருப்பதோடு, பிரதிநிதிகளின் எண்ணிக்கையை உயர்த்தியிருக்கிறோம். மாநிலத் துணைத் தலைவர்களாக 32 பேர், பொதுச்செயலர்களாக 43 பேர், செயலர்களாக 103 பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையினர் மிகச் சாதாரண குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். மேல்மட்டத்தில் நடந்திருக்கும் இந்த மாற்றங்கள் கீழ்மட்டம் நோக்கிச் செல்கின்றன. அமைப்புக்குப் புத்துயிர் கொடுத்திருப்பது செயல்பாடுகளில் வெளிப்படுகிறது. சென்னையில் ஒரு கூட்டம் என்றால், பத்தாயிரம் பேர் திரளுகிறார்கள். முன்பு இது சாத்தியம் இல்லை.</p><p><b>பொறுப்புப் பகிர்வு நல்ல விஷயம். அதிகாரப் பகிர்வாகவும் அது அமைந்திருக்கிறதா?</b></p><p>அடிப்படையில் அரசியல் என்பது சேவைக்கான களம். இங்கே ஒருவருக்குப் பொறுப்பு அளிக்கப்படுவதானது, அவர் களத்தில் உழைப்பதற்கான ஓர் அங்கீகாரம். அதேசமயம், முன்பு 10 பேர் உட்கார்ந்து பேசி முடிவெடுத்து செயலாற்றிய இடத்தை இப்போது 300 பேர் உட்கார்ந்து பேசி செயலாற்றுவதாக மாற்றும்போது அது அதிகாரப் பகிர்வும்தானே!</p><p><b>சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுபவற்றுள் ஐந்தில் ஒரு பங்கு தொகுதிகள் தலைவர்களின் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது பொறுப்புப் பகிர்வா, அதிகாரப் பகிர்வா?</b></p><p>இரண்டுமேதான். குடும்ப/ வாரிசு அரசியலுக்கான பங்கு குறைய வேண்டும்; குறைந்திருக்கிறது. ஆனால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே கட்சிக்கு உழைப்பவர்களின் பங்களிப்பை முற்றிலும் நிராகரித்திட முடியாது இல்லையா?<span></span></p><a name='more'></a><p></p><p><b>கோஷ்டிப் பூசல் கட்டுக்குள் வந்திருக்கிறது என்று சொல்கிறீர்கள். ஆனால், வேறு எந்தக் கட்சியிலும் காண முடியாத அளவுக்கு வேட்பாளர் தேர்வின்போது பெரும் கூச்சலை காங்கிரஸுக்குள் கேட்க முடிந்தது. பொதுவாகவே கட்சிக்குள் பணக்காரர்கள் கை ஓங்கியிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது...</b></p><p>இத்தகு குற்றச்சாட்டுகள் முதிர்ச்சியற்றோரின் வெளிப்பாடு. மனதாரச் சொல்கிறேன், 2019 மக்களவைத் தேர்தலிலும் சரி, 2021 சட்டமன்றத் தேர்தலிலும் சரி; மிக எளிய பின்னணி கொண்ட பலருக்கு வாய்ப்பு அளித்தது காங்கிரஸ்தான். எல்லாத் தகுதிகளும் இருந்தாலும், வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது என்பதும், செலவழிக்கும் திறன் எப்படி இருக்கிறது என்பதுமே இன்று எந்தக் கட்சியும் வேட்பாளர் தேர்வில் முன்னுரிமை தரும் விஷயங்கள். ஏனென்றால், தேர்தல் அவ்வளவு செலவு பிடிக்கும் விஷயம் ஆகிவிட்டது. இன்றைய காங்கிரஸ் இதிலிருந்து விலகி நிற்கிறது. ராகுல் கொண்டுவந்த முக்கியமான மாற்றம் இது. உண்மையில் மக்களவைத் தேர்தலில் நாங்களே இந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை. பெரிய அலை இல்லை என்றால், நாங்கள் நிறுத்திய பலர் பண பலம் இல்லாததாலேயே வெற்றி வாய்ப்பை இழந்திருப்பார்கள். ஆனால், தோற்றாலும் பரவாயில்லை; நல்ல செயல்பாட்டாளர்கள் வாய்ப்பைப் பெற வேண்டும் என்று துணிந்தோம். ஆக, வெளியே எதைக் கட்சியின் பெரிய பலமாகப் பேச வேண்டுமோ, அதையே பலவீனமாக்கக் கூடியவர்களை என்னவென்று சொல்வது? ஒரு தொகுதிக்கு நூறு பேர் விண்ணப்பிக்கிறார்கள்; ஆனால், வாய்ப்பு ஒருவருக்குத்தான் கொடுக்க முடியும் என்றால், அது எந்தக் கட்சியின் தலைமைக்கும் ஒரு பெரிய நெருக்கடி. என் வாழ்வில் இரண்டு முறை கட்சித் தலைமை கொடுத்த வாக்குறுதியின் பெயரில் தேர்தல் வேலைகளை முன்கூட்டியே தொடங்கி கடைசி நேரத்தில் வாய்ப்பை இழந்திருக்கிறேன். ஒருநாளும் குறையாகக் கருதியது இல்லை. மூப்பனார் சொன்ன படிப்பினையைத்தான் எல்லோரிடமும் இப்போது சொல்கிறேன்.</p><p><b>என்ன படிப்பினை அது?</b></p><p>ஒருசமயம் நானும் ஒரு நண்பரும் மூப்பனாரைச் சந்திக்கச் சென்றோம். நண்பர் புதுச்சேரியில் அமைச்சராகவும், நான் தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தோம். நண்பரின் உறவினர் மகனுக்கு மருத்துவக் கல்லூரி சீட் கேட்பதற்காகவே சென்றோம். அந்தக் கல்லூரியின் நிர்வாகி காங்கிரஸ் பின்னணி கொண்டவர். மூப்பனார் சொன்னால் நிச்சயம் சீட் கிடைக்கும். வருஷத்துக்கு இப்படி சில மாணவர்களுக்குப் பரிந்துரைப்பதையும் மூப்பனார் வழக்கமாகக் கொண்டிருந்தார். மூப்பனாரிடம் விஷயத்தைச் சொன்னபோது சிரித்துக்கொண்டே கேட்டார், “ஏன் சார், உங்க ரெண்டு பேருக்கும் எம்எல்ஏ, அமைச்சர் வாய்ப்புகளைக் கட்சி கொடுத்திருக்கு. இப்படி காலேஜ் சீட் வாய்ப்பையெல்லாமும்கூட நீங்களே வாங்கிட்டா கட்சியில கீழ் மட்டத்தில் உழைக்கிற ஒருத்தர், ‘இந்த ஏழை மாணவனுக்கு சீட் வேணும் தலைவரே’ன்னு ஒரு கிராமத்துலேர்ந்து கட்சியை அணுகும்போது அவருக்கு நாம என்ன பதில் சொல்ல முடியும்?” எவ்வளவு பரந்த மனமும், விரிந்த பார்வையும் இதற்கு வேண்டும்? பெரிய படிப்பினை எனக்கு அது. இப்படி மூப்பனார், சிதம்பரம், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் இவர்களிடமிருந்து நான் கற்ற படிப்பினைகள் அதிகம். முக்கியமானது, நாம் மட்டுமே கட்சி அல்ல என்பதுதான்!</p><p><b>சரி, கட்சியின் மாநிலத் தலைமைக்கு உரிய அதிகாரம் அளிக்கப்படவில்லை என்பதைச் சுட்டியே காங்கிரஸிலிருந்து மூப்பனார் வெளியேறினார். இன்றைக்கு நிலைமை எப்படி இருக்கிறது? முக்கியமாக, ராகுலை உங்களால் அணுக முடிகிறதா?</b></p><p>எந்த முடிவிலும் கட்சியின் மாநிலத் தலைமைக்கே முன்னுரிமை என்பதே ராகுலின் அணுகுமுறை. மேலிடப் பொறுப்பாளர்களான குண்டுராவ், வேணுகோபாலிடம் பேசுகிறோம்; மிக அவசியமான விஷயம் என்றால், ராகுலையே தொடர்புகொள்கிறேன். ராகுலின் செல்பேசி எண் என்னிடம் மட்டும் அல்ல; தமிழகத்தில் குறைந்தது பத்துத் தலைவர்களிடம் உண்டு. குறுஞ்செய்தி அனுப்புவேன். உடனே பதில் அளிப்பார். சமீபத்திய சுற்றுப்பயணங்களின்போது ஆறு நாட்களும் அவருடன் இருந்தேன். காரில் பேசிக்கொண்டேதான் வருவார். காமராஜர் தொடங்கி ரஜினி, கமல் வரை பல விஷயங்களும் கேட்டுத் தெரிந்துகொள்வார். பொதுவாகவே எல்லோர் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பார். காரில் பயணிக்கும்போது சாப்பிடப் பழங்கள், பருப்புகள், பழரசம் என்று எதையாவது எடுத்துவருவது அவரது வழக்கம். இப்படிக் கொண்டுவரும்போது தனக்கு மட்டும் அல்லாமல், கார் ஓட்டுநர் தொடங்கி அத்தனை பேருக்கும் ஒவ்வொரு முறையும் தன் கையாலேயே பரிமாறிவிட்டுத்தான் சாப்பிடுவார். மதியம் சாப்பிடும்போதும் எங்கள் அனைவரோடும் அமர்ந்தே சாப்பிடுவார். “சோற்றைக் குறைத்துக்கொண்டு மாமிசம், காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள். அப்போது என் வேகத்துக்கு நீங்களும் நடக்கலாம். கட்சியை வளர்க்க உடல் வலுவும் முக்கியம்” என்பார்.</p><p><b>கட்சியை வளர்த்தெடுக்கக் கட்சியை வாக்குச்சாவடி அளவில் பலப்படுத்துங்கள் என்பதே அமித் ஷா கூறும் முக்கியமான ஆலோசனை என்று சொல்கிறார் பாஜக தலைவர் முருகன். அப்படி ராகுல் உங்களுக்குக் கூறும் முக்கியமான ஆலோசனை என்ன?</b></p><p>காந்தி சொன்ன அதே வழிமுறையைத்தான் ராகுலும் குறிப்பிடுவார், ‘தொடர் செயல்பாடு!’ ராகுல் வந்த இடங்களில் எல்லாம் பெரும் கூட்டம் இங்கே கூடியது. கோவைப் பிராந்தியத்தில் மட்டும் ஐந்து லட்சம் பேர் திரண்டிருப்பார்கள். உண்மையில் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் காசு கொடுத்துத் திரட்டும் ஆற்றல் காங்கிரஸுக்குக் கிடையாது. டெல்லி புறப்படும்போது ராகுல் சொன்னார், “தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு என்று ஒரு இடம் இருக்கிறது; இல்லாவிட்டால் இவ்வளவு கூட்டம் கூடாது. தொடர்ந்து செயல்படுங்கள்!”</p><p><b>பாஜகபோல காங்கிரஸ் வளர்கிறதா?</b></p><p>தமிழ்நாட்டில் பாஜக வளர்வதாக நீங்கள் நம்புகிறீர்களா? அது ஒரு மாயை. சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன் கேளுங்கள், இந்திரா பெரும் செல்வாக்கோடு இருந்த நெருக்கடிநிலைக் காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் குறையாத ஆட்கள் என் வீட்டுக்கு வருவார்கள். பல நூற்றுக்கணக்கானோர் கட்சியில் சேர்ந்தார்கள். நான் கட்சி பெரிதாக வளர்வதாக நம்பினேன். ஆட்சி அதிகாரத்தைக் கட்சி இழந்தபோது அவர்கள் மொத்தமும் காணாமல்போய்விட்டார்கள். மத்தியில் பகாசுர பலத்தோடு, அதிகாரத்தோடு இருக்கும் ஒரு கட்சி மாநிலத்தில் பிரதான கட்சியாக இல்லாதபோது, அந்தக் கட்சியில் உள்ள வெற்றிடத்தைப் பயன்படுத்திக்கொள்ள பலரும் முனைவார்கள். வேறு எந்தக் கட்சியிலும் பெரிய பதவிகளுக்கு வாய்ப்பில்லாதவர்கள், ஆட்சியின் சலுகைகளைப் பயன்படுத்திக்கொள்ள முற்படுபவர்கள்தான் இவர்களில் அதிகம் இருப்பார்கள். அதிகாரம் போனால் ஓடிவிடுவார்கள். ஒரு கட்சி எதிர்க்கட்சியாக இருக்கும்போது அடையும் வளர்ச்சியே நீடித்திருக்க வல்லது. தமிழ்நாட்டு மக்களுக்கு என்று பொதுவான சிந்தனைத் தளம் ஒன்று இருக்கிறது. சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டது அது. அதற்கு நேர் எதிரானது பாஜக. இங்கு ஒருநாளும் பாஜக எடுபடாது.</p><p><b>தமிழ்நாட்டில் காங்கிரஸின் பலவீனமாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?</b></p><p>ஒரு கட்சி மக்கள் மத்தியில் உயிர்ப்போடு இருக்க வேண்டும் என்றால், மக்களின் குரலை அது எதிரொலிக்க வேண்டும். தமிழ்நாட்டில் நாங்கள் அதைச் செய்யத் தவறிவிட்டோம். பதவி ஆசை, கூட்டணியுறவு இதற்காகவெல்லாம் தயங்கக் கூடாது. சரியோ, தவறோ ஒவ்வொரு விஷயத்திலும் துணிச்சலாகத் தன் கருத்தைக் கட்சி அழுத்தம்திருத்தமாகச் சொல்ல வேண்டும். கருத்தைச் சொல்வதில் பிரச்சினை என்றால், ஒரு பத்தாண்டு காலத்துக்குத் தேர்தல் வெற்றிகளை ஒதுக்கிவிட்டு, தனித்தேகூடச் செயல்படலாம். காந்தியின் வெற்றியே மக்கள் குரலை அவர் உரக்கப் பேசியதுதானே!</p><p><b>பாஜகவின் இந்துத்துவக் கதையாடலுக்கு காங்கிரஸின் பதில் என்ன?</b></p><p>காங்கிரஸ் யாருக்காகவும் தன் கதையாடலை மாற்றிக்கொள்ள வேண்டியது இல்லை. மோடி ஜெயிக்கிறார் என்பதற்காக காங்கிரஸ் தலைவர்கள் அவரைப் போல எதேச்சதிகாரமாக மாற வேண்டியதும் இல்லை; கட்டுக்கோப்பான கட்சி என்ற பெயரில் காங்கிரஸ் தன் ஜனநாயகத்தை இழக்க வேண்டியதும் இல்லை. காங்கிரஸ் எல்லா சமூகங்களுக்குமான ஜனநாயக இயக்கம். நல்லிணக்கம்தான் அதன் அடிப்படை. இதை காங்கிரஸ் திரும்ப உரக்கப் பேசினாலே போதும்!</p><p><b>- மார்ச், 2021, ‘இந்து தமிழ்’</b></p>சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-28698438455947643282021-03-05T18:26:00.001-08:002021-03-25T03:21:47.480-07:00சமஸ் சிந்தனைகளின் அர்த்தம்: தமிழவன்<p><table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto;"><tbody><tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz0AHTG9HY4fqAEP9S3qi0siJZo7CCioEcQ-_0SaAMzHSAkN0vBwitjaRE7HgsezlAAJ-2-Qcj2k7jSXYSbi4tLNa51Jr-Uy6HhgJ2_-QHDxiW4pKU5AJlqTiAGI4J3DS1NLBLgIdnPaLj/s1119/APT.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="629" data-original-width="1119" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz0AHTG9HY4fqAEP9S3qi0siJZo7CCioEcQ-_0SaAMzHSAkN0vBwitjaRE7HgsezlAAJ-2-Qcj2k7jSXYSbi4tLNa51Jr-Uy6HhgJ2_-QHDxiW4pKU5AJlqTiAGI4J3DS1NLBLgIdnPaLj/w640-h360/APT.jpg" width="640" /></a></td></tr><tr><td class="tr-caption" style="text-align: center;"></td></tr></tbody></table><br />சமஸின் ‘அரசியல் பழகு’ நூலைப் படித்தபோது என் மனம் மிகுந்த உற்சாகம் கொண்டது.<br /><br />சமீப காலத்தில் பலர் அவ்வப்போது சமஸ் பெயரைக் குறிப்பிடுவதைக் கேட்டிருக்கிறேன். எனக்கும் சமஸுக்கும் சுமார் 35 வயது வேறுபாடு. சமஸ் நூலைப் படிக்க ஆரம்பித்தபோது, ‘மரபையும் மேற்கையும் கலந்து சுவீகரித்துக்கொண்டு வளர்ந்துள்ளாரே, என் போன்ற ஒருவரிடம் இல்லாத பல விஷயங்களை இவர் கொண்டுள்ளாரே!’ என்ற வியப்பு எழுந்ததோடு, சமஸின் சிந்தனை அடிப்படைகள் எவையாக இருக்கும் என்ற கேள்வி தோன்றியது. அதோடு சமஸின் தலைமுறையில் யார் யார் இவரைப் போல் சிந்திக்கிறார்கள் என்று தேடவும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.<br /><br />இன்றைய அரசியலின் பகட்டுக்கும் பதவி போகங்களுக்கும் வெளியில் இலக்கியம், சிந்தனை எனப் பயணப்பட்டு மேற்கத்தியச் சிந்தனைகளின் ஆழமான சில பகுதிகளைத் தமிழோடு சேர்க்க மிகுந்த பிரயத்தனங்கள் செய்பவர்களில் ஒருவன். பெருவாரித் தமிழ்ச் சமூகம் எங்களைப் போன்றவர்களின் போக்குகளை உடனடியாக அங்கீகரிக்காது என அறிந்து சிறுபத்திரிகைகளோடு கடந்த ஐம்பதாண்டுகளாக சிறுவாரித்தன்மையோடு அணி சேர்ந்திருப்பதே எங்களுடைய இயல்பாக இருந்திருக்கிறது. ஒருவகையில் பெருவாரியின் தமிழ் வெளிப்பாட்டை Subvert செய்பவர்கள், அவர்களோடு உறவற்று இருப்பதில் மகிழ்ந்திருப்பவர்கள் என்றும்கூட எங்களைச் சொல்லலாம். இவ்வளவுக்கும் பல பல்கலைக்கழகங்களில் உயர் பொறுப்புகளில் இருந்தாலும், சிறுவாரியே என்னைப் போன்றவர்கள். சமஸ், பெருவாரித் தமிழ்ச்சமூகத்தோடு தொடர்புடையவர். கலாச்சாரம் மட்டுமே எல்லை என்று என்னைப் போல் குறுகாமல், அரசியலும் சார்ந்து பெருவாரித் தமிழ்ச் சமூகத்தோடு உரையாடும் – எனக்குத் தொடர்பில்லாத – ஊடகத் துறை சார்ந்தவர். <br /><br />நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது, இதழியலாளர் ஏ.என்.சிவராமன் எழுதிய மார்க்சியத்துக்கு எதிரான விஷயங்கள் அவரது சிந்தனைக் கனத்தை கவனிக்க வைத்தாலும் பொதுவான எம்போன்றோரின் திராவிட – மார்க்சிய பங்கெடுப்பு, காரணமாக அவரை மனதளவில் மறுதலித்ததோடு, ‘ஊடகத் துறையில் ஒருவர் சிந்தனையாளராய் வந்துவிடுவாரா என்ன!’ என்ற இளக்காரமான பார்வையையே இருந்தது. அதனால்தான் சமஸின் 13 கட்டுரைகளைக் கவனமாய் படித்த எனக்கு வியப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. இப்படித் தமிழகத்தில் ஊடகத் துறையானது சிந்தனைத்தளத்தோடு தொடர்புற்றிருக்க முடியும் என்று நான் எதிர்பார்த்திருக்கவே இல்லை. அதனாலேயே சமஸ் மீதான என் வியப்புப் பன்மடங்கு ஆயிற்று.</p><p></p><a name='more'></a><b></b><p><br />அரசியல் பற்றிய மேலோட்டமான கருத்துகளையே தமிழ்த் தொலைக்காட்சி விவாதங்களிலும் பத்திரிகைகளிலும் கவனித்துவந்த நான் இந்நூலில் உள்ள ‘அரசியமும் மக்களியமும்’ கட்டுரையைப் படித்தபோது பிரமித்துப்போனேன். காரணம், அக்கட்டுரையின் தமிழ் வாக்கியம் சார்ந்து செல்லும் சுயத் தீவிரம் கொண்ட மன இயக்கமும் அனைத்துலக அரசுகளின் இயங்குபோக்கைப் பற்றிய கிரகிப்பும் ஒன்றை விஞ்சி ஒன்று போட்டியிகின்றன. அரசைப் பற்றி நான் நவமார்க்ஸியம் சார்ந்து எழுதிய பலரைப் புரிந்துகொண்டதாக நினைத்திருந்தேன். சமஸ் எழுதுகிறார்: ‘மக்களால் மக்களுக்காக மக்களைக் கொண்டு உருவான அரசின் ஆன்மாவை தனித்த உயிரினமாக்கி மக்களை ஒடுக்க ஆட்சியாளர்கள் முற்படும்போது அரசியம் பிறக்கிறது.’ இதுவரை தமிழில் இல்லாத ‘அரசியம்’ என்ற சொல் வழியே மதவாதத்தோடு ஸ்டேட்டிஸத்தை சமஸ் இணைக்கும் இடம் அற்புதம். ஹிட்லர் என்ற படிமத்தை / பாத்திரத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் பாசிஸம் வருவது தொடர்பில் ஷம்பாலா நாவலை வெளிக்கொணர்ந்திருந்த நான் அந்த நாவலை எழுதிய நேரத்தில் இந்த நூல் வாசிக்கக் கிடைக்காமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டேன். <br /><br />அண்ணாவைக் கடந்த பத்தாண்டுகளாகப் புதுமுறையில் நான் அறிந்துவருகிறேன். சமஸ், அண்ணாவின் பிரிவினைசார் கருத்துக்களுக்கு உள்ளேபோய், அரசிய இறுக்கல்வாதத்தோடு அவற்றை ஒப்பிடுவதன் மூலம், வளமான ஒரு பிராந்தியவாத ஏற்பு சார்ந்த இந்திய விளக்கத்தைத் தருகிறார். ‘பிராந்தியங்களால் ஆனது இந்தியா, அது மையமற்றது’ என்ற இடத்துக்கு மேற்கத்தியச் சிந்தனைமுறைகள் வழி நான் வந்து சேர்ந்தால், சமஸ் வெகு சல்லிசாக அவரது இயல்பான புத்திநுட்பத்தால் இதே இடத்துக்கு வேறு வழியில் வந்து சேர்கிறார். அரசமைப்பு நிர்ணய சபை விவாதத்தில் “இந்துஸ்தானி தெரியாதவர்களுக்கு இந்தியாவில் தங்க உரிமையில்லை” என்று ஆர்.வி.துலேகர் கூறியதை மேற்கோள் காட்டும் சமஸுக்கு, இங்கே அண்ணாவின் இந்தி எதிர்ப்புக்கு ஒரு வியக்கத்தக்க விளக்கம் கிடைக்கிறது. ஒரு சமத்துவச் சிந்தனை அண்ணாவிடம் கிரமமாய் வளர்ந்துவந்ததன் இறுதி முடிவுதான் இந்தி எதிர்ப்பு என்ற புது Thesis அவருக்குக் கிடைக்கிறது. அண்ணாவின் இந்தி எதிர்ப்பானது மைய அரசின் அதிகார வெறியை எதிர்ப்பதாய் புது விளக்கம் தந்து, யாரும் எதிர்பார்க்காத வகையில் காந்தியின் அதிகார வெறுப்பை அண்ணாவோடு இணைக்கிறார் சமஸ். இது சமூக விஞ்ஞான நெறியியலில் புதுப்பாய்ச்சல் என்பேன். அத்துடன், ‘சமத்துவம் என்பது அடையக் கூடியதல்ல’ என்கிற சமஸ், ‘அது கீழ்ப்படுத்தப்பட்டோரைச் சார்ந்து நிற்கும் அறம்’ என்று முடிக்கிறார்.<br /><br />இந்தச் சிறுநூலிலுள்ள ‘ஜனநாயகம் ஒரு தொடர் பயணம்’ கட்டுரை எனக்குப் பல காரணங்களால் முக்கியமானது. என்னைப் பொருத்த அளவில், இந்தியா இன்று எதிர்கொள்ளும் குடியுரிமை விவகாரம் தொடர்பிலான பல கருத்துகளுக்கு இதுவரை யாரும் சொல்லாத பதில் இந்தப் பத்துப் பக்கக் கட்டுரையில் வரிகளுக்கு இடையில் (Between the lines) இருக்கிறது. இந்த ஒரு கட்டுரையையே சமஸ் ஒரு நூலாய் விரித்தெழுதலாம். அந்த அளவுக்கு ஆழமான கட்டுரை. </p><p></p><p>இப்படி மிகப் பல முக்கியமான விஷயங்களை இந்த நூல் விளக்குகிறது. <br /><br />சமஸ் கட்டுரைகளில் ஒரு கவிதையைப் படிக்கும் அழகு இருக்கிறது. அதற்கான காரணம் இவரது படைப்பியல் அழகுடன் கூடிய சிந்தனை ஆகும். பெரியாரையும் இந்த அழகியல் பார்வை மூலம் சமஸ் அளக்கிறார். கருத்தும் அழகியலும் இணைவது, ஒருவருக்கு மன இயக்கத்தில் நுட்பம் கூடும்போதுதான். கவிதை என்பது வேறல்ல என்றே எனக்குப் படுகிறது.<br /><br />இப்படி ஒரு நூலை அளித்தமைக்கு சமஸுக்கு நாம் நன்றி சொல்வோம்.<br /><br /></p>
<br /><br /><b>
தமிழவன், சமூக அறிவியலாளர், ‘திராவிடம் தமிழ் தேசம் கதையாடல்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: carlossa253@hotmail.com </b>
சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-28394952231828524782021-03-03T23:28:00.001-08:002021-03-25T03:15:28.556-07:00அறிந்துகொள்வதும் பழகுவதும்: சீனிவாச ராமாநுஜம்<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEkP5b51bEwghPS-mSlm4zed70GixeVNZDr2UEWsFn-b32fselC3ZU49Ehx3XzLJWFHFQPfb3wRtpAYDvgQJf1_-10-d9XOj-g2Pw6PoWY2NNeSCkJfcJvzX0dn9X6t6wjgsTxsgoh5HNi/s1119/APR.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; "><img alt="" border="0" width="600" data-original-height="629" data-original-width="1119" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEkP5b51bEwghPS-mSlm4zed70GixeVNZDr2UEWsFn-b32fselC3ZU49Ehx3XzLJWFHFQPfb3wRtpAYDvgQJf1_-10-d9XOj-g2Pw6PoWY2NNeSCkJfcJvzX0dn9X6t6wjgsTxsgoh5HNi/s600/APR.jpg"/></a></div>
பழகுதல் என்பது செயல்பாட்டோடு தொடர்புகொண்டது. சிந்தனையோடு மட்டுப்பட்டதல்ல. பயிலுதலோடு தொடர்புகொண்டது. அரசியலைப் பயிலச் சொல்கிறார் சமஸ். கருத்தியல்ரீதியான, மொழிரீதியான உலகத்தோடு அவர் தன்னை மட்டுப்படுத்திக்கொள்ள மறுக்கிறார். பல சமயங்களில் சித்தாந்த அரசியல் வெறுமனே கருத்தியல்ரீதியாக, மொழிரீதியாகச் சுருங்கிப்போகிறது. இதிலிருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது சமஸின் அடிப்படையாக இருக்கிறது.
<br /><br />
அரசியலை ஒரு சித்தாந்தமாக, கோட்பாடாக, கருத்தாக முன்வைத்து நம்மை நாம் வரையறுத்துக்கொள்ள முடியும். அது செயல்பாடாக மாறாமல் போகலாம். இந்தப் போதாமையைக் கணக்கில் கொண்டே இந்நூலின் தலைப்பை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில், அனுபவங்களோடு தொடர்புகொண்டது அரசியல். உடலோடு தொடர்புகொண்டது. புலன்களோடு தொடர்புகொண்டது. அரசியலைக் கருத்தாக மட்டுமல்லாமல், அதைப் பழக முற்படும்போது நம்முடைய அரசியல் நிலைப்பாடு வாழ்க்கையிலிருந்து துண்டிக்கப்பட்டதாக இல்லாமல், மனிதர்களோடும் அன்றாட வாழ்க்கையோடும் இணைந்ததாகிறது. இதனால்தான், ‘குப்பையிலிருந்து தொடங்குவோம்’ என்கிறார் சமஸ்.
</span><br /><span style="font-size: small;"><br /></span><a name='more'></a><b><br /></b><span style="font-size: small;">
எங்கு ஒழுங்கு இருக்கிறதோ அங்கு குப்பை இருக்கும் என்கிறார் ஓர் ஆய்வாளர். ஒழுங்கு என்பது மையத்தைச் சுற்றிச் செயல்படக்கூடியது. குப்பையோ ஒழுங்கின் எல்லைகளுக்கு அப்பால் தள்ளப்பட்டது. ஆக, குப்பையிலிருந்து தொடங்கும்போது அது ஒழுங்கை மறுவரையறை செய்கிறது. பத்து ஏக்கர் நிலத்தைச் சிறு காடாக மாற்றிய ‘மரம் தங்கசாமி’, காசு வாங்காமல் பள்ளிக்கூடம் நடத்தும் ‘கும்பகோணம் குருசாமி பாலசுப்பிரமணியம்’, மாங்குடி பள்ளி ஆசிரியரான ‘ஜோதிமணி வாத்தியார்’ ஆகியோரை நமக்கான முன்னுதாரணமாக முன்வைக்கிறார். இவர்கள் எவரும் மையத்தைச் சுற்றி இயங்கவில்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால், அரசியல் கற்பிப்பது, கற்றுக்கொள்வது மட்டுமே போதாது, சித்தாந்த அரசியல் மட்டுமே போதாது; நாம் அதைப் பழக வேண்டும், பயில வேண்டும் என்பதற்கு சமஸ் முக்கியத்துவம் கொடுக்கிறார். அவரது இந்த நிலைப்பாட்டில் நான் முழுமையாக உடன்படுகிறேன். வேறு விதமாகச் சொல்வதென்றால், சமஸின் அரசியலானது பண்பாட்டு அரசியல். சமஸின் இந்தப் பண்பாட்டு அரசியலே காந்தியில் தொடங்கும் அவரை அண்ணா வரை நெருக்கத்தில் கொண்டுசென்றுவிடுகிறது. அவர்களது அன்றாட வாழ்க்கை சமஸுக்கு முக்கியமாகப் படுகிறது.
