நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின் பல பகுதிகள் செத்துவிட்டன - நாகநாதன் பேட்டி


திமுகவின் சித்தாந்தக் குரல்களில் முக்கியமானவர் நாகநாதன். தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பொருளாதார நிபுணர்களில் ஒருவர். அரசியலமைப்புச் சட்டத்திலும் நிபுணத்துவம் உடையவர். பெரியார், அண்ணா, கருணாநிதி என்று திராவிட இயக்கத்தின் மூன்று பெரும் ஆளுமைகளுடனும் உறவில் இருந்தவர். குடும்பப் பின்னணி சார்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இயக்கங்களின் செயல்பாடுகளையும் நெருக்கத்தில் பார்த்தவர். கருணாநிதியின் நடைப்பயிற்சி இணையுமான நாகநாதன், திமுக ஆட்சியில் மாநிலத் திட்டக் குழுத் துணைத் தலைவராகவும் இருந்தவர். வரலாற்றில் தொட்டு திராவிட இயக்கம், தமிழகம், இந்தியா செல்ல வேண்டிய பாதை என்றெல்லாம் பேசினார் நாகநாதன்.

சாதி ஒழிப்பில் நெருக்கக் கூட்டாளி திராவிட இயக்கம்! - தொல்.திருமாவளவன் பேட்டி


தமிழகத்தில் தலித் அரசியல் எழுச்சியின் சமகால வடிவம் தொல்.திருமாவளவன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர். அம்பேத்கரையும் பெரியாரையும் ஒரு புள்ளியில் இணைத்து நெருக்கமாகப் பார்ப்பவர். அம்பேத்கரிய இயக்கங்களில் நாட்டிலேயே துணை தேசியத்தை - இங்கே தமிழ்த் தேசியத்தைச் சாதி ஒழிப்புக்கான ஒரு அரசியல் ஆயுதமாகக் கையில் எடுத்தவர். நூறாண்டு திராவிட இயக்கத்தின் பணி, அரை நூற்றாண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சி, கருணாநிதியின் அறுபதாண்டு சட்ட மன்றப் பணி மூன்றையும் சாதி ஒழிப்பு - சமூக நீதித் தளத்தில் மதிப்பிட்டார். ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூலிலிருந்து...

திராவிட இயக்கத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தியச் சமூகம் சாதியக் கட்டமைப்புகளால் ஆனது. சாதியக்கூறுகள் இல்லாமல் ஒரு தனி மனிதனின் வாழ்க்கை இங்கே நகர்வதில்லை. இது ஆயிரக்கணக்கான தலை முறைகளாக நிலவுகிறது. சாதிக்கு எதிராக, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று வள்ளுவர் பாடிய காலத்தில் இருந்து, ‘ஆண் சாதி பெண் சாதி ஆக இரு சாதி. வீண் சாதி மற்றதெல்லாம்’ என்று சித்தர்கள் பாடிய காலத்திலிருந்து எதிர்க் குரல்களும் ஒலிக்கின்றன. சாதியை எதிர்த்துப் போராடியவர்கள் சாதியை ஒழிக்கவில்லை. காரணம், முடியவில்லை. ஆனால், ஒவ்வொரு போராட்டமும் ஒரு தாக்கத்தையும் விளைவையும் உருவாக்கியிருக்கிறது. திராவிடர் இயக்கத்தையும் இதன் நீட்சியாகவே நான் பார்க்கிறேன்.

