மாஸ்கோவின் மல்லிகை?


மாஸ்கோவில் பிரதமர் விளாடிமிர் புதினை எதிர்த்துப் பொதுமக்கள் நடத்திய பேரணியின் தொடர்ச்சியாக, உலகின் கவனத்தைத் திசைதிருப்பி இருக்கிறார்கள் ரஷ்யர்கள்.

இந்தியா உடைந்தால்...

‘‘எப்போதுமே மக்களிடம் சின்ன பொய்யைச் சொல்லி அவர்களை ஆள்வது கடினம். அதனால், பெரிய பொய்களைச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்!’’ - கோயபல்ஸ்

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்ற அந்தச் சின்ன செய்தி வெளியானது 1962-ல். ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில். மக்கள் அதைப் பொருட்படுத்தாதபோது, கேரள அரசு அதையே 1979-ல் பெரிய பொய்யாகச் சொன்னது ‘மலையாள மனோரமா’ பத்திரிகை மூலம். பி.ஜி. குரியகோஸ் எழுதிய அந்தச் செய்தி அணையில் யானை புகும் அளவுக்கு வெடிப்புகள் ஏற்பட்டு இருப்பதாகவும் அணை எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்றும் லட்சக்கணக்கானோர் உயிரிழப்பார்கள் என்றும் சொன்னது. இந்த முறை மக்கள் அதை நம்பினார்கள். கொந்தளித்தார்கள். இன்றுவரை அந்தப் பொய்யே ஆள்கிறது.

சீனாவுடன் போரிட வேண்டுமா, ஏன்?


                                            இந்திய - சீனப் போர் முடிந்து 50 ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்தியாவின் கடந்த காலத் தோல்விக்கும் எதிர்கால வெற்றிக்கும் நம்முடைய ஆங்கில ஊடகங்கள் 'கண்டுபிடிக்கும்’ காரணங்கள் புல்லரிக்க வைக்கின்றன!
 ''சீன ராணுவத்தினரின் எண்ணிக்கை 22.85 லட்சம்; இந்திய ராணுவத்தினரின் எண்ணிக்கை 13.25 லட்சம். சீனாவிடம் 309 போர்க் கப்பல்களும் 1,200 போர் விமானங் களும் இருக்கின்றன. இந்தியாவிடம் 66 போர்க் கப்பல்களும் 100 போர் விமானங்களும் மட்டுமே இருக்கின்றன. எப்படிப் போதும்?'' என்பதே நம்முடைய  ஊடகங்களின் தலைபோகும் கவலை.

விலைவாசி உயர்வின் விலை!

சென்னை. மேற்கு சைதாப்பேட்டையில் இருந்து பிராட்வே செல்லும் மாநகரப் பேருந்து.
 ''ஏப்பா... கோயம்பேடு போவணும், தி.நகராண்ட எறக்கிவிடுறியா?"
''பெரிசு இன்னும் நாலு ரூவா குடு."
"ஏப்பா தி.நகருக்கு ஒம்பது ரூவாயா?"
அதிர்ச்சியில் உறையும் அந்தப் பெரியவர்  தனக்குள் முனக ஆரம்பிக்கிறார்.
"நாலு எட்டுல இருக்குற எடத்துக்கு ஒம்போது ரூவா. அப்ப டீ எட்டு ரூவா ஆயிடுமா? ஈபிக்காரன் யூனிட்டு ஒரு ரூவா போட்டப்பவே அஞ்சு ரூவா வாங்குனான் வீட்டுக்காரன். இப்பம் பத்து ரூவா கேட்பான்!"
-விலைவாசி உயர்வை அரசாங்கம் பைசாக்களில் கணக்கிடுகிறது. மக்களோ  அதை வலியால் கணக்கி்டுகிறார்கள்.

இதற்குத்தானா ஜெயித்தீர்கள் ஜெயலலிதா?

 
ஓவியம்: ஹாசிஃப் கான்



‘‘வீடுகளை அழி, அவன் அடையாளம் இல்லாமல் போகட்டும்
பள்ளிக்கூடங்களை அழி, அவன் பண்பாடு இல்லாமல் போகட்டும்
நூலகங்களை அழி, அவன் வரலாறே இல்லாமல் போகட்டும்!’’

தற்கொலை இந்தியா!