<br /><br />
சமஸ் முன்வைக்கும் அரசியலின் அடிப்படையானது இருப்பதைத் தலைகீழாக்கிப் போடுவதல்ல. பண்பாட்டுரீதியாக, சமூகரீதியாக, பொருளாதாரரீதியாக, தத்துவார்த்தரீதியாக ஏற்படும் மாற்றங்களே நீடித்து நிலைக்கக்கூடியவையாக இருக்கின்றன என்று சமஸ் நம்புகிறார். ஒரு கொள்கையோ அல்லது கோட்பாடோ சமூகத்தில் நிலைத்து நிற்பதற்கு அது அன்றாட வாழ்க்கையோடு இணைக்கப்பட்டதாக இருக்க வேண்டியிருக்கிறது. அன்றாட வாழ்க்கையின் பகுதி ஆகாத கொள்கைகள், கோட்பாடுகள் வெறுமனே மொழிரீதியாகச் சுருங்கிப்போகின்றன. எடுத்துக்காட்டாக, தீண்டாமையை எடுத்துக்கொள்வோம். நாம் எல்லோரும் தீண்டாமையை எதிர்க்கிறோம். ஆனால், தீண்டாமையை அரசியல்ரீதியாக எதிர்ப்பதற்குக் கற்றுக்கொண்டிருக்கும் நாம், அதை அன்றாட வாழ்க்கையில் எப்படி எதிர்ப்பது என்று கேட்டுக்கொள்வதில்லை. அன்றாட வாழ்கையில் அது எப்படியெல்லாம் அதை வெளிப்படுத்திக்கொள்கிறது என்று உள்வாங்கிக்கொள்வதில்லை. அன்றாட வாழ்க்கையில் எதிர்க்கத் தொடங்கினால்தான் நாம் அன்றாட வாழ்க்கையில் எப்படிப்பட்ட எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வோம்; நம்முடைய பெற்றோர்களின் நடத்தைகளை, உடன் பிறந்தவர்களின் நடத்தைகளை, நம்முடைய நடத்தைகளை நாம் விமர்சனபூர்வமாக எதிர்கொள்ளத் தொடங்குவோம். அன்றாட வாழ்க்கையின் பகுதியாகவே நம்முடைய உடல் வெளிப்படுகிறது. நம்முடைய புலன்களும் அன்றாடத்தன்மை சார்ந்தே வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆக, நம்முடைய அரசியல் நம் உடலின் பகுதியாக, நம்முடைய புலன்களின் பகுதியாக மாற வேண்டியுள்ளது. இதைப் பண்பாட்டுரீதியாக மட்டுமே சாத்தியப்படுத்த முடியும். நிலைத்திருக்கும் சித்தாந்தங்களும் பண்பாட்டுரீதியாகவே நிலைத்திருக்கின்றன. இதனால்தான், ‘மனிதர்களால் உருவாக்கப்பட்ட எதுவும் மனிதர்களால் மாற்றக்கூடியதும்தான்’ என்கிறார் சமஸ்.
<br /><br />
இந்நூலில் காந்தி, அண்ணா இருவரையும் சமஸ் இணைக்கும் புள்ளி மிக முக்கியமானது. ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்ற அண்ணாவின் நிலைப்பாட்டையும் சமஸ் இந்த அன்றாடத்தன்மையிலிருந்தே அணுகுகிறார். எடுத்துக்காட்டாக, திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிட்டதை சித்தாந்தரீதியாக, அரசியல்ரீதியாகப் பலரும் விமர்சிக்கும்போது, சமஸ் அதை சாதகமான ஒன்றாகப் பார்க்கிறார். அதாவது, திராவிட நாடு எப்படி இருக்க வேண்டும் என்று அண்ணா கண்ட கனவுகளை இந்தியா முழுவதற்கும் விரிவுபடுத்தியதாக வாசிக்கிறார். இது, பொருள்கோளியல்ரீதியாக மிக முக்கியமான வாசிப்பு. அண்ணாவின் முடிவு எவ்வாறு நடைமுறைத் தேவைகளை, நிர்ப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டிருந்ததோ அதற்கு நிகராக சமஸும் நடைமுறைத் தளத்திலிருந்தே அதை அணுகுகிறார். ஒற்றையதிகார தேசிய அரசு முரட்டுத்தனமாகத் தலைவிரித்து ஆடும் இன்றைய சூழலில் இந்தியா முழுவதற்குமாக அண்ணாவை முன்னிறுத்த முற்படுவது மிக அவசியமான அரசியல் நிலைப்பாடாகிறது. இதுபோலவே காந்தியின் சம்பாரண் போராட்டத்தையும் சமஸ் வாசிக்கிறார். இந்தப் போராட்டமும் நடைமுறைத் தேவைகளுக்கும் நிர்ப்பந்தங்களுக்கும் முகங்கொடுத்த போராட்டமாகும். இந்தப் போராட்டத்தின் ஊடாக உருவான காந்தியையே இந்தியா தழுவிக்கொண்டது.
<br /><br />
சமஸின் எழுத்துகள் ஊடாக வெளிப்படும் சமஸை நாம் எவ்வாறு உள்வாங்கிக்கொள்ளப்போகிறோம் என்பதே எனக்கு முக்கியமாகப் படுகிறது. கருத்துகளை, கோட்பாடுகளை வாழ்க்கையாக மாற்ற வேண்டியுள்ளது. இந்தச் செயல்பாடு ‘பழகுத’லோடு தொடர்புகொண்டது. கோட்பாட்டுரீதியான அரசியலுக்கும் நடைமுறைரீதியான வாழ்க்கைக்கும் இடையேயான உறவை நமக்கு இந்தப் புத்தகம் புலப்படுத்துகிறது. இந்தத் தளத்தில் இது மிக முக்கியமான ஒரு புத்தகம். இந்தப் புத்தகத்தோடு உரையாடுவது நமக்குப் பல புரிதல்களையும் திறப்புகளையும் கொடுக்கும்.
<br /><br /><b>
சீனிவாச ராமாநுஜம், சமூக அறிவியலாளர், ‘இந்து மதம்: ஒரு விசாரணை’, ‘சந்நியாசமும் தீண்டாமையும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், ‘மண்டோ கதைகள்’, டி.ஆர்.நாகராஜின் ‘தீப்பற்றிய பாதங்கள்’, கோபால் குரு - சுந்தர் சருக்கையின் ‘விரிசல் கண்ணாடி’ உள்ளிட்ட நூல்களின் மொழிபெயர்ப்பாளர், தொடர்புக்கு: manuvibu.ram@gmail.com</b>
சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-22376388371535230882020-12-13T07:09:00.001-08:002020-12-13T19:43:07.722-08:00தமிழகத்தில் பாஜகவின் முதன்மைக் குறி யார்?<span style="font-size: small;"><br /></span><div style="text-align: center;"><table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container"><tbody><tr><td class="tr-caption" style="text-align: center;"><span style="font-size: small;"><br /></span></td></tr></tbody></table><span style="font-size: small;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCfoKr_gwUKTTdpmkILGUzAv3qKDhOYW4f41mryrFb_X7u2jkkqKiEOq2d6p-2P1GcXVbS_P3tGozZ4wpXXVdVlc9KZIuF51i8NkPsK855nMdDh2QsTIcppYxx5ehmgurzctNhWE9NCS5E/s826/bjp.jpg.png"><img border="0" data-original-height="474" data-original-width="826" height="230" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCfoKr_gwUKTTdpmkILGUzAv3qKDhOYW4f41mryrFb_X7u2jkkqKiEOq2d6p-2P1GcXVbS_P3tGozZ4wpXXVdVlc9KZIuF51i8NkPsK855nMdDh2QsTIcppYxx5ehmgurzctNhWE9NCS5E/w400-h230/bjp.jpg.png" width="400" /></a></span></div><span style="font-size: small;"><br />இது பலருக்கு ஆச்சரியம் தரலாம். அதாவது, அதிமுக மீது திமுக தலைவர் கருணாநிதி கொண்டிருந்த அபிமானம். கட்சிக்குத் தடை விதிக்கப்படலாம்; அமைப்பே முடக்கப்படலாம் என்கிற சூழலை வரலாற்றில் மூன்று சந்தர்ப்பங்களில் திமுக எதிர்கொண்டிருக்கிறது. நெருக்கடிக் காலகட்டத்தில் இப்படியொரு பேச்சு இருந்தபோது, கட்சியின் முக்கியத் தலைவர்கள் யாவரும் சிறையில் தள்ளப்படலாம் என்ற வதந்தியும் உலவியது. சரி, அப்படி ஏதேனும் நேர்ந்தால் என்ன செய்வது? அமைப்பின் அதே பெயரில் தலைமறைவு அரசியலில் ஈடுபடுவதா அல்லது புதிய பெயரில் ஒரு அமைப்பைக் கட்டுவதா; யாரெல்லாம் அதை நிர்வகிப்பது? இப்படிப் பல எண்ணங்கள். <br /><br />அன்றாடம் பொழுது சாய்ந்தால் மெரினா கடற்கரையில், நெருக்கமான கட்சித் தோழர்களுடன் அமர்ந்து விவாதிக்கும் வழக்கம் அப்போது கருணாநிதிக்கு இருந்தது. அன்றைக்கு நெடுநேரம் அமைதியாக இருந்தவர் சொன்னார், “வாழ்வோ சாவோ திமுகவோடுதான். திமுக இல்லாவிட்டால் என்னவாகும் என்ற கேள்விக்கு எனக்கு ஒரே ஒரு ஆறுதல்தான் இருக்கிறது. அதிமுகதான் அது. அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுக முடக்கப்பட்டாலும், அண்ணாவின் பெயரில் உருவாக்கப்பட்ட அதிமுக நம்மைக் கொஞ்சமேனும் பிரதிபலிக்கும். நிச்சயமாக தேசியக் கட்சிகளைப் போல அதிமுகவினர் தமிழ்நாட்டுக்கு அந்நியமாகச் செயல்பட மாட்டார்கள்!”<br /><br />அதிமுகவின் தலைமைப் பதவியை அலங்கரித்த எம்ஜிஆர், ஜெயலலிதா எந்தச் சந்தர்ப்பத்திலும் திமுகவைப் பற்றி இப்படிக் கூறவில்லை என்றாலும், திமுக அல்லது அதிமுக என்ற இருமுனை அரசியலைத் தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டாக நிலைநாட்டியதில் இரு தரப்புமே உறுதியாக இருந்தார்கள் என்று சொல்ல முடியும். அரசியல் களத்தில் பரம வைரிகளாகச் செயல்பட்டுவந்த திமுகவும் அதிமுகவும் இன்னொரு தரப்பின் மீது கொண்டிருந்த இந்தப் பற்றுறுதியை எப்படிப் பார்ப்பது? </span><br /><span style="font-size: small;"><br /></span><a name='more'></a><b><br /></b><span style="font-size: small;">உலகம் முழுக்கவுமே தேர்தல் அரசியல் ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்திலும் இரு கட்சிகளின் ஆட்சிமுறையை ஒத்தே செயல்படுவதாக இருப்பதை சமீபத்தில் தமிழ்நாட்டோடு ஒப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தார் பேராசிரியர் இராம.சீனுவாசன். பிரெஞ்சு சமூகவியலாளர் மொரீஸ் ட்யூவர்ஜியின் ‘இருமுனைப் போட்டிக் கருத்தாக்கம்’ தமிழ்நாட்டின் திராவிடக் கட்சிகளோடு ரொம்பவே இணைந்து போகிறது என்று அவர் சொன்னார். திமுக – அதிமுக தலைவர்கள் களத்திலிருந்து ட்யூவர்ஜியின் தத்துவத்தை இயல்பாகப் பெற்றிருந்தார்கள் என்று சொல்லலாம். ‘பிரதானப் போட்டி தங்களுக்கு இடையேதான்; மூன்றாவது சக்தியை இடையே அனுமதிப்பது இல்லை’ என்கிற வியூகத்தினூடாக தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் கையாண்டுவந்த இன்னொரு உத்தியே அரசியல் களத்தில் புதிதாகக் கிளம்பும் கதையாடலைத் தன்வயப்படுத்துவதும், ஒரே திராவிடக் கதையாடலின் இரு தரப்புப் போட்டியாளர்களாக உச்சஸ்தாயில் தங்கள் குரல்களை முழங்குவதின் வழி சமூகத்தின் பேசுபொருளைத் தம் வசமே தக்கவைத்திருப்பதும் ஆகும். <br /><br />தமிழ்நாட்டில் இதனால்தான் ‘கழகங்கள் இல்லாத தமிழகம்’ என்று ஒருசேர இரு கட்சிகளையும் இல்லாமலாக்கும் கனவைப் பல கட்சிகளுக்கும் கொண்டிருக்கின்றன. திராவிடக் கட்சிகளின் அரை நூற்றாண்டு ஆட்சிக்குப் பின் வந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் இது பகிரங்கமாகவே வெளிப்பட்டது. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் முன்னிற்க தேமுதிக, விசிக, மதிமுகவை உள்ளடக்கி அமைக்கப்பட்ட ‘மக்கள் நலக் கூட்டணி’யும், யாருடனும் கூட்டணி சேராமல் மாநிலம் எங்கும் தனித்துக் களம் இறங்கிய பாமகவும் திமுக - அதிமுக இரண்டுக்கும் எதிராகக் கடும் பிரச்சாரத்தை முன்னெடுத்தன. வழக்கம்போல மூன்றாவது, நான்காவது அணிகளைப் பொருட்படுத்தாமல் போட்டியைத் தங்களுக்குள் தீர்மானித்துக்கொண்ட திமுகவும் அதிமுகவும் இந்தத் தேர்தலிலும் வெற்றியைத் தங்களுக்குள் மட்டும் பகிர்ந்துகொண்டன. ஆனால், இதுவரையிலான ஏனைய யுத்தங்களிலிருந்து இன்று பாஜக முன்னெடுக்கும் யுத்தமானது மாறுபடுகிறது. ஏனைய கட்சிகளைப் போல தேர்தல் களத்தை அல்லாமல் கலாச்சாரக் களத்தைப் பிரதான இலக்காகக் கொண்டு அது முன்னோக்கி நகர்கிறது. ஏனையோரைப் போல, திமுக-அதிமுக இரண்டுக் கட்சிகளையும் சம தொலைவில் தூர வீசிவிட்டு, யதார்த்த சாத்தியமற்ற ‘முதலிடம்’ நோக்கிப் பயணிக்காமல், யதார்த்த சாத்தியமுள்ள ‘இரண்டாமிடம்’ நோக்கி பாஜக பயணிக்கிறது. இது திமுக-அதிமுக இரு கட்சிகளுக்குமே ஆபத்து; அதிலும் முதன்மையாக அதிமுகவுக்கே ஆபத்து.<br /><br />அடிக்கடி நான் நண்பர்களிடம் சொல்வதுண்டு, ‘அதிமுக என்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமல்ல; அது அனைத்திந்திய அதிருப்தி திமுகவும்கூட. (ADMK is not only All India Anna DMK. It’s also All India Anti DMK). அதிமுகவின் பெரிய பலம் இதுதான். யாரெல்லாம் திமுகவையும் திராவிட இயக்கத்தையும் வெறுக்கிறார்களோ அவர்களெல்லாம் அதிமுகவுக்குப் பக்க பலமாக நிற்பார்கள். அவர்களுடைய நோக்கம் அதிமுக வெல்வது என்பதைக் காட்டிலும், திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். ஆகையால், திமுகவைத் தோற்கடிக்கும் முதன்மை இடத்தில் அதிமுக இருக்கும் வரைதான் அதற்கு செல்வாக்கு.<br /><br />தமிழகத்தின் கள அரசியல் வரலாற்றை அறிந்தவர்களுக்கு ஒன்று தெரியும், எம்ஜிஆர் பிரிந்தபோது ஏற்பட்ட விரிசலால் திமுகவுக்கு ஏற்பட்ட சேதத்தைக் காட்டிலும், காங்கிரஸுக்குக் கரைசலால் ஏற்பட்ட சேதம் அதிகம். திமுக ஆட்சியைக் கைபற்றிய 1967 தேர்தலில்கூட தனித்து நின்றே திமுக கூட்டணியைக் காட்டிலும் சுமார் 10% ஓட்டுகளை மட்டுமே குறைத்து வாங்கியிருந்த காங்கிரஸானது, அதிமுக உருவான பிறகு நடந்த 1977 தேர்தலில் கூட்டணி அமைத்தும் தன்னுடைய முந்தைய தேர்தல் ஓட்டு வங்கியில் சரிபாதியை இழந்திருந்தது. அதாவது, கட்சிக்கு அப்பாற்பட்டு திமுகவுக்கு எதிராக காங்கிரஸுக்கு வாக்களித்துவந்தவர்களில் பெரும்பான்மையினர் அதிமுக நோக்கி நகர்ந்துவிட்டார்கள். பாஜக இப்போது அந்த இடத்தையே குறிவைக்கிறது. அமித் ஷாவின் சமீபத்திய வருகையின்போது, ‘தமிழ்நாட்டில் திமுக–பாஜக இடையேதான் இனி யுத்தம்’ என்று பாஜக பேசலானது வெளிப்படையான ஒரு பிரகடனம். <br /><br />ஏனைய கட்சிகளைப் போல மேலோட்டமாக திமுகவையும் அதிமுகவையும் சம தொலைவில் வைத்துப் பேசாமல், சித்தாந்தரீதியாக இன்றுள்ள தமிழ்நாட்டின் இயல்பான கட்சியாக திமுகவை பாஜக அங்கீகரிக்கிறது. திமுகவே தன்னுடைய முதன்மை எதிரி என்று வரையறுப்பதன் மூலம் அதற்கு எதிரான கதையாடலை உருவாக்குகிறது. ஆனால், திமுகவுக்கு எதிரான இடத்தில் இன்று அமர்திருந்திருக்கும் அதிமுக, நேற்று அமர்ந்திருந்த காங்கிரஸ் கட்சியோடு, நாளை அங்கு அமரத் துடிக்கும் பாஜகவை ஒப்புமைப்படுத்த முடியாது.<br /><br />ஜனநாயக அரசியலுக்குள் தமிழ்நாடு காலடி எடுத்துவைத்த இந்த நூறாண்டுகளில், திராவிட இயக்கத்துக்கு எதிரான முழுமையான கதையாடலோடு பாஜக மட்டுமே வருகிறது. ராஜாஜி தொடங்கி பக்தவத்சலம் வரை எவர் ஒருவரின் அரசியலையும் பாஜக இன்று முன்னெடுக்கும் அரசியலோடு ஒப்பிட முடியாது. அதிமுக தோற்றத்துக்குப் பின் இந்த விளையாட்டு மேலும் திராவிட இயக்கத்துக்கு அனுகூலம் ஆனது. பொதுவெளியில் திமுகவின் எதிர்க் குரல்களுக்குக் காது கொடுக்கும் அதிமுக, எப்போது பொதுவெளியில் திமுகவின் குரல் செல்வாக்கு பெறுகிறதோ அப்போது அதனைத் தானும் பிரதிபலித்து தன்னுடையதாக்கிக்கொள்ளும். நாட்டிலேயே முதல்முறையாக மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் 7.5% ஒதுக்கீடு சமீபத்திய உதாரணம்.<br /><br />முக்கியமான விஷயம் என்னவென்றால், எவ்வளவோ குற்றச்சாட்டுகளை திமுக–அதிமுக மீது முன்வைக்கலாம் என்றாலும், இரு கட்சிகளும் இன்று பேசும் அரசியல் பெருமளவில் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு பிணைந்தது என்பதாகும். சமீபத்திய புயலின்போது தமிழ்நாட்டில் போட்டி போட்டுக்கொண்டு முதல்வர் பழனிசாமியும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் நிவாரணப் பணிகளுக்குச் சென்றதையும், தெலங்கானாவில் வெள்ளப் பாதிப்புகளைத் தாண்டி, ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் போன்ற ஒரு உள்ளாட்சித் தேர்தலில்கூட ‘இந்து–முஸ்லிம் பாகுபாடு அரசியல்’ செல்வாக்கு செலுத்தியதையும் ஒப்பிட்டால் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான வேறுபாட்டை விளங்கிக்கொள்ளலாம். <br /><br />ஜெயலலிதாவுக்குப் பிறகு, அதிமுகவை இன்னமும் பிணைத்திருப்பது ஆட்சியதிகாரம் என்பதை நன்றாகவே பாஜக உணர்ந்திருக்கிறது. முந்தைய 2016 தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளில் கிட்டத்தட்ட சரிபாதியைக் கூட்டணிக் கட்சிகளுக்கு வரவிருக்கும் 2021 தேர்தலில் அதிமுக தந்துவிடும் சூழல் உருவாகியிருக்கும் நிலையில், தேர்தலுக்குப் பின் அதிமுக நிச்சயம் இன்றைய பலத்தோடு நிற்க முடியாது; அப்போது அதிமுகவின் இடம் தனதாகும் என்று பாஜக இயங்குகிறது. அதிமுகவின் அமைப்பு பலம், அதன் இயங்குமுறை, அரசியல் கணக்குகள் இவற்றை எல்லாம் கணக்கிட்டால் பாஜகவின் வியூகம் அவ்வளவு எளிதான சமாச்சாரம் கிடையாது என்பது எவருக்கும் புரியும். ஆனால், அரசியல் கதையாடலில் திமுகவின் எதிர் இடத்தில் பாஜக தன்னைப் பொருத்திக்கொள்ள முடியும்.<br /><br />அரசியலில் கதையாடலும், பிரதான பேசுபொருளை யார் தீர்மானிக்கிறோம் என்பதும் முக்கியம். பிரதான எதிரியைத் தீர்மானிப்பது ஒரு வகையில், தன்னைத் தீர்மானிப்பதும் ஆகும். அதனால்தான் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் முழுமையாக திமுக–அதிமுக யுத்தமாகவே தமிழ்நாட்டின் அரசியல் நீடிக்க அவ்வளவு உரக்கப் பேசி மேடையை முழுமையாக தங்களுடையதாக்கி இருந்தார்கள். இன்று பழனிசாமி தன் ஆட்சிக்காகக் கொடுக்கிற பெரிய விலை, அதிமுகவின் குரல். வரவிருக்கும் தேர்தலில் ஆகப் பெரும் இலக்கு பழனிசாமியின் அதிமுகதான். வெற்றி-தோல்விகள் சுழல்பவை. கதையாடல் அப்படி அல்ல. மேடையை அதிமுக தொடர்ந்து தக்க வைக்குமா என்பதே அதன் முன்னிற்கும் பெரும் சவால்!<br /><b><br />- ‘இந்து தமிழ்’ டிசம்பர், 2020</b><br /><br /><br /><span><!--more--></span></span><span><!--more--></span>சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-35951913774742899982020-09-19T19:48:00.001-07:002020-09-19T20:19:48.246-07:00 இந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமை<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIzkHlwRwywizgq6yIk9iIU9MLlYTER10ptYGB4WvqfMh8Oj4NShdww9AJLhPG7VawM-Ju9y0I_alhGHK0i0HSkdRUBvhO27FA_L0a-WFBBTht9kTxaWZsiT4TdalSi6QdrlRfQtPHrc5C/s2048/citizenship.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1152" data-original-width="2048" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIzkHlwRwywizgq6yIk9iIU9MLlYTER10ptYGB4WvqfMh8Oj4NShdww9AJLhPG7VawM-Ju9y0I_alhGHK0i0HSkdRUBvhO27FA_L0a-WFBBTht9kTxaWZsiT4TdalSi6QdrlRfQtPHrc5C/w640-h360/citizenship.jpg" width="640" /></a></div><p><br />அன்புக்குரிய கேளிர், வணக்கம்!<br /><br />உலகின் பழமையான விவாதங்களில் ஒன்று இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்தில் மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. ‘நகரமா, கிராமமா; எது நம் நீட்டித்த நிம்மதியான வாழ்வுக்கு உகந்தது?’ லண்டன், நியூயார்க், மாஸ்கோ, சாவ்பாவ்லோ என்று மனித குலம் உருவாக்கிய கனவுப் பெருநகரங்கள் பலவும் கரோனா தொற்றுக்கு அதிகம் இலக்கானதும், பெருநகரங்களை ஒப்பிட நெரிசலும் நெருக்கடியும் அற்ற கிராமங்களும், சிறுநகரங்களும் பாதுகாப்பாக இருப்பதும் இந்த விவாதத்துக்குக் கூடுதல் உத்வேகம் தந்திருக்கிறது. உலகின் பல நாடுகளில் நகரங்களில் வாழ்வோர் இன்று அங்கிருந்து வெளியேற இருப்பதாகச் சொல்கின்றனர்; குறைந்தபட்சம் நகரின் மையத்திலிருந்து புறநகருக்கேனும் சென்றிட வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். அதேசமயம், பெருநகரங்களிலிருந்து வெளியேறியோர் மீண்டும் பிழைப்புக்காக அதே பெருநகரங்களை நோக்கித் திரும்புகின்றனர்.<br /><br />இந்தியாவில் இந்த விவாதம் இன்னும் கூடுதல் ஆழத்துக்குச் செல்கிறது. டெல்லி, மும்பை, அகமதாபாத், பெங்களூரு, சென்னை என்று வாய்ப்புள்ள பெருநகரங்களை நோக்கிப் புலம்பெயரும் பல கோடிப் பேர் இடையில் தங்கள் மாநில எல்லையைக் கடக்க வேண்டியிருக்கிறது. ஊரடங்கின்போது வெளிமாநிலப் பெருநகரங்களிலிருந்து திரும்பிய பலர் தங்கள் மாநில எல்லையைத் தொட்டதும் மண்ணில் விழுந்து வணங்கியதும், மண்ணை அள்ளி முகத்தில் பூசிக்கொண்டதும், தேம்பி அழுததுமான உணர்ச்சிப் பெருக்குக் காட்சிகள் சாதாரணமானவை அல்ல; உள்ளபடி நகரம் – கிராமம் விவாதத்தைத் தாண்டி, இந்தியாவில் மாநிலம் என்னவாக அர்த்தப்படுகிறது என்ற ஆழமான கேள்வி நோக்கி நம்மைத் தள்ளும் வெளிப்பாடுகள் அவை.<br /> </p><p>இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நாட்டின் கிழக்கு, மேற்கு எல்லைகளை ஒட்டி பல லட்சம் பேர் அகதிகளாக நடந்ததோடு, இந்தக் கொள்ளைநோய் ஊரடங்குக் காலகட்டத்தில் தத்தமது மாநில எல்லைகளை நோக்கிப் பல லட்சம் பேர் நடந்ததைப் பலர் இணைத்துப் பேசியது சரியான ஓர் உருவகம்தான். புலம்பெயர்வை நாம் தொழிலாளர்கள் பிரச்சினையாக அல்லது பொருளாதாரப் பிரச்சினையாக விவாதித்துக் கடந்துவிட முனைகிறோம். அது சரியல்ல. இந்தியா எதிர்கொள்ளும் பெரும் சமூக – அரசியல் விவகாரமும் இது. தன்னுடைய மொத்த நிர்வாகப் பார்வையையும் இந்தியா மறுவரையறைக்கு உள்ளாக்கிக்கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது.<br /></p><p></p><p style="text-align: left;"><span></span></p><a name='more'></a><b><br /></b><p></p><p><b>புலம்பெயர்வின் சவால்கள்</b><br /><br />முறையான ஆய்வுகள் இல்லை, கணக்கெடுப்புகள் இல்லை என்றாலும், இன்றைக்கு இந்தியாவில் உள்நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஐம்பது கோடியைத் தொடலாம் என்பதைச் சமீபத்திய போக்குகள் சுட்டுகின்றன. அதாவது, நம் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் எந்த ஊரில் இன்று பணியாற்றுகிறார்களோ அந்த ஊரில் பிறக்காதவர்கள் அல்லது பத்தாண்டுகளுக்கு முன்புவரைகூட அந்த ஊருக்கு வந்திடாதவர்கள். இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயர்ந்திருப்பவர்கள்; ஏனையோர் சொந்த மாநிலத்துக்குள்ளேயே புலம்பெயர்ந்திருப்பவர்கள்.<br /><br />பொதுவாகவே, புலம்பெயர்வானது ஒரு சமூகத்தின் இயங்கியலில் பெரும் மாற்றங்களை உண்டாக்கக் கூடியது. அதிலும், பிரத்யேகக் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் மாநிலங்களைக் கொண்ட, இந்தியா போன்ற அதீத மக்கள்தொகையும் நிலநெருக்கடியும் கொண்ட ஒரு நாட்டில், வரைமுறை இல்லாமல் மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயர்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதானது இரட்டைச் சவால். வெளியிலிருந்து வருவோர் அடிப்படை உரிமைகள் ஏதுமின்றி இங்கே சுரண்டப்படுவதும், பாதுகாப்பற்ற அடிமைகளாக அவர்கள் நடத்தப்படுவதும் தடுக்கப்பட்டு, அவர்களும் எல்லா வகையிலும் சமமானவர்களாக, புதிய சமூகத்தின் அதிகாரத்தில் பங்கேற்கும் கண்ணியச் சூழலை உருவாக்குவது முதலாவது சவால். மாறாக, மலிவுக் கூலியில் விதிக்கப்பட்ட சூழலை எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்ளும் புலம்பெயர்வோர் மறைமுகமாக ஏற்கெனவே கண்ணியச் சூழலுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் உள்ளூர் அடித்தட்டுச் சமூகத்தினருக்குப் போட்டியாகிவிடுகிறார்கள், அவர்களுடைய பேர சக்தியைப் பின்னுக்கு இழுக்கிறார்கள், காலப்போக்கில் வந்த இடத்திலேயே அவர்கள் தங்கும்போது உள்ளூரின் சமூக அரசியல் இயங்கியலை முற்றிலுமாகக் குலைத்துவிடுகிறார்கள் எனும் உள்ளூராரின் அச்சங்களுக்கு முகம் கொடுத்து, அவர்களுடைய அக்கறைகளையும் பாதுகாப்பதன் வழி சமூகத்தின் இணக்கச் சூழலைப் பராமரிப்பது இரண்டாவது சவால். முக்கியமாக, சமூகப் பிளவை நாம் தடுத்தாக வேண்டும்.