ஆமாம், குற்றவுணர்விலிருந்து மக்களை விடுவிக்கிறேன் - ஜக்கி வாசுதேவ்


கோவை, வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் ‘ஈஷா ஆஷ்ரம்’ பிரம்மாண்டமான ஒரு தனி உலகமெனக் காட்சியளிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் குவிகின்றனர். “இரண்டு லட்சம் பேருக்குச் சமைக்கும் வசதி இங்குண்டு” என்கிறார் ஆசிரமச் சமையலறையின் பொறுப்பாளர். மகா சிவராத்திரி அன்று பத்து லட்சம் பேர் கூடுகிறார்கள். நாட்டின் பிரதமரில் தொடங்கி பல மாநிலங்களின் முதல்வர்கள், அமைச்சர்கள், முன்னணித் தொழிலதிபர்கள் எனப் பல்வேறு உயர் தரப்புகளையும் தன் தொடர்பு வட்டத்தில் வைத்திருக்கும் அதன் குரு ஜக்கி வாசுதேவ் பறந்துகொண்டிருக்கிறார். நான் சந்திப்பதற்கு முதல் நாள் சென்னையில், அன்றைய தினம் கோவையில், மறுநாள் ஆமதபாத்தில், அடுத்த நாள் மும்பையில், அடுத்தடுத்த நாட்கள் துபையில் என்று விரிகிறது அவருடைய பயணத் திட்டம். ஒரு முழு நாள் தங்கி இரு அமர்வுகளில் அவருடன் நடத்தப்பட்ட உரையாடல் இது.

விவசாயம் தொடர்பான பார்வையிலேயே மாற்றம் வேண்டும்!


இன்னும் உக்கிரமான கோடையைத் தொடவில்லை. அதற்குள் வறட்சியின் கொடூரங்களைத் தமிழகம் எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டது. மாநிலத்தின் அரிசிக் கிண்ணமான காவிரிப் படுகை விவசாயிகளை, இந்த வெஞ்சூழல் சாவை நோக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது. இருநூற்றுக்கும் மேற்பட்ட பிணங்கள் விழுந்திருக்கின்றன. சென்னையில் எப்போதும் இம்மாதத்தில் மூன்று மாதங்களுக்கான தண்ணீர் கையிருப்பில் இருக்கக் கூடிய நீர்த்தேக்கங்களில், ஒரு மாதத்துக்கான தண்ணீர்கூட இல்லை. குவாரி பள்ளங்களில் தேங்கிக்கிடக்கும் தண்ணீரைச் சுத்திகரித்து, மக்களுக்குக் குடிக்க அனுப்பிக்கொண்டிருக்கிறது அரசு. 2015-ல் நூற்றாண்டு காணாத மழைப்பொழிவு, வெள்ளம். 2016-ல் வரலாறு காணாத மழைப்பொய்ப்பு, வறட்சி. 2015 டிசம்பர் 1 அன்று சென்னையில் ஒரே நாளில் 49 செ.மீ. மழை கொட்டியது. செய்வதறியாது நின்றோம். 2016-ல் தமிழகத்தில் பருவ மழை இயல்பைக் காட்டிலும் 62% அளவுக்குக் குறைந்தது. செய்வதறியாது நிற்கிறோம்.

நூற்றாண்டு வெள்ளம், நூற்றாண்டு வறட்சி என்ற சொல்லாடல்களின் வழி தப்பித்துக்கொள்ளுதல் எளிது. நூறு வருடங்களுக்கு முன்பிருந்த அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் என்ன, இன்றைக்கு உருவாகியிருக்கும் சாத்தியங்கள் என்ன? இன்னும் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய அதே துயரத்தை மக்கள் அனுபவிக்க வேண்டியிருப்பது யாருடைய தவறு என்று யோசித்தால், துயரங்கள் இயற்கையின் விளைவு அல்ல; ஆட்சியாளர்களின் நிர்வாகக் கோளாறின் விளைவு என்பது புரியவரும்.

