ஜனநாயக ஓட்டைகள்

                                        ந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் யார்?
அதை எல்லோரும் பேசட்டும். நாம் உருப்படியான ஒரு விஷயம் பேசுவோம். இந்தியாவில் குடியரசுத் தலைவர் தேர்வு எப்படி நடக்கிறது தெரியுமா?

நீரும் விஷம்!



                    கை கொடுங்கள்... கடைசியாக நாம் குடிக்கும் தண்ணீரையும் விஷமாக்கிவிட்டோம்!

                    நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் நிலத்தடி நீர் விஷமாகிவருவதை நாடாளுமன்றத்திலேயே ஒப்புக்கொண்டு இருக்கிறது இந்திய அரசு. மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, நாட்டின் 385 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் நைட்ரேட் மிகுந்து காணப்படுகிறது; 267 மாவட்டங்களில் ஃபுளோரைடு மிகுந்து காணப்படுகிறது; 158 மாவட்டங்களில் தண்ணீர் உப்பாக மாறிவருகிறது; 63 மாவட்டங்களில் துத்தநாகம், குரோமியம், காட்மியம் போன்ற உலோகங்கள் மிகுந்து காணப்படுகிறது.

கோமாளிகளின் கூடாரம்!

ஸ்ரீலஸ்ரீ அருணகிரி ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகப் பரமாச்சார்ய சுவாமிகள் தன்னுடைய மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகப் பரமாச்சாரிய ஸ்வாமிகளைச் சட்டபூர்வமாக நியமித்தது ஒருநாள் நகைச்சுவையாக மாறிப்போனதை நம் சமூகத்தின் அவலம் என்றுதான் சொல்ல வேண்டும். சர்வ வல்லமை மிக்க முதல்வரையோ, பிரதமரையோகூட உங்களால் கேள்வி கேட்க முடியும். ஆனால், ஆதீனகர்த்தாக்களையோ, மடாதிபதிகளையோ ஒன்றுமே செய்ய முடியாது. இதற்கு எப்படிச் சிரிப்பது?

நான் லாபி செய்கிறேனா?: ஸ்ரீனிவாசன்


                                   இது ஸ்ரீனிவாசனின் பொற்காலம்! ஒருபக்கம், தென்னகத்தின் பெரும் சிமென்ட் நிறுவனமான அவருடைய 'இந்தியா சிமென்ட்ஸ்’ வடக்கிலும் கிளை பரப்பிக்கொண்டு இருக்க, இன்னொரு பக்கம், அவருடைய 'சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணி ஐ.பி.எல். போட்டிகளில் கோடிகளை வாரிக் குவிக்கிறது. இந்தியாவைத் தாண்டியும் கோலோச்சுகிறார் ஸ்ரீனிவாசன். சர்வதேச கிரிக்கெட் ஆணையமே அவர் சொல்படி ஆடுகிறது. புகழுக்கு இணையாக சர்ச்சைகளிலும் மிதக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரை அவருடைய 'இந்தியா சிமெண்ட்ஸ்' அலுவலகத்தில் சந்தித்தேன்.