<br /><b><br />புலம்பெயர்வா, படையெடுப்பா?</b><br /><br />இந்தியாவில் இந்தச் சமூகப் பிளவு ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டது. புலம்பெயர்வோர் குடியேற்றத்தால் ஏற்கெனவே அங்கு நிலைத்திருக்கும் உள்ளூரார் மூழ்கடிக்கப்படுவதும், சமூக அரசியல் களம் மாறுவதும் எத்தகைய சமூகப் பிளவை உண்டாக்கும் என்பதையே வட கிழக்கு மாநிலங்களில் இன்று காண்கிறோம். மிக முக்கியமானதும் நாம் கவனிக்கத் தவறுவதுமான போக்கு, புலம்பெயர்வால் பெரும் பொருளாதார முன்னேற்றத்தை அடைந்த மாநிலங்களிலும் புலம்பெயர்வுக்கு எதிரான உணர்வு பெருகுவதாகும். குஜராத்தின் உற்பத்தி மற்றும் சேவைத் தொழில் துறைகளில் 80% வேலைவாய்ப்புகள் குஜராத்தைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்; அதில் 25% தொழிலாளர்கள் நிறுவனம் அமைந்துள்ள சுற்றுப்புறத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்போவதாக முதல்வர் விஜய் ரூபானி அறிவிக்க இதுவே வழிவகுத்தது. மஹாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், தமிழகம் என்று நாட்டின் முதன்மையான தொழில் மாநிலங்கள் மட்டும் அல்ல; அதிகம் வெளிமாநிலங்களுக்குப் புலம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களைக் கொண்ட ஏழை மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசமும்கூட இதே மாதிரியான அறிவிப்பை வெளியிட்டது. மிக முக்கியமான விஷயம், மாநிலக் கட்சிகள் மட்டும் அல்ல; தேசியக் கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும்கூட இன்று மாநிலங்களில் இந்தக் குரலிலேயே பேச வேண்டியிருக்கிறது.<br /><br />நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கல்வி - வேலைகளுக்கான கடும் போட்டிச் சூழல் வெளியூரார் மீதான எதிர்ப்புணர்வை அதிகரித்துவரும் சூழலில், மேற்கண்ட அறிவிப்புகள் யாவும் சட்ட முயற்சிகளாக மாறாமல் அறிவிப்பாகவே நீடிப்பதற்கான ஒரே காரணம், நம்முடைய அரசமைப்புச் சட்டம் இப்படியான சட்டங்களுக்கு எதிராக இருப்பதே ஆகும். “மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் சார்ந்து நாட்டின் எந்தவொரு குடிநபருக்கும் எதிராக அரசு பாகுபாடு காட்டக் கூடாது” என்கிறது அது. ஆனால், பெரும்பான்மை உள்ளூர் சமூகங்கள் வரைமுறையற்ற புலம்பெயர்வை ஒரு படையெடுப்பாகவே பார்க்கின்றன. குறிப்பாக, இந்தி பேசாத மாநிலங்கள். இது புறந்தள்ள முடியாதது. ஏனென்றால், மாநிலம் தாண்டிய புலம்பெயர்வில் மூன்றில் இரு பங்கினர் இந்தி மாநிலங்களிலிருந்து வருகிறார்கள்; ஒட்டுமொத்த எண்ணிக்கை அடிப்படையிலும் அரசியல் அடிப்படையிலும் பெரும்பான்மைப் பலத்தை இந்தி மாநிலங்கள் கொண்டிருப்பதால், சிறுபான்மை இந்தி பேசாத மாநிலங்கள் அவர்களை அச்சுறுத்தலாகப் பார்ப்பதற்கான நியாயங்களை முற்றிலுமாக நிராகரித்துவிட முடியாது. ஏனென்றால், ‘இந்து – இந்தி – இந்துஸ்தான்’ செயல்திட்டத்தை அந்தரங்க ஆசையாகக் கொண்டிருக்கும் தேசிய அரசுகளையே நாம் எதிர்கொண்டுவருகிறோம்.<br /><b><br />மூன்றடுக்குக் குடியுரிமை</b><br /><br />எப்படியும் மாநிலங்களின் பிரத்யேகமான நிறங்களை அச்சுறுத்தலாகவும், குடியேற்றத்தைக் கலப்புச் சூழலுக்கான வாய்ப்பாகவும், ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே நிறத்தைத் தருவதை லட்சியமாகவும் கருதும் சக்திகளிடமிருந்து உள்ளூர் சமூகங்களைப் பாதுகாப்பது அவசியமாகிறது. அதற்கு, உள்ளூர் சமூகங்களுக்கான முன்னுரிமையை, வெளியூர் சமூகங்கள் மீதான பாகுபாட்டிலிருந்து பிரித்துப் பார்க்கும் ஒரு அரசமைப்பைச் சிந்திக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இருக்கிறது.<br /><br />உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘இனிவரும் காலங்களில் உத்தர பிரதேச மாநிலத்தவரை வேலைக்கு அமர்த்திக்கொள்ள விரும்பும் வெளிமாநில நிறுவனங்கள் உத்தர பிரதேச அரசின் அனுமதியைப் பெற வேண்டும்’ என்று கூறியதை இங்கே நினைவுகூரலாம். இதற்குப் பதிலடியாக, ‘மஹாராஷ்டிரத்துக்குள் வேலைக்கு வர விரும்பும் தொழிலாளர்கள் மஹாராஷ்டிர அரசின் அனுமதியையும், கூடவே என் கட்சியின் அனுமதியையும் பெற வேண்டும்’ என்று மஹாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான ராஜ் தாக்கரே கூறியதையும் நினைவுகூரலாம். வெற்று அரசியல் சவடால்கள் என்பதற்கு அப்பாற்பட்டு, இவற்றில் உள்ள அக்கறைகளைக் கொஞ்சம் பரிசீலிப்போம்.<br /><br />உத்தர பிரதேசத் தொழிலாளர்களின் உழைப்பைத் தேவையான அளவுக்குச் சுரண்டிக்கொண்டு, கரோனா ஊரடங்கு போன்ற ஓர் இக்கட்டான தருணத்தில் அவர்களை அப்படியே சொந்த மாநிலத்துக்குத் துரத்திவிடுவது மஹாராஷ்டிரம் போன்ற ஒரு தொழில் மாநிலத்துக்கு அழகா? இதை ஏன் உத்தர பிரதேச அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு வாளாவிருக்க வேண்டும்? உத்தர பிரதேசத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பேசும் ஓர் அமைப்பை அந்த மாநில அரசே உருவாக்கினால், அது தொழிலாளர்கள் உரிமைகளைப் பேசலாம்தானே? அதேபோல, மஹாராஷ்டிரத்தின் தலைநகரான மும்பை இன்று புலம்பெயர்ந்தோரால் தத்தளிக்கும் நகரம். பெருகும் மக்கள் நெரிசல், மும்பை நகரத்தை மூச்சுத்திணறலில் தள்ளியிருக்கிறது. இரண்டு கோடிப் பேரைத் தாங்கும் மும்பை இன்னும் எவ்வளவு பேரைக் கொள்ள முடியும்? வெளியிலிருந்து வரும் வகைதொகையற்ற புலம்பெயர்வை முறைப்படுத்தும் அதிகாரம் ஏதும் இல்லை என்றால், ஒரு மாநில அரசும், பெருநகர நிர்வாகமும் எப்படி பெருகும் மக்கள் நெரிசலை நிர்வகிக்க முடியும்? அப்படியென்றால் இதற்கு என்ன தீர்வு? தொழிலாளர் நலச் சட்டங்களைப் பலப்படுத்துவதும், புலம்பெயர் தொழிலாளர்களை அமைப்புக்குள் கொண்டுவருவதும் மட்டுமல்ல; புலம்பெயர்விலும் ஒரு அரசியல் குறுக்கீடு தேவைப்படுவதையே இன்றைய சூழல் சுட்டுகிறது. இந்தியா மூன்றடுக்குக் குடியுரிமைக்கு மாற வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று இதைச் சொல்லலாமா?<br /><b><br />இறையாண்மையும் புலம்பெயர்வும்</b><br /><br />மனித குல நாகரிகத்தின் ஆதார சுருதிகளில் ஒன்று புலம்பெயர்வு. எந்த ஒரு சமூகத்திலும் அதன் ஒட்டுமொத்த பன்முகத்தன்மையையும், கலாச்சாரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் புலம்பெயர்வை எதிர்க்கும் சிந்தனை பிற்போக்குத்தனமானது. அதேசமயம், நில எல்லைகள் மனித வாழ்வின் முக்கியமான அம்சங்களைத் தீர்மானிப்பதாகிவிட்ட நவீன அரசுக்குப் பிந்தையதான உலகில் புலம்பெயர்வை வரைமுறைப்படுத்துவதும் முக்கியமானதாகிறது.<br /><br />வெளிநாடுகளுக்குச் சென்று சொந்த ஊர் திரும்புவோரின் கதையிலிருந்து இந்தியா இரண்டு பாடங்களைக் கற்கலாம். புலம்பெயர்ந்த இடத்திலிருந்து சொந்த ஊருக்குப் பெரும் மூலதனத்துடன் திரும்புவதன் வழி தங்களுடைய சொந்த வாழ்க்கையையும் சொந்த பிராந்தியத்தையும் அவர்கள் வளமானதாக உருமாற்றுகிறார்கள்; அதேசமயம், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட அளவிலான எண்ணிக்கையில் புலம்பெயர்ந்தோரைப் பணிக்கு அனுமதித்து, திரும்ப அவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பிவிடுவது, மாறாக அங்கேயே குடியேற விரும்புவோருக்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு படிப்படியாக நிரந்தரக் குடியுரிமை அளிப்பது என்கிற நடைமுறை வழியாகவே உள்ளூர் சூழலைப் பெரும்பான்மை நாடுகள் வெற்றிகரமாகத் தக்கவைத்திருக்கின்றன.<br /><br />பல நாடுகளின் அளவுக்கான மக்கள்தொகையை மாநிலங்களிலும், சில நாடுகளின் அளவுக்கான மக்கள்தொகையைப் பெருநகரங்களிலும் கொண்டிருக்கும் இந்தியா, மாநிலங்கள் இடையேயான புலம்பெயர்வுக்கு ஒரு முன்னுதாரண கொள்கையை உருவாக்க வேண்டும். குடியுரிமைப் பகிர்வை ஒரு கூட்டாட்சியான இந்தியா இதற்கான முக்கியமான கருவியாகக் கொள்ளலாம். ஏனென்றால், ஒரு ஜனநாயகத்தின் இறையாண்மையானது ஓரிடத்தில் குவிக்கப்பட்டதல்ல. கூட்டாட்சியில் இறையாண்மைப் பகிர்வு குடியுரிமையிலும் பிரதிபலிக்க வேண்டும்.</p><p><br />உலகின் மூத்த கூட்டாட்சியான அமெரிக்கா இரண்டடுக்குக் குடியுரிமையைக் கொண்டிருக்கிறது. நியூயார்க்கில் பிறக்கும் ஒரு குழந்தை அந்த மாநிலத்தின் குடிநபர்; கூடவே, அமெரிக்கக் குடிநபர். சுவிட்சர்லாந்து தன்னுடைய மக்களுக்கு மூன்றடுக்குக் குடியுரிமையைத் தருகிறது. ஜுரிச்சில் பிறக்கும் ஒரு குழந்தை அந்த நகராட்சியின் குடியுரிமை, அது சார்ந்த மாநிலத்தின் குடியுரிமை, சுவிஸ் கூட்டாட்சியின் குடியுரிமை மூன்றையும் பெறுகிறது. நாட்டின் குடியுரிமைக்குக் கூடுதலான இந்தக் குடியுரிமைகளின் விசேஷம் என்ன? கல்வி, வேலைவாய்ப்பு, சலுகைகள், மானியங்கள் வழங்குதலில் உள்ளூர் குடிகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தர இந்தக் குடியுரிமைகள் வழிவகுக்கின்றன. இந்தியா மேலும் மேம்பட்ட மூன்றடுக்குக் குடியுரிமையைச் சிந்திக்க வேண்டும்.<br /><b><br />காஷ்மீர் முன்னுதாரணம்</b><br /><br />இப்போது இந்தியாவுக்கு நாம் பேசும் மூன்றடுக்குக் குடியுரிமைக்கான வேர்களை காஷ்மீரிலிருந்து ஒரு முன்னுதாரணமாக நாம் பெறலாம். இந்தியக் குடியரசோடு காஷ்மீரைக் கோக்கும் சிறப்புப் பிரிவாக இருந்த அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-ன் நீட்சியான ‘35 ஏ’ காஷ்மீரிகளுக்கு அளித்த உரிமைகளின் முக்கியமான சாராம்சம், உள்ளூர் குடிகளுக்கான சிறப்புரிமை; முக்கியமாக ஜம்மு - காஷ்மீரின் நிரந்தரக் குடிமக்களுக்கு மட்டுமான நிலவுரிமையையும் அரசு வேலைகளில் இடஒதுக்கீட்டையும் அது வழங்கியது. ஜம்மு - காஷ்மீர் இரண்டாகப் பிளக்கப்பட்டு, மாநில அந்தஸ்து நீக்கப்பட்டு, இரு ஒன்றியப் பிரதேசங்களாக்கப்பட்டுவிட்ட பிறகு, இந்தக் கொள்ளைநோய்க் காலகட்டத்தில் ஒரு புதிய நடைமுறையை அங்கு இந்திய அரசு ஏற்படுத்தியிருக்கிறது. அங்கு 15 ஆண்டுகளாக வாழ்ந்த, பணிபுரிந்த எவரும் அல்லது அங்கே ஏழாண்டுகள் படித்த எவரும் முன்பு நிரந்தரக் குடிமக்களுக்கு மட்டும் பாத்தியதைப்பட்ட நலன்களை அடையலாம் என்பதே அது. முந்தைய சிறப்புரிமையின் நீர்த்த வடிவமே இது என்றாலும், ஒரு தொடக்கமாக இதை ஏன் எல்லா மாநிலங்களுக்கானதாகவும் நாம் விஸ்தரித்துப் பார்க்கக் கூடாது?<br /><br />ஒரு இந்தியக் குடிநபர் நாட்டின் எந்த மாநிலத்துக்கும் சுதந்திரமாகச் செல்லலாம். அதேசமயம், அவர் கல்வி அல்லது வேலைவாய்ப்புக்காகப் புதிய மாநிலத்தின் நகரம் ஒன்றிலேயே வசிக்க முடிவெடுக்கையில் மாநில அரசிடமும் உள்ளூர் அரசிடமும் தன் விவரங்களைப் பதிவுசெய்திட வேண்டும். புதிதாகக் குடியேறிய நகரிலேயே ஒருவேளை நிரந்தரமாக அவர் வசிக்க முடிவெடுத்தால், அந்த மாநிலத்தில் உள்ளூராருக்கு இணையாக அந்த ஊரின் ஓட்டுரிமையையும் நிலவுரிமையையும் பெறுவதற்கு ஒரு கால இடைவெளி அங்கு தொடர்ந்து வசிப்பவராக இருக்க வேண்டும்; படிப்படியாக நகரின் நிரந்தரக் குடியுரிமையைச் சம்பந்தப்பட்ட மாநிலமும், உள்ளாட்சியும் அவருக்கு அளிக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில், இவை நீங்கலான ஏனைய எல்லா உரிமைகளும் அவர்கள் உறுதிசெய்யப்பட சம்பந்தப்பட்ட மாநில அரசும், உள்ளூர் அரசும் பொறுப்பேற்க வேண்டும். இதேபோல, ஒரே மாநிலத்துக்குள்ளான புலம்பெயர்வில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமைகளை வழங்க வேண்டும். ஒரு கல்லூரியிலோ, அலுவலகத்திலோ இடம் கோரி போட்டியில் நிற்கும் இருவரில் உள்ளூராருக்கு நூற்றுக்கு ஒரு மதிப்பெண் கூடுதலாக வழங்கும் சலுகையை ஓர் உதாரணமாக இதற்குச் சொல்லலாம். இதை ஒரு தொடக்கப்புள்ளியாகக் கொண்டு நாம் சிந்திக்கலாம். புலம்பெயர்ந்தோருக்கான பாதுகாப்பை அமைப்புரீதியாக உறுதிப்படுத்துவதற்கு இது வழிவகுக்கும். உள்ளூரியத்தை அரசியல் பிரதிநிதித்துவப்படுத்தவும் இது வழிவகுக்கும். அதிகாரப்பரவலாக்கலுக்கும் இது வழிவகுக்கும்!<br /><b><br />- சமஸ், தொடர்புக்கு: samas@hindutamil.co.in</b><br /><br /></p>சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-39387841920823698832020-09-06T23:15:00.001-07:002020-09-06T23:21:16.116-07:00இந்தித் திணிப்பு நோக்கத்தைத் தூர வீசுங்கள்… தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை இந்தியா முழுமைக்கும் விரிக்க வேண்டிய காலம் இது!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhM8tbHkkimvlkX_36dT0hfn4etbJGbE_lCSDLOA1kJyHjF2bBZu8QIK510O8hsyFP3Ni8aOr5z2UKuzJy5sGZnqaoz6OfcTWttdzPhmS2ohWh3WE93ab8vfpRgdzWsxygHuhlgPjKqniHW/s1600/anna-lee.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><br /></a></div>
<div style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-EnCJphpNs15HAA24ksAHNLWmy_0dCzjxL7b12FkWn-AvL0UyNv94Gv-GD_XDMRyWeTqOjT_NdgT_YfmVD65Doik6Fb-BzsTFeYWgxI3x12bFTPZvhfA0J_2RxWGHp5zrS9Gf0ZyKijY5/s1600/Anne_Lee+.jpg"><img border="0" data-original-height="710" data-original-width="1048" height="454" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-EnCJphpNs15HAA24ksAHNLWmy_0dCzjxL7b12FkWn-AvL0UyNv94Gv-GD_XDMRyWeTqOjT_NdgT_YfmVD65Doik6Fb-BzsTFeYWgxI3x12bFTPZvhfA0J_2RxWGHp5zrS9Gf0ZyKijY5/w670-h454/Anne_Lee+.jpg" width="670" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
நூறு வருடங்களை ஒரு கூட்டுவண்டியாக உருமாற்றி, அந்த வண்டியின் மாடுகளை ஒரு பானைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி ஓடவைக்க முடியுமா? இந்திய ஆட்சியாளர்களால் முடியும். இந்தியா முழுமைக்கும் இந்தியைப் பரப்புவதன் மூலம் இந்திய தேசியத்தைக் கட்டுறுதியானதாக்க முடியும் என்பது நூற்றாண்டு பழைய சிந்தனை. காங்கிரஸ் கைக்கு ஆட்சியதிகாரம் கொஞ்சம்போல வரத் தொடங்கிய 1938 முதலாக இந்த அபிலாஷையை டெல்லி முயன்றுகொண்டிருக்கிறது; தமிழ்நாடு எதிர்த்துக்கொண்டிருக்கிறது. இடையில் நாடு சுதந்திரம் அடைந்து, அதற்குப் பின் எழுபதாண்டுகளாக ஒரு கூட்டு வாழ்க்கையை நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்; உலக வரைபடம் எவ்வளவோ மாறிவிட்டிருக்கிறது. டெல்லியின் எண்ணங்கள் மாறவில்லை; கடந்துவந்திருக்கும் பாதையிலிருந்து எந்தப் பாடத்தையும் அவர்கள் படிக்கவும் இல்லை.<br />
<b><br /></b><b>ஏன் தமிழ்நாடு உரிய கவனம் பெறவில்லை?</b><br />
<b><br /></b>புதிய கல்விக் கொள்கை ஆர்வம் கொள்ளும் மும்மொழிக் கொள்கை - தாய்மொழி, ஆங்கிலம், கூடவே இன்னொரு மொழி - தொடர்பான விவாதங்களை ஒரு வார காலமாகக் கவனித்துவருகிறேன். ‘இந்தி வேண்டும்’ என்று பேசும் அரசியல்வாதிகள் மட்டும் அல்ல; ‘இந்தி கூடாது’ என்று பேசும் கல்வியாளர்களும்கூட ஒரு விஷயத்தை எப்படி கவனிக்கத் தவறுகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. டெல்லிக்கு மாற்றான ஒரு மொழிக் கொள்கையைக் கடந்த அரை நூற்றாண்டாக தமிழ்நாடு கைக்கொண்டுவருகிறது. அது உண்டாக்கியிருக்கும் சமூக, பொருளாதார மாற்றங்கள், தாக்கங்களுக்கு ஏன் இந்த விவாத அரங்குகள் கவனம் அளிக்க மறுக்கின்றன?<br />
<br />
தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்கள் தமிழ் - ஆங்கிலம் இரண்டையும் கற்பிக்கும்; தமிழுக்கு அடுத்து, உலக மொழியான ஆங்கிலத்துக்குத் தமிழ்நாட்டு அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என்பது திராவிடக் கட்சிகளின் முதல் முதல்வரும், திராவிட இயக்கத்தின் ராஜ்ஜியக் கனவுகளுக்கு உயிர் வடிவம் கொடுத்தவருமான அண்ணாவின் முடிவு. இந்த முடிவு எத்தகைய தொலைநோக்கிலானது என்பதை உலகின் முன்னணி நாடுகள் இன்று எத்தகைய மொழிக் கொள்கையைப் பின்பற்றுகின்றன என்கிற பார்வையினூடாகத்தான் உணர முடியும்.<br />
<b><br /></b><b>உலகம் எந்த மொழியில் படிக்கிறது?</b><br />
<br />
உலகின் பெரும்பாலான நாடுகள் தங்களுடைய குழந்தைகளுக்கு ஒரு மொழியை - பெரும்பாலும் தாய்மொழியை - கற்பிக்கும் ஒரு மொழிக் கொள்கையையே தொடக்கக் கல்வியில் பின்பற்றுகின்றன. குழந்தைகள் நடுநிலைக் கல்விக்கு மாறும்போது இரண்டாவதாக ஒரு மொழியைப் பயிலும் வாய்ப்பை வழங்குகின்றன; இந்த மொழியாகப் பெரும்பாலும் ஆங்கிலமே அமைகிறது.<br />
<br />
பிரிட்டனும் அமெரிக்காவும் ஆங்கிலத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஜெர்மன், பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகள் முறையே பிரெஞ்சு, ஜெர்மன், ஹீப்ரூ - அரபி மொழிகளுக்கு வழங்குகின்றன; சர்வதேச அளவில் எல்லாத் துறைகளிலும் ஆங்கிலத்துக்கு ஈடுகொடுக்கும் அளவுக்குத் தங்கள் மொழியை வளர்த்தெடுத்திருப்பதன் வாயிலாக இம்முடிவை அவை வெற்றிகரமானதாக்கி இருக்கின்றன. அதேசமயம், பள்ளிக்கூடம் வழியே திணிப்பு நடப்பதில்லை என்பதால், ஏனைய மொழிகளைக் கற்பது ஆர்வத்தின் அடிப்படையில் இங்கெல்லாம் நிறைய நடக்கிறது. இலக்கியமோ சமூகவியலோ படிப்பவர்கள், நாடு கடந்து வணிகத்தில் ஈடுபடுபவர்கள் சர்வ சாதாரணமாக ஐந்தாறு மொழிகள் வரை அறிந்திருக்கிறார்கள்.<br />
<br />
புதிய நூற்றாண்டுக்குள் பெரும் சவால்களுக்கு இடையே தங்களை முன்னகர்த்திக்கொள்ள வேண்டியிருந்த நாடுகள் அனைத்துமே தாய்மொழிக்கு அடுத்து ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வழக்கத்தையே கொண்டிருக்கின்றன. சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கு மொழிக் கொள்கையை ஒரு முக்கியமான கருவியாகக் கையாண்ட இரு வெற்றிகரமான ஆசிய முன்னுதாரணங்கள் என்று ஜப்பானையும் சிங்கப்பூரையும் சொல்லலாம். இதில் சிங்கப்பூரின் வெற்றி மிக வேகமானது; இந்தியாவோடு ஒப்பிட நெருக்கமானது. தாய்மொழியையும் ஆங்கிலத்தையும் சரிசமமாகப் பாவிப்பதன் வாயிலாக உலகச் சமூகங்களோடு இணைந்து பணியாற்றுவதோடு, பெரும் மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பதில் நவீன சிங்கப்பூரைச் செதுக்கிய லீ குவான் யூவின் பார்வையை அண்ணாவின் பார்வையோடு பல விதங்களில் ஒப்பிட முடியும்.<br />
<b></b><br />
<a name='more'></a><b><br /></b>
<b>சிங்கப்பூர் முன்னுதாரணம்</b><br />
<br />
இன்று உலக அளவில் விமரிசையாகப் பேசப்படும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கான முக்கியக் கருவியாக அதன் இருமொழிக் கொள்கையையே குறிப்பிட்டார் லீ. தமிழ்நாட்டின் முதல்வராக அண்ணா பொறுப்பேற்றதற்கு இரு ஆண்டுகளுக்கு முன் - 1965-ல் சிங்கப்பூர் முழுச் சுதந்திரம் அடைந்தது. பிறப்பால் ஒரு சீனர் என்றாலும், மேட்டுக்குடியான லீயின் வீட்டில் பேசப்படும் மொழியாக ஆங்கிலமே இருந்தது. ஆங்கிலப் பள்ளிக்கூடங்கள் வழி வளர்ந்தவர் என்பதோடு, பிற்பாடு பிரிட்டனில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றவர் என்பதால், சர்வதேசத்துடனான போட்டியில் ஈடுபட அன்றைக்கு மிகவும் பின்தங்கிய சமூகமாக இருந்த சிங்கப்பூரர்களுக்கு ஆங்கிலம் எவ்வளவு முக்கியம் என்பதை லீ உணர்ந்திருந்தார்.<br />
<br />
முக்கியமாக, பல கலாச்சாரச் சமூகமான சிங்கப்பூரின் எழுச்சிக்கு, அங்குள்ள ஒவ்வொரு சமூகக் குழுவும் தன்னை அந்நாட்டின் இணையான சமூகமாகக் கருதும் நிலையை உருவாக்க வேண்டியது அவசியம் என்பதை லீ புரிந்துகொண்டிருந்தார். நாட்டின் ஆட்சிமொழியைத் தேர்ந்தெடுக்கும்போது, அந்த மொழி எல்லா சமூகங்களுக்கும் இணையான தொலைவில் இருப்பதன் வாயிலாகவே இணையான போட்டியையும் வாய்ப்புகளையும் உண்டாக்க முடியும் என்று அவர் கருதினார். இந்தப் பின்னணியில்தான் தேசிய மொழி எனும் அடையாளபூர்வ அங்கீகாரத்தை அதன் பூர்வக்குடிகளின் மொழியான மலாய்க்கு அளித்தாலும், அதற்கு இணையான ஆட்சிமொழிகளாக மாண்டரீன், தமிழ், ஆங்கிலம் மூன்று மொழிகளுக்கும், நாட்டின் பொது தொடர்பு மொழியாக ஆங்கிலத்துக்கும் அளித்தது சுதந்திர சிங்கப்பூர். <br />
<br />இந்தியாவின் ஆட்சிமொழிகளாக அதன் தேசிய மொழிகள் அத்தனையையும் அறிவிக்க வேண்டும்; உலகோடு உறவாடும் மொழியாக ஆங்கிலத்தை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அண்ணா, தன்னுடைய வாதத்தில் சுட்டிக்காட்டிய மிக முக்கியமான அம்சமாக, “இந்தியாவின் ஆட்சிமொழி எல்லா சமூகங்களுக்கும் சம தொலைவு உடையதாக இருக்க வேண்டும்” என்பதையே குறிப்பிட்டார் என்பது இங்கே நினைவுகூரப்பட வேண்டியதாகும். நாம் ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கையில், ஆங்கிலத்தில் ஒரு தேர்வை நடத்துகையில், ஒரு இந்தி மாணவருக்கும் தமிழ் மாணவருக்கும் சம தொலைவில் உள்ள மொழியாக அது இருக்கும்; ஆனால், இந்தியை ஆட்சிமொழியாக்கி அதில் ஒரு தேர்வை நடத்துகையில், இந்தி மாணவருக்கு அது நெருக்கமானதாகவும் தமிழ் மாணவருக்கு அது அந்நியமானதாகவும் மாறிவிடும்; விளைவாக, சமூகங்கள் இடையே பாரபட்சம் நிலவும். இது அநியாயம் என்று கருதினார் அண்ணா. இதைத்தான் 1963 நாடாளுமன்ற விவாதத்தில், “இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி பேசும் மக்களுக்கு அதுவே தாய்மொழி, அதுவே அரசுமொழி, அதுவே பயிற்றுமொழி; கூடவே, அதுவே மத்திய அரசின் மொழி. இந்தி பேசும் மக்களுக்குத்தான் எத்தனை சலுகைகள், வாய்ப்புகள், உரிமைகள்? இந்தி பேசாத மக்களுக்கு மறுபுறம் இவை எவ்வளவு பாதிப்புகளை உண்டாக்கும்?” என்று அவர் கேட்டார்.<br />
<br />ஆங்கிலத்தை உலகைக் காணும் சாளரமாகப் பார்த்தவர் அண்ணா. ஆகையால்தான் பொது தொடர்புமொழி எனும் இடத்தில் ஆங்கிலம் இடம்பெற வேண்டும் என்று எண்ணினார்.