                
                       அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் அசைக்க முடியாத இடத்தைப் பிடிக்கும் என்ற செய்தி வெளியான அதே நாளில் வெளியான செய்தி இது. இந்தியாவில் கடந்த ஆண்டு 1,34,599 பேர் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கின்றனர்! தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகம் அளித்திருக்கும் இந்தக் கணக்கின்படி பார்த்தால், நம் நாட்டில் சராசரியாக ஒரு நாளைக்கு 368 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதாவது, ஒரு மணி நேரத்துக்கு 15 பேர்!

               இந்தக் கணக்கில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உண்டு. தற்கொலை செய்துகொண்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள். அதாவது, நாட்டில் பொருளா தார வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். நாட்டிலேயே அதிகமான தற்கொலைகள் பதிவாகி இருக்கும் முதல் இரு இடங்கள் நாட்டின் மென்பொருள் தலைநகரங்களான பெங்களூரு மற்றும் சென்னை. இதேபோல, நாட்டின் ஆயத்தஆடைக் கேந்திரமான திருப்பூரிலும் தற்கொலைகள் அதிகம் பதிவாகி இருக்கின்றன. தற்கொலை செய்துகொண்டவர்களில் 41 சதவிகிதத்தினர் சுயதொழிலில் இருந்தவர்கள். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டால், மாணவர்கள் தற்கொலை விகிதம் பெரிய அளவில் அதிகரித்து இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்குள் கிட்டத்தட்ட 26 சதவிகிதம்!

               இது அரசு சொல்லும் கணக்கு. அரசு ஏற்க மறுக்கும் இன்னொரு கணக்கும் உண்டு. இந்தியாவில் அரை மணி நேரத் துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்கிறார். கடந்த 16 ஆண்டுகளில் வரலாற்றிலேயே அதிகமான தற்கொலைகள் பதிவான இடமாக உருவெடுத்திருக்கிறது மகாராஷ்டிரத்தின் விதர்பா. இங்கு தற்கொலை செய்துகொள்பவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் விவசாயிகள்.

               பெங்களூரு பொறியாளர்கள், திருப்பூர் தொழிலாளிகள், விதர்பா விவசாயிகள், டெல்லி மாணவர்கள்... இந்தத் தற்கொலைகள் அனைத்தையும் ஒரே நேர்க்கோட்டில் பார்க்க முடியுமா? அடுத்த வேளைக்கே வழி தெரியாத விதர்பா விவசாயத் தொழிலாளி யின் தற்கொலையும் உச்சபட்ச ஊதிய விகிதத்தை அனுபவிக்கும் பெங்களூரு பொறியாளனின் தற்கொலையும் உணர்த்தும் செய்தி என்ன?

இந்தியா இருள்கிறது!

மன்மோகன் சிங் ஒரு மரபார்ந்த அரசியல்வாதி இல்லை என்பதாலேயே, மக்களின் உணர்வுகள் அவருக்குப் புரிவது இல்லை என்று அங்கலாய்ப்பவர்கள் உண்டு. அது பெரும் தவறு. வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் தான் ஒரு தேர்ந்த அரசியல்வாதி என்பதை அவர் நிரூபித்துக்கொண்டுதான் இருக்கிறார்.
கூடங்குளம் அணு உலைச் செயல்பாடுகளை முடக்கக் கோரி தொடர் உண்ணாவிரதம் இருந்த மக்களின் பிரதிநிதிகளை அவர் சந்தித்த அன்று தில்லியில் அரசு ஆதரவு உளடகங்கள் புல்லரித்தன, நாட்டின் கடைக்கோடி கிராம மக்களின் உணர்வுகளுக்கும் போராட்டத்துக்கும்கூட பிரதமர் முக்கியத்துவம் அளிக்கிறார் என்று. அதேநாளில்தான் இந்திய அணுசக்தித் துறை மத்திய உளவுத் துறைக்கு ஒரு குறிப்பை அனுப்பியது. இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அந்நியச் சக்திகள் இருக்கலாம் என்றும் ரூ. 1,000 கோடி வரை இத்தகைய போராட்டங்களுக்காக அந்தச் சக்திகள் களம் இறக்கி இருக்கலாம் என்றும் சொன்னது அந்தக் குறிப்பு.

‘‘ஒரே தீர்வு: புரட்சி!’’