பெரியாருடைய பணிகளை இன்றைக்கு எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழகத்தைப் பொறுத்தவரை பெரியாருக்கு முன், பெரியாருக்குப் பின் என்றே இரண்டாகப் பகுக்கலாம். பெரியாருக்கு முன் இங்கே இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசப் பண்டிதர், எம்.சி.ராஜா என்று தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சாதி அமைப்புக்கு எதிராக அரசியல் தளத்தில் பேசியிருக்கிறார்கள். பெரியார்தான் இதை உடைக்கிறார். பிராமண ஆதிக்க எதிர்ப்பை மையமாகக் கொண்டிருந்தாலும் நீதிக் கட்சி சாதி ஒழிப்பைப் பிரதானப்படுத்தவில்லை. சமூக நீதியை, இட ஒதுக்கீட்டை ஒரு ஆயுதமாக அது கைக்கொண்டது சாதி அமைப்புக்கு அது கொடுத்த வலுவான அடி. என்றாலும், சாதி சமத்துவத்தை நோக்கியே அது நகர்கிறது; சாதி ஒழிப்பை நோக்கி அல்ல. பெரியார்தான் அந்தப் புள்ளியை நோக்கி நகர்கிறார். சாதி ஒழிப்பைப் பேசுகிறார். பெண் விடுதலையை உயர்த்திப்பிடிக்கிறார். மொழி, இன உரிமைகளையும் பேசுகிறார். பெரியார் ஏன் கடவுள் மறுப்பை முன்வைக்கிறார் என்று நாம் ஆராய்ந்தால், அவருடைய அக்கறையையும் தொலைநோக்கையும் நாம் விளங்கிக்கொண்டுவிடலாம். சாதியத்தை இங்கே கட்டிக்காப்பது மதமும் கடவுளும் என்று பெரியார் உணர்கிறார். மக்கள் கடவுளுக்கு அஞ்சுகிறார்கள், மதத்திற்குக் கட்டுப்படுகிறார்கள். ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை எல்லாம் கடவுளாலும் மதத்தாலும் ‘முற்பிறவியின் பயன்’ என்று நியாயப்படுத்தப்படுகின்றன. ஆகையால்தான், ‘மதமும் பிழை, கடவுளும் பொய்’ என்று சொல்ல வேண்டிய நிலை பெரியாருக்கு ஏற்படுகிறது. சாதி ஒழிப்பானது குடும்பம் என்ற அமைப்பிலிருந்தே கற்பிக்கப்பட வேண்டியது. ஏனென்றால், குடும்பத்திலிருந்துதான் கடவுள் நம்பிக்கை கற்பிக்கப்படுகிறது, உயர்வு தாழ்வு கற்பிக்கப்படுகிறது, சாதிப் பெருமை, சாதித் தாழ்வு கற்பிக்கப்படுகிறது. பெண்கள் துணையின்றி குடும்பத்தில் சீர்திருத்தம் சாத்தியம் இல்லை. ஆனால், குடும்ப அமைப்பானது பெண்களையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. அவர்களுடைய சிந்தனையையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. ஆகையால், பெண் விடுதலையைப் பேசுகிறார். இதனூடாகவே மொழிரீதியாக, இனரீதியாக நிகழ்கிற ஒடுக்குமுறைகளையும் எதிர்க்க வேண்டும் என்கிற நிலைக்கு அவர் வருகிறார். அதற்குக் காரணம் இந்து என்கிற பெயரால், இந்தியா என்கிற கட்டமைப்பு இங்கே நிறுவப்பட்டிருக்கிறது. இந்தியா என்கிற கட்டமைப்பின் பெயரால் இந்தி பேசுகிறவர்களின் ஆதிக்கம், வடவர் ஆதிக்கம் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. விளைவாக தமிழ் உள்ளிட்ட ஏனைய மொழிகள் நசுக்கப்படுகின்றன. தமிழர் கள் உள்ளிட்ட ஏனைய இனத்தவர் நசுக்கப்படுகிறார்கள். ஆகையால், அந்தந்தப் பிராந்திய மொழிகளுக்கான உரிமைகளை உயர்த்திப் பிடிப்பதன் மூலமாகவே இந்த ஆதிக்கத்தைத் தகர்க்க முடியும் என்று கருதுகிறார். இப்படிப் பெரியார் பிராமண ஆதிக்க எதிர்ப்பில் தொடங்கி, சமூக நீதி, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, மொழி, இன உரிமை, மாநில உரிமை என்று முன்னெடுத்த