ஆட்சிமொழி விவாதத்தின்போது அண்ணா சுட்டிக்காட்டிய அமெரிக்க உதாரணத்தை இங்கே நினைவுகூரலாம். “அமெரிக்கா என்ற நாடு உருவானபோது அங்கே குடியேறியவர்களில் 20% பேர் மட்டுமே பிரிட்டிஷ் தீவுகளிலிருந்து சென்றவர்கள். 80% பேர் ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி என்று ஐரோப்பிய நாடுகளிலிருந்து சென்றவர்கள். இருந்தும் ஆங்கிலத்தையே ஆட்சிமொழியாகத் தேர்ந்தெடுத்தது அமெரிக்கா என்பதை நினைவில் கொள்ளுங்கள்!” </div><div dir="ltr" style="text-align: left;" trbidi="on"> </div><div dir="ltr" style="text-align: left;" trbidi="on">அண்ணா தன்னுடைய திராவிட நாட்டுக்கான மொழிக் கொள்கையாக எதைக் கனவு கண்டாரோ அதையே சிங்கப்பூரில் லீ செய்துகாட்டினார்.<br />
<br />
இந்தியை மட்டும் இந்தியா ஆட்சிமொழியாக வரித்துக்கொள்வதற்கான நியாயத்தைக் காட்டிலும் பல மடங்கு நியாயம் மாண்டரீனை மட்டும் சிங்கப்பூர் ஆட்சிமொழியாக வரித்துக்கொள்வதற்கு அதற்கு இருந்தது. இந்தியாவில் இன்றைக்கும் இந்தி பேசுவோர் எண்ணிக்கை 50%-ஐத் தாண்டவில்லை. சிங்கப்பூர் மக்கள்தொகையில் மாண்டரீனைத் தாய்மொழியாகக் கொண்ட சீனர்கள் 74.2%, மலாய்கள் 13.2%, இந்தியர்கள் 9.2%. லீ நினைத்திருந்தால், மாண்டரீனை மட்டும் ஆட்சிமொழியாக அறிவித்து, பெரும்பான்மையினரான சீனர்களைத் திருப்திப்படுத்தி, அரசியல்ரீதியாகக் காலத்துக்கும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அதையே ஒரு தேசியவாதக் கருவியாக மாற்றிக்கொண்டிருக்கவும் முடியும். லீ அப்படி நடந்துகொள்ளவில்லை.<br />
<br />
ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுத்ததுடன் மட்டும் அல்லாமல், ஒவ்வொரு சமூகத்தின் தாய்மொழியையும் லீ அங்கீகரித்தார். ஒவ்வொரு சிங்கப்பூரரும் ஆங்கிலத்துடன் அவரவர் தாய்மொழியைக் கட்டாயம் படிக்க வேண்டும்; தாய்மொழியில் ஒருவர் கொண்டிருக்கும் வேர்களே பிற்பாடு அவருடைய எதிர்கால ஆளுமையைத் தீர்மானிப்பதாக அமையும் என்றார். “தாய்மொழியை மட்டுமே கற்றுத் தேர்ந்தால் நாம் வெறும் ‘ஒருமொழிப் பிள்ளை’களாக இருப்போம்; உலகோடு போட்டியிட்டு வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள முடியாது. அதேசமயம், ஆங்கிலத்தை மட்டுமே அறிந்திருந்தாலும் பின்னடைவுதான்; ஏனென்றால், தாய்மொழியில் ஆழமற்ற நாம் நம்முடைய கலாச்சார அடையாளத்தை இழந்திருப்போம், உலகில் நமக்குரிய இடம் எது, நாம் யார் என்ற தன்னம்பிக்கையையும் இழந்திருப்போம்” என்று குறிப்பிட்டார் லீ.<br />
<b><br /></b><b>சிங்கப்பூரைத் தமிழ்நாட்டுடன் ஒப்பிடலாமா?</b><br />
<br />
ஒரு மூன்றாம் உலக நாட்டின் சாத்தியங்களின் எல்லைகளையும் சவால்களையும் புரிந்துகொண்டு லீ எடுத்த முடிவு உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச வர்த்தகத்தில் சிங்கப்பூரின் முக்கியமான உடைமையாக சிங்கப்பூரர்களின் மொழித்திறனே திகழ்கிறது. உலகமயமாதலுக்கு சிங்கப்பூரர்களை முன்கூட்டித் தயார்படுத்தியவர் என்று லீயின் இருமொழிக் கொள்கையைப் புகழ்கிறார்கள்.<br />
<br />
குஜராத், மகாராஷ்டிரம் போன்ற பெரிய மூலதன செல்வம், வணிகக் கலாச்சாரம் அற்ற, கேரளம் - பஞ்சாப் போன்ற நீர் நில வளமும் கொண்டிராத, உத்தர பிரதேசம் போல ஜனநாயகத்தில் பெரிய பேரம் பேசத்தக்க மக்கள்தொகை பலமும் இல்லாத தமிழ்நாடு இந்தியாவின் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக இன்று நிற்பதன் பின்னணியில், உலகமயமாக்கல் சூழலுக்கு முகங்கொடுத்ததில் அது முதல் வரிசையில் நின்றதன் பின்னணியில் அண்ணா உருவாக்கிய இருமொழிக் கொள்கையின் பங்களிப்பை என்றேனும் இங்குள்ள நிபுணர்கள் பேசியது உண்டா? சுதந்திரத்துக்கு எழுபதாண்டுகளுக்குப் பின்னரும் சமூகங்களுக்கு இடையே ஒரு சமநிலை இன்னும் இந்நாட்டில் உருவாக்கப்படாததன் பின்னணியில், இந்திய அரசின் மொழிக் கொள்கையின் தோல்விகளை என்றைக்கு இந்நாட்டின் நிபுணர்கள் விவாதிக்கப்போகிறார்கள்?<br />
<b><br /></b><b>அனுபவங்கள் வாயிலான படிப்பினை</b><br />
<br />
தொலைநோக்கில் சிங்கப்பூருடன் ஒப்பிடத்தக்கது என்றாலும் - இந்திய அளவில் முன்வரிசையில் நின்றாலும் - விளைவுகளில் தமிழ்நாட்டின் கல்வியை சிங்கப்பூருடன் ஒப்பிடத்தக்க சூழல் இன்று இல்லை. முக்கியமாக மொழி சார்ந்து - தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் - மோசமான சிக்கலை எதிர்கொள்கிறார்கள் நம்முடைய மாணவர்கள். ஆங்கிலத்தில் மட்டுமின்றி தமிழிலும் பலருக்கு ஆளுமை இல்லை. ஆனால், இது இருமொழிக் கொள்கையின் தோல்வி அல்ல; அமலாக்கத்தின் தோல்வி. இந்தியக் கல்விச் சூழலின் கூட்டு விளைவு என்றும் சொல்லலாம்.<br />
<br />
கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகள் நாட்டின் சர்வ அதிகாரங்களையும் தன் கையில் வைத்திருந்த லீக்கு அவருடைய கனவுக்கேற்பப் பள்ளிக்கூடங்களை உருமாற்றுவதற்கான எல்லா வாய்ப்புகளையும் சிங்கப்பூர் அவருக்கு வழங்கியது. லீயின் கனவை சிங்கப்பூர் சமூகம் தனதாக்கிக்கொண்டு கூடவே உழைத்தது. தமிழ்நாட்டிலோ ஆட்சிக்கு வந்த ஓராண்டில் அகால மரணத்தால் விடைபெற்றுக்கொண்டார் அண்ணா. கல்வியில் முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநிலங்களிடமிருந்து படிப்படியாகத் தன் வசம் நோக்கி இழுத்துக்கொண்டது டெல்லி. மேலும், உலகெங்கும் இருமொழிக் கொள்கையை வரித்துக்கொண்ட நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் தமிழ்நாட்டை அழுத்துகின்றன.<br />
<br />
பிரிட்டனுக்குச் சென்றிருந்தபோது “பிரிட்டிஷ் குழந்தைகள் இன்று எதிர்கொள்ளும் பெரிய சவால் ஆங்கிலம். தாய்மொழியில் மோசமாகச் சறுக்குகிறார்கள்” என்று அங்குள்ள கல்வியாளர்கள் சொல்லக் கேட்டு அதிர்ந்தேன். அமெரிக்காவில் பள்ளிக்கல்வியைப் பாதியில் நிறுத்தும் ஆப்பிரிக்க, ஐரோப்பிய இன மாணவர்களில் பெரும்பாலானோர் ஆங்கிலத்தையே காரணமாகச் சொல்கிறார்கள். இருமொழிக் கொள்கையை வரித்துக்கொண்டிருக்கும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் இன்று எதிர்கொள்ளும் பெரிய கல்விச் சிக்கலும் ஆங்கிலம்தான்; தரமான ஆங்கில ஆசிரியர்கள் போதிய அளவில் இல்லாதது அங்கே தேசியப் பிரச்சினையாகவே உருவெடுத்திருக்கிறது என்கிறார்கள். அரேபிய நாடுகளும் சீனாவும்கூட இதே சிக்கலை எதிர்கொள்கின்றன. உலகளாவிய மொழியான ஆங்கிலத்தின் தேவை உலகெங்கும் நாளுக்கு நாள் அதிகம் உணரப்படுகிறது; அதேசமயம், தாய்மொழி - ஆங்கிலம் இரண்டையும் வெற்றிகரமாகக் கற்பிப்பது ஒரு சவாலாக இருக்கிறது. எங்கெல்லாம் கல்வியை அர்ப்பணிப்புமிக்க கவனத்தோடு அரசுகள் அணுகுகின்றனவோ அங்கெல்லாம் இந்தச் சவால் வெற்றிகரமாக எதிர்கொள்ளவும்படுகிறது. ஆக, இருமொழிகளைக் கற்பிப்பதிலேயே இவ்வளவு சவால்கள் எதிர்கொள்ளப்படுகையில் மும்மொழிகளைக் கற்பிப்பதிலுள்ள சவால்களை எந்த அளவுக்கு இந்தியா கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கிறது? <br />
<br />
புதிய தலைமுறைகளை உருவாக்க உண்மையாகவே ஒரு புதிய கல்விக் கொள்கையை இந்தியா விரும்புகிறது என்றால், உலகெங்கும் உள்ள கல்விச் சூழலோடு தமிழ்நாட்டின் கடந்த கால பலங்கள் - பலவீனங்களை ஒப்பிட்டு தீவிரமாகப் பரிசீலிப்பதன் வாயிலாகவே டெல்லி அந்தப் பார்வையைப் பெற முடியும். ஒட்டுமொத்த இந்தியாவிலும் இருமொழிக் கொள்கையை வெற்றிகரமாக அமலாக்க முற்படுவதற்கான சாத்தியங்களை யோசிப்பதன் வாயிலாக இந்தியாவின் கல்விக் கொள்கை மட்டும் அல்ல; இந்தியாவின் ஆட்சிமொழிக் கொள்கையும் புதிய வெளிச்சத்தைப் பெறும்.<br />
<br />
<div>
</div>
<br />
<div style="-webkit-text-stroke-width: 0px; color: black; font-family: "times new roman"; font-size: medium; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 400; letter-spacing: normal; margin: 0px; orphans: 2; text-align: left; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;">
<b><br /></b><b>- ‘இந்து தமிழ்’</b></div>
</div>
சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-56934723883840747742020-08-04T10:01:00.006-07:002020-08-04T18:09:08.606-07:00370: இந்தியா தவறவிடும் ஒரு மகத்தான வாய்ப்பு<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiD9x0O2QpdSnm3DHGHHNx71M97u-dW49E71XcqmVhIN1BI4rDzi4lymmYd6EWZnnw9guh1kLAxJalwkfPHLfRFDqxOf2ty97vRpeKjJxWFCyKcBMEoQ61lLTw_T50MlRV7k4h2IwblcLNq/s2048/370.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1152" data-original-width="2048" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiD9x0O2QpdSnm3DHGHHNx71M97u-dW49E71XcqmVhIN1BI4rDzi4lymmYd6EWZnnw9guh1kLAxJalwkfPHLfRFDqxOf2ty97vRpeKjJxWFCyKcBMEoQ61lLTw_T50MlRV7k4h2IwblcLNq/s640/370.jpg" width="640" /></a></div><div><br /></div><div>நாகாலாந்து ஆளுநர் ஆர்.என்.ரவி, சில வாரங்களுக்கு முன்பு அந்த மாநிலத்தின் முதல்வர் நெஃப்யூ ரியோவுக்கு முன்னுதாரணமற்ற ஒரு கடிதத்தை எழுதினார். ‘நாகாலாந்தின் ஆயுதக் குழுக்கள் தேச ஒற்றுமையையும் இறையாண்மையையும் கேள்விக்குட்படுத்தும் வகையில், இந்திய அரசமைப்பு மூலம் நிறுவப்பட்ட மாநில அரசின் சட்டபூர்வமான இருப்புக்குத் தினமும் சவால் விடுகின்றன’ என்று அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டார். நாகாலாந்தில் ஒரு இணை அரசுபோல ஆயுதக் குழுக்கள் செயல்படுவதையே ஆளுநர் ரவி இப்படிக் குறிப்பிட்டார். அவரது குற்றச்சாட்டின் மைய அம்சம், அந்த ஆயுதக் குழுக்கள் மக்களிடத்தில் வசூலிக்கும் பணம்.</div><br />ஆயுதக் குழுக்களில் முக்கியமானதான நாகாலாந்து தேசிய சோசலிஸ கவுன்சில் (ஐமு) ஆளுநர் ரவிக்கு எதிர்வினை ஆற்றியது. ‘மக்களிடம் பணப்பறிப்பு எதிலும் நாங்கள் ஈடுபடவில்லை’ என்று குறிப்பிட்ட அந்த இயக்கம், ‘அதே நேரம், நியாயமான வரிகளை வசூலிக்கிறோம். மக்களிடமிருந்தும் வணிக நிறுவனங்களிடமிருந்தும் வரி வசூலிப்பது ஒரு தேசம் மற்றும் இறையாண்மை கொண்ட மக்களின் உள்ளார்ந்த உரிமை. நாகா அரசியல் இயக்கத்தை நடத்துவதற்கான அடிப்படை நிதியாதாரம் இந்த வரிகள். கடந்த காலத்தில் அமைதிப் பேச்சுகள் நடத்திய இடைத்தரகர்களும் இந்திய அரசுத் தரப்பும் இதை விதிகளுக்கு உட்பட்டதாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதால், இது எப்போதும் ஒரு பிரச்சினையே இல்லை’ என்று கூறியது.<br /><br />நாகாலாந்தையோ, இந்தியாவில் ஆயுதக் குழுக்கள் ஆதிக்கம் நிறைந்த பிராந்தியங்களையோ அறிந்தவர்களுக்கு இது எந்த ஆச்சரியத்தையும் தராது. நான் மணிப்பூர் சென்றிருந்தபோது அதன் தலைநகர் இம்பாலில் உள்ள புகழ்பெற்ற இமா சந்தையில் மணிப்பூரின் சுதந்திர நாளைக் கொண்டாடும் சுவரொட்டிகளைக் கண்டேன். பாதுகாப்புப் படையினர் அருகிலேயே நின்றுகொண்டிருந்தார்கள். அகண்ட நாகாலாந்தைக் கோரும் குழுக்களும் மணிப்பூர் ஆயுதக் குழுக்களைப் போலவே ஆகஸ்ட் 14 நாளை நாகாலாந்தின் சுதந்திர நாளாகக் கொண்டாடுகின்றன. இந்தியாவின் மைய நீரோட்டத்தை நோக்கி இத்தகு குழுக்களையும் மக்களையும் இணைக்கும் பேச்சுகள் நடந்துகொண்டே இருக்கின்றன.<span><a name='more'></a></span><br /><br /><div>நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் உள்நாட்டுப் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வியூகத்தில் தொடங்கப்பட்ட பேச்சுவார்த்தைக் களங்களில் நாகாலாந்தும் ஒன்று. பின்னர் வந்த பிரதமர்களில் வாஜ்பாயும்கூட, நாகர் குழுக்கள் பயங்கரவாதிகள் அல்ல; அவர்கள் அரசியல் உரிமைக்காகப் போராடுகிறார்கள் என்பதை அங்கீகரித்தார். மன்மோகன் சிங் காலத்திலும் தொடர்ந்து, கால் நூற்றாண்டாக விரிந்துகொண்டிருந்த பேச்சுவார்த்தைகள் நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு முழு உத்வேகம் பெற்றதுபோல் தோன்றியது. இடையிடையே வெளியான செய்திகள் நாகா குழுக்கள் முன்வைத்த தனி பாஸ்போர்ட் கோரிக்கையைக்கூட டெல்லி பரிசீலிப்பதாகக் கூறின. இப்போது எல்லாம் கரைந்துவிட்டிருப்பதை ஆளுநரின் கடிதம் சொல்கிறது.</div><div><br /></div>நாகா குழுக்கள் கனவு காணும், பல மாநிலங்களிலும் பரவியிருக்கும் நாகர்கள் வாழும் பகுதிகளும் ஒன்றிணைக்கப்பட்ட ‘நாகாலிம்’ சாத்தியமற்றது என்றாலும், இன்றைய நாகாலாந்துக்கு இந்தியா எனும் ஒன்றியத்துக்குட்பட்ட முழு தன்னாட்சிப் பிரதேசமாக அதிகாரம் அளிப்பதில் டெல்லிக்கு எந்தச் சிக்கலும் இருக்க முடியாது. நாகா குழுக்கள் கோருவதுபோல் அவர்களுக்கென்று தனித்த ஆயுதப் படையை டெல்லியால் அனுமதிக்க இயலாது போகலாம். நாகாலாந்துக்கு என்று தனிக் கொடியோ, பிராந்திய கீதமோ, குடியுரிமைப் பகிர்வோ இருப்பதில் என்ன பிரச்சினை இருக்க முடியும்? <br /><br />2019 ஆகஸ்ட் 5-ல், மோடி அரசால் முன்னெடுக்கப்பட்ட ‘காஷ்மீர் நடவடிக்கை’ ஜம்மு காஷ்மீரை மட்டும் இருளுக்குள் தள்ளிவிடவில்லை. நாகாலாந்து போன்று இந்தியாவின் பொதுவெளியில் அதிகம் விவாதத்துக்கு வராத, நல்ல திசை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த பல தேசிய இனப் பிரச்சினைகளையும் பள்ளத்தில் சரித்திருக்கிறது. சுதந்திர இந்தியாவிலேயே மிகத் தவறாக அர்த்தம்கொள்ளப்பட்ட சட்டக்கூறு என்று காஷ்மீரை இந்தியாவோடு இணைத்த பாலமான ‘அரசியல் சட்டக்கூறு 370’-ஐச் சொல்லலாம். பல ஆண்டுக் காலமாக காஷ்மீர் விவகாரத்தை ஒரு நெருக்கடியாக அல்லாமல் வாய்ப்பாகக் காணும் பார்வையை டெல்லி பெற வேண்டும் என்று நான் எழுதிவந்திருக்கிறேன். அப்படி ஒரு பார்வையை டெல்லி பெற்றால், காஷ்மீருக்கு மட்டும் அல்ல; எல்லா மாநிலங்களுக்குமே சுயாட்சி அளிக்கும் கருவியாக ‘அரசியல் சட்டக்கூறு 370’ கொண்டிருந்த சாராம்சங்களைக் கருத முடியும்; ஒரு வசதிக்காக ‘கூறு 35ஏ’-ஐயும், ‘அரசமைப்புக்கூறு 370’-ன் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்கிறேன்.<br /><br />அரசமைப்பில் தனக்கென்று ஒரு சட்டமைப்பு, பிராந்தியத்தின் நிரந்தரக் குடிமக்கள் யார் என்று வரையறுக்கும் அதிகாரம், உள்ளூர்க்காரர்களுக்கு மட்டுமே நிலவுரிமை என்பது உள்ளிட்ட சிறப்புரிமைகளைத் தீர்மானிக்கும் அதிகாரம், ஒன்றிய அரசின் எந்தச் சட்டமும் மாநிலத்தில் அமலாக்கப்பட மாநிலச் சட்டமன்றத்தின் ஒப்புதல் வேண்டும் என்பதான தன்னாட்சி அதிகாரம் ஆகியவற்றை ‘அரசமைப்புக் கூறு 370’ காஷ்மீருக்குக் கொடுத்தது. தனக்கென்று தனி தண்டனையியல், குற்றவியல் சட்டத் தொகுப்புகளை மாநிலம் பயன்படுத்த அது வழிவகுத்தது. சுருக்கமாக, வரலாற்றில் நீர்க்கடிக்கப்பட்ட ‘அரசமைப்புக் கூறு 370’ அதன் மூல நோக்கத்தோடு இந்தியாவில் வளர்த்தெடுக்கப்பட்டிருந்தால் ராணுவம், வெளியுறவு போன்ற சில துறைகள் நீங்கலாக ஏனைய எல்லா முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை டெல்லிக்குப் பதிலாக அந்தந்த மாநில மக்களுக்கு வழங்கும் ஆற்றலைக் கொண்டிருந்தது.<br /><br />ஒற்றையாட்சி வேட்கையைக் குழைத்து உருவாக்கப்பட்ட இந்திய அரசமைப்புக்கு, தற்செயலாக இந்தியாவின் இயல்புக்கு ஏற்ற கூட்டாட்சிப் பண்பை காஷ்மீர் வழியே காலம் வழங்கிய ஒரு வாய்ப்பு என்று நாம் ‘அரசமைப்புக் கூறு 370’-ஐக் கருதிட முடியும். விளைவாகவே, ‘அரசமைப்புக் கூறு 370’ தந்த உத்வேகத்தின் கீழ் ‘371 ஏ’ நாகாலாந்து மாநிலத்துக்குத் தனி அந்தஸ்து வழங்குவதாகக் கொண்டுவரப்பட்டது. நாகர்களின் பாரம்பரியச் சட்டத்தையும், நாகர்களின் நிலவுரிமையையும் பாதுகாக்கும் சட்டக்கூறு இது. அசாமின் பழங்குடிகள் நலன்களைப் பாதுக்காக்க உருவாக்கப்பட்ட ‘371பி’, மணிப்பூரின் மலைப் பகுதிகளை நிர்வகிக்கக் கொண்டுவரப்பட்ட ‘371 சி’, ஆந்திரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உள்ளூர் மக்களுக்குக் குறிப்பிட்ட பதவிகளில் வாய்ப்புக் கிடைப்பதை உறுதிசெய்யக் கொண்டுவரப்பட்ட ‘371 டி’, இந்தியாவுடன் இணைக்கப்பட்டாலும் ஏற்கெனவே சிக்கிமில் நடைமுறையில் இருந்த சில அம்சங்களைப் பாதுகாக்கக் கொண்டுவரப்பட்ட ‘371 எஃப்’, மிசோராமில் மிசோக்களின் கலாச்சாரத்தையும் அவர்களது நிலவுடைமை தொடர்பான உரிமைகளையும் பாதுக்காக்கக் கொண்டுவரப்பட்ட ‘371 ஜி’, அருணாசல பிரதேசத்தில் சட்ட ஒழுங்கை நிர்வகிக்கக் கொண்டுவரப்பட்ட ‘371 ஹெச்’ இவற்றையெல்லாம் ‘ஒரே நாடு - ஒரே சட்டம்’ கோஷம் போடுபவர்களால் எப்படி விளக்க முடியும்?<br /><br />அசீர்மைக் கூட்டாச்சித்துவம் என்பது இதுதான். ஒரே மனிதரின் கால்கள்தான் என்றாலும், இரு கால்களின் தனித் தனி வடிவங்களுக்கு ஏற்பவே காலணிகளை அணிகிறோம்; ஒன்றுபோல நறுக்கித் தைக்கப்பட்ட காலணிகள் ‘சீர்மை’ என்ற பெயரில் திணிக்கப்பட்டால், அதை அணிந்துகொள்பவர்களால் இயல்பாக நடக்க முடியாது. சீர்மை நேர்மறையாகவும் அசீர்மை எதிர்மறையாகவும் புரிந்துகொள்ளக் கூடியன அல்ல. காஷ்மீர், ஜம்மு இரண்டு பிராந்தியங்களிலிருந்தும் மாறுபட்டக் கலாச்சாரங்களைக் கொண்ட லடாக் இப்போது தனியே பிரிக்கப்பட்டுவிட்டது. லடாக் தனிப் பிராந்தியமாக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்த போராட்டக் குழுக்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஆட்சியாளர்கள் மீது கடும் கோபம் கொண்டவர்கள் என்பதை விளக்க வேண்டியது இல்லை. வளர்ச்சியில் லடாக் புறக்கணிக்கப்படவும், லடாக்கியர்கள் உரிய பிரதிநிதித்துவமின்றி அழுத்தப்படவும் கடந்த காலத்தில் காஷ்மீர் ஆட்சியாளர்களின் பாரபட்சமான பார்வையே காரணம் என்று கூறுபவர்கள் அவர்கள். 2019 ஆகஸ்ட் 5 காஷ்மீர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீரிலிருந்து லடாக் பிரிக்கப்பட்டபோது அதைக் கொண்டாடியவர்கள் அவர்கள். அவர்களின் பிரதிநிதிகள்தான் கூடவே இதையும் கூறுகிறார்கள், ‘அரசமைப்புக் கூறு 370 நீக்கப்பட்டது பெரும் கொடுமை. லடாக் மண்ணையும் மக்களையும் சுற்றுச்சூழலையும் வெளி ஏகாதிபத்தியத்திய சக்திகளிடமிருந்து பாதுகாத்த சட்டக்கூறு அது. வெளியாள் இங்கே வந்து நிலம் வாங்க அனுமதிக்கப்படும்போது, லடாக் கான்கிரீட் காடாக மாறும்; சுற்றுச்சூழல் நாசமாகும். அரசமைப்புக் கூறு 370 கொடுத்த பாதுகாப்பு ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களுக்கும் விஸ்தரித்திருக்கப்பட வேண்டியது.’<br /><br />ஆம். நாம் பருவநிலை மாறுபாடு அச்சுறுத்தல் யுகத்தில் நுழைந்த பிறகு, ‘அரசமைப்புக் கூறு 370’-க்கு மேலும் ஒரு பரிமாணம் கிடைக்கிறது. தம் மண்ணைப் பாதுகாக்க அதன் மக்களுக்குக் கிடைக்கும் பிரத்யேக உரிமை அது. பிரதமர் மோடி அடிக்கடி சுயசார்பு தொடர்பில் பேசுகிறார். சுயஅதிகாரத்துக்கு அப்பாற்பட்ட சுயசார்பு ஒன்று சாத்தியமா என்பதை நாடு சிந்திக்க வேண்டும்.<br /><br /><div>இந்திய ஆட்சியாளர்கள் மட்டும் அல்ல; இந்தியாவின் பொதுக் கருத்துத்தளமும்கூட பெரும் மாறுதலை அடைய வேண்டும். காஷ்மீர் நடவடிக்கைக்குப் பிறகு, நாட்டிலேயே காஷ்மீர் மட்டுமே கொண்டிருந்த அந்த மாநிலத்தின் கொடி நிரந்தரமாகக் கீழே இறக்கப்பட்ட செய்தியை இந்தியாவின் பெரும்பான்மை ஊடகங்கள் கொண்டாட்டமான தொனியில், ‘இனி நாடு முழுமைக்கும் ஒரே கொடி’ என்று குதூகலித்ததை நினைவுகூரலாம். அறியாமையின் வெளிப்பாடு அல்லாமல் அது வேறு என்ன? அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களும் தனிக் கொடியையும் பிரத்யேகச் சட்டங்களையும் உச்ச நீதிமன்றங்களையும்கூட கொண்டிருக்கின்றன. சுவிட்ஸர்லாந்தில் எந்த ஒரு பெரும் மாற்றமும் மாநிலங்கள் அனுமதியின்றி கொண்டுவர முடியாது. இதனால் அவையெல்லாம் ஒரே நாடு இல்லையா என்ன? <br /></div><div><br /></div><div>தமிழ்நாட்டில் ஒரு நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறோம்; நிறைவில் தேசிய கீதம் பாடுகிறோம். இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானது அல்ல. ஒரு குழந்தையின் பெற்றோருக்குத் தாய் - தந்தை என்று இரு அடையாளங்கள் இருக்கின்றன. ‘அரசமைப்புச் சட்டக்கூறு 370’-ன் ஆன்மா இந்தியாவின் பன்மைத்துவ மகோன்னதத்தையும் அதிகாரப் பரவலாக்கத்துக்கான உச்ச சாத்தியங்களையும் ஒரு நல்ல கூட்டாட்சிக்கான அறைகூவலையும் புதைக்கப்பட்ட மண்ணிலிருந்து முழங்கிக்கொண்டே இருக்கிறது. தூங்கும் இந்தியாவை அது தட்டிக்கொண்டே இருக்கிறது.</div><div><b><br /></b></div><div><b>- ஆகஸ்ட், 2019, ‘இந்து தமிழ்’</b><br /></div>சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-40308684909053089092020-07-14T19:07:00.001-07:002020-07-14T19:29:48.007-07:00காங்கிரஸ், பாஜகவினருக்கு காமராஜரிடமிருந்து ஒரு பாடம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-size: small;"><br /></span>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="font-size: small;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1wdxu8P5uhyphenhyphen8u3ciE5FbYkDg4XZpUczMQa5aOAZbzhBNdd1UHoJSR5v9-EkEZEXMIXKEBHuyp8QAILmrw7XR_AHowawhvNgzYOIb30UC0EwD2tIj_15qiZ_6wEikr2RPFoABeJQfonEVX/s1600/Kamaraj.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="576" data-original-width="1024" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1wdxu8P5uhyphenhyphen8u3ciE5FbYkDg4XZpUczMQa5aOAZbzhBNdd1UHoJSR5v9-EkEZEXMIXKEBHuyp8QAILmrw7XR_AHowawhvNgzYOIb30UC0EwD2tIj_15qiZ_6wEikr2RPFoABeJQfonEVX/s640/Kamaraj.jpg" width="640" /></a></span></div>
<span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: small;">கொஞ்சம் அரதப்பழசான கதைதான் என்றாலும், இதிலுள்ள நுட்பமான பல இழைகள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விவாதங்களுக்கு நம்மைக் கொண்டுசேர்க்கின்றன. காங்கிரஸை வீழ்த்தி திமுகவை ஆட்சியில் அமர்த்துகிறார் அண்ணா. தேர்தல் முடிவுகள் வானொலி அறிவிப்புகளாக வந்துகொண்டிருக்கின்றன. சென்னையில் உள்ள அண்ணாவின் வீடு குதூகலத்தில் இருக்கிறது. விருதுநகரில் காமராஜர் திமுக வேட்பாளர் சீனிவாசனால் தோற்கடிக்கப்பட்ட செய்தி வெளியானதும் வேட்டுச் சத்தம் அதிர்கிறது. கட்சிக்காரர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். கடும் கோபத்தோடு வீட்டிலிருந்து வெளியே வரும் அண்ணா, கட்சிக்காரர்களைக் கடிந்துகொள்கிறார். “உங்கள் ஆர்ப்பாட்டத்தை நிறுத்துங்கள். தோற்கக்கூடாத நேரத்தில் தோற்றிருக்கிறார் காமராஜர். இன்னொரு தமிழன் காமராஜர் இடத்துக்கு வர இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆகும். காமராஜரின் தோல்வி கொண்டாட்டத்துக்கு உரியதல்ல. அது நம்முடைய தோல்வி!” தேர்தலில் வெற்றி பெற்று அண்ணாவிடம் வாழ்த்துப் பெற வரும் சீனிவாசனிடமும் இதையே சொல்கிறார் அண்ணா. “என்னை மன்னித்துவிடு சீனிவாசா... உன்னுடைய வெற்றி தர வேண்டிய மகிழ்ச்சியை காமராஜரின் தோல்வி தந்த வருத்தம் பறித்துவிட்டது!”</span><br />
<a name='more'></a><span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: small;">காமராஜரைப் போன்ற ஒரு தலைவர் தமிழகத்தில் மீண்டும் உருவெடுப்பது அரிது என்று எண்ணி இதை அண்ணா சொன்னாரா அல்லது தமிழ்நாட்டிலிருந்து தேசிய அளவில் காமராஜர் வகித்த இடத்துக்கு இன்னொருவர் வருவது அவ்வளவு அரிது என்று எண்ணி இதை அண்ணா சொன்னாரா? காமராஜர் அப்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தார். காமராஜருக்கு முன்பும் சரி, பின்பும் சரி; தேசியக் கட்சிகளிலும், ஆட்சியிலும் முக்கியமான பதவிகளில் தமிழர்கள் அமர்ந்திருக்கிறார்கள். முன்னதற்கு ராஜாஜியும், சி.சுப்பிரமணியனும் உதாரணங்கள் என்றால், பின்னதற்கு ப.சிதம்பரமும், நிர்மலா சீதாராமனும் உதாரணங்கள். ஆயினும் இவர்கள் எவரையும் காமராஜரின் உயரத்தோடு தமிழக மக்கள் ஒப்பிடுவதில்லை. இத்தனைக்கும் கட்சியிலும் ஆட்சியிலும் கொள்கைகளை வகுப்பதில் பிரதான இடம் நோக்கி நகர்வதற்கான சாத்தியம் இவர்களுக்கு இருக்கவே செய்தது. குறிப்பாக, ராஜாஜியும் சிதம்பரமும் கட்சியின் சித்தாந்தங்களை வடிவமைப்பதிலேயே பெரும் செல்வாக்கோடு திகழ்ந்திருக்கிறார்கள். ஆயினும், காமராஜரின் இடம் தனித்துவமானது. ஏன்? அதிகம் பேசாதவரான காமராஜர், தன்னுடைய சொந்த மக்களின் அபிலாஷைகளுக்கு அரசியலில் முன்னுரிமை அளித்தவர். ஏனையோர் தங்கள் அரசியலுக்கான சக்தியைக் கட்சித் தலைமையுடனான நெருக்கத்தின் வழிப் பெற்று, டெல்லி சார்ந்து தன் சிந்தனையைக் கட்டமைத்துக்கொண்டபோது, காமராஜர் கீழே பெரும் மக்கள் பரப்பிடமிருந்து அந்தச் சக்தியைப் பெற்று, தமிழகத்திலிருந்து கட்டமைத்துக்கொண்ட தன்னுடைய சிந்தனையை டெல்லிக்கு அளித்தார்.</span><br />