அமெரிக்கா நீண்ட காலமாக தன் நாட்டில் உள்ள இன்னொரு அமெரிக்காவை மறைத்துவைத்து இருந்தது. அந்த இன்னொரு அமெரிக்கா நமக்கு அறிமுகம் இல்லாதது. வேலையற்றவர்களும் ஏழைகளும் சூழ்ந்தது. வாஷிங்டனிலும் சியாட்டிலிலும் சாக்ரோமண்டோவிலும் ஒதுக்குப்புறங்களில், தேவாலயங்களின் பின்பகுதியில் கூடாரங்கள் அமைத்து வாழும் அமெரிக்கர்கள் நிறைந்த அமெரிக்கா அது!

வாச்சாத்தி ஒரு தொடக்கப்புள்ளி ஆகட்டும்!

வாச்சாத்தியில் அந்த பயங்கரம் நடந்து 3 ஆண்டுகளுக்குப் பின் நடந்த அடையாள அணிவகுப்பு அது. வாச்சாத்தி வன்முறையில் ஈடுபட்ட 269 பேருடன் மேலும் பல நூற்றுக்கணக்கானோர் கலந்து நிறுத்திவைக்கப்பட்டு ஐம்பது ஐம்பது பேராக அந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. அவர்களில் பாலியல் குற்றவாளிகளை பாதிக்கப்பட்ட பெண்கள் அடையாளம் காட்ட வேண்டும். வாச்சாத்தி பெண்கள் சரியாக அடையாளம் காட்டினார்கள். இதற்கு 10 ஆண்டுகள் கழித்து கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் துல்லியமாக அடையாளம் காட்டினர். அப்போது நீதிபதி அசோக்குமாரிடம் ஒரு பெண் சொன்னார்: ‘‘இப்ப இல்லீங்கய்யா... எப்ப கேட்டீங்கன்னாலும் அடையாளம் காட்டுவோம். வாழ்க்கையையே சீரழிச்சவங்களை எப்படிங்கய்யா மறக்க முடியும்?’’
இதுதான் வேறுபாடு. வாச்சாத்தி பயங்கரம் நமக்கு ஒரு சம்பவம். அவர்களுக்கோ அது வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒரு பகுதி!

துன்பம் வரும்போது சிரியுங்கள்!

ந்தச் செய்திகளைக் கொஞ்சம் அதிர்ச்சி அடையாமல் படியுங்கள்.
‘‘நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (ஜி.டி.பி.) 7.7 சதமாக வீழ்ச்சி. கடந்த 18 மாதங்களில் மிகக் குறைந்த அளவு இது.’’
‘‘இந்தக் காலாண்டுக்கான தொழில் துறை வளர்ச்சி 3.3 சதமாகக் குறைவு. கடந்த 21 மாதங்களில் மிகக் குறைந்த அளவு இது.’’
‘‘பொதுப் பணவீக்கம் 9.78 சதமாக உயர்வு. பணவீக்கம் இரட்டை இலக்கத்தைத் தொடுவது தவிர்க்க முடியாததாகிறது.’’
‘‘அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு. கடந்த இரண்டு ஆண்டுகளில் மோசமான சரிவு இது.’’
- இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஒரு நாட்டின் நிதி அமைச்சர், ‘‘நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சிக்கான நல்ல அறிகுறிகள் தோன்றுகின்றன’’ என்று சொன்னால் எப்படி இருக்கும்? கடந்த வாரம் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசியபோது இப்படித்தான் சொன்னார்.

இந்தியா இதை யோசிக்கலாம்!


                           ‘‘நாங்கள் நிறைய சம்பாதிக்கிறோம். முன்னெப்போதையும்விட நிறைய சம்பாதிக்கிறோம். ஆனால், அரசாங்கம் நெருக்கடியில் இருக்கிறது. ஏன் என்னைப் போன்ற பெரும் கோடீஸ்வரர்களுக்கு எனப் பிரத்யேகமான வருமான வரியை அரசாங்கம் வசூலிக்கக் கூடாது?’’ - அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள வரிச் சீர்திருத்தத்தைக் கொண்டுவரும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபே சொன்ன யோசனை இது.

தங்கமே தங்கம்!

