இன்னொரு பனிப்போர் உருவாக்கப்படுகிறதா?


              புது தில்லி இந்த ஆண்டு பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 1,64,415 கோடி என அறிவித்த அடுத்த சில நாட்களில் தங்களுடைய பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 4,57,500 கோடி என்று அறிவித்திருக்கிறது பெய்ஜிங். ராணுவத்துக்கான ஒதுக்கீட்டைக் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தியா 11.6 சதம் அதிகரித்திருக்கிறது; சீனா 12.7 சதம்!            

தினமணியிலிருந்து ஆனந்த விகடனுக்கு..!

(என்னுடைய வலைத்தளத்திலும் சரி, முகப்புத்தகத்திலும் சரி, எப்போதுமே தனிப்பட்ட வாழ்க்கைச் சம்பவங்களை வெளியிடுவதில் எனக்கு ஆர்வம் இருந்தது கிடையாது. என்னுடைய எழுத்துகளைச் சேகரித்துவைக்கும், மேலும் சிலரிடம் கொண்டுசெல்லும் இடங்களாகவே அவற்றைக் கருதிவந்திருக்கிறேன். ஆனால், இந்தப் பதிவை நான் இங்கு பகிர்ந்துகொள்வது விதிவிலக்காகிறது.)