<span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: small;">காமராஜரின் பார்வையை வெறுமனே நடைமுறை அரசியல் சார்ந்து சுருக்கிட முடியாது. ‘காங்கிரஸை ஒழிப்பேன்’ என்று சொல்லி அதிலிருந்து வெளியே வந்த பெரியார், காமராஜரைத் தலையில் தூக்கிக்கொண்டு ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்ததையும், நேருவின் நம்பகமான தளகர்த்தர்களில் ஒருவரான காமராஜர், பெரியாரின் பல செயல்திட்டங்களை அமலாக்குபவராக இருந்ததையும் எப்படி அர்த்தப்படுத்திக்கொள்வது? சுதந்திர இந்தியாவின் ஏனைய பல மாநிலங்கள் தொழில்கள் - பொருளாதாரக் கட்டமைப்பில் பிரதான கவனம் அளித்துவந்த நாட்களில், கூடவே கல்வி, சுகாதாரம் என்று சமூக நலக் கட்டமைப்பிலும் தனிக் கவனம் செலுத்தியது தமிழ்நாடு. இன்றைக்கு நாட்டிலேயே பின்தங்கிய மாநிலங்களில் முக்கியமானதாக அறியப்படும் உத்தர பிரதேசம், அன்றைக்கு நல்ல நிர்வாக நிலையிலிருந்த மாநிலம். சுதந்திரத்துக்குப் பிந்தைய எழுபதாண்டுகளில் சமூக நீதிக் கொள்கைகள் எப்படி மாநிலங்களின் தர வரிசையை மாற்றி அமைத்திருக்கிறது என்கிற ஆய்வை விரிவாக நடத்தினால், காமராஜரின் பார்வை தமிழ்நாட்டின் கலவையான அரசியல் விழுமியங்களைக் கை கொண்டிருந்ததை உணர முடியும். திராவிட இயக்கம் பேசிய சமூக நீதி - சமூக நல அரசியல், கம்யூனிஸ இயக்கம் பேசிய பொதுவுடமை அரசியல், இதோடு தன்னுடைய காங்கிரஸின் பன்மைத்துவ அரசியல் இவையெல்லாமும் கலந்து காமராஜரின் அரசியலாக அவருடைய செயல்பாடுகளின் வழியே வெளிப்பட்டன. </span><br />
<span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: small;">அதிகம் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாதவர், பொது விவாத அமர்வுகளில் பேசுவதைக் காட்டிலும் தனக்கு மனதில் பட்டதை கட்சித் தலைமையிடம் உறுதிப்படப் பேசுபவர், கொள்கைகளை நடைமுறைச் செயல்பாட்டின் வழி வெளிப்படுத்துவதையே வழக்கமாகக் கொண்டவர் என்பதாலேயே கொள்கை வகுப்பில் காமராஜரின் தனித்துவம் வெளியே வராமலேயே போய்விட்டது. ‘சோஷலிஸமும் ஜனநாயகமும் கட்சியின் இரு கண்கள்’ என்று காங்கிரஸ் பிரகடனப்படுத்திய 1955 சென்னை ஆவடி மாநாட்டுத் தீர்மானத்தில் அவருடைய பங்களிப்புகள் என்னவென்று நமக்குத் தெரியாமல் இருக்கலாம். சில ஆண்டுகளுக்குப் பின் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக புவனேஸ்வர் காங்கிரஸ் மாநாட்டில் காமராஜர் பேசிய பேச்சு தீர்க்கமாகச் சில செய்திகளைச் சொல்கிறது. சோஷலிஸம் தொடர்பில் விரிவான விவாதம் நடத்தப்பட்ட அந்த மாநாட்டில் இந்திய சோஷலிஸம் எப்படித் தனித்துவமானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்துகிறார் காமராஜர். ‘மையத்தில் அதிகாரத்தை அளவுக்கு அதிகமாகக் குவிப்பதும், பலவந்தத்தைப் பயன்படுத்துவதுமானதாக இந்திய சோஷலிஸம் இருக்கக் கூடாது’ என்பவர், ‘பொதுத் துறை நிறுவனங்களும் தனியார் துறையும் கூட்டாளிகளாக இருந்து உற்பத்தியைப் பெருக்க வேண்டும்; சோஷலிஸம் என்பது சமூகத்தின் அடிப்படை நலனையும், கூடவே தனிநபரின் அடிப்படை நலனையும் ஜனநாயக முறையிலும் அதிகாரம் பரவலாக்கப்படுவதன் வழியிலும் ஒத்திசைவுபடுத்த வேண்டும்’ என்கிறார். வேலையின்மை, பசி, வறுமை, நோய் தொடர்பிலான அச்சம் குடிமக்களுக்கு ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்வதே ஒரு மக்கள் நல அரசின் அடிப்படைக் கடமை என்று வரையறுக்கிறார் காமராஜர். எல்லோரையும் ஒருங்கிணைத்தபடி, சாமானிய மக்களை முன்னேற்றத்தை நோக்கி முன்னகர்த்திய அவருடைய அரசியல் வழியாகவே பார்க்கும்போது காமராஜரின் சொற்களுக்கு வேறு ஒரு பரிமாணம் கிடைக்கிறது.</span><br />
<span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: small;">காமராஜரைப் போற்றுவது இன்றைக்குத் தமிழகத்தில் கட்சி வேறுபாடுக்கு அப்பாற்பட்ட செயல்பாடு. தேசிய அளவில் காந்திக்குக் கிடைத்த பொதுப் பிம்பம் தமிழ்நாட்டில் காமராஜருக்கு மட்டுமே உரித்தாகி இருக்கிறது. காமராஜரை எதிர்த்து அரசியலில் வளர்ந்த திராவிடக் கட்சியினர் அவர் உயிருடன் இருக்கும்போதே அவர் மீது காட்டிய மதிப்புக்கு இதில் முக்கியமான இடம் உண்டு. இன்று காங்கிரஸ் கட்சியையே இல்லாமல் ஆக்கிவிட எண்ணும் பாஜகவும்கூட தமிழ்நாட்டில் காமராஜரின் பெயரைத் தவிர்க்க முடியாமல் உச்சரிக்க வேண்டியிருக்கிறது. ஆயினும், வெறுமனே காமராஜர் புகழ் பாடுவதைக் காட்டிலும் சமகால அரசியலில் காமராஜரை எப்படி உள்வாங்குவது; தேசிய அரசியலில் காமராஜர் விட்ட இடத்திலிருந்து எப்படித் தொடர்வது என்று காமராஜரைப் பேசுபவர்கள் யோசிப்பது தமிழ்நாட்டுக்கு நல்லது.</span><br />
<span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: small;">காமராஜர் தொடர்பான தமிழர்களின் பெருமிதங்களில் தலையாயது அவர் ஒரு ‘கிங் மேக்கர்’ என்பதாகும். இதைப் பல ஆண்டுகளாக நாம் பேசிவருகிறோம். இரண்டு பிரதமர்களை உருவாக்க முடிந்த காமராஜரால் ஏன் ‘கிங்’ ஆக முடியவில்லை என்ற கேள்வியிலிருந்து இந்த அரசியலைத் தொடங்கலாம். நேருவின் மறைவுக்குப் பின், லால் பகதூர் சாஸ்திரியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தியபோது காமராஜரிடம், “ஏன் நீங்கள் பிரதமராக ஆகக் கூடாது” என்று கேட்ட செய்தியாளர்களிடம் காமராஜர் கேட்ட பதில் கேள்வி இது: “இந்தி கிடையாது. ஆங்கிலமும் கிடையாது. நான் எப்படி பிரதமர் ஆவது?” தன் உயரத்தை தாழ்த்திக்கொண்டாலும், இன்றைய பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட ஆங்கிலம் பேசக்கூடியவர் காமராஜர். நாடாளுமன்றத்தில் அவருடைய ஆங்கில உரையைப் பாராட்டி ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தலையங்கம் எழுதியிருக்கிறது. ஆயினும், பிரிட்டிஷ் கல்விப் பின்னணி கொண்ட நேரு உள்ளிட்டோருடன் தன்னை ஒப்பிட்டு அவர் இதைச் சொல்லி இருக்கலாம். எப்படியும், ஆங்கிலத்தை அலுவல் மொழி என்ற இடத்திலிருந்தே அகற்ற தலைப்பட்ட அன்றைய தலைமுறை பெரும்பான்மை இந்தி தலைவர்கள் மத்தியில் இந்தியாவின் பிரதமராவதற்கு ஆங்கிலம் பெரிய தடை இல்லை. ஆனால், இந்தி தெரியாத ஒரு இந்தியர் பிரதமர் ஆக முடியுமா? இன்றும் ஒரு தமிழரோ, காஷ்மீரியோ, மணிப்பூரியோ பிரதமர் ஆவதற்கான சாத்தியத்தை இந்தியா கொண்டிருக்கிறதா? காமராஜர் விட்டுச் சென்ற இடத்தைத் தொடர்வது என்பது இதுவே ஆகும்.</span><br />
<span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: small;">பல வகைகளில் காமராஜரின் தனித்துவம் எனக்குப் பிடிக்கும். தான் நம்பும் சித்தாந்தத்தின் அடிப்படையில் அதற்கென்று ஒரு அமைப்பை உருவாக்கி அதன் வழி செயல்படுவது ஒருவகை தலைமைத்துவம் என்றால், பல சித்தாந்தப் போக்குகள் கொண்ட ஒரு அமைப்புக்குள் நின்றபடி தான் நம்பும் கொள்கைகளை உறுதியாக முன்னெடுப்பது ஒருவகை தலைமைத்துவம். காந்தியினுடைய எளிமை, அகிம்சை, உறுதிப்பாடு இவையே காமராஜரின் அரசியலுக்கான உந்துசக்தி. ஆயினும், தான் சார்ந்த சமூகத்தின் தேவைகளையும் பிரச்சினைகளையும் புரிந்துகொள்வதில் சிக்கல் இருந்தபோது தன்னுடைய தலைவரிடமிருந்தே முரண்பட்டவர் காமராஜர். காமராஜர் வாழ்வில் நாம் பேச வேண்டிய மிக முக்கியமான சங்கதி இதுதான். காந்தியிடம் மட்டும் அல்ல; அரசியலில் அவர் மோதிய ராஜாஜி தொடங்கி இந்திரா வரை எல்லோர் மீதுமே காமராஜர் நன்மதிப்பு கொண்டிருந்தார். அதேசமயம், மக்களையும் அமைப்பையும் அணுகுவதில் அவர்கள் தீவிரமாக மாறுபட்டபோது <span style="background-color: white; color: #050505; display: inline; float: none; font-family: "segoe ui historic" , "segoe ui" , "helvetica" , "arial" , sans-serif; font-style: normal; font-weight: 400; letter-spacing: normal; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: pre-wrap; word-spacing: 0px;">சொந்த கட்சியின் பெரும் தலைவர்கள் உட்பட</span> எவர் ஒருவருடனும் முரண்படவும், அவர்களை எதிர்த்திடவும் அவர் தயங்கியதே இல்லை.</span><br />
<span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: small;">தான் சார்ந்திருக்கும் மக்களின் மேம்பாட்டுக்காகவே எந்த ஒரு மனிதரும் அரசியலில் அடியெடுத்து வைக்கிறார். தேர்ந்தெடுக்கும் கட்சி, சித்தாந்தம், தலைமை, கிடைக்கும் பதவி, அதிகாரம் இவையெல்லாமும் அந்த நோக்கத்தைச் சென்றடையும் வழிகள். எதன் பொருட்டும் சொந்த மக்களின் நலனைப் பிந்தையவற்றுக்காகப் பறி கொடுக்க முடியாது என்பதே காமராஜர் அரசியலின் தனித்துவம். காமராஜருக்குப் பிந்தைய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகள் எடுபடாமல் போனதற்கு மிக முக்கியமான காரணம், சொந்த மக்கள் நலனைப் பலி கொடுத்து, டெல்லியின் குரலை தங்கள் நலனுக்காக எதிரொலிப்பவர்களாக அவர்கள் உருவெடுத்ததுதான். இன்றைக்கு டெல்லியில் தமிழ்நாட்டின் குரலை எதிரொலிக்க நிறையத் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். தேசியக் கட்சிகளுக்கு அந்தக் கனவு இருந்தால், காமராஜர் விட்ட இடத்திலிருந்துதான் தொடங்க வேண்டும்! <b><br /><br /> - ஜூலை, 2020, ‘இந்து தமிழ்’</b></span></div>
சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-90997325226817850422020-07-01T17:45:00.000-07:002020-07-01T17:45:47.521-07:00அரச வன்முறையின் ஊற்றுக்கண்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCUacCAkaldNTKmRk3B0EL8AloQJAvNDn6C36MFF_Qyj4N2HDlbh9KEdO55alusXitC1H-fH_IKCMToaS7erTXZZqelIw8Hd5JbFMJTdwXB8G47qCPBXTzEETsUiP5aa-e01uJBH_KyU-S/s1600/p.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="900" data-original-width="1600" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCUacCAkaldNTKmRk3B0EL8AloQJAvNDn6C36MFF_Qyj4N2HDlbh9KEdO55alusXitC1H-fH_IKCMToaS7erTXZZqelIw8Hd5JbFMJTdwXB8G47qCPBXTzEETsUiP5aa-e01uJBH_KyU-S/s640/p.jpg" width="640" /></a></div>
<br /><br />நாம் முதலில் இதை நம் வாயால் சொல்லிப் பார்ப்போம். ஒரு முதியவரும், அவரது மகனும் என்று இரு உயிர்கள் சிதைக்கப்பட்டுவிட்டன. என்ன காரணத்துக்காக என்று கேட்டால், ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு குறித்த நேரத்தில் அவர்களுடைய கடை மூடப்படாததுதான் காரணம் என்கிறார்கள். ஆக, நீங்களும் இப்படி ஒருநாள் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு, குறித்த நேரத்துக்குள் வீட்டுக்குத் திரும்பாமல் காய்கறிக் கூடையோடு சாலையில் நிற்க நேர்ந்தால் அதற்காக உயிரைவிட நேரிடலாம்.<br /><br />அடிபட்டே உயிரை விட வேண்டும். நியாயம் கேட்க வீட்டிலிருந்து உங்கள் பிள்ளை வந்தால், அவரும் மூங்கில் கழிகள் உரிய அடிபட்டுச் சாக வேண்டும். குதத்தில் காக்கிச்சட்டையர்களின் லத்திகள் திணிக்கப்பட்டு ரத்தம் சொட்டச் சொட்டக் குத்திக்குதறி அவர்கள் விளையாடும்போது, வாயை மூடியபடி கதற வேண்டும். கொடூர விளையாட்டு அவர்களுக்கு அலுத்துப்போகும்போதோ, தாங்கவே முடியாத எல்லையை உடல் அடையும்போதோ வெளியே இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று அச்சுறுத்தப்பட்டு, காவல் நிலையத்திலிருந்து நீங்கள் இருவரும் வெளியே அழைத்துச் செல்லப்படுகிறீர்கள். உடலின் ரணமும், ரத்தம் கசிந்த உடைகளும் தெரியாத தொலைவில் நீதிபதி ஒருவரின் முன் கொண்டுசெல்லப்பட்டு நீங்கள் நிறுத்தப்படுகிறீர்கள். அந்த நீதிபதி உங்களைச் சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார். பின்னர் நீங்கள் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படுகிறீர்கள். அங்கே உங்களுடைய மோசமான உடல்நிலையைப் பார்த்தும், காவல் அதிகாரிகளைச் சங்கடப்படுத்தாத வகையில் அவர்கள் விரும்பும் திருப்திகரமான ஒரு மருத்துவச் சான்றிதழை, அரசு மருத்துவர் வழங்குகிறார். பின்னர், சிறையில் நீங்களும் உங்கள் பிள்ளையும் உயிரை விடுகிறீர்கள்.<br /><br />நாட்டு மக்கள் அதிர்கிறார்கள். எல்லோரும் பேசத் தொடங்கியதும், உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முதல்வர் பேசுகிறார். இந்தக் கொடுங்கோன்மையை வன்முறை என்று சொல்லக்கூட தயங்கும் அவர், மகன் மூச்சுத்திணறலாலும், தந்தை உடல்நலக் குறைவாலும் இறந்ததாகச் சொல்கிறார். எதிர்ப்பு நாளுக்கு நாள் வலுக்கவும், குற்றஞ்சாட்டப்படும் காவல் துறையினரைப் பணியிடை நீக்கம் செய்யும் அவர், அதேசமயம் அவர்கள் மீது அதுவரை பதியப்படாத ஒரு வழக்கை, தன்னுடைய பொறுப்புக்குக் கீழேயுள்ள காவல் துறையிடமிருந்து தன்னுடைய பொறுப்புக்கு அப்பாற்பட்ட ஒன்றிய அரசின் மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு மாற்றவிருப்பதாக அறிவிக்கிறார். இதனிடையே சம்பவத்தை விசாரிக்க நீதிபதி ஒருவர் செல்கிறார். விசாரணையில் ‘உங்களால் ஒன்றும் புடுங்கக்கூட முடியாது’ என்று நீதிபதிக்கு சவால் விடுகிறார் ஒரு காவலர். விசாரணைக்குக் காவல் துறையினர் ஒத்துழைக்க மறுப்பதால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் நிர்வாகத்தைக் காவல் துறையிடமிருந்து பறித்து, வருவாய்த் துறைக்கு மாற்றி மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க உத்தரவிடுகிறது நீதிமன்றம்.<br /><br />அன்றாடம் காவல் கம்பிகளுக்குப் பின் ஐந்து பேர் உயிரை விடும் ஒரு நாட்டில் இந்த விவகாரம் எப்படி முடியும் என்ற கேள்விக்கு முன் சுற்றிலும் இங்கு நடக்கும் விவாதங்களிலிருந்து வேறு ஒரு அடிப்படையான கேள்விக்கு முகம் கொடுப்போம். இது வெறும் காவல் துறையின் சீர்கேடா அல்லது ஒட்டுமொத்த அமைப்பினுடைய சீர்கேட்டின் வெளிப்பாடா?<br />
<br />
<a name='more'></a><br />ஆயுதப் படைகள் அல்லது காவல் துறை வழியே நாம் காணும் வன்முறைகள் யாவுமே அரசின் வன்முறைதான். தன் அளவிலேயே வன்முறைப் பண்பைக் கொண்டதான அரசு எனும் அமைப்பானது, சமத்துவமும் அதிகாரத்தில் மக்கள் பிரதிநிதித்துவமும் ஜனநாயக விழுமியங்களும் குறைந்த சமூகங்களில் தன்னுடைய அரசாங்கம் வழியே அந்த வன்முறையை அடிக்கடி வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அரசின் எந்தத் துறையைக் காட்டிலும் காவல் துறை அதிகமான வன்முறையை நாட்டு மக்களின் மீது வெளிப்படுத்துவதற்கான முக்கியமான காரணம், ஒரு அரசின் கருத்தியல் சாய்வுகளைக் காவல் துறைதான் மிக அதிகமான அளவில் பிரதிபலிக்கிறது. ஆக, ஒரு கருத்தை எப்படி உள்வாங்குவது என்ற பயிற்சி அரசின் எல்லா அங்கங்களுக்கும், முக்கியமாகக் காவல் துறைக்கு அத்தியாவசியமானதாகிறது.<br /><br />காலனியக் காலகட்டத்தில் ஏகாதிபத்திய அரசின் அடக்குமுறையையும் வன்முறையையும் குழைத்து அடிமை விழுமியங்களால் கட்டப்பட்ட இந்திய அரசாங்க அமைப்பானது சுதந்திரத்துக்குப் பிறகு முற்றிலுமாகக் கலைத்துப்போடப்பட்டு, தாராள மதிப்பீடுகளால் மறுவுருவாக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்க வேண்டும். அதிகார வேட்கையோடு ஆட்சியில் அமர்ந்த நம்முடைய அரசியலர்களுக்கு ஏற்கெனவே இருந்த அமைப்பே வசதியானதாக இருந்ததன் விளைவாக அது நடக்காமலேயே போனது. இனி தொடர் சீர்திருத்தங்கள் வழியிலேனும் அது நடக்க வேண்டும்.<br />சாத்தான்குளம் சம்பவத்தில் காவல் துறைக்குள் ஊடுருவியிருக்கும் சாதியத்தைப் பலரும் பேசுகின்றனர். இதில் ஆச்சரியமே இல்லை. இந்தியக் காவல் துறை சாதி, மத, இனக் கலவைப் பூச்சோடுதான் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழ்நாடும் விதிவிலக்கு அல்ல. இன்னும் சொல்லப்போனால், காவல் துறையின் அடித்தட்டு அலுவலர்களின் நியமனமே அந்தந்தப் பகுதி சாதிப் பரவல் கணக்குகளுக்கு ஏற்பவே நடக்கிறது. சமத்துவமற்ற ஒரு சமூகத்தில் இப்படியான சாதிப் பிரதிநிதித்துவம் நிர்வாகரீதியில் ஒரு சாதுர்யமான தற்காலிக ஏற்பாடாகக்கூட இருக்கலாம். கேள்வி என்னவென்றால், ஒரு நாடு குடியரசாகி எழுபதாண்டுகளுக்குப் பிறகும் சாதி, மத, இனப் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்ட குடிமையுணர்வை, சட்டத்தைப் பாதுகாக்கும் சீருடைப் பணியாளர்கள் மத்தியிலேயே நம்மால் கொண்டுவர முடியவில்லை என்றால், அந்த அமைப்பின் கேவலத்தை எப்படி வர்ணிப்பது?<br /><br />அரசியல் வர்க்கமானது குறுகிய நோக்கங்களுடன் அமைப்பைக் கையாள முற்படுவது உலகளாவிய போக்கு. அதேசமயம், எல்லா நாடுகளிலும் இப்படித்தான் இருக்கிறது; எல்லா சமயங்களிலும் இப்படித்தான் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. ஒரு சமூகம் குடிமையுணர்வையும், அரசின் அங்கங்கள் தொழில்முறைக் கலாச்சாரத்தையும் வரித்துக்கொள்ளும்போது மக்களுக்கு நெருக்கமானதாகவும் வன்முறைகள் குறைந்ததாகவும் அந்தச் சமூகத்தின் அரசும் அதன் அங்கங்களும் மாறுகின்றன. எப்போதெல்லாம் அரசியல் தலைமை மோசமாகிறதோ, அப்போதெல்லாம் காவல் துறையும் மோசமாகிறது.<br /><br />நெகிழ்வான அரசியல் தலைவர்கள் அமைப்பை மேலும் ஜனநாயகமயமாக்குகின்றனர். ஆனால், பலவீனமான தலைவர்கள் காவல் துறைக்கு அதிகமான அதிகாரத்தை வழங்குவதன் வாயிலாகத் தங்களைப் பலமானவர்களாகக் காட்டிக்கொள்ள முற்படுகிறார்கள். சமூகத்திலும் அரசியலிலும் பீறிட்டெழும் புதிய பிரச்சினைகளை, மாற்றுச் சிந்தனைகளை, எதிர்க் கருத்துகளை எதிர்கொள்ளும் திராணி இல்லாதபோது, அவற்றோடு உரையாடி விவாதிக்க முடியாதபோது, காவல் துறையை அந்தப் பக்கமாகக் கைகாட்டிவிடுகின்றனர். காவல் துறைக்கோ எல்லாப் பிரச்சினைகளுமே சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையாகக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. அரசை விமர்சிக்கும், அரசைக் குறைகூறும், அரசின் உத்தரவை மீறும் எதையும் அது அரச விரோதமாகவே கருதுகிறது. ஊரடங்கு விதியைக் கறாராகக் கடைப்பிடிக்காதது எனும் சாதாரண மனிதத் தவறு, ஒரு பெரும் குற்றத்துக்கு ஒப்பாக வெறியூட்டக் காரணம் ‘ஊரடங்கு’ எனும் கருத்தைக் காவல் துறையினர் எப்படி உள்வாங்கியிருக்கின்றனர் என்ற அர்த்தப்பாட்டிலிருந்தே உருவாகிறது. தற்செயலாக ஊரடங்கு விதியை மீறுவது என்ற இடத்திலிருந்து ஊரடங்குக்கு எதிரான போராட்டம் என்ற இடத்துக்குச் செல்வோம். ‘ஊரடங்கு’ ஒரு சிந்தனை என்றால், ‘ஊரடங்கை எதிர்ப்பது’ இன்னொரு சிந்தனை. ஒருவர் அதற்கு எதிராகப் போராடினால் நம்முடைய காவல் துறை அதை எப்படி எதிர்கொள்ளும்? நினைவில் கொள்ளுங்கள், ஊரடங்குக் காலத்தில்தான் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்டு கொலையைக் கண்டித்து, வீதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்தார்கள்; சில இடங்களில் காவல் துறையினரும் தார்மீக அடிப்படையில் அதில் பங்கேற்றார்கள்.<br /><br />கருத்து வேறுபாடு என்பது தேச விரோதம் அல்ல. மாறாக, தேசத்தை இப்படியும் பார்க்கலாம் என்பதற்கான இன்னொரு செயல்திட்டம். போராட்டச் செயல்பாடுகள் பயங்கரவாதம் அல்ல. அவைதான் சமூகத்தின் குரலற்றவர்களின் குரலை ஆட்சியாளர்களுக்குக் கொண்டுசேர்க்கின்றன. ஒரு கருத்தை எப்படிப் பார்ப்பது? இதைக் கற்பிப்பதுதான் இந்திய ஆட்சி நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கும், மிக முக்கியமாக காவல் துறையினருக்கும் கற்பிக்க வேண்டிய அடிப்படையான சீர்திருத்தம் என்று நினைக்கிறேன். அடுத்தது, ஒவ்வொரு பணிக்குமான சுயமரியாதையை உருவாக்குவது; துறைகளை சுயாதீனமாகச் செயல்பட அனுமதிப்பதுதான் இதற்கான வழி என்றாலும், சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ளவர்களே இதற்கான பாதையையும் கட்டமைக்க வேண்டும்.<br /><br />என்னுடைய துறை அந்தந்தக் காலகட்ட ஆட்சியாளர்களுக்காக செயல்படுகிறதா அல்லது சட்டத்தின்படி செயல்படுகிறதா? இந்தக் கேள்வியை ஒவ்வொரு அரசு அலுவலரும் கேட்டுக்கொள்ள வேண்டும். காவல் துறையைப் பொறுத்த அளவில் அந்தத் துறையை ஆழமாக நேசிக்கும் முன்னாள் இந்நாள் அதிகாரிகள் முதலில் இதை ஆத்மார்த்தமாகக் கேட்டுக்கொள்ள வேண்டும். ஒரு குடியரசு நாட்டில் இன்னமும் காவல் துறையானது ஆட்சியாளர்களின் ஏவல் துறையாகவும், மக்களிடமிருந்து இவ்வளவு அந்நியமாகவும் செயல்படுவது தொடர்பில் அவர்கள் வெட்கப்பட வேண்டும். காவல் துறையின் தவறுகளுக்காகவும் சீரமைப்புக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்.<br /><br />சமூகம் ஜனநாயகமாக மாறுவதற்கும் அரசு ஜனநாயகமாக மாறுவதற்கும் நிறையத் தொடர்பு இருக்கிறது. நம் சமூகத்தில் இருக்கும் ஒடுக்குமுறையிலிருந்து வேறுபட்டதல்ல சாத்தான்குளக் காவலர்களின் அடக்குமுறை. இதையும் மௌனமாகக் கடந்துபோகத் தூண்டும் யத்தனம் அதற்கான உயிரோட்டமான சாட்சியம்!<br /><b><br />- ஜூலை, 2020, ‘இந்து தமிழ்’</b><br /></div>
சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-2796495914002314292020-06-16T18:07:00.000-07:002020-06-16T18:16:20.761-07:00நம் கிராமங்களையும் நகரங்களையும் மறுவரையறுப்போம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9FAX30LRr2UUUtjni_XQso_EOLCweyNfo-ALg2VOA9KLxEYc0ayyd3vrLZAj5Iu9A2lfIf8alZs_yeIIpxF7W5rdp4XQnNTnaoaezG8uiYt4qCv6B8rNuEvwtTyR_TkL5wXlmNlfGeWdV/s1600/delhi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="900" data-original-width="1600" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9FAX30LRr2UUUtjni_XQso_EOLCweyNfo-ALg2VOA9KLxEYc0ayyd3vrLZAj5Iu9A2lfIf8alZs_yeIIpxF7W5rdp4XQnNTnaoaezG8uiYt4qCv6B8rNuEvwtTyR_TkL5wXlmNlfGeWdV/s640/delhi.jpg" width="640" /></a></div>
<br />
அன்புக்குரிய கேளிர், வணக்கம்!<br />
<br />
உலகின் பழமையான விவாதம் ஒன்று இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்தில் மீண்டும் உயிர் பெறுகிறது. ‘நகரமா, கிராமமா; எது நம் நீடித்த நிம்மதியான வாழ்க்கைக்கு உகந்தது?’ லண்டன், நியூயார்க், மாஸ்கோ, சாவ் பாவ்லோ, மும்பை என்று மனித குலம் நம்பும் கனவு நகரங்கள் பலவும் கரோனா தொற்றுக்கு அதிகம் இலக்காகி இருப்பதும், நகரங்களை ஒப்பிட நெரிசலும் நெருக்கடியும் அற்ற கிராமங்கள் பாதுகாப்பாக இருப்பதும் இந்த விவாதத்துக்குக் கூடுதல் உத்வேகம் தந்திருக்கிறது. உலகின் பல நாடுகளில் நகரங்களில் வாழ்வோர் இன்று அங்கிருந்து வெளியேற ஆர்வத்தோடு இருப்பதாகச் சொல்கிறார்கள். குறைந்தபட்சம் நகரின் மையத்திலிருந்து விளிம்புக்கு, புறநகருக்கேனும் சென்றிட வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். இத்தகு உணர்வுகளை எப்படிப் புரிந்துகொள்வது?<br />
<br />
பொதுவாக, நகரங்களை நவீனத்துடனும், கிராமங்களைப் புராதனத்துடனும் பொருத்திப் பார்க்கும் மனோபாவம் உலகம் முழுக்க நிலவுகிறது. உண்மை அப்படி இல்லை என்றாலும்கூட. அழிவில் புதையுண்டுபோன சிந்து சமவெளி, கீழடி தொடங்கி தம்மை மீட்டுருவாக்கியபடியே வந்திருக்கும் ஏதென்ஸ், ரோம், லண்டன் வரை நமக்குச் சொல்வது, நகரங்களின் புராதனத்தையும்தான். தீவிரமான விமர்சனங்களை நகரங்கள் மீது கொண்டிருந்தாலும் ஏன் மனித குலம் இடையறாது நகரங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது? ஏனென்றால், வாழ்க்கையை நேற்றைய புதுமையும்கூட மூடிடாத வகையில் ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கும் பண்பை நகரங்கள் பெற்றிருக்கின்றன. அப்படியென்றால், கிராமங்கள் எப்படி நீடிக்கின்றன? அவை இன்றைய புதுமையையும் வாழ்க்கையின் நெடிய பழமையோடு இணைக்க முற்படுகின்றன. ஆக, மனித குலத்தின் புராதன புதுப்பிப்பு சக்தி நகரங்கள் என்றால், புராதனத்தைத் தக்கவைக்கும் சக்தி கிராமங்கள். இரண்டுக்கும் இடையிலான சமநிலை முக்கியம்.<br />
<a name='more'></a><br />
இந்தியாவைப் பொறுத்த அளவில் சுதந்திர இந்தியாவைத் தீர்மானிப்பதிலேயே இந்த விவாதம் பெரும் செல்வாக்கு செலுத்தியது. உலகப் போக்கிலிருந்து விலகி தேசப் பிதா காந்தி இந்தியாவுக்குக் கிராமத்தன்மை கொடுக்க முற்பட்டார். காந்திக்கு மாற்றுச் சிந்தனையாளர்களான பெரியார், நேரு, அம்பேத்கர், அண்ணா என ஏனைய பலரும் தம்முடைய தாயகத்துக்கு நகரத்தன்மையைக் கொடுக்க முற்பட்டனர். கிராமங்களையும் சிறிய அளவிலான நகரங்களாக இவர்கள் பார்க்க ஆசைப்பட்டபோது நகரங்களையும் பெரிய அளவிலான கிராமங்களாகப் பார்க்க காந்தி ஆசைப்பட்டார்.<br />