இரண்டு உலகப் போர்கள் முடிந்திருந்தபோது, உலகத்தின் மொத்த கையிருப்பில் முக்கால்வாசிக்கும் மேலான தங்கம் அமெரிக்காவிடம் இருந்தது. நீண்ட காலம் தன்னிடம் இருந்த தங்கத்தின் மதிப்புக்கு இணையாக டாலர் மதிப்பு இருக்கும் வகையிலேயே டாலர்களை அச்சடித்தது அமெரிக்கா. உலக நாடுகள் தங்கள் சேமிப்பின் பெரும் பகுதியை டாலர்களாகச் சேமித்ததற்கும் அரை நூற்றாண்டுக்கும் மேல் டாலர் சர்வதேச நாணயமாக வளைய வந்ததற்கும் முக்கியமான பின்னணி இது.

ஒபாமாவுக்கு பஸ்! மன்மோகனுக்கு?

பராக் ஒபாமா இப்போது பஸ் பயணங்களுக்குத் தயாராகிக்கொண்டு இருக்கிறார். அமெரிக்கப் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு சாமானியர்களுடனான இத்தகைய பயணங்கள் அவருக்கு உதவும் என்று கூறுகிறார்கள் அவருடைய கட்சியினர். அமெரிக்கர்கள் இதைச் சட்டை செய்யவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு ஒபாமா தயாராகிக்கொண்டு இருப்பதாகவே அவர்கள் கருதுகிறார்கள். 2007-08 பொருளாதார மந்த நிலைக்குப் பின் பெரிய மீட்பராக அவர்கள் பார்த்த ஒபாமா இப்போது இல்லை. கடந்த மாத இறுதியில், நாட்டின் கடன் உச்சவரம்பைத் தீர்மானிக்க எதிர்க்கட்சியினருடன் நடத்திய பனிப்போரின் முடிவில், தனக்கு விருப்பம் இல்லாத உடன்பாட்டுக்கு ஒபாமா வந்தபோதே அவர் மீது அமெரிக்கர்களுக்கு இருந்த மிச்ச நம்பிக்கைகள் சிதைந்துவிட்டன. வரலாற்றிலேயே முதல் முறையாக, சர்வதேசக் கடன் மதிப்பீட்டுத் தரச் சான்று நிறுவனமான ‘ஸ்டாண்டர்டு அண்டு புவர்ஸ்’, அமெரிக்க அரசின் கடனைத் திருப்பிச் செலுத்தும் தகுதியை ‘ஏஏஏ’ _ மிகவும் பாதுகாப்பானது _ என்கிற நிலையில் இருந்து அடுத்த நிலையான ‘ஏஏ+’-க்குத் தரம் இறக்கிய பின் ஒபாமாவின் பிம்பம் சுக்குநூறாகச் சிதறிவிட்டது. அடுத்தடுத்து, பங்குச் சந்தைகளில் தொடரும் வீழ்ச்சிகள் அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான காலத்தைக் கையாண்ட அதிபராக ஒபாமாவை மாற்றிக்கொண்டு இருக்கின்றன.
ஒபாமாவின் இந்த வீழ்ச்சிக்கு யார் காரணம்?

சென்னை யாருடைய நகரம்?


                                சென்னையின் பூர்வக்குடிகள் சோழ மண்டலக் கடற்கரையோரச் செம்படவர்கள். சென்னையின் சில பகுதிகள் தமிழகத்தின் ஏனைய பகுதிகளுக்கு இணையான தொன்மை வாய்ந்தவை. இந்த வரலாறு இன்றைக்கு எடுபடாது. ஐரோப்பியர்களின் வருகைக்குப் பிந்தைய, ஆங்கிலேயர்களால் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட 1640-க்குப் பிந்தைய வரலாறே சென்னையின் இன்றைய வரலாறு. சென்னையின் பூர்வக்குடிகளுக்கு இன்றைய பிரமாண்டமான நவீன சென்னையில் எந்தப் பங்கும் கிடையாது. புதிய வரலாற்றின் அடிப்படையில், சென்னையின் 372-வது வயதைக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள் வந்தேறிகளான இன்றைய சென்னைத் தமிழர்கள். வரலாற்றைத் திருப்புவதில் எப்போதுமே வந்தேறிகள் முக்கியமானவர்கள். சென்னையின் வரலாறு இப்போது மீண்டும் திரும்புகிறது வந்தேறிகளால். ஒரே வரியில் சொல்வது என்றால், தொழில் - வேலைவாய்ப்புகள் ரீதியாக தமிழர்கள் கைகளில் இருந்து நழுவுகிறது சென்னை!

