பதிவிறக்க எழுத்தாளர்களின் பொற்காலம்!

 
    இந்த 34-வது சென்னைப் புத்தகக் காட்சியின் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்கள் யார்? யாருடைய புத்தகங்கள் விற்பனையில் அதிகமாக இருக்கின்றன?
அருந்ததி ராய், அமிதவ் கோஷ், ராமச்சந்திர குஹா, விக்ரம் சேத்?
இல்லை.
ஜெயமோகன், இமையம், பெருமாள்முருகன்?
கிடையாது.
அட, வைரமுத்து, ரமணி சந்திரன்?
ம்.. ஹூம்.
    இப்போதெல்லாம் புத்தகக் காட்சிகளில் ஒரு புதிய படை எழுத்தாளர்கள்தான் கலக்குகிறார்கள். சென்னைப் புத்தகக் காட்சியையும் அவர்களே ஆக்கிரமித்திருக்கிறார்கள். இந்தப் புதிய படை எழுத்தாளர்களைப் பதிவிறக்க எழுத்தாளர்கள் என்று நாம் அழைக்கலாம்.
அதென்ன பதிவிறக்க எழுத்தாளர்கள்?

வெற்றிகரமான பதிப்பாளராவது எப்படி?

  
சென்னைப் புத்தகக் காட்சி வளாகத்தில் காலையிலிருந்து இரவு வரை ஒரு வாரம் அலைந்தால் தமிழ்ப் பதிப்புத் துறையின் அவ்வளவு தொழில் சூட்சுமங்களையும் தெரிந்துகொண்டு விடலாம் போலிருக்கிறது.
   தமிழ்ப் பதிப்புத் துறையை வெளியிலிருந்து பார்க்கும் ஒருவருக்குக் காணக் கிடைக்கும் பிம்பங்கள் மிகக் கௌரவமானவை. ஆனால், உள்ளே தெரியும் பிம்பங்களோ மிக மோசமானவை. அதேசமயம், பரிதாபத்தை ஏற்படுத்துபவையும்கூட.  தமிழகத்தில் அறிவுசார் தளத்தைக் கட்டமைப்பதில் முக்கிய இடத்தை வகிக்கும் பதிப்புத் துறையில் இன்றைக்கு ஒருவர் வெற்றி பெற வேண்டுமானால் என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா? (எந்த எழுத்தாளரும் எழுதி, எந்தப் பதிப்பாளரும் பதிப்பிக்க வாய்ப்பில்லை என்பதால், பதிப்புத் துறைக்குப் புதிதாக வரும் அப்பாவிகளின் நலன் கருதி இந்த 10 ரகசியங்கள் வெளியிடப்படுகின்றன.)