<br />
நினைக்கும்போதே ஆலைகளின் இடையறாத பெரும் சப்தமும், நெரிசலான போக்குவரத்தும், வளங்களைச் சுரண்டும் பேராசையும் மிகுந்த நகரங்களைக் காட்டிலும், காந்தியின் அமைதியான உன்னத கிராமம் எளிதாக எல்லோரையும் ஈர்ப்பது. ஆனால், காந்தியின் உன்னத கிராமத்தை நோக்கி நடப்பவர்கள் வழியில் குண்டாந்தடியுடன் நிற்கும் நகரங்களின் தீவிர ஆதரவாளரான அம்பேத்கரை எதிர்கொள்ள வேண்டும். அவரிடமிருந்து தப்பித்தல் கஷ்டம். ஏனெனில், அவர் கையில் வைத்திருக்கும் குண்டாந்தடியின் பெயர் சத்தியம்.இந்தியக் கிராமங்களின் சீழ்பிடித்த சாதிய நிதர்சனத்தை அவர் தோலுரித்து நம் முன் வீசுகிறார். உணவு, உடை, உறையுள் ஆகியவற்றைப் போலவே சுயமரியாதையும் கண்ணியமும் நிறைந்த ஜனநாயக வாழ்க்கைச் சூழல் மனிதர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும், கிராமங்கள் எவ்வளவு ஒடுக்குமுறைத்தன்மையைக் கொண்டிருக்கின்றன என்பதையும் நமக்கு அவர் உணர்த்துகிறார். அதே சமயம், அம்பேத்கர் நம்பிக்கையோடு பார்த்த நகரங்களும் இந்தியாவில் சகலருக்குமான சமூக விடுதலைக்கு வழி வகுக்கவில்லை. தலித்துகளோடு அதே வாழ்க்கைப்பாட்டிலுள்ள ஏனைய சாதி மக்களையும் நகர்ப்புறச் சேரிகள் உள்ளடக்கியதுதான் இந்திய நகரங்களின் உச்சபட்ச சாதனை. ஒப்பீட்டளவில், கிராமங்களைக் காட்டிலும் பல மடங்கு தாராள சுதந்திர வெளியாக நகரங்கள் திகழ்கின்றன என்றாலும், குறைந்தபட்ச சமூகப் பாதுகாப்புகூட இல்லாமல் கூட்டம் கூட்டமாக அகதிகளைப் போல இன்று நகரங்களிலிருந்து சொந்த கிராமங்களை நோக்கி புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியேறும்போது அம்பேத்கரின் நகரம் தொடர்பிலான நம்பிக்கையும், காந்தியின் கிராமம் தொடர்பிலான கனவுபோலவே உருக்குலைந்து வழிந்தோடுகிறது.<br />
<br />
எப்படியாயினும் நாம் தோற்றுவிட்டோம். நம்மால் கிராமங்களையும் ஜனநாயகப்படுத்திச் செழுமைப்படுத்த முடியவில்லை; நகரங்களையும் பசுமைத்தன்மையோடு எல்லோருக்குமானதாக வளர்த்தெடுக்க முடியவில்லை. நகரம் - கிராமம் இரு அமைப்புகளையுமே நம்முடைய இன்றைய பார்வையும் கொள்கைகளும் வெவ்வேறு வகைகளில் சுரண்டுகின்றன. இரண்டையுமே நாம் பயன்படுத்திக்கொண்டாலும், இரண்டின் மீதுமே நமக்கு வரலாற்று வெறுப்பு இருக்கிறது. நம்முடைய முன்னோடிகளும் இதற்கு விதிவிலக்குகளாக இல்லை. காந்தியினுடையது நகர வெறுப்பு என்றால், அம்பேத்கருடையது கிராம வெறுப்பு. கிராமங்களையும் நகரங்களையும் எதிர் எதிரே நிறுத்துவதற்கு மாறாக இந்த முரணியக்கத்தைச் சமநிலையில் பராமரிப்பது தொடர்பில் நாம் யோசிப்பதே இன்றைய தேவை என்று தோன்றுகிறது.<br />
<br />
கிராமங்கள் – நகரங்கள் இடையிலான சமநிலைக் குலைவுக்கான முக்கியமான காரணம், ‘உற்பத்தி – சந்தை முறை’யில் நேரிட்ட சமநிலைக் குலைவு. சுற்றிலும் உள்ள கிராமங்களில் உற்பத்தி, அவற்றின் மையத்தில் உள்ள நகரத்தில் சந்தை என்று ஒன்றையொன்று நேரடியாகச் சார்ந்து இயங்குவதாக இந்த அமைப்பு நீடித்தவரை கிராமங்கள் – நகரங்கள் சமநிலையில் குலைவு இல்லை. தொழில்மயமாக்கலின் விளைவாக நகரங்கள் பெரும் ஆலைகளோடு உற்பத்திக் கேந்திரங்களாகவும் உருவெடுத்த பிறகு, புதிய ஜனநாயக மாற்றங்களும் சேர்ந்து, நகரமையச் சிந்தனையை அரசுகள் சுவீகரித்துக்கொள்ள நகரங்களின் கை ஓங்கியது. இப்போது மீண்டும் உற்பத்தியை நகரங்களுக்கு வெளியே கொண்டுசெல்வதை நாம் யோசிக்க வேண்டும்.<br />
<br />
சுயசார்பு தொடர்பில் நாம் நிறையப் பேசுகிறோம். எந்த ஒரு ஊரும் உணவுக்கு எப்படி முழுமையாக வெளிப் பிராந்தியத்தைச் சார்ந்திருக்க முடியாதோ அதேபோல, தொழில் வாய்ப்புகளுக்கும் முழுமையாக வெளிப் பிராந்தியத்தைச் சார்ந்திருக்க முடியாது. உணவு, தொழில் வாய்ப்புகள்போல, பசுமையான சூழலையும், ஜனநாயகச் சமநிலையையும் உள்ளடக்கியதுதான் சுயசார்பு. இவற்றை உருவாக்குவதில் அரசுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. அது வெறுமனே உபதேசங்களை வாரி வழங்கிவிட்டு சுயசார்பை முற்றிலுமாகத் தனிமனிதர்களின் பொறுப்பாக்கிவிட முடியாது.<br />
.<br />
<br />
சுயசார்பானது கூட்டுப்பொறுப்பு. ஊர்களுக்கான திட்டமிடல் இதில் முக்கியமான அம்சம்; அது ஒரு தொடர் பயணம். ஒவ்வொரு முடிவும் முக்கியமானது. பிரிட்டிஷார் 1853 ஏப்ரல் 16 அன்று 14 பெட்டிகளில் 400 பயணிகளோடு தொடங்கிய முதல் ரயில் சேவைக்கு அன்றைய பம்பாய்க்கு மாற்றாக வேறு ஒரு நகரத்தைத் தேர்ந்தெடுத்திருந்தால் இன்றைய மும்பை எப்படியானதாக இருந்திருக்கும்? 1911-ல் அன்றைய கல்கத்தாவிலிருந்து டெல்லிக்குத் தலைநகரை மாற்றாவிடில் இன்றைய கொல்கத்தா என்னவாக இருந்திருக்கும்? சுதந்திர இந்தியாவின் ஊர் கட்டுமானத் தோல்விகள் தலைநகர் டெல்லியின் விரிவாக்கத்திலேயே தொடங்கிவிட்டன. இந்தியா சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டதற்கும், குடியரசாக அறிவிக்கப்பட்டதற்கும் இடையிலான நான்கு ஆண்டுகளில் (1947-1951) மட்டும் 10 லட்சம் பேர் புதிதாக டெல்லிக்குள் வந்திருந்தனர்; அதாவது, மக்கள்தொகை இரட்டிப்பானது. பிரிவினைக் கலவரங்கள் உண்டாக்கிய புலம்பெயர்வே இதற்கான முக்கியமான காரணம் என்றாலும், அகதிகளின் நிரந்தரக் குடியேற்றத்துக்கான விரிவான ஏற்பாடுகளை இந்திய அரசு சிந்திக்கவில்லை. விளைவாக, டெல்லியைச் சுற்றியிருந்த கிராமங்களை விழுங்கியே அகதிகளின் குடியேற்றமும், அதன் வழியிலான நகர விரிவாக்கமும் நடந்தன. 1951-ல் 198 சதுர கி.மீ. பரப்பில் இருந்த டெல்லியின் நகர்ப்புற பகுதி, 1961-ல் 323 சதுர கி.மீ. பரப்புக்கு விரிந்தது. “இது தவிர்க்க முடியாத தற்காலிக ஏற்பாடாகிவிட்டது; நகரங்கள் சிறப்பாகத் திட்டமிடப்பட வேண்டும்” என்று அரசின் தோல்வியை ஒப்புக்கொண்டு பேசினார் முதல் பிரதமர் நேரு. ஆயினும், இந்தியா அதற்குப் பின்னரும் முறையாக நகரங்கள் - கிராமங்களைத் திட்டமிடவில்லை. நகரங்கள் - கிராமங்களின் உள்ளடகத்தில் உள்ள குறைகள் சீரமைக்கப்படவில்லை.<br />
<br />
பரவலான வளர்ச்சியை நீண்ட காலமாகப் பேசுகிறோம். ஆயினும், பெருநகரங்கள் சார்ந்தே வளர்ச்சி குவிகிறது. ஏன்? அங்குள்ள வாய்ப்புகள்தான் முக்கியமான காரணம். இயல்பாகவே வெவ்வேறு துறைசார் ஆளுமைகள் ஒரே ஊரில் திரளும்போது - கல்வி, வர்த்தகம், கலை, அறிவியல், அரசியல் அதிகாரத்தின் கூட்டு சக்தி ஒரே இடத்தில் வெளிப்படும்போது, அந்தக் கூட்டு சக்தியின் விளைவு நம்முடைய கற்பனைகளையும் கட்டுப்பாடுகளையும் விஞ்சிவிடுகிறது. அரசும் தன்னுடைய எல்லாத் துறைகளையும் ஒரே இடத்தில் குவிக்கும்போது பெருநகரங்கள் வீங்கிவிடுகின்றன.<br />
<br />
இந்தியாவிலேயே அதிகமான மக்கள்தொகையைக் கொண்டதும் – பிரேசிலுக்கு சமமானதுமான – உத்தர பிரதேசத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்புக்கு இணையான உற்பத்தி மதிப்பை மும்பை நகரம் மட்டுமே கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் நான்கில் மூன்று பங்கை சென்னை மட்டுமே கொண்டிருக்கிறது. இப்படி வளரும்போது நகரத்துக்குக் காய்கனி வழங்கிய படப்பைப் பகுதியையும் தொழிற்பேட்டையாக அது விழுங்கிவிடுகிறது. அதாவது, எல்லா நகரங்களையும்கூட அல்ல; சில பெருநகரங்களை மட்டுமே நாம் வளர்த்துக்கொண்டிருக்கிறோம். கூடவே நகரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களின் சமநிலையையும் குலைத்துவிடுகிறோம். ஒரு நகரத்தின் மையத்தில் இருப்பவர் அதே நகரத்தின் விளிம்பில் இருப்பவரைக் காட்டிலும், அவர் விரும்பும் வேலைக்குக் குறைந்தது மூன்று மடங்கு அருகில் இருக்கிறார் என்றால், கிராமங்களில் வசிப்பவர்களின் வாய்ப்புக்கான தொலைவை எப்படி விவரிப்பது?<br />
<br />
அதிகாரத்தை எப்படிப் பகிரவில்லையோ அப்படியே வாய்ப்புகளையும் நாம் பகிரத் தவறிவிட்டோம். அதுதான் நம்முடைய தவறுகளிலேயே பிரதானமானது. இப்போது இணை உருவாக்கம் தேவைப்படுகிறது. நாம் நீண்ட காலமாகக் கிராமங்களுக்கு நகரத்தன்மை அளிப்பதைப் பற்றிப் பேசிவந்திருக்கிறோம்; இனி நகரங்களுக்கும் கிராமத்தன்மை அளிப்பதைப் பற்றிப் பேச வேண்டும். பெருநகரங்களுக்கு ஒத்திசைவாக சிறுநகரங்கள், கிராமங்களையும் கிராமங்கள், சிறுநகரங்களுக்கு ஒத்திசைவாகப் பெருநகரங்களையும் கற்பனைசெய்ய வேண்டும். முக்கியமாக, எல்லாத் துறைகளும் ஓரிடத்தில் குவிவதை உடைக்க வேண்டும். இந்திய நகரங்களையும் கிராமங்களையும் மறுவரையறுப்பதற்கு இது மிக முக்கியமான தருணம். நம்மை நாம் புதுப்பித்துக்கொள்வோம்!<br />
<br />
<b>- ஜூன், 2020, ‘இந்து தமிழ்’ </b></div>
சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-48797122660265229732020-06-11T10:16:00.001-07:002020-06-11T17:42:29.250-07:00ஏன் அன்பழகனின் மரணம் பேசப்பட வேண்டியதாகிறது?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMRRI0UX6Q4kpjD82LdZaCZFrpdNoYmSQrxXzKvr1jWaF80tO2iSeZfM0jABfkY0Nil7M8pjw5o36rJNUPCgfehXy_X1Z9iTyDxupvJUZw5zrsHmDbmiAN120rI3XSXhRCYHXG8_hflWJm/s1600/anbalagan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="900" data-original-width="1600" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMRRI0UX6Q4kpjD82LdZaCZFrpdNoYmSQrxXzKvr1jWaF80tO2iSeZfM0jABfkY0Nil7M8pjw5o36rJNUPCgfehXy_X1Z9iTyDxupvJUZw5zrsHmDbmiAN120rI3XSXhRCYHXG8_hflWJm/s640/anbalagan.jpg" width="640" /></a></div>
<br />
இந்தியாவில் கரோனாவுக்குப் பலியான முதல் மக்கள் பிரதிநிதி என்பதால் மட்டும் அல்ல; வேறு ஒரு விஷயத்துக்காகவும் திமுகவின் சட்டமன்ற உறுப்பினரான அன்பழகனின் மரணம் பேசப்பட வேண்டியதாகிறது. தமிழ்நாட்டின் பொதுப்புத்தியில் அரசியலர்கள் மீது உருவாக்கப்பட்டிருக்கும் மோசமான பிம்பத்தின் மீது இந்த மரணம் தாக்குதல் நடத்துகிறது. அது முக்கியமானது.<br />
<br />
<a name='more'></a><br /><br />
தமிழ்நாட்டின் பொதுப்புத்தி விதந்தோதும் எந்தக் கூறுகளையும் கொண்டதல்ல அன்பழகனின் கதை என்பதே இங்கு விசேஷம் ஆகிறது. அன்பழகன் ஒரு எளிய குடும்பத்திலிருந்து வந்தவர் அல்ல; பேச்சு – எழுத்து என்று கருத்துத் தளத்தில் தன்னைக் கரைத்துக்கொண்டவர் அல்ல; மக்களுக்காகப் பல ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர் அல்ல; அரசியலில் ஈடுபட்டதால் தன்னுடைய சொத்துகளை இழந்து வீதியில் தன் குடும்பத்தை நிறுத்திச் சென்றவரும் அல்ல. இன்னும் சொல்லப்போனால், மேலோட்ட வர்ணனைகள் மூலமாக ஒரு எதிர்மறைப் பிம்பத்தை அன்பழகன் மீது எளிதாகக் கட்டிவிடலாம். அரசியல் பின்னணியுள்ள ஒரு வசதியான குடும்பத்தின் வாரிசு, அரசியல் பலத்தைத் தன் செல்வத்தையும் கூட்டிக்கொள்ளப் பயன்படுத்தியவர், பிரச்சினை என்று வந்தால் முட்டி மோதிப் பார்க்க ஆட்கள் சகிதம் மல்லுக்கு நிற்பவர், பஞ்சாயத்துகளில் முன்னால் உட்காருபவர் என்றெல்லாம் சொல்லி அவர் வாழ்வைப் பலர் அர்த்தமற்றதாக ஆக்கிவிடலாம்.<br />
<br />
சரி, இப்படிப்பட்ட ஒருவரின் மரணம் ஏன் பேசப்பட வேண்டியதாகிறது? ஏனென்றால், இப்படிப்பட்டவர்கள்தான் இந்தத் தலைமுறைக் கள அரசியலின் ரத்தமும் சதையுமான தளகர்த்தர்கள். எல்லா விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டும் மக்கள் மத்தியில் தங்களைக் கரைத்துக்கொண்டிருப்பவர்கள். எளிய மக்கள் ஒரு பிரச்சினை என்று நாடும்போது அவர்களோடு ‘வா, பார்க்கலாம்’ என்று சொல்லி உடன் செல்பவர்கள். வறட்சியோ, புயலோ, வெள்ளமோ, கொள்ளைநோயோ எந்தப் பாதிப்பு என்றாலும் தன் சொந்தக் காசைச் செலவிட்டு, மக்களுக்கு உடனடி உதவிகளைத் தருபவர்கள். அதிகார அமைப்புடன் சாமானிய மக்கள் பேசுவதற்கான இடத்தைப் பராமரிப்பவர்கள். கட்சித் தலைமையிடம் உள்ளூர் நிலைமையைப் பேசுபவர்கள். கருத்துத் தளத்திலிருந்து அரசியல் கட்சிகளை அன்றாடத் தளத்துக்குக் கடத்துபவர்கள்.<br />
<br />
இன்று இந்தியாவிலேயே அதிக வியாபாரம் நடக்கும் பகுதிகளில் ஒன்றான தியாகராய நகரின் வரலாற்றோடும், திராவிட இயக்க வரலாற்றோடும் இணைத்துப் பார்க்க வேண்டிய வாழ்க்கை அன்பழகனுடையது. நூற்றாண்டைத் தொடும் தியாகராய நகரானது நீதிக் கட்சியின் பெயர் பெற்ற முதல்வரான பனகல் அரசரின் சிந்தனையில் உருப்பெற்றது. ஐரோப்பாவின் சில மாதிரிகளைப் பின்பற்றிக் கட்டமைக்கப்பட்டதாகக் கூறப்படும் தியாகராய நகரின் பூங்காக்கள், வீதிகளுக்கு திராவிட இயக்க முன்னோடிகளின் பெயர்கள் சூட்டப்பட்டதில் தீர்க்கமான பார்வை உண்டு. லண்டன், பாரீஸ், அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் கல்கத்தா, பம்பாய், மதறாஸின் பிரசித்தி பெற்ற பூங்காக்கள், வீதிகள் தாங்கியிருந்த மன்னர்களின், பிரபுக்களின் பெயர்களை இந்தச் சாமானியர்களின் பெயர்கள் மாற்றீடு செய்தன. பிற்பாடு, வடிகாலுக்காகக் குழி வெட்டும்போது உயிரிழந்த தொழிலாளர்கள் பெயரிலும் வீதிகள் அமைந்தன. சாமானியர்களை அதிகாரப்படுத்தும் உந்துசக்தி தியாகராய நகரின் உருவாக்கத்திலேயே பொதிந்திருக்கிறது. நிறுவனங்களினூடாக சாதாரணர்களும் இயங்குவதற்கான தாராளவெளியை அது எப்போதும் பராமரிக்கிறது.<br />
<br />
திமுகவை அண்ணா தொடங்கியபோது அதன் துடிப்பான அடித்தட்டுத் தொண்டர்களில் ஒருவராக இருந்தவர் பழக்கடை கி.ஜெயராமன். தியாகராய நகரில் இருந்த அவருடைய பழக்கடையே பிற்பாடு அவருடைய மகன் அன்பழகனுக்கும் அடையாளம் ஆனது. திமுகவின் முன்னணித் தலைவர்கள் அனைவருக்கும் அறிமுகமானவர் என்றாலும், கட்சியில் ஒரு களத் தொண்டராகவே தன்னை இருத்திக்கொண்டவர் ஜெயராமன். தந்தையின் வழியில் திமுக அபிமானத்திலேயே வளர்ந்த அன்பழகன் தந்தை போலன்றி தீவிர அரசியலுக்குள் நுழைந்தார். உலகமயமாக்கலுக்குப் பிந்தைய கால் நூற்றாண்டில் ஆண்டுக்கு சுமார் ஐம்பதாயிரம் கோடி வர்த்தகம் நடக்கும் சந்தையாக விரிந்த தியாகராய நகரின் அரசியல் டெல்லி, மும்பை, கொல்கத்தாவின் பெருநகர ஆட்டங்களோடு பிணைந்தது. துணிச்சலான அன்பழகன் தியாகராய நகரோடு இணைந்து வளர்ந்தார்.<br />
<br />
தலைநகர் சென்னையில் திமுகவின் எந்தப் போராட்டம், பேரணி, கூட்டத்துக்கும் பெரும் கூட்டத்தைத் திரட்டிவந்தவர் அன்பழகன். ஆட்சியதிகாரத்தைக் கையில் வைத்திருந்தால் வாக்குச்சாவடியையும்கூட கையில் வைத்துக்கொள்ள முடியும் எனும் அளவுக்கு மலிந்த இந்தியத் தேர்தல் அரசியலின் அதிகாரச் சண்டித்தனத்துக்கு எதிரே வரிந்து கட்டிக்கொண்டு நிற்க எதிர்க்கட்சிகளுக்கு ஆள் பலம் முக்கியம்; அந்தப் பலம் அன்பழகனிடம் இருந்தது. சிறை செல்லும் போராட்டமாக இருந்தாலும் அநாயசமாகப் பத்தாயிரம் பேரை அன்பழகனால் திரட்ட முடிந்தது. அடித்தட்டு மக்களோடு அவ்வளவு பிணைப்பு அவருக்கு இருந்தது. அதுதான் அவருடைய அரசியலின் உயிர்நாடி. அதுதான் இப்போது அவருடைய உயிர் பறிபோகவும் காரணமாக இருந்திருக்கிறது.<br />
<br />
அன்பழகன் பேசும் சில காணொலிகளை நான் பார்த்தேன். கரோனா தொற்று தொடர்பில் அவர் போதிய விழிப்புணர்வைப் பெற்றிருந்தவராகவே தெரிகிறார். கூடுமானவரை வீட்டுக்குள்ளேயே இருத்தல், சமூக இடைவெளியைப் பராமரித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்திகூட அவர் ஒரு காணொலியில் பேசுகிறார். கட்சியினருடனும் கட்சியின் தலைமையுடனும் உரையாட கணினியையும் இணையத்தையும் அன்றாடம் பயன்படுத்தியிருக்கிறார். அதேசமயம், மக்களைச் சந்திக்கையில் கறாரான சமூக இடைவெளியைப் பராமரித்தல் சாத்தியமே இல்லை என்பதை அறிந்திருந்தும் மக்கள் சந்திப்பை அவர் நிறுத்தவே இல்லை. முகக்கவசமும், கையுறையும் அணிந்தபடி எளிய மக்களுக்கான உதவிகளை, அவர்களுக்கான அத்தியாவசிய மளிகைப் பொருட்களை வழங்க நெரிசலான குடிசைப் பகுதிகளுக்கு அபாயத்தை உணர்ந்தும் தினமும் சென்றிருக்கிறார். துணிந்தே உயிரை விட்டிருக்கிறார். மக்களுக்காக உரமாகியிருக்கிறார்.<br />
<br />
ஒரு அன்பழகன் இறந்ததால் இப்போது கவனத்துக்கு வந்திருக்கிறார்; அரசியலர்கள் மீதான நம்முடைய மோசமான வெறுப்பைச் சுமந்தபடியே பல அன்பழகன்கள் களத்தில் எப்போதும் பணியாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். கிருமித் தொற்றுக்கு அஞ்சி, வீட்டையே தீவாக மாற்றிக்கொண்டு, வீட்டுக்கு வரும் காய்கறிகளையும் கிருமிநாசினியால் கழுவி, பணத்தைக்கூட துவைத்துப் பயன்படுத்தியபடி பாதுகாப்பைப் பேணும் சூழலை அன்பழகன்களும் தேர்ந்தெடுக்கலாம். மாறாக, கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட நிலையிலும், தன் சொந்த செலவில் கரோனா நிவாரண உதவிகள் அளிக்க மக்களை நோக்கி அவர்களைத் தள்ளுவது எது? வெறுமனே பதவி, அதிகாரத்துக்கான முனைப்பு என்று இதைப் புறந்தள்ளிவிட முடியுமா? மிக முக்கியமாக, நாம் தீர்மானித்திருக்கும் அரசியல் மதிப்பீடுகளில் அன்பழகன் போன்ற சாமானிய கள அரசியல் செயல்பாட்டாளர்களுக்கான சமூக மதிப்பு என்ன?<br />
<br />
சாதாரண நாட்களில் அன்பழகன்களின் வாழ்வும் மரணமும் சாதாரணமாகக் கடந்துவிடும். ஆனால், ஒரு கொள்ளைநோய் காலகட்டமானது அரசியலையும் அரசியலர்களையும் இழிந்த பார்வையுடன் நோக்கும் போலியான நம்முடைய மேட்டிமை மதிப்பீடுகளின் மீது கல் எறிகிறது. கரோனா காவலர்கள் என்று மருத்துவர்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள் வரை வரிசைப்படுத்தி வாழ்த்தும் வரிசையில் அன்பழகனைப் போல ஒவ்வொரு கட்சியிலும் மக்களுக்காக அர்ப்பணிப்போடு களத்தில் செயலாற்றும் அரசியலர்கள் இடம்பெறுவார்களா? முடியாது என்றால், ஏன் அது நமக்கு சாத்தியமாகவில்லை? அதற்கும் நம் மனதிலுள்ள மேட்டிமைக்கும் சம்பந்தம் இல்லையா?<br />
<b><br /></b>
<b>- ஜூன், 2020, ‘இந்து தமிழ்’</b></div>
சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-42339642491806068702020-05-25T23:41:00.003-07:002020-05-26T02:10:37.339-07:00சூப்பர் ஸ்டார் கல்கி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHIpGFClak-GHtbaaGmsDHYsJKv2N9MhwbqMz-19H_Kt9usqukjmwYkKT1lyI-F62J0W6FmbMk-QKLXHOh7m9qL2srMt6vUK8fXhk1nZ6iGJtjU8LBZJ4rTYw6yfD6NvRAZzhEEUMvgwKd/s1600/kalki1.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="384" data-original-width="497" height="494" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHIpGFClak-GHtbaaGmsDHYsJKv2N9MhwbqMz-19H_Kt9usqukjmwYkKT1lyI-F62J0W6FmbMk-QKLXHOh7m9qL2srMt6vUK8fXhk1nZ6iGJtjU8LBZJ4rTYw6yfD6NvRAZzhEEUMvgwKd/s640/kalki1.jpg" width="640" /></a></div>
<br />
<br />
அவையோர் அனைவருக்கும் வணக்கம்!<br />
<br />
தமிழ்நாட்டில்
தீவிரமான வாசிப்பைக் கொண்ட, புதிதாக எழுத வரும் எவரும் தன்னுடைய பயணப்
பாதையின் குறுக்கே கல்கியைச் சந்திக்காமல் இருக்கவே முடியாது. தமிழ்ப்
பத்திரிகை உலகைப் பொறுத்தமட்டில், அவர்தான் முதல் சூப்பர் ஸ்டார்; எப்படி
சினிமாக்காரர்களுக்கு எம்.கே.தியாகராஜ பாகவதரோ அப்படி. ஆகையால், என்னுடைய
ஆதர்ஷங்களில் ஒருவராகவும் கல்கி நிலைப்பெற்றதில் எந்த ஆச்சரியமும் இல்லை.<br />
<br />
நான்
நேரடியாக கல்கியிடம் சென்றவன் இல்லை; ரொம்ப சின்ன வயதிலேயே அவர் மறைமுகமாக
என்னை வந்தடைந்திருந்தார். ‘கல்கி குழுமம்’ கொண்டுவந்த ‘கோகுலம்’ என் சிறு
பிராயத்தை ஆக்கிரமித்திருந்த இதழ்களில் ஒன்று. அங்கிருந்து அடுத்தகட்டம்
நோக்கி நகர்ந்தபோது ‘கல்கி’ இதழ் நான் புதிதாகப் படிக்க ஆரம்பித்த
இதழ்களின் பட்டியலில் இருந்தது. அப்புறம் கல்கியின் எழுத்துக்கள். இப்படிப்
படிப்படியாக கல்கியின் வாசகன் ஆகியிருந்தேன். பின்னாளில் அவரும்
காந்தியர்; காவிரிப்படுகையைச் சேர்ந்தவர் என்று அறிந்தபோது சந்தோஷம்
அதிகமானது. நானும் ஒரு பத்திரிகையாளனானபோது இதழியலில் என்னுடைய
முன்னோடிகளில் அவரும் ஒருவராகிவிட்டார். கல்கியின் நினைவைப் போற்றும்
நிகழ்வில் கலந்துகொள்வதையும், அவருடைய கட்டுரை நூல் வெளியீட்டில்
பங்கேற்பதையும் பொருத்தமானதாகவே கருதுகிறேன்.<br />
<br />
நான்
கல்கியை ‘பத்திரிகையுலக முதல் சூப்பர் ஸ்டார்’ என்று வர்ணித்ததில் ஆழமான
அர்த்தம் உண்டு. தமிழ்ப் பத்திரியுலகில் கல்கி கோலோச்சிய கால்
நூற்றாண்டுதான் அதன் முதல் பொற்காலம். பலதுறை ஜாம்பவான் எஸ்.எஸ்.வாசனால்
வாங்கப்பட்டு, ‘ஆனந்த விகடன்’ புத்தெழுச்சி பெறும் 1931-ல்தான்தான் அதன்
விற்பனை 1200 பிரதிகளில் இருந்து 16000 ஆக உயர்ந்தது. வெளியில் இருந்து
அதுவரை எழுதிவந்த கல்கி, அதன் பொறுப்பாசிரியராக இணைகிறார். அடுத்து,
எஸ்.எஸ்.வாசனுடன் இணைந்து அங்கு கல்கி பணியாற்றிய 11 ஆண்டுகள்; தொடர்ந்து
1941 முதல் சதாசிவத்துடன் இணைந்து அவர் உருவாக்கிய ‘கல்கி’யில் அவர்
மறையும் 1954 வரை பணியாற்றிய 14 ஆண்டுகள்... ஆக இந்தக் கால் நூற்றாண்டு
தமிழ் இதழியலும் அதன் வாசகப் பரப்பிலும் பெரும் மாற்றங்களை நிகழ்த்திய
முக்கியமான காலகட்டங்களில் ஒன்று.<br />
<a name='more'></a><br />
தமிழ்நாட்டு
அரசியல் வரலாற்றோடு இந்தக் காலகட்டத்தைப் பொறுத்தினால், இதே
காலகட்டத்தில்தான் பெரியாரும் திராவிட இயக்கமும் விஸ்வரூபம்
எடுக்கிறார்கள். நீதிக் கட்சி சிதைந்து திராவிடர் கழகம் உருவெடுக்கிறது.
இதே காலகட்டத்தில்தான் திராவிட இயக்கத்தின் மாபெரும் மக்கள் தலைவராக அண்ணா
உருவெடுக்கிறார்; 1949-ல் திராவிட முன்னேற்றக் கழகம் பிறக்கிறது. ராஜாஜி
அரசியல் வாழ்வின் எழுச்சியும் வீழ்ச்சியுமாக அவருடைய வாழ்வின் உச்சகட்டமாக
இந்தக் காலகட்டமே இருக்கிறது. நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம்,
எல்லோருமே பத்திரிகையையும் எழுத்தையும் முக்கியமான அரசியல் ஆயுதமாக
ஏந்தியிருக்கின்றனர். சின்னதும் பெரிதுமாக சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட
பத்திரிகைகள் வந்துகொண்டிருந்த இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாடு தீவிரமாகவே
வாசித்திருக்கிறது. 1953-ல் இந்தியாவிலேயே ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து
மொழிகளிலும் அதிகம் விற்கும் இதழாக ‘கல்கி’ உருவெடுத்தபோது, 71 ஆயிரம்
பிரதிகள் அது விற்றிருக்கிறது. தமிழ் பேசும் மக்களின் ஜனத்தொகை
அக்காலகட்டத்தில் இரண்டு கோடி சொச்சம் என்பதையும், அன்றைக்கு நூற்றுக்கு
நாற்பது பேர்தான் படிப்பில் அடியெடுத்துவைப்பதற்கான கட்டமைப்பே
தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்களில் இருந்தது என்பதையும் நாம் இங்கே நினைவில்
கொண்டால், கல்கியின் சாதனை எத்தகையது என்பது புரியவரும்.<br />
<br />
கல்கியின்
ஆகிருதிமிக்க அந்த எழுத்துகள், இன்றைக்கும் செல்வாக்கு செலுத்துகின்றன.
இந்தியாவின் பெரிய புத்தகக் காட்சிகளில் ஒன்றான, இந்தச் சென்னைப்
புத்தகக்காட்சியிலும் கல்கியின் புத்தகங்கள் விற்றுத் தீர்கின்றன.
கல்கியின் புனைவுகளை அவருடைய பத்திரிகை எழுத்தின் நீட்சியாகவே நான்
பார்க்கிறேன். எழுநூறுக்கும் மேற்பட்ட அரங்குகள் நிறைந்த இந்தப் புத்தகக்
காட்சியில், குறைந்தது நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளில் அவருடைய
புத்தகங்கள் இருந்தன. பத்துக்கும் அதிகமான பதிப்பகங்கள் அவருடைய புகழ்பெற்ற
‘பொன்னியின் செல்வன்’ புதினத்தை பதிப்பித்துக்கொண்டே இருக்கின்றன.
கல்கியின் கட்டுரை நூல்களும் அவர் மறைந்து அறுபதாண்டுகளுக்குப் பிறகும்
தொடர்ந்து பதிப்பிக்கப்படுகின்றன; வாசிக்கப்படுகின்றன. <br />
<br />
ஆளுமைகளைக்
கொண்டாடுவதில் தமிழ்ச் சமூகம் வஞ்சனை வைக்காது என்றாலும், எந்த இடத்திலும்
சம்பந்தப்பட்ட ஆளுமையின் முழு ஆகிருதியோடு அது அங்கீகரிக்கவோ, போற்றவோ
இன்னும் பழகவில்லை என்பதையும் சுட்டிக்காட்டத்தான் வேண்டும். மறைந்த
முதல்வர் கருணாநிதியைப் பற்றிப் பேசுகையில், ‘கலைஞரைப் போலக் கடின
உழைப்பாளி கிடையாது’ என்று மெச்சி அவர் கதையை முடிப்பதுபோலத்தான். ஜனநாயக
அரசியலில் தொடர்ந்து அறுபதாண்டு காலம் - தன்னுடைய மரணம் வரையில் ஆட்சி
மன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரை, தமிழ்நாட்டின் மிக நீண்ட நாள்
முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், நவீன தமிழகத்தின் சிற்பிகளில் ஒருவர்
என்கிற அடையாளத்துக்குரியவரை ஒரு உடலுழைப்புத் தொழிலாளியின் சிறப்பைக்
கூறும் வாசகத்தோடு வரையறுப்பதானது அவருக்கு முழு மரியாதை செய்வதாகாது.<br />
<br />
கல்கி போற்றப்படுகிறார்.