வேலைக்காக வாழ்க்கையா? வாழ்க்கைக்காக வேலையா?

இந்தியர்கள் கவனிக்க வேண்டிய ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் ஹிலாரி கிளிண்டன். ‘பி.பி.சி’-க்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் அடுத்த ஆண்டோடு அவர் அரசியலில் இருந்து விலகப்போவதாக சொல்லி இருக்கிறார். 

சந்தி சிரிக்கும் இந்திய மானம்

சர்வதேச அளவில் இந்தியா மீண்டும் தலைகுனிந்து நிற்கிறது. இந்த முறை அவமான உபயதாரர்கள்: இந்திய ராணுவத்தினர்! அமைதி காக்கும் பணிக்காக காங்கோவுக்கு அனுப்பப்பட்டு இருந்த இந்திய வீரர்கள் அங்கு பாலியல் முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமாகி இருக்கிறது!

அஞ்சல் அபாயம்!


உலகின் மிகப் பெரிய அஞ்சல் நிறுவனமான இந்திய அஞ்சல் துறையின் 247 வருட கால வரலாற்றில் மிக மோசமான தருணம் இது. அமெரிக்க நிறுவனத்தின் ஆலோசனையை ஏற்கிறோம் என்ற பெயரில், படிப்படியாக அஞ்சல் நிலையங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அஞ்சல் துறையை மூடும் பாதையைத் தேர்ந்து எடுத்து இருக்கிறது மத்திய அரசு.

இலவசங்களின் விலை!

முதல்வர் ஜெயலலிதாவுக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் அவருடைய திட்டங்களையும் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அவர் இப்போது தன்னுடைய ஆட்சியின் பயணத்தைத் தொடங்கி இருப்பது கருணாநிதியின் பாதையில்தான்! முதலாவது சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், இந்த அரசு பயணிக்கப் போகும் பாதை கிட்டத்தட்ட தெரிந்துவிட்டது. இலவச அரசியலில் எந்த வகையிலும் நாங்கள் தி.மு.க-வுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லாமல் சொல்கின்றன ஆளுநர் அறிக்கையில் வெளியிடப்பட்ட பல அறிவிப்புகள்!

இது மன்மோகன்களின் காலம்!

மீண்டும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் ஆகிறார் பான் கி மூன். அமெரிக்காவின் முழு ஆதரவை அதிபர் ஒபாமா அறிவித்துவிட்டார். ரஷ்யாவும் அறிவிக்கத் தயாராகிவிட்டது. ஐ.நா. பாதுகாப்பு அவையின் ஏனைய நிரந்தர உறுப்பு நாடுகள் யாவும் ஆதரவு தெரிவித்துவிட்டன. சீனாவும் ஆதரிக்கிறது; இந்தியாவும் ஆதரிக்கிறது. வடகொரியாவும் ஆதரிக்கிறது; இலங்கையும் ஆதரிக்கிறது. ஒட்டுமொத்த உலகின் வெளியுறவுக் கொள்கையும் எப்படி ஒன்றானது?

சமச்சீர்க் கல்வி எனும் பெருங்கனவு

அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது, நம்முடைய அரசியல்வாதிகளால் மிகப் பெரிய விஷயங்களில்கூட எவ்வளவு சர்வ சாதாரணமாகவும் வேகமாகவும் முடிவுகளை எடுக்க முடிகிறது என்பதைப் பார்க்கும்போது!
புதிதாகப் பொறுப்பேற்ற தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் அது. சில மணி நேரங்கள் மட்டுமே கூட்டம் நடக்கிறது. விவாதங்கள் ஏதும் இல்லை. கூட்டத்தில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. நாடு குடியரசான காலம் தொட்டு முதல் முறையாக மேட்டூர் அணையில் முன்கூட்டியே தண்ணீர் திறந்துவிடுவது என்பது முதல், சமச்சீர்க் கல்விப் பாடத்திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பது என்பது வரை!

தீவிரவாதத்தை ஒழித்த பயங்கரவாதி!