தமிழகத்தின் நீராதாரக் கட்டமைப்பில் கடந்த நூற்றாண்டுகளில் பெரும் சேதம் உண்டாகியிருக்கிறது. காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு என்று மாநிலத்தின் பிரதான நீராதார நதிகளில், நீர்ப் பகிர்வில் அண்டை மாநிலங்களுடன் தீவிரமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். நம்முடைய முழு ஆளுகைக்குட்பட்ட நீர் சேகரக் கட்டமைப்பிலும் பெரும் நாசத்தை நாமே உண்டாக்கிவிட்டோம். சென்னைக்குக் குடிநீர் தரும் வீராணம் ஏரி ஒரு உதாரணம். 1923-ல் 41 மில்லியன் கன மீட்டராக இருந்த இந்த ஏரியின் கொள்ளளவு 1991-ல் 28 மில்லியன் கன மீட்டராகக் குறைந்துவிட்டது. அதாவது, மூன்றில் ஒரு பகுதி காணாமல்போய்விட்டது. சென்னையின் மிகப் பெரிய ஏரியான போரூர் ஏரியின் பரப்பளவு 800 ஏக்கர். இப்போது அதில் 470 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. தலைநகர நிர்வாகத்தோடு சம்பந்தப்பட்ட நீர்நிலைகளின் கதியே இதுவென்றால், மாநிலத்தின் ஏனைய நீர்நிலைகளின் நிலையை விவரிக்க வேண்டியதில்லை. தமிழகத்தில் 39,202 ஏரிகள் இருப்பதாக அரசின் பழைய புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இவற்றில் எத்தனை இன்றைக்கும் ஏரிகளாக இருக்கின்றன; அவற்றில் எத்தனை அதே பழைய கொள்ளளவுடன் இருக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது. கண்மாய்கள், குளங்களின் நிலை இன்னும் பரிதாபம். மிச்சமுள்ள ஒரே ஆதாரம் நிலத்தடி நீர். அதீதப் பயன்பாட்டால், அங்கும் பலத்த சேதத்தை உண்டாக்கியிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் புதிதாக முளைக்கும் ஆழ்துளைக் கிணறுகள் நாட்டிலேயே நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் கீழே இறங்கிக்கொண்டிருக்கும் பிராந்தியங்களில் ஒன்றாக தமிழகத்தை மாற்றிவருகின்றன.

இந்தி தேசியம் ஆள்கிறது... நாம்?


சுதந்திரத்துக்கு முன் நம்மிடம் இருந்த இலக்குகளின் உயரத்தையும் அமைப்பில் நமக்கிருந்த செல்வாக்கையும் காட்டிலும் நாம் இன்று பெருமளவில் சரிந்திருக்கிறோம்.

தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் அரை நூற்றாண்டுத் தொடர் ஆட்சிக்கு வித்திட்ட அண்ணாவின் முக்கியமான முழக்கங்களில் ஒன்று, ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது!’ இன்றைக்கு யாரேனும் இப்படி ஒரு முழக்கத்தைக் கூறினால், பொதுவெளியில் இருப்பவர்கள் கொஞ்சம் வித்தியாசமாகப் பார்ப்பார்கள். ஏனென்றால், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூக நலக் குறியீடுகளில் நாட்டிலேயே காத்திரமான இடத்தில் நிற்கும் மாநிலங்களில் ஒன்று தமிழகம். உலகமயமாக்கல் சூழலில், தாராளமயமாக்கலை வேகமாகச் சுவீகரித்துக்கொண்ட மாநிலங்களில் ஒன்று என்பதால், பொருளாதார வளர்ச்சியிலும் தனி நபர் வருவாய் விகிதத்திலும் நாட்டில் முன்னணியில் நிற்கும் மாநிலம். மேலும், மத்தியில் இடையில் உருவான கூட்டணி யுக அரசியல் சூழலையும் இரு திராவிடக் கட்சிகளும் பயன்படுத்திக்கொண்டன. மத்திய அமைச்சரவையில் முக்கியமான இடத்தில் அவை இருந்தன. ஆக, இன்றைக்கு நாம் பெரிய இடத்தில் இருப்பதாகப் பொதுவில் நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கை எந்த அளவுக்கு உண்மையானது?

நாங்கள் - சில நண்பர்கள் இதுகுறித்து கடந்த வாரம் விவாதித்தோம். முதலில், சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டம், சுதந்திரத்துக்குப் பிந்தைய காலகட்டம் என வகுத்துக்கொண்டோம். அடுத்து, சுதந்திரத்துக்குப் பிந்தைய காலகட்டத்தில், திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முந்தைய காலகட்டம், பிந்தைய காலகட்டம் என வகுத்துக்கொண்டோம். தமிழ்நாடு கூடவே இந்தி பேசாத மாநிலங்கள் பலவற்றின் சூழலையும் எடுத்துக்கொண்டு விவாதித்தோம். முதலில் அரசியலமைப்புச் சட்டரீதியாகவே, மாநிலங்களின் உரிமை சார்ந்து நிறைய இழந்துவிட்டோம்; தவிர, சுதந்திரத்துக்கு முன் நம்மிடம் இருந்த இலக்குகளின் உயரத்தையும் அமைப்பில் நமக்கிருந்த செல்வாக்கையும் காட்டிலும் நாம் பெருமளவில் சரிந்திருக்கிறோம் எனும் முடிவுக்கே நாங்கள் வந்துசேர வேண்டியிருந்தது. பலருக்கும் இது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும்கூட இருக்கலாம். உண்மை இதுவே.