எதற்காக? அவருடைய எழுத்துகளுக்காக! ஆனால், அது மட்டுமா கல்கி? ஒரு
வெற்றிகரமான வெகுஜன எழுத்தாளர், பத்திரிகையாளர் என்பதோடு, கல்கியிடம் நாம்
போற்ற வேண்டியதும், நினைவுகூர வேண்டியதும், கவனிக்கத் தவறியதுமான மிக
முக்கியமான அம்சம் என்று நான் கருதுவது, தனித்துவமிக்க அவருடைய
பத்திரிகையாசிரியர்த்துவம் - எடிட்டர்ஷிப். ஜனநாயகத்திலும், அரசியல் என்று
தான் நம்பிய கொள்கையிலும் அவர் காட்டிய உறுதி. கடந்துவந்த காலங்களைவிடவும்
கல்கி இன்று கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறார் என்று கருதுகிறேன்.<br />
<br />
இன்றைக்கு
இந்தியா முழுக்க பத்திரிகைகள் சரிந்துகொண்டிருக்கின்றன; குறிப்பாக, பருவ
இதழ்கள் செல்வாக்கிழக்கின்றன; பல இதழ்கள் மூடப்படுகின்றன. கல்கியின்
காலத்தில் இல்லாத பெரும் எழுத்தறிவுமிக்க கூட்டம், குக்கிராமங்களையும்
சென்றடையக் கூடிய போக்குவரத்து வலை, கடைசி வாசகனுக்கும் பத்திரிகை
வெளியாவதைத் தெரிவிக்கும் வசதி, மேம்பட்ட நவீன தொழில்நுட்பம், பெரும்
முதலீடுகள்… இவ்வளவு இருந்தும் பத்திரிகைகள் சரியக் காரணம் என்ன?
என்னென்னமோ காரணம் சொல்கிறார்கள்; நான் மிக முக்கியமாக நினைப்பது
பத்திரிகையாசியர் படுகொலைகள் - அதாவது பத்திரிகைகளில் ‘ஆசிரியர்’ என்ற
பணியிடத்துக்கான செல்வாக்கின் வீழ்ச்சி - இதைத் தொடர்ந்தே பத்திரிகைகள்
சாகின்றன.<br />
<br />
ஆகப் பெரும்பாலான பத்திரிகை நிறுவனங்கள்
இன்றைக்குப் பத்திரிகையின் பெயர் - பிராண்ட் - இருந்தால் போதும்,
சந்தைப்படுத்திவிடலாம் என்று நினைக்கின்றன. என்னிடம் பல நூறு கோடி
இருக்கிறது. அதனால் பல கப்பல்களை வாங்கிவிடுவேன். அதற்கு கேப்டன் என்று
ஒருவர் தேவையில்லை அல்லது கேப்டனுக்கு முற்றதிகாரங்கள் தேவையில்லை என்று
ஒரு கப்பல் நிறுவனம் முடிவெடுப்பதற்கு ஒப்பானதுதான் இது. அப்படி
முடிவெடுக்கப்பட்ட கப்பல்கள் கதி என்னவாகும்? பத்திரிகைத் துறையில்
ஆசிரியர்களின் எல்லைகளை மட்டுப்படுத்துவதானது ஒட்டுமொத்த ஆசிரியர்
இலாகாவின் மீதான தாக்குதல்தான். விவசாயத்தில் இருந்துகொண்டே ஒரு பண்ணையாளர்
விவசாயிகளுக்கு எதிராகச் சிந்திப்பதற்கு ஒப்பானது இது. வெள்ளாமை
என்னவாகும்? <br />
<br />
இன்றைக்கு இந்தியா முழுக்க பத்திரிகைகள் சரிந்துகொண்டிருக்கின்றன; குறிப்பாக, பருவ இதழ்கள் செல்வாக்கிழக்கின்றன; பல இதழ்கள் மூடப்படுகின்றன. கல்கியின் காலத்தில் இல்லாத பெரும் எழுத்தறிவுமிக்க கூட்டம், குக்கிராமங்களையும் சென்றடையக் கூடிய போக்குவரத்து வலை, கடைசி வாசகனுக்கும் பத்திரிகை வெளியாவதைத் தெரிவிக்கும் வசதி, மேம்பட்ட நவீன தொழில்நுட்பம், பெரும் முதலீடுகள்… இவ்வளவு இருந்தும் பத்திரிகைகள் சரியக் காரணம் என்ன? என்னென்னமோ காரணம் சொல்கிறார்கள்; நான் மிக முக்கியமாக நினைப்பது பத்திரிகையாசியர் படுகொலைகள் - அதாவது பத்திரிகைகளில் ‘ஆசிரியர்’ என்ற பணியிடத்துக்கான செல்வாக்கின் வீழ்ச்சி - இதைத் தொடர்ந்தே பத்திரிகைகள் சாகின்றன.<br />
<br />
ஆகப் பெரும்பாலான பத்திரிகை நிறுவனங்கள் இன்றைக்குப் பத்திரிகையின் பெயர் - பிராண்ட் - இருந்தால் போதும், சந்தைப்படுத்திவிடலாம் என்று நினைக்கின்றன. என்னிடம் பல நூறு கோடி இருக்கிறது. அதனால் பல கப்பல்களை வாங்கிவிடுவேன். அதற்கு கேப்டன் என்று ஒருவர் தேவையில்லை அல்லது கேப்டனுக்கு முற்றதிகாரங்கள் தேவையில்லை என்று ஒரு கப்பல் நிறுவனம் முடிவெடுப்பதற்கு ஒப்பானதுதான் இது. அப்படி முடிவெடுக்கப்பட்ட கப்பல்கள் கதி என்னவாகும்? பத்திரிகைத் துறையில் ஆசிரியர்களின் எல்லைகளை மட்டுப்படுத்துவதானது ஒட்டுமொத்த ஆசிரியர் இலாகாவின் மீதான தாக்குதலும்தான். விவசாயத்தில் இருந்துகொண்டே ஒரு பண்ணையாளர் விவசாயிகளுக்கு எதிராகச் சிந்திப்பதற்கு ஒப்பானது இது. வெள்ளாமை என்னவாகும்?<br />
<br />
அடிப்படையில் ஒவ்வொரு பத்திரிகையும் ஒரு மக்கள் இயக்கம்; சமூகத்தில் ஏதோ ஒரு மக்கள் திரளை அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது; அவர்களுடைய அபிலாஷைகளை போஷித்து வளர்க்கிறது; தன்னுடைய மக்களுடைய குறிப்பிட்ட தேவையை அந்தப் பத்திரிகை உணர்ந்து, அதை நிறைவேற்றும் வரையில்தான் அது உயிரோடு இருக்க முடியும். பத்திரிகை நிறுவனங்களும் வணிகம் சார்ந்தவை என்றாலும், ஒரு பத்திரிகை நிறுவனம் முழு வணிக நிறுவனம் கிடையாது. அப்படி ஒரு பத்திரிகை தன்னையே நினைத்துக்கொள்ளத் தொடங்கும்போது அதன் அழிவு தொடங்குகிறது. பத்திரிகை துறை முழுக்க பணமயமாவதன் ஆபத்து என்னவென்றால், அது ஒரு மக்கள் இயக்கம் என்பதை மறந்துவிட்டு, தன்னை வெறும் பணம் சம்பாதித்துத் தரும் ஒரு தகவல் சொல்லும் சாதனமாகக் கருதிக்கொள்ளலாவதாகும். ஆக, பத்திரிகை அலுவலகத்தில் பத்திரிகையாசிரியரைவிடவும், பணத்தின் பெயரால் அமர்த்தப்படும் நிர்வாகிகள் முக்கியத்துவம் படைத்தவர்களாகிறார்கள். பத்திரிகையாசிரியர்கள் சுயாட்சியை இழக்கும்போது எல்லா அழிவுகளும் ஒன்றுகூடலாகின்றன; பத்திரிகைகள் படிப்படியாக ஆவியைவிட ஆரம்பிக்கின்றன.<br />
<br />
இன்றைய
பத்திரிகை நிறுவனங்கள் பெரிதும் விரும்பும் ‘அரசியலற்ற பத்திரிகையாளர்’
என்ற இடத்தில் தன்னை இருத்திக்கொண்டவர் அல்ல கல்கி. பத்திரிகைக்கு
வருவதற்கு முன்பே ‘நான் யார்?’ என்பதை அவர் உணர்ந்திருந்தார்; அந்த
அடையாளத்தைப் பிரகடனப்படுத்தியபடியே அவருடைய வருகை அமைந்தது; அவர் -
காந்தியர். தன்னுடைய இருபது வயதில் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு,
நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட காந்தியர்
கல்கி. அவருடைய முழு வாழ்வையும் இந்த அடையாளமும், அது சார்ந்த
விழுமியங்களும்தான் வழிநடத்தின. என்னைப் பொறுத்த அளவில் இதுதான் சரி
என்பேன். என்னைப் பொறுத்த அளவில் எந்த ஒரு பிரதியும் அரசியலற்றது அல்ல;
பிள்ளையார் கோயில் திருவிழாவுக்கு அடிக்கப்படும் நோட்டீஸும் விதிவிலக்கு
அல்ல. நம் எல்லோருக்குமே இந்த உலகம் சார்ந்து, நம்முடைய சமூகம் சார்ந்து
நிச்சயமாக ஒரு பார்வை இருக்கிறது; அது சார்ந்த ஒரு சார்பு இருக்கிறது.
அதைக் கட்சிசார் அரசியல் சார்பாகப் புரிந்துகொள்வது அரைவேக்காடான பார்வை.
விழுமியங்கள்சார் சார்பாக அதைச் சொல்லலாம். அப்படியென்றால், உங்களுடைய
சார்பை நீங்கள் பகிரங்கமாக அறிவித்துவிட்டே செய்யுங்கள் என்கிறேன்.<br />
<br />
ஐயா,
நான் ஒரு காந்தியன்... இந்த அடையாளத்துடனேயே நான் எழுதுகிறேன். காந்தியம்
என்று இங்கே நான் சொல்லும்போது, இதை காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் போன்ற ஒரு
கட்சி சார்போடு நீங்கள் பொருத்திப் பார்த்தால் அது உங்களுடைய அபத்தம்;
மாறாக, என்னளவிலான காந்தியம் என்பது ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ எனும்
அதன் சாராம்சத்தில் நிலை கொண்டிருக்கிறது; அதற்கான வழிமுறையாக
அதிகாரப்பரவலாக்கலை நம்புகிறது; பயணத்துக்கான கட்டுப்பாட்டு சக்தியாக
சத்தியத்தையும் அகிம்சையையும் அது பிணைத்துக்கொண்டிருக்கிறது. ஆக, இப்படி
நான் ‘காந்தியன்’ என்று என்னை அடையாளப்படுத்திக்கொள்ளும்போது என்னையும்
என் எழுத்துகளையும் என் வாசகர்கள் கூடுதல் எளிமையோடு புரிந்துகொள்ள
முடியும் என்று நம்புகிறேன்; எனை நோக்கி அவர்கள் கேள்வி கேட்க இது வசதி
என்று நம்புகிறேன்; முக்கியமாக நான் சில விழுமியங்களுக்குப்
பொறுப்பெடுத்துக்கொள்கிறேன்; அதுதான் என்னுடைய தார்மிகம்; இந்த
விழுமியங்களிலிருந்து நான் காந்தியையும் விமர்சிக்கலாம்; வாசகர்கள்
என்னையும் விமர்சிக்கலாம். ஏனென்றால், சில விழுமியங்களுக்கு, நம்முடைய
கருத்துகளுக்கு நாம் பொறுப்பெடுத்துக்கொள்கிறோம். ‘நான் எதுவும் சாராதவன்’
என்பது வசதியான பதுங்கல்; அனுகூலங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான அச்சம்;
பத்திரிகையாசிரியர்களோ, பத்திரிகையதிபர்களோ, பத்திரிகை நிறுவனங்களோ அப்படி
இருந்திட முடியாது. உங்களுக்கு என்று ஒரு கருத்து இல்லாவிட்டால் ஏன்
பத்திரிகை துறைக்கு வருகிறீர்கள்? <br />
<br />
கல்கி கைகொண்ட
வாழ்வின் விழுமியங்கள் என்னை வாழ்க்கையைப் பல முறை
தூக்கிப்பிடித்திருக்கின்றன. ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த அந்த
மனிதர், இருபது வயதில் படிப்பை விட்டுவிட்டு நாட்டுக்காகப் போராடி ஒரு
வருடம் சிறை செல்கிறார். அடுத்து திருமணமாகி குடும்பஸ்தனாகி மீண்டும்
போராட்டம்; மீண்டும் ஆறு மாதம் சிறைவாசம். பிற்பாடு, ‘ஆனந்த விகடன்’ போன்ற
ஒரு நிறுவனத்தில் பொறுப்பாசிரியர் பணி, நல்ல வாழ்க்கை; ‘போராடப்போனால் வேலை
பறிபோகும்’ என்கிறார் எஸ்.எஸ்.வாசன்; துணிந்துதான் வேலையை உதறிவிட்டு
மூன்று மாதம் சிறை தண்டனையை ஏற்கிறார் கல்கி. நினைவில் கொள்ளுங்கள்,
தன்னுடைய இருபதுக்கும் நாற்பதுக்கும் இடையில் அவர் விரும்பியேற்ற போராட்ட
வாழ்வு இது. இந்தத் தார்மீகம்; அதுதான் கல்கியின் தனித்துவம் என்று
நினைக்கிறேன்.<br />
<br />
காந்தியிடம் அவரது அரசியலின் முக்கிய
இலக்குகள் என்னவென்று கேட்டபோது, பிரிட்டீஷாரை வெளியேற்றுவதை அவர்
இலக்காகச் சொல்லவே இல்லை. மூன்று விஷயங்களை இலக்குகளாகக் குறிப்பிட்டார்.
முதலாவது, இந்து முஸ்லிம் ஒற்றுமை; இரண்டாவது, தீண்டாமை ஒழிப்பு;
மூன்றாவது, சுதேசி. ஏனென்றால், ஒரு ராஜதந்திரியான காந்தி இந்தியாவை விட்டு
பிரிட்டீஷார் வெளியேறுவது கால கட்டாயம் என்றே கருதியிருப்பார். ஆனால்,
‘இந்தியா என்ற கருத்து - இந்தியா என்கிற நாடு’ நீடிக்க மேற்கண்ட மூன்றும்
என்றைக்கும் முக்கியம்; இதற்காக இந்தியராக தன்னை உணரும் ஒவ்வொருவரும்
உழைப்பது முக்கியம் என்பதையே காந்தி சொல்லாமல் சொல்லிச் சென்றார்.<br />
<br />
ஒரு
காந்தியரான கல்கி காந்தி சொன்ன மூன்று இலக்குகளுக்கும் தன் இதழியலையும்
வாழ்க்கையையும் வாகனமாக்கினார். ஒரே ஒரு விஷயத்தை மட்டும்
சுட்டிக்காட்டலாம் என்று நினைக்கிறேன். 1942 மே 16 தேதிய ‘கல்கி’ இதழில்,
‘வடநாட்டுத் தலைமை’ என்ற கட்டுரையில் அவர் எழுதுகிறார். “வட இந்தியத்
தலைவர்கள் போட்ட தேசியத் திட்டங்களை எல்லாம் நாம் நன்கு
நடத்திவந்திருக்கிறோம். எந்த தேசியத் திட்டத்திலும், நாம் எந்த வட இந்திய
மாகாணத்துக்கும் பின்வாங்கிவிடவில்லை. அநேகமாக எல்லாத் திட்டங்களிலும்
முதன்மையே வகித்திருக்கிறோம்... இப்படி எல்லாம் ஒவ்வொரு திட்டத்தையும்
நிறைவேற்றிவந்திருக்கும் நமக்கு, வட இந்தியத் தலைவர்களைப் பார்த்து,
‘சுயராஜ்யம் எங்கே? ஏன் இன்னும் கிடைக்கவில்லை?’ என்று கேட்கும் பாத்யதை
உண்டு... நமது வட இந்தியத் தலைவர்கள் போடும் சுயராஜ்ய போர்த்திட்டத்திலோ,
அதை நடத்தும் முறையிலோ ஏதோ பெரிய குறை இருக்கிறது... ஆமாம், ஒரு முக்கியமான
விஷயத்தில் வட இந்தியத் தலைவர்கள் குருட்டுத்தனமான பிடிவாதத்தில்
இருந்துவந்திருப்பதானலேயே நமது சுயராஜ்ய முயற்சிகள் எல்லாம் நிஷ்பலனாகப்
போயிருக்கின்றன. அது ஹிந்து - முஸ்லிம் பிரச்சினைதான்... வட நாட்டில்
ஹிந்து - முஸ்லிம் சச்சரவு காரணமாக ஏற்படும் பின்னடைவுகளுக்குத்
தென்னாட்டில் நாம் இனிமேலும் ஆளாக முடியாது. நம்முடைய நன்மைகளை நாம்
பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் இப்போது நேர்ந்துவிட்டது. தீர்க்கதிருஷ்டி
வாய்ந்த நமது ஒப்பற்ற தலைவர் ராஜாஜியை ஒரு முகமாகப் பின்பற்றுவதே நமது
கடமை...”<br />
<br />
கல்கியைக் கவனியுங்கள். காந்திக்கும்
சேர்த்துதான் அவர் அறிவுரை சொல்கிறார். ஜப்பான் சென்னையைத் தாக்கலாம்
என்றிருந்த சூழலில், தென்னிந்தியாவில் காங்கிரஸும் முஸ்லிம் லீக்கும்
சேர்ந்து பணியாற்றுவது; வட இந்தியாவில் தொடர்ந்தும் சச்சரவுகள் நீடிப்பதைத்
தடுக்க முஸ்லிம் லீக் கேட்பதுபோல பாகிஸ்தான் பிரிவினைக்கு
சம்மதித்துவிடுவது என்று காங்கிரஸுக்கும் காந்திக்கும் ராஜாஜி யோசனை சொன்ன
சமயம் அது. தன்னுடைய ஆசானின் வழியிலேயே கல்கி இதை எழுதுகிறார். <br />
<br />
பாகிஸ்தான்
விவகாரத்திலோ, காஷ்மீர் விவகாரத்திலோ ராஜாஜியின் தாராளமான கருத்துகளை
ஆதரித்துப் பேசுவோரும்கூட, ‘நடைமுறை சார்ந்து சிந்திப்பவர்’ என்று
ராஜாஜியின் இந்தப் பார்வையைக் குறுக்கிவிடுவதுண்டு. அது குள்ளப் பார்வை.
பாகிஸ்தான் விவகாரத்திலும் சரி, காஷ்மீர் விவகாரத்திலும் சரி; ராஜாஜி
தீர்வை முன்வைத்துப் பேசியபோது மிக முக்கியமான ஒரு தார்மிகக் கேள்வியை
எழுப்பினார், “நான் சுய நிர்ணய உரிமைக்காகப் போராடியவன். எப்படி
இன்னொருவரின் சுய நிர்ணய உரிமையை என்னால் மறுக்க முடியும்?”<br />
<br />
ராஜாஜியின்
அதே தார்மீகத்தைத்தான் கல்கியும் பிரதிபலித்தார். தீண்டாமை ஒழிப்புக்காக
காந்தியை மடாதிபதிகள் எதிர்த்தபோது, மடாதிபதிகளுடன் மோதியவர் கல்கி.
ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அல்ல; ஏன் மொத்த இந்து மதத்துக்கும் அல்ல; அட,
ஒரு சாதிக்கும்கூட அல்ல; வெறும் அவரவர் மடங்களுக்கான பிரதிநிதிகளே என்று
மடாதிபதிகள்; எதிரே நிற்கும் காந்தி யார் தெரியுமா என்று மடாதிபதிகளுக்கு
அவர்களுக்கான இடத்தைக் காட்டியவர். தன்னாலான அளவில் ராஜாஜியோடு இணைந்து
கல்கி தீண்டாமை ஒழிப்புச் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
சுதேசி என்பது சுயராஜ்ஜியம்தான் என்பதில் அவருக்கு எந்த மாற்றுக் கருத்தும்
இல்லை. <br />
<br />
இந்தத் தார்மீகத்தைத்தான் கல்கியிடமிருந்து
இன்றைய பத்திரிகை உலகம் மீள எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
இந்த 2020-ல் கல்கி இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? இன்று குடியரசு
நாள். நாடு இன்று பெரிதாகப் பேசிக்கொண்டிருக்கும் குடியுரிமை திருத்தச்
சட்டத்தை பற்றிப் பேசாமல் இந்நாளைக் கடக்க முடியாது. சரி, கல்கி
குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பில் என்ன முடிவை எடுத்திருப்பார்?
தன்னுடைய ஆசிரியர் ராஜாஜியின் வழியைத்தான் சமூகத்துக்கு அவர்
போதித்திருப்பார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை இன்று ஆதரிப்பவர்கள்,
எதிர்ப்பவர்கள் பலரும் ஏதோ தம்மை ஒரு சட்ட வல்லுநர்போல இருத்திக்கொண்டு
விவாதித்துவருவதை நாம் பார்க்கிறோம். ஆனால், ஒரு சட்ட வல்லுநரும் கல்கியின்
ஆசானுமான ராஜாஜி குடியுரிமையை ஒரு தேசம் எந்த அளவுகோலைக் கொண்டு அணுக
வேண்டும் என்று கூறினார் தெரியுமா? ‘அகதிகள் விவகாரத்தை அணுகும்போது, ஒரு
நாடு கடைப்பிடிக்க வேண்டிய அளவுகோல் காருண்யம்’ என்று கூறினார் ராஜாஜி. <br />
<br />
கருணை
என்கிற ஒரு மதிப்பீடு போதும். இந்த உலகின் எல்லாப் பிரச்சினைகளையும்
எளியோரின் பக்கம் நின்று நாம் சிந்திக்க! காந்தியப் பார்வை என்பது அதுதான்!<br />
<br />
என்னுடைய
எல்லா பார்வைகளும் கல்கியின் பார்வைகளோடு ஒத்துப்போவதில்லை; நிறைய அவரோடு
மாறுபடுபவன் நான். ஆனால், கல்கி ஒரு பத்திரிகையாசிரியராகத் தான் உண்மை
என்று நம்பிய விழுமியங்கள் மீது கொண்டிருந்த பற்றுறுதியை என் இறுதிக்காலம்
வரை என் பணியிலும் வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.<br />
<br />
இப்படியொரு
நிகழ்வை ஒழுங்கமைத்து நிகழ்வுக்கு என்னை அழைத்த ‘கல்கி குழும’த்தினர்
திரு.ராஜேந்திரன், திருமதி. சீதா ரவி, திருமதி. லட்சுமி நடராஜன்
மூவருக்கும் என் நன்றியை உரித்தாக்குவதோடு எதிர்வரும் காலத்தில், ‘கல்கி
நிறுவனம்’ தன் பழைய ஆகிருதியை மீண்டும் அடைய வேண்டும் என்ற வாழ்த்துகளை
அதற்குக் கூறுவதோடு, ‘கல்கி நினைவு அறக்கட்டளை’ இங்கே பல துறைகள் சார்ந்து
விருதுகளை வழங்கியது - அது இதுவரை வழங்கிவரும் விருதுகளோடு, கல்கி
பெயரில் ஒரு விருதை நிறுவி பத்திரிகையாளர்களுக்கு ஆண்டுதோறும் அதை அளிக்க
வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்து விடைபெறுகிறேன். நன்றி!<br />
<br />
<b>- ஜனவரி, 2020, ‘கல்கி நினைவு நிகழ்ச்சி’ உரைக்கான எழுத்து வடிவ சாராம்சம்</b><br />
<br /></div>
சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-65444404466170142742020-05-23T19:01:00.001-07:002020-05-23T19:01:17.569-07:00நெருக்கடி காலத்தில் அரசியல் பேசக் கூடாதா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuqNnnGaClv0ZSoSR13fKSzC_tkBmo9KW0Cj3OlwcYJm9U2EmuzEoJAmhLmX7Shz8UdLewC656YeVeGUNG_aKK8wgYGyWSrT3abZhQu1gaCMd8OhdWgj8cjZOApcwqQTfPdtSj7o9iIHkg/s1600/politics.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="900" data-original-width="1600" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuqNnnGaClv0ZSoSR13fKSzC_tkBmo9KW0Cj3OlwcYJm9U2EmuzEoJAmhLmX7Shz8UdLewC656YeVeGUNG_aKK8wgYGyWSrT3abZhQu1gaCMd8OhdWgj8cjZOApcwqQTfPdtSj7o9iIHkg/s640/politics.jpg" width="640" /></a></div>
<br />
இந்தியாவுக்கு வெளியே இப்போது அதிகம் அமெரிக்காவைக் கவனிக்கிறேன். குவிமையம் நியூயார்க். கரோனாவால் உலகிலேயே அதிகம் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நாடு அமெரிக்கா என்றால், அமெரிக்காவிலேயே அதிகம் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மாநிலம் நியூயார்க்; அதிகம் பாதிப்புக்குள்ளான நகரம் நியூயார்க் நகரம். கரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையிலுள்ள நாடான ரஷ்யாவைக் காட்டிலும் நியூயார்க்கின் எண்ணிக்கை அதிகம்.<br />
<br />
நியூயார்க் என்ற சொல்லே வானளாவிய கனவுகளோடு பொருந்தியது. எத்தனை நள்ளிரவுக்குப் பின் ஒருவர் தூங்கச் செல்லும்போதும், அந்த வீட்டின் ஜன்னல் திரைச்சீலைக்கு வெளியே பிரகாச ஒளியில் நியூயார்க் நகரம் மிதந்துகொண்டிருக்கிறது. நியூயார்க் தூங்குவதே இல்லை. மேகத்தைக் கிழித்துக்கொண்டு வானத்தை முட்டிப்பார்க்க உயர்ந்துகொண்டேயிருக்கும் நியூயார்க்கின் கட்டிடங்கள் மனித குலத்தின் இடையறாத சாத்தியங்களைப் பிரகடனப்படுத்தியபடியே வளர்கின்றன. அமெரிக்காவின் முதல் தலைநகரமாக இருந்தது அதுதான்; வாஷிங்டன் பின்னாளில் அந்த இடத்தைப் பறித்துக்கொண்டாலும் இன்றைக்கும் நியூயார்க்கின் முக்கியத்துவம் குறைந்துவிடவில்லை.<br />
<br />
அமெரிக்காவின் நிதித் தலைநகரம் நியூயார்க். இன்றைக்கு உலகின் பெரும் பணக்காரர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பதினைந்து நகரங்களில் வசிக்கின்றனர். அவர்களில் அதிகம் பேர் நியூயார்க்கிலேயே வசிக்கிறார்கள். உலகிலேயே அதிகமான தங்கத்தை இருப்பில் வைத்திருக்கும் நகரம் அது. உலகின் புகழ்பெற்ற நகர அடையாளச் சின்னமான லண்டன் டவர் பாலத்தைவிட நியூயார்க்கின் புரூக்ளின் பாலம் பழமையானது என்று தன் நகரத்தை ஒரு நியூயார்க்கியர் அறிமுகப்படுத்தும்போது, அதில் வேறொரு சூசகச் செய்தி உள்ளடங்கியிருக்கிறது. இந்தப் பூமியிலேயே மேம்பட்ட வசதிகளையும், பாதுகாப்பான சூழலையும் தங்கள் நகரில் உருவாக்கியிருப்பதாகவும் அது ஒரு ஒரு நவீன தொன்மம் என்றும் நியூயார்க்கியர்கள் நீண்ட காலமாக நம்பிவருகிறார்கள். அந்த நியூயார்க் கரோனாவின் முன் உறைந்திருக்கிறது. நிரம்பி வழியும் நியூயார்க்கின் மருத்துவமனைகள் புதிய நோயாளிகள் எனும் செய்தி கேட்டாலே மலைக்கின்றன. பெரிய பெரிய சவக்குழிகளுக்குள் உயிரிழப்போர் சடலங்களின் சவப்பெட்டிகள் அப்படியே தொகுப்பாக மண்ணுக்குள் இறங்குகின்றன.<br />
<br />
நான் கரோனாவை அறிவியல்ரீதியாகப் புரிந்துகொள்வதற்கு இணையாக மானுடரீதியாக உணர்ந்துகொள்வதற்கும் முயற்சிக்கிறேன். அமெரிக்கா மீதான, நியூயார்க் மீதான கரோனாவின் அடி ஒட்டுமொத்த மனிதகுலத்தின் அகங்காரம் மற்றும் பேராசை மீதான அடியாகவும் எனக்குத் தோன்றுகிறது. தேச எல்லைகளுக்கு அப்பாற்பட்டு, அமெரிக்கா இன்று பல நாடுகளின் கனவு; நியூயார்க் பல நகரங்களின் கனவு. நாமும் அப்படியாகத்தான் ஆசைப்படுகிறோம். கடவுள் எச்சரிப்பதுபோலத் தோன்றுகிறது. கரோனாவைக் கிருமியாகப் புரிந்துகொள்வதோடு மனிதகுலம் அதை இப்படியும் அர்த்தப்படுத்திக்கொள்ள முற்பட்டால், எதிர்காலத்தில் நமக்குக் கூடுதலான பலன்கள் கிட்டும் என்று தோன்றுகிறது.<br />
<br />
எனக்கு நியூயார்க்கை வேறு சில விஷயங்களுக்காகப் பிடிக்கும். பன்மைத்துவம் - ஜனநாயகம். உலகிலேயே அதிகமான மொழிகளைப் பேசுவோரைக் கொண்ட நகரம் அது; கிட்டத்தட்ட சரிபாதி வீடுகளில் ஆங்கிலம் அல்லாத மொழியே தாய்மொழி. தனிநபர் சுதந்திரத்தை அது தூக்கிப் பிடிக்கிறது. பெண்கள் எந்த இடத்துக்கும் எந்த உடையிலும் செல்லும் உரிமையைச் சட்டபூர்வமாகவே பாதுகாக்கும் நகரம் அது; மேலாடை இல்லாமலும்கூட நியூயார்க்கில் ஒருவர் பொது இடத்துக்கு வர முடியும். உலகிலேயே அதிகாரம் மிக்க அதிபரைக் கொண்ட நாடு என்றாலும், கூட்டாட்சிக்கு அமெரிக்கா கொடுக்கும் முக்கியத்துவத்தை எப்போதுமே நியூயார்க் உயிர்த்துடிப்போடு பாதுகாத்திருக்கிறது; இந்த கரோனா காலத்தில் ஜனநாயகத்தின் இயக்கமும் கூட்டாட்சியின் உத்வேக ஆற்றலும் அங்கு மேலும் கூடியிருக்கின்றன.<br />
<a name='more'></a><br />
இந்தியாவைப் போலவே அமெரிக்காவிலும் கரோனா நெருக்கடி மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் மீது பல புதிய பொறுப்புகளையும் பெரும் நிதிச் சுமையையும் கவிழ்த்திருக்கிறது. இந்தியாவில் பிரதமர் அலுவலகம் சக்தி மிக்கதாகவும், மாநிலங்கள் பலவீனமானவையாகவும் இந்த ஊரடங்கு காலத்தில் காட்சியளிக்கின்றன. பிரதமர் தொலைக்காட்சியில் உரையாற்றுகிறார்; எவரும் அவரைக் கேள்வி கேட்கும் வழியே இல்லை. ஊடகங்களின் குரல் அதிகார அழுத்தத்தில் புதைகிறது. அமெரிக்காவில் நேர் எதிராக மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சிகளின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. அன்றாடம் ஊடகச் சந்திப்புகளை எதிர்கொள்ளும் அதிபர், சில நேரங்களில் பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் பாதியில் ஊடகர்கள் சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியேறுகிறார். ஒரு குடிமைச் சமூகமாக இந்தியா இன்னும் முதிரவில்லை; ஜனநாயகம் இன்னும் இந்தியக் கலாச்சாரத்தின் இயல்பான ஒரு பகுதியாக வளரவில்லை என்ற எண்ணம் நாளுக்கு நாள் வலுவடைகிறது. இந்த கரோனா நாட்களில் நியூயார்க் மாநில ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ - நியூயார்க் நகர மேயர் பில் டி பிளேசியோ - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மூவர் இடையே நடக்கும்... தொடர்ந்து நடந்துவரும் விவாதங்களை இந்தியா கவனிக்க வேண்டும்.<br />