கொல்லப்பட்டார் ஒசாமா பின்லேடன்!
கிட்டத்தட்ட 10 ஆண்டுகள், இரு பெரும் போர்கள், பல்லாயிரக்கணக்கான உயிர்கள், லட்சக்கணக்கான கோடிகளைப் பலியிட்ட பின் வெள்ளை மாளிகை தனது மகத்தான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. 
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் அறிவிப்பு வெளியானபோது, நள்ளிரவு என்றும் பாராமல் வீதிகளில் கூடி, ஆடித் தீர்த்தார்கள் அமெரிக்கர்கள். வரும் செப். 11 வரை  கொண்டாட்டங்கள் தொடரலாம்!
ஒசாமா பின் முஹம்மது பின் அவாத் பின்லேடனின் ஒரே சாதனை என்ன? ஒசாமாவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, உலகின் வெளியுறவுக் கொள்கை முற்றிலும் மாறியது. உலகில் தனி ஒரு நாடே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லா அரசுகளும் கை கோத்தன. ஆயுதக் குழுக்களை அழிப்பதில் ஒன்றிணைந்தன. பல தேசியப் போராட்டங்கள் அழித்தொழிக்கப்பட்டன!
ஆயுதக் குழுக்கள் மூலம் அரசுகளைத் தகர்க்கலாம் என்பதுதான் ஒசாமாவின்  நம்பிக்கையாக இருந்தது. ஆனால், உலகின் எந்த ஒரு பகுதியிலும் நியாயமான காரணங்களுக்காகக்கூட ஆயுதக் குழுக்கள் செயல்பட முடியாத நிலையை உருவாக்கியதைத்தான், ஒசாமாவின் ஒரே 'சாதனை’யாக நான் நினைக்கிறேன்!
''அமெரிக்கா எல்லா நாடுகளையும் ஆக்கிரமித்துக்கொள்ள நினைக்கிறது. எல்லா நாடுகளின் வளங்களையும் கொள்ளையடிக்க நினைக்கிறது. அதன் முகவர்கள்தான் நம்மை  ஆள வேண்டும் என்று நினைக்கிறது. இதற்கு நாம் எல்லோரும் சம்மதிக்க வேண்டும்என்று  நினைக்கிறது. எதிர்ப்பவர்களைப் பயங் கரவாதிகள் என்கிறது. யார் பயங்கரவாதி... அமெரிக்காவா? அமெரிக்காவின் இத்தகைய பயங்கரவாதத்தை எதிர்ப் பவர்களா?''
- ஒரு தொலைக்காட்சிப் பேட்டியின்போது, தன் மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளுக்கு ஒசாமா பின்லேடன் அளித்த பதில் இது.
''அமெரிக்கா எதைச் செய்ய நினைக்கிறதோ, அதைச் செய்து முடிக்கும். உலகத்துக்கு நாம் மீண்டும் சொல்லும் செய்தி இதுதான்!''
- ஒசாமா கொல்லப்பட்டதை அறிவித்தபோது, ஒசாமாவின் மரணத் தைப்பற்றி அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பிட்டது இது.
அமெரிக்கா எதை எல்லாம் செய்ய நினைக்கிறதோ, அதை எல்லாம் செய்து முடித்துவிடுவதால்தான், ஒசாமாக்கள் உருவாகிறார்கள் என்பதை அமெரிக்க அதிபர்களுக்கு யார் சொல்வது?
ஆனந்த விகடன் 2011 

உலகின் மனசாட்சியை உலுக்கட்டும் - விசுவநாதன் உருத்திரகுமாரன்


                        விசுவநாதன் உருத்திரகுமாரன். நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர். இவர் மீதும் ஏராளமான விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும்  உண்டு. ஆனால், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின், பிரபாகரனுக்கு அடுத்த நிலையில், தன்னை நிறுத்திக்கொண்டிருக்கிறார் உருத்திரகுமாரன். இலங்கை அரசு எப்படியாவது இவரைக் கைது செய்து, நாடு கடந்த தமிழீழ அரசமைப்பை முடக்கிவிடத் துடிக்கிறது. ஆனால், அமெரிக்கக் குடியுரிமை பெற்ற வழக்கறிஞரான உருத்திரகுமாரன், சட்ட ரீதியிலான காய் நகர்த்தல்களால் தப்பிக்கிறார். நியூயார்க்கில் இருந்தபடியே தன்னுடைய அமைப்பை இயக்குகிறார். முள்ளிவாய்க்கால் பேரழிவின் இரண்டாம் ஆண்டு நிறைவு, இலங்கை இறுதிப் போர் தொடர்பான ஐ.நா சபையின் அறிக்கை, உலகிலேயே இனப் படுகொலைகள் அதிகம் நடந்த சூடானில் இப்போது நடந்திருக்கும் பிரிவினை ஆகியவற்றின் பின்னணியில் உருத்திரகுமாரன், அளித்த பிரத்யேகப் பேட்டி இது.

மனிதகொல்லிகள்!


ண்டோசல்ஃபான்.
 1950-களில் கண்டறியப்பட்ட பூச்சிக்கொல்லி இது. ஒரு காலத்தில் அமெரிக்க, ஐரோப்பிய விவசாயிகளால் விரும்பிப் பயன்படுத்தப்பட்ட இது, பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்டுவிட்டது. காரணம், பயிர்கள் மீது தெளிக்கப்படும்போது, பூச்சிகள் மீது எத்தகைய பாதிப்புகளை உருவாக்குகிறதோ, அதே வகையிலான பாதிப்புகளை மனிதர்கள் மீதும் எண்டோசல்ஃபான் உருவாக்கியது!
சிதைக்க முடியாத ரசாயனம் எண்டோ சல்ஃபான். காலத்தைக் கடந்து, தலைமுறைகளைக் கடந்து பாதிப்புகளை உருவாக்கக்கூடியது.எல்லைகளைத் தாண்டி, மண், காற்று, நீர் எனப் பல வகைகளிலும் ஊடுருவக்கூடியது. அன்டார்டிகாவில்கூட எண்டோசல்ஃபானின் தாக்கம் பரவி இருக்கிறது.கடந்த வாரம் எண்டோசல்ஃபானுக்கு சர்வதேசத் தடை விதிப்பது தொடர்பாக, உலக நாடுகள் விவாதித்தன. மாநாட்டில் 173 நாடுகள் பங்கேற்றன. 125 நாடுகள் எண்டோசல்ஃபானின் தடையை உறுதி செய்தன. 47 நாடுகள் குழப்பமான சூழலில் அமைதி காத்தன. ஒரே ஒரு நாடு மட்டும் எண்டோ சல்ஃபான் தடைக்கு எதிராகப் போராடியது... அது இந்தியா!

தேவைதானா கருப்புச் சட்டம்?


‘‘இந்தியக் குடிமக்களின் சுதந்திர உணர்வைத் தடுக்கக் கூடிய சட்டங்களிலேயே முதன்மையானது இந்தச் சட்டம்தான். அரசாங்கம் ஒன்றைப்  புரிந்துகொள்ள வேண்டும். சட்டங்களாலோ, தண்டனைகளாலோ அரசாங்கத்தின் மீது நேசத்தை உருவாக்கிவிட முடியாது.’’
- 1922-ம் ஆண்டு ‘யங் இந்தியா’ பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரைக்காக, ராஜ துரோகக் குற்றம் சாட்டப்பட்ட காந்தி நீதிமன்றத்தில் வாதாடியபோது, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு ‘124ஏ’ மீது முன்வைத்த விமர்சனம் இது!

வரலாற்றில் நம்முடைய இடம் எது?

  
                                            பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டபோதோ, சோவியத் ஒன்றியம் சிதறுண்டபோதோ, உங்களால் என்ன செய்திருக்க முடியும்? ஒன்றுமே செய்திருக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால், நீங்கள் அப்போது என்ன நினைத்தீர்கள் என்பதும் என்ன சொன்னீர்கள் என்பதும் முக்கியம். காலம் அதைக் குறித்து வைத்திருக்கும்.
 வரலாறு என்பது எப்போதுமே இப்படிதான். அரபு உலகில் இப்போது அதுதான் நடந்துகொண்டு இருக்கிறது. இந்த எளிய புரிதல் இந்தியாவுக்கு இருக்கிறதா?

புலி அரசியல்!


இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
- இந்திய அரசு சமீபத்தில் பெருமிதத்தோடு வெளியிட்ட அறிவிப்பு இது.
  ‘‘இந்தியக் காடுகளில் உள்ள புலிகளின் சராசரி எண்ணிக்கை 1,706. முன்னதாக, 2006-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது, 1,411 புலிகள் வரை இருந்தன. இப்போது 385 புலிகள் அதிகரித்திருக்கின்றன.’’
  இந்த ஒரு பத்தித் தகவல்தான் அரசாலும் ஊடகங்களாலும் தேசியப் புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையின் முக்கியச் செய்தியாக வெளியிடப்பட்டது. மேலோட்டமாகப் பார்த்தால், இது முக்கியமான செய்தி. ஆனால், அறிக்கையின் உள்ளேயுள்ள விவரங்களுடன் ஒப்பிட்டால் முக்கியச் செய்தி இதுவாக இல்லை!

இன்னொரு பனிப்போர் உருவாக்கப்படுகிறதா?


              புது தில்லி இந்த ஆண்டு பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 1,64,415 கோடி என அறிவித்த அடுத்த சில நாட்களில் தங்களுடைய பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 4,57,500 கோடி என்று அறிவித்திருக்கிறது பெய்ஜிங். ராணுவத்துக்கான ஒதுக்கீட்டைக் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தியா 11.6 சதம் அதிகரித்திருக்கிறது; சீனா 12.7 சதம்!            

தினமணியிலிருந்து ஆனந்த விகடனுக்கு..!

(என்னுடைய வலைத்தளத்திலும் சரி, முகப்புத்தகத்திலும் சரி, எப்போதுமே தனிப்பட்ட வாழ்க்கைச் சம்பவங்களை வெளியிடுவதில் எனக்கு ஆர்வம் இருந்தது கிடையாது. என்னுடைய எழுத்துகளைச் சேகரித்துவைக்கும், மேலும் சிலரிடம் கொண்டுசெல்லும் இடங்களாகவே அவற்றைக் கருதிவந்திருக்கிறேன். ஆனால், இந்தப் பதிவை நான் இங்கு பகிர்ந்துகொள்வது விதிவிலக்காகிறது.)

பதிவிறக்க எழுத்தாளர்களின் பொற்காலம்!

 
    இந்த 34-வது சென்னைப் புத்தகக் காட்சியின் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்கள் யார்? யாருடைய புத்தகங்கள் விற்பனையில் அதிகமாக இருக்கின்றன?
அருந்ததி ராய், அமிதவ் கோஷ், ராமச்சந்திர குஹா, விக்ரம் சேத்?
இல்லை.
ஜெயமோகன், இமையம், பெருமாள்முருகன்?
கிடையாது.
அட, வைரமுத்து, ரமணி சந்திரன்?
ம்.. ஹூம்.
    இப்போதெல்லாம் புத்தகக் காட்சிகளில் ஒரு புதிய படை எழுத்தாளர்கள்தான் கலக்குகிறார்கள். சென்னைப் புத்தகக் காட்சியையும் அவர்களே ஆக்கிரமித்திருக்கிறார்கள். இந்தப் புதிய படை எழுத்தாளர்களைப் பதிவிறக்க எழுத்தாளர்கள் என்று நாம் அழைக்கலாம்.
அதென்ன பதிவிறக்க எழுத்தாளர்கள்?

வெற்றிகரமான பதிப்பாளராவது எப்படி?

  
சென்னைப் புத்தகக் காட்சி வளாகத்தில் காலையிலிருந்து இரவு வரை ஒரு வாரம் அலைந்தால் தமிழ்ப் பதிப்புத் துறையின் அவ்வளவு தொழில் சூட்சுமங்களையும் தெரிந்துகொண்டு விடலாம் போலிருக்கிறது.
   தமிழ்ப் பதிப்புத் துறையை வெளியிலிருந்து பார்க்கும் ஒருவருக்குக் காணக் கிடைக்கும் பிம்பங்கள் மிகக் கௌரவமானவை. ஆனால், உள்ளே தெரியும் பிம்பங்களோ மிக மோசமானவை. அதேசமயம், பரிதாபத்தை ஏற்படுத்துபவையும்கூட.  தமிழகத்தில் அறிவுசார் தளத்தைக் கட்டமைப்பதில் முக்கிய இடத்தை வகிக்கும் பதிப்புத் துறையில் இன்றைக்கு ஒருவர் வெற்றி பெற வேண்டுமானால் என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா? (எந்த எழுத்தாளரும் எழுதி, எந்தப் பதிப்பாளரும் பதிப்பிக்க வாய்ப்பில்லை என்பதால், பதிப்புத் துறைக்குப் புதிதாக வரும் அப்பாவிகளின் நலன் கருதி இந்த 10 ரகசியங்கள் வெளியிடப்படுகின்றன.)