வாழ்வதும் ஆள்வதும் ஒன்றா?
கல்வி, சுகாதாரம் போன்ற சமூகநலக் காரணிகளையும் பொதுவான பொருளாதார வளர்ச்சியையும் அடிப்படையாக முன்வைத்து ஏனைய மாநிலங்களைக் காட்டிலும் நாம் சிறப்பாக இருக்கிறோம் என்று நம்மை நாமே தட்டிக்கொடுத்துக்கொள்வது வேறு. ஒரு நாட்டை ஆள்வது வேறு. இன்றைய இந்திய ஒன்றியத்தின் முடிவுகளைத் தீர்மானிக்கும் இடத்தில், நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் இடத்தில் உள்ளபடி நம்முடைய பங்கு என்ன?

இந்தக் கேள்விதான் எங்களுடைய விவாதத்தின் மையப் புள்ளி. நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் ஐந்து முக்கியமான துறைகளை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொண்டாம். 1. நாட்டின் எல்லா முடிவுகளையும் முன்னின்று தீர்மானிக்கும் அரசியல், 2. அரசியல்வாதிகளின் கொள்கை முடிவுகளுக்கு வழிகாட்டும் அதிகாரவர்க்கம், 3. அரசியல் முடிவுகளைப் பின்னின்று இயக்கும் தொழில் துறை, 4. நாட்டின் பார்வையைக் கட்டமைக்கும் ஊடகங்கள், 5. நாட்டின் சட்டங்களின் பரப்பைத் தங்கள் வாதங்களால் தீர்மானிக்கும் சட்ட வல்லுநர்கள்.

மாபெரும் கனவின் பெரும் பகுதி இன்னும் மிச்சமிருக்கிறது!


திராவிட இயக்கத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? - ஒரு இயக்கம் நூற்றாண்டைக் கடந்திருக்கும் சமயத்தில், அதன் தளகர்த்தர் ஆட்சிப் பொறுப்பேற்று அரை நூற்றாண்டு நிறையும் தருணத்தில் (மார்ச் 6, 1967 -2017), இப்படி ஒரு கேள்வி எழும் சூழலும் திராவிடக் கட்சிகள் இரண்டும் இன்று வந்தடைந்திருக்கும் நிலையும் வரலாற்று முரண் என்றே சொல்ல வேண்டும். ஒருபுறம் அரை நூற்றாண்டாக மாநிலத்தில் ஏனைய கட்சிகளுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெருமளவில் தகர்த்து, இன்றும் சட்டசபையில் 95% உறுப்பினர்களுடன் ஆளுங்கட்சி, பிரதான எதிர்க்கட்சி எனும் இரு நிலைகளிலும் அவை அமர்ந்திருக்கின்றன. மறுபுறம், சித்தாந்தரீதியாக நடந்திருக்கும் பெரும் சரிவோடு, சமகாலத்தின் இரு பெரும் தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் அரசியல் களத்தில் இல்லாத நிலையில், வலுவான அடுத்த தலைவர் வரிசையும் இன்றி எதிர்கால நெருக்கடியில் சிக்கியிருக்கின்றன. திராவிடக் கட்சிகளின் வீழ்ச்சிக்காக நெடுங்காலமாகக் காத்திருக்கும் தேசியக் கட்சிகள் இந்தச் சூழலை உவகையோடு பார்க்கின்றன. “திராவிட அரசியலுக்கான தேவை என்ன?” என்ற கேள்வி வெளியிலிருந்து மட்டும் அல்ல; யாரெல்லாம் அதன் பொருட்டு பயன் அடைந்தார்களோ அவர்களிடமிருந்தே ஒலிக்கிறது. உள்ளபடியே, மாபெரும் இந்திய அரசியல் களத்தில் திராவிட அரசியலுக்கான தேவையும் பெறுமதியும் என்ன?