<br />
தொடக்கம் முதலாகவே அதிபர் ட்ரம்ப் கரோனா தாக்குதலை எதிர்கொள்ளத்தக்க உரிய உத்திகளை வகுக்கவில்லை; மாநிலங்களுக்குத் தேவையான உதவிகளை அளிக்கவில்லை என்பதை வெளிப்படையாகப் பேசிவருகிறார் குவாமோ. ‘நியூயார்க் மாநிலத்தில் கரோனா பரவும் வேகத்துக்கு அது தயாராக வேண்டும் என்றால், சுமார் ஒன்றரை லட்சம் படுக்கைகள் நமக்கு வேண்டும்; ஆனால், அதில் மூன்றில் ஒரு பங்குதான் இப்போது இருக்கிறது; நாங்கள் நாற்பதாயிரம் வென்டிலேட்டர்கள் கேட்டால் கூட்டாட்சி அரசு வெறும் நானூறு வென்டிலேட்டர்களை அனுப்புகிறது; இதெல்லாம் போதாது’ என்றார் குவாமோ. அவருடைய வலியுறுத்தலின் விளைவாக, இரண்டாயிரம் படுக்கைகளைக் கொண்ட கடற்படைக் கப்பலை அனுப்பிவைத்தார் ட்ரம்ப். கூடவே இரண்டு லட்சம் கோடி டாலர்களையும் ஒதுக்கினார். ‘நன்றி; ஆனால், இதெல்லாம் காணவே காணாது’ என்றார் குவாமோ. ராணுவ உற்பத்திச் சட்டத்தை அமல்படுத்தி, கிருமியை எதிர்கொள்வதற்கான மருத்துவச் சாதனங்களை ஆயிரக்கணக்கில் உடனடியாகத் தயாரிக்க வேண்டும் என்றார் அவர்.<br />
<br />
கரோனாவை எதிர்கொள்வதற்கான மருத்துவச் சாதனங்களை மாநிலங்கள் நேரடியாகக் கொள்முதல்செய்வதை அதிபர் ட்ரம்ப் விரும்பவில்லை. மாநிலங்களைக் குற்றஞ்சாட்டும் வகையிலும் அவர் பேசினார். குவாமோ வெடித்துவிட்டார். “அமெரிக்காவில் நடப்பது முடியாட்சி அல்ல; குடியாட்சி. ட்ரம்ப் தன்னைப் பேரரசராகக் கருதிக்கொண்டு எங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம். அமெரிக்கா என்பது மாநிலங்கள் இணைந்து ஏற்படுத்திய கூட்டமைப்பு. இங்கே மத்திய அரசுக்கு ராணுவம், வெளியுறவு, வெளிவர்த்தகம் ஆகிய துறைகளில் சில தனி அதிகாரங்களை அரசமைப்புச் சட்டம் அளித்துள்ளது, அவ்வளவுதான். அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறாத, புதிதாகத் தோன்றக்கூடிய பிரச்சினைகளுக்கு சூழல்களுக்கு ஏற்ப முடிவெடுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்குத்தான் தரப்பட்டிருக்கிறது. இதைப் புரிந்துகொள்ளாமல் ட்ரம்ப் அரசு செயல்படக் கூடாது” என்றார் குவாமோ.<br />
<br />
நிதி நெருக்கடியை எதிர்கொள்ள மாநிலங்கள் சிறப்பு நிதி கேட்பதைக் குடியரசுக் கட்சி - ஜனநாயகக் கட்சி இடையிலான வேறுபாடாகச் சித்திரித்தார் ட்ரம்ப். நிதியுதவிகளில் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு ஆர்வம் இல்லை என்று சொன்ன ட்ரம்ப், ‘நிதியுதவி கோரும் மாநிலங்களாக நீல மாகாண அரசுகள்தான் (ஜனநாயகக் கட்சியினர் ஆள்பவை) இருக்கின்றன; சிவப்பு மாகாண அரசுகள் அப்படிக் கேட்கவில்லை; இது அவர்களுடைய அதிர்ஷ்டமா அல்லது திறமையா என்று எனக்குத் தெரியவில்லை; ஆனால், அவை வலுவாக இருக்கின்றன’ என்று கூறினார். அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களுக்கும் மொத்தமாக ஒரு ட்ரில்லியன் டாலர் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் பொருட்படுத்தவில்லை. குவாமோ பொறுப்புணர்வோடு இதற்குப் பதிலடி கொடுத்தார். “இது சிவப்பா, நீலமா பிரச்சினை இல்லை. ஜனநாயகக் கட்சியினரையோ அல்லது குடியரசுக் கட்சியினரையோ மட்டும் கரோனா வைரஸ் தேர்ந்தெடுப்பதில்லை; எப்படியாயினும் அது கொல்வது அமெரிக்கர்களை!’’ என்ற குவாமோ, நியூயார்க் மாநிலம் பெறுவதைக் காட்டிலும் கூடுதலாக 29 பில்லியன் டாலர் வரியைக் கூட்டாட்சி அரசுக்குத் தருவதைச் சுட்டிக்காட்டவும் தவறவில்லை. “கூட்டாட்சி அரசிடமிருந்து வரும் நிதியுதவியை ‘பெய்ல்அவுட்’ என்று நான் கூற மாட்டேன். அது மிகைப்படுத்தல். கரோனாவால் பாதிப்புக்குள்ளானதால் மாநிலங்கள் நிதி கேட்கின்றன. ஏனெனில், மாநிலங்கள்தான் இந்த நாட்டை உருவாக்கியிருக்கின்றன!” அமெரிக்காவில் ‘குவாமோ அதிபராக வேண்டும்’ எனும் வாசகங்களைத் தாங்கிய சட்டைகள் இப்போது சகஜமாகின்றன.<br />
<br />
குவாமோ இப்படிப் பேசினால், நியூயார்க் நகர மேயர் பிளேசியோ அவர் பங்குக்கு ட்ரம்பைக் காய்ச்சினார். “நியூயார்க்கைக் காக்கப்போகிறீர்களா, அழியட்டும் என்று கைவிடப்போகிறீர்களா?” என்று கேட்டார் பிளேசியோ. முன்னதாக கரோனா எதிர்கொள்ளல் நிதியாக ட்ரம்ப் விடுவித்த இரண்டு லட்சம் கோடி டாலர்களில் நியூயார்க் நகர நிர்வாகத்துக்கு 140 கோடி டாலர்கள் மட்டுமே கிடைத்தது. கூட்டாட்சி தரும் நிதி போதாது; உள்ளாட்சிக்குக் கூடுதல் நிதி வேண்டும் என்ற மேயர்களின் கோரிக்கைக்கு ட்ரம்ப் செவிசாய்க்கவில்லை. “என்னானது ட்ரம்ப்? எப்போதும் பேசிக்கொண்டேயிருப்பீர்களே, உங்களுடைய நாக்கை யாராவது கட்டிப்போட்டுவிட்டார்களா, பதிலே இல்லை!” என்று கேட்டார் பிளேசியோ.<br />
<br />
நியூயார்க்கின் நகர்வுகள் ஏனைய மாநிலங்களுக்கும் உத்வேகம் அளிக்கின்றன. நாட்டிலேயே பெரியதான கலிபோர்னியா மாநிலத்தின் ஆளுநர் கரோனா களேபரங்கள் இடையே கலிபோர்னியாவை ‘தேசிய அரசு’ என்றே அறிவித்தார். ட்ரம்ப் அரசு மாநிலங்களுக்கு மருத்துவச் சாதனங்களை அனுப்புவதில் காட்டிய மெத்தனத்தைச் சாடியவர், நேரடியாகவே வெளிநாடுகளிலிருந்து அவற்றைத் தருவிக்க ஒப்பந்தங்களுக்கு உத்தரவிட்டார். அதற்கான முன்னோட்டமாக இந்த அறிவிப்பை வெளியிட்டார். பொதுவாக, ஒரு மாநிலம் தன்னைத் தேசிய அரசாக அறிவித்துக்கொண்டால், அதை உள்நாட்டுப் போருக்கான அறிவிப்பாகத்தான் கருத வேண்டும். ஆனால், இந்த அறிவிப்பு அப்படிப் பார்க்கப்படவில்லை; மாநில மக்களின் நலன் கருதி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைச் சுதந்திரமாக, விரைவாக எடுக்க வேண்டிய அவசியத்தைச் சுட்டும் பிரகடனமாகச் சரியாகவே புரிந்துகொள்ளப்பட்டது.<br />
<br />
அரசுகளும் ஆட்சியாளர்களும் மட்டும் அல்ல; எல்லோரையும் எல்லோருமே கேள்வி கேட்கிறார்கள். ட்ரம்புக்கு எதிராக இவ்வளவு பெரிய பிரகடனத்தை வெளியிட்ட கலிபோர்னிய அரசை ஒரு தொழில்முனைவோரால் மிரட்ட முடிகிறது. தொழில்நுட்ப நிபுணரும் உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் கலிபோர்னியாவில் ஊரடங்கு நீடிப்பதன் விளைவாக, ஆலைகள் இயங்க முடியாத சூழலுக்காக கலிபோர்னியா அரசைக் கடுமையாகச் சாடினார். ‘இதனாலேயே கலிபோர்னியாவை விட்டு நிறுவனம் வெளியேற வேண்டியிருக்கும்’ என்று அரசை மிரட்டியவர், “ஊரடங்குக்கான அரசின் முடிவு ஒரு பாசிஸ நடவடிக்கை” என்றார். ஆலைகளை இயக்குவதற்காக நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக வழக்குகளையும் தொடுத்திருக்கிறார்.<br />
<br />
இந்தியாவில் நடப்பது என்ன? கரோனா காலத்தில் அரசை யாரும் கேள்விக்குள்ளாக்கக் கூடாது; ஒரு நெருக்கடியான தருணத்தில் அரசை விமர்சிப்பது - அரசியல் செய்வது முறையற்றது என்கிறார்கள். இது அரசியலற்றதன்மையைத் தூக்கிப் பிடிக்கும் வழமையான பாட்டுதான். ஒரு அரசியல் கட்சியையோ, அரசியலரையோ பார்த்து, ‘இந்தச் சமயத்திலும் அரசியல் செய்கிறார்கள்’ என்று பேசுவதைக் காட்டிலும் அபத்தம் இல்லை; அவர்களுடைய அடிப்படையான பணியே அதுதான்; அரசியல்செய்வதற்காகத்தான் அவர்கள் இருக்கிறார்கள். <br />
<br />
நெருக்கடியான தருணங்களில் அரசியலின் தேவை மேலும் கூடுதலாகிறது. ஏனென்றால், ஆட்சியாளர்களின் சிறு தவறும் பெரும் விளைவுகளை அப்போது உருவாக்கிவிடும். ஊரடங்கால் நாடே முடங்கிக்கொண்டிருந்த நாட்களில் ஒட்டுமொத்த மாநிலங்களுக்கும் சேர்த்து துரித பரிசோதனைக் கருவிகளை வெளிநாட்டிலிருந்து வாங்குவதாக அறிவித்தது ஒன்றிய அரசு. கருவிகள் நாடு வந்து சேர்ந்தபோது அத்தனையும் பயனற்றவை; அவற்றால் சரியான பரிசோதனை முடிவுகளைத் தர முடியவில்லை என்பது தெரியவந்தது. ஒரே தேசம், ஒரே முடிவு, சர்வநாசம். எதிர்க்கட்சிகளோ, ஊடகங்களோ முன்கூட்டி இது தொடர்பில் விவாதிப்பது எப்படித் தவறாகும்? சர்வதேசப் புகழ்பெற்ற ‘புல்காரி பிராண்ட்’ மூக்குக் கண்ணாடிகள், ‘மொவாடோ’ கைக் கடிகாரங்கள், ‘மாண்ட்பிளாங்க்’ பேனாக்களோடு தன் அடையாளத்தைச் செதுக்கிக்கொண்ட பிரதமர், இன்று சுயசார்பை வலியுறுத்துகிறார். உடனே, நாடு முழுக்கவுள்ள ஆயுதப் படையினருக்கான கடைகளில் இனி வெளிநாட்டுப் பொருட்கள் விற்கப்படாது என்கிறார் அமைச்சர். உலகிலேயே அதிகமான ஆயுதங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதிசெய்யும் நாடு இந்தியா எனும் செய்தி மண்ணுக்குக் கீழ் புதைக்கப்பட்டாலும் துடிக்கிறது. ஊழியர்களின் சம்பளத்தில் கை வைக்கும் அளவுக்குக் கடுமையான நிதி நெருக்கடி அரசுக்கு உருவாகியிருக்கும் இந்தச் சூழலிலும் அரசின் ஆயுதக் குவிப்புப் பார்வையில் சிறு மாற்றம் உருவாகவில்லை. நாடாளுமன்றத்தில் விவாதித்து எடுக்கப்பட வேண்டிய பல முடிவுகளை இந்த நெருக்கடியான காலகட்டத்தைப் பயன்படுத்தி தன்னிச்சையாக வேக வேகமாக எடுத்துவருகிறது ஒன்றிய அரசு. இதுவரையிலான நம்முடைய பல பார்வைகளில் உள்ள ஓட்டைகளை அம்பலமாக்குகிறது கரோனா. இப்போது அரசியல் பேசாமல் எப்போது பேசுவது?<br />
<br />
அரசியலற்ற நிலைப்பாடு என்பதும் மறைமுகமாக ஒரு அரசியல் நிலைப்பாடுதான். ‘இப்போதைய நிலைமைகள் அப்படியே நீடிக்கட்டுமே!’ என்பதுதான் அது வலியுறுத்தும் மௌனம் உள்ளடக்கியிருக்கும் செய்தி. அனுகூலத்தை உள்ளடக்கிய அச்சம்தான் அதன் மூலசக்தி. சமூகத் தீமைகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கப் பழகும் இந்த மௌனம் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு அப்பாற்பட்டதல்ல. இன்றைய அரசியல் சூழல் அப்படியே நீடிப்பதன் வழி ஒருவருக்குக் கிடைக்கும் சௌகரியங்களை, லாபங்களை இழக்க அவர் விரும்பவில்லை என்பதே ஒருவர் ‘ஸ்டேட்டஸ்கோயிஸ்ட்’ ஆக இருக்க முடிவெடுப்பதன் பின்னுள்ள சூட்சமம்.<br />
<br />
சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் நடக்கும் சகல அநீதிகள், அடக்குமுறைகள், ஏற்றத்தாழ்வுகள், பாரபட்சங்கள் இவ்வளவையும் மறைமுகமாக அங்கீகரிப்பதன் வழி பயனடையும் ஒருவரே ‘அரசியலற்றவர்’ என்று தன்னைச் சொல்லிக்கொள்ள முடியும். நிச்சயமாக இப்படிச் சொல்லிக்கொள்ள ஒருவருக்கு முன்னுரிமை - சலுகை தேவைப்படுகிறது. பல நாடுகளில் அது வர்க்கச் சலுகை; இந்தியாவில் அது சாதிச் சலுகையும்கூட. ஜனநாயகத்தை ஜனநாயகத்தின் பெயராலேயே கொச்சைப்படுத்தி அழிப்பதுதான் இது.<br />
<br />
நெருக்கடியான காலங்கள் நல்ல தலைவர்களையும் மோசமான தலைவர்களையும் மட்டும் அல்ல; சமூகங்களாக நாம் எப்படியானவர்களாகக் கடந்த காலத்தில் உருவாகிவந்திருக்கிறோம், நம்முடைய உள்ளடக்கம் என்னவென்பதையும் சேர்த்தே அடையாளம் காட்டுகின்றன. ஜனநாயகரீதியாக நம்முடைய உள்ளடக்கம் என்ன? கரோனா மிக ஆழமான உளப்பகுப்பாய்வை இந்தியச் சமூகத்திடம் கோருகிறது.<br />
<b><br />- மே, 2020, ‘இந்து தமிழ்’ </b></div>
சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-61832669139900269432020-05-20T18:31:00.001-07:002020-05-20T18:32:26.446-07:00பொருளாதார சுதந்திரமே சுயராஜ்ஜியத்தின் அர்த்தபூர்வ வெளிப்பாடு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiC4tK8eKbdZlcuAjQbBwQSBDOlTCijknTjRx2QTI2iZ_hcxOl4-k4yEKfpdntnr-EibQgowth0JS2UqPibmv0GpcnG1QfoohZ6PEC6paqhrZUwmhBhTd-f2unicifVrCSg0MYeAKwvb8Sy/s1600/federalcash.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="900" data-original-width="1600" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiC4tK8eKbdZlcuAjQbBwQSBDOlTCijknTjRx2QTI2iZ_hcxOl4-k4yEKfpdntnr-EibQgowth0JS2UqPibmv0GpcnG1QfoohZ6PEC6paqhrZUwmhBhTd-f2unicifVrCSg0MYeAKwvb8Sy/s640/federalcash.jpg" width="640" /></a></div>
<br />
அன்புக்குரிய கேளிர், வணக்கம்!<br />
<br />
கிறிஸ்து பிறப்பதற்கு முன், பின்; உலகப் போர்களுக்கு முன், பின்; சோவியத் ஒன்றியத்துக்கு முன், பின் என்றெல்லாம் வரலாற்றை நாம் பிரித்துப் பார்ப்பதுபோல, கரோனாவுக்கு முன், பின் என்றும் பார்க்கும் சூழல் உருவாகும் என்று வரலாற்றறிஞர்கள் பேசுகிறார்கள். நெடிய காலப்போக்கில் உலக வரைபடத்திலேயேகூட பல மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான வித்தாக கரோனா காலகட்டம் அமையலாம் என்றும்கூட சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஏன் அப்படிச் சொல்கிறார்கள்? உலகம் முழுக்க இன்று உள்ளூர் அரசியலுணர்வு எழுச்சியடைகிறது. ஒரு திடீர் நெருக்கடி நம்முடைய சகல கற்பிதங்கள், போதாமைகளையும் அம்மணமாக்கி நிஜமான தேவைகளைச் சுட்டுகிறது. உலகெங்கிலும் மாநில அரசுகளாலும் உள்ளூர் அரசுகளாலும் வெகுமக்களாலும் தேசிய அரசுகள் கேள்விக்குள்ளாக்கப்படுவது உலக நாடுகளின் எல்லைகளில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்குமோ தெரியாது; ஆனால், நிஜமான சுதந்திரம், நிஜமான இறையாண்மை எதில் உள்ளடங்கியிருக்கிறது என்று மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது; நிதியாள்கைதான் அது!<br />
<a name='more'></a><br />
ஜனநாயகப் பகிர்வில் உலகின் மூத்த கூட்டாட்சியான அமெரிக்காவில் நிதிக்காக ஒன்றிய அரசை நோக்கி வெடிக்கும் குரல்கள் கண்டங்களைக் கடந்து பரவுகின்றன. உலகின் பல கூட்டாட்சி நாடுகளில் அமெரிக்காவைச் சுட்டிக்காட்டி அதிகாரப் பரவலை விஸ்தரிப்பதற்கான குரல்கள் எதிரொலிப்பது வழக்கம். அமெரிக்காவிலோ தமக்குப் பின் கூட்டாட்சியை உருவாக்கிய சுவிட்ஸர்லாந்துக்கு இணையாக அதிகாரப் பரவலை மேலும் விஸ்தரிக்க வேண்டும் என்ற குரல்கள் வழக்கம். இப்போது மேலும் அது அதிகரிக்கிறது. ஏன் அப்படி? உலகக் கூட்டாட்சி நாடுகளில் அதிகமான அதிகாரப் பரவலையும், அரசியலதிகாரத்தில் அதிகபட்ச மக்கள் பங்கேற்பையும் சாத்தியமாக்கிய நாடு சுவிட்ஸர்லாந்து.<br />
<br />
இந்தியாவுக்கு சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு 1848-ல் கூட்டாட்சியை நிறுவியபோதே, ‘அதிகாரத்தை மையப்படுத்தாமல் விஸ்தரிப்பது’ எனும் உயரிய நோக்கை தேசத்தின் ஆன்மாவில் ஊன்றியது சுவிஸ். இன்றைக்கும் ஒரு கோடியைத் தொட்டிடாத சின்ன மக்கள்தொகையைக் கொண்ட சுவிஸ்ஸின் கூட்டாட்சி தன் நாட்டின் பன்மைத்துவத்தை எப்படி அங்கீகரித்து, தன் மக்களுக்குச் சம வாய்ப்பையும் சம அதிகாரத்தையும் வழங்குகிறது என்பதற்கான சிறந்த உதாரணம் அதன் ஆட்சிமொழிக் கொள்கை. வேறுபட்ட வரலாற்றையும் கலாச்சாரங்களையும் கொண்ட தன் பூர்வகுடி மக்கள் பேசும் நான்கு மொழிகளையுமே அது ஆட்சிமொழிகளாகக் கொண்டிருக்கிறது சுவிஸ். இதில் பிரதான அம்சம், 65% மக்கள் பேசும் ஜெர்மானிய மொழியையும், 20% மக்கள் பேசும் பிரெஞ்சு மொழியையும், 10% மக்கள் பேசும் இத்தாலிய மொழியையும் எப்படி பாவிக்கிறதோ அப்படியே 1%-க்கும் குறைவான மக்கள் பேசும் ரோமன்ஷ் மொழியையும் அந்நாடு பாவிக்கிறது. பொதுவான மொழி, மதம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் அல்லாமல் குடியுரிமை என்ற ஸ்தூலமற்ற கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சுவிஸ் அரசமைப்பானது, ‘மாநிலங்களாலும் அவற்றின் மக்களாலுமே சுவிஸ் கூட்டாட்சி உருவாகியிருக்கிறது’ என்று பிரகடனப்படுத்துவதோடு, ராணுவம், வெளியுறவு, சமூகப் பாதுகாப்பு போன்ற கூட்டுத் துறைகளைத் தவிர்த்து ஏனைய எல்லா அதிகாரங்களையும் மாநில அரசுகளோடும் அவற்றின் வழி உள்ளூர் அரசுகளோடும் பகிர்ந்துகொள்கிறது. சுவிஸ்ஸின் மாநிலங்கள் தனிக் கொடிகள், இலச்சினைகளை மட்டும் அல்ல; கூட்டாட்சி அரசின் மைய லட்சியங்களிலிருந்து விலகாத - அதே சமயம் தமக்கென்ற பிரத்யேகமான அரசமைப்புச் சட்டங்களையும் நாடாளுமன்றங்களையும் வரிமுறைகளையும் கொண்டிருக்கின்றன. முக்கியமாக, நிதிப் பகிர்வில் மாநில அரசுகள், உள்ளூர் அரசுகளின் கைகளே ஓங்கியிருக்கின்றன; ஒட்டுமொத்த வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே சுவிஸ் கூட்டாட்சி அரசு பெறுகிறது.<br />
<br />
நாம் இந்தியக் கதைக்கு வருவோம். சுவிஸ்ஸின் சூழல் யாவும் கூட்டாட்சி விழுமியங்கள் என்றால், நேர் எதிரான இந்தியச் சூழலை என்ன பெயரிட்டு அழைப்பது? இந்தியாவில் கூட்டாட்சியை நாம் வலியுறுத்திப் பேசுவதானது நிர்வாக வசதிக்கான ஏற்பாடாகவோ, மேலை காலனியச் சிந்தனைகளின் எச்சமாகவோ அல்ல; அதுதான், இந்தியாவின் மலைக்க வைக்கும் பன்மைத்துவத்தையும் பரந்து விரிந்த மக்கள் கூட்டத்துக்கான சமூகநீதியையும் உறுதிப்படுத்துவதற்கான ஒரே நியாயம். கிராமங்களின் குடியரசாக காந்தி இந்நாட்டைக் கற்பனைசெய்ததோ, பெரும் கூட்டரசாக அண்ணா முன்மொழிந்ததோ கூட்டாட்சியின் இந்திய வடிவங்கள் மட்டும் அல்ல; உள்ளூர் அரசியலுக்கு உச்சபட்ச சுயாட்சியை அளிப்பதற்கான நவீன சட்டகங்களும்கூட.<br />
<br />
ஆச்சரியமூட்டும் ஒரு விஷயத்தை நம் வரலாற்றிலிருந்து நினைவுகூர்வோம். பிரிட்டிஷாரை வெளியேற்றும் போராட்டத்தில், ஏன் ‘சுதந்திரம்’ எனும் சொல்லைக் காட்டிலும், ‘சுயராஜ்ஜியம்’ எனும் சொல் நம் முன்னோரின் விருப்பத்துக்குரிய விடுதலை முழக்கமாக இருந்தது? பிரிட்டிஷார் நல்ல நிர்வாகத்தையே கொடுப்பதாகக் கொண்டாலும்கூட, ‘நல்ல நிர்வாகம் சுயராஜ்ஜியத்துக்கான மாற்றீடு அல்ல!’ என்ற வாதத்தை ஏன் நம் முன்னோர் முன்னெடுத்தனர்? ஏனென்றால், சுயராஜ்ஜியம்தான் உண்மையான சுதந்திரத்துக்கான வெளிப்பாடு. அந்தச் சுதந்திரத்துக்கான அர்த்தபூர்வ உறுதிப்பாடு நிதியாள்கையிலேயே இருக்கிறது.<br />
<br />
வரியானது நாம் சமூகமாகத் திரள்வதற்கும் ஒன்றுபட்டு செயலாற்றுவதற்கும் அளிக்கும் பற்றுறுதிப் பங்கு; சமூகத்துக்கும் நமக்குமான பிணைப்பையும் உரிமையையும் சேர்த்தே வரி உத்தரவாதப்படுத்துகிறது. ஒரு ஊரைச் சேர்ந்த ஆயிரம் பேர் ஒரு சமூகமாக, நம் ஊரையும் சமூகத்தையும் மேம்படுத்துவதற்காக ஆளுக்கு நூறு ரூபாய் வரி அளிக்கிறோம், ஊர் சார்பில் வருஷத்துக்கு லட்ச ரூபாய் அரசுக்குச் செல்கிறது என்றால், எத்தனை ரூபாய் அரசிடமிருந்து ஊருக்குத் திரும்பி வருகிறது என்பது முக்கியம். ஊருக்கு வெளியில் செலவிடப்படும் தொகை எதற்காகச் செலவிடப்படுகிறது, யாரெல்லாம் பயனடைகிறார்கள், அவற்றுக்கான சமூக நியாயம் என்ன, அதில் வரிசெலுத்துநரின் அபிப்ராயங்களுக்கான இடம் என்ன என்பது முக்கியம். கணக்குக் கோளாறு என்றால், கோளாறு அமைப்புரீதியாகவே தொடரும் என்றால், நீங்கள் செலுத்துவது வரி அல்ல; கப்பம். நீங்கள் சுதந்திர நாட்டில் அல்ல; ஒரு ஏகாதிபத்தியத்தின் கீழ் காலனியாகவே இருக்கிறீர்கள்.<br />
<br />
வெட்கப்படத்தக்க வகையில் சுதந்திர இந்தியா அநீதியான நிதிப் பகிர்வு அமைப்புடனேயே உருவானது. பெரும்பான்மை அதிகாரங்களோடு, பெரும்பான்மை வருவாய் வரியினங்களும் டெல்லியில் குவிக்கப்பட்டன. வரி வருவாயில் பாதிக்கும் குறைவாகவே மாநிலங்களுடன் இந்திய அரசு பகிர்ந்துகொள்கிறது; அதிலும் ஒவ்வொரு மாநிலத்துக்குமான பகிர்வில் உத்தரவாதமான பங்கு கிடையாது. நிதியோடு நிதியாள்கைக்கான அதிகாரத்தையும் திட்டக் குழு, நிதிக் குழு வழியே ஒன்றிய அரசு ஆக்கிரமித்துக்கொண்டது. நிதிப் பகிர்வில் காலப்போக்கில் உருவான சீர்திருத்தங்கள், உலகமயமாக்கல் கொண்டுவந்த சூழல் மாற்றங்கள் இணைந்து உருவாக்கிய சின்ன முன்னேற்றத்தையும் ‘ஜிஎஸ்டி’ (சரக்கு மற்றும் சேவை வரி) ஒட்டுமொத்தமாக நொறுக்கிவிட்டது. அரசமைப்பின்படி உறுதிசெய்யப்பட்ட ‘ஜிஎஸ்டி கவுன்சில்’ மூலம் மாநிலங்களின் பெரும்பான்மை வரிவிதிப்பு உரிமையை இந்திய அரசே மறைமுகமாகக் கைப்பற்றியதானது நிதி விவகாரங்களில் மாநிலங்களிடம் இருந்த சுயாட்சியைக் கிட்டத்தட்ட உருக்குலைத்துவிட்டது.<br />
<br />
இன்று பல மாநில அரசுகள் தம் வளர்ச்சித் திட்டங்களை முடக்கிவிட்டு, ஊழியர்களின் சம்பளத்தை வெட்டிவிட்டு, வருமானத்துக்காக மதுக் கடைகளையும் லாட்டரி கடைகளையும் திறந்து காத்திருக்கும் இழிநிலைக்கு யார் பொறுப்பாளி? ஒரு கொள்ளைநோய்க் காலகட்டத்தில்கூட செலவுகளை எதிர்கொள்ள சிறப்பு வரிகளை விதிக்கவோ, பெரும்பான்மை வரி விகிதங்களை மாற்றி அமைக்கவோ பல கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்கள் வல்லமையற்றவையாக முடக்கப்பட்டிருப்பது மாநிலங்களின் இறையாண்மை மீதான தாக்குதலே தவிர வேறு என்ன?<br />
<br />
இந்தியாவில் ஒட்டுமொத்த ‘ஜிஎஸ்டி’ தொகையில் பாதிக்கும் மேலான தொகையை வெறும் ஐந்து மாநிலங்கள் தருகின்றன; தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலம் ஒட்டுமொத்த செலவில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கைத் தன் மாநிலத்திலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டே சமாளிக்கிறது. ஒன்றியத்துக்கு எவ்வளவு கொடுக்கிறோம், மாநிலத்துக்குத் திரும்ப எவ்வளவு கிடைக்கிறது என்று தமிழ்நாடு கேட்டால், அநீதியான பதிலே கிடைக்கும். இந்த அநீதிப் போக்கு இன்னும் எத்தனை காலத்துக்கு நீடித்திட முடியும்? ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் அரசுகளாலேயே சில மாதங்களுக்குக்கூட தாங்கி நிற்க முடியாத நிதியமைப்பை ‘இது சிறப்பானது’ என்று ஒரு நாடு இன்னும் எவ்வளவு காலத்துக்கு முட்டுக்கொடுக்க முடியும்?<br />
<br />
பொருளாதாரச் சுதந்திரமானது கற்பனைச் சுதந்திரத்துக்கான ஊக்கசக்தி. அரசியல் சிந்தனைகளில் புதிய கற்பனைகள், ஆட்சி நிர்வாகத்தில் புதிய முன்னெடுப்புகள், வலுவான பேரங்கள் எல்லாவற்றுக்கும் உரமும் அதுதான். கரோனாவைச் சமாளிப்பதில் சின்ன மாநிலங்களில் கேரளமும், பெரிய மாநிலங்களில் தமிழ்நாடும் முன்னிற்கின்றன என்றால், கடந்த காலங்களில் ஒட்டுமொத்த தேசியப் போக்கிலிருந்தும் விடுபட்டு சமூக நலத் திட்டங்களில் அவை செய்த முதலீடும், அன்றைக்கிருந்த சொச்ச பொருளாதாரச் சுதந்திரமும் முக்கியமான காரணங்கள். விஸ்தரிக்க வேண்டிய அதிகாரங்களை முடக்கிக் குவிப்பது ஒட்டுமொத்த சமூகத்தையுமே முடமாக்கிவிடும். உத்வேகமான சமூகத்தையும் சமூகநீதியையும் நாம் உறுதிசெய்ய வேண்டுமானால், மாநில அரசுகளும் உள்ளூர் அரசுகளும் பெரும்பான்மைப் பங்கைப் பெறும் வகையில் நம் வரிப் பகிர்வு முறையை மறுவரையறுப்பது தவிர்க்கவே முடியாதது. ஒரு விரிந்த கூட்டாட்சிக்கான செயல்திட்டம் விசாலமான நிதிப் பகிர்வுத் திட்டத்திலிருந்து இந்தியத் துணைக் கண்டத்தில் தொடங்கட்டும்; ‘ஜிஎஸ்டி’யை ஒழிப்பது அதன் அஸ்திவார நடவடிக்கை ஆகட்டும்; உள்ளூர் அரசுகளுக்கும், மாநில அரசுகளுக்கும் போக எஞ்சிய நிதியை இந்திய அரசு கைக்கொள்ளும் பகிர்வுமுறையைச் சிந்திப்போம்!<br />
<b><br /> - மே, 2020, ‘இந்து தமிழ்’</b></div>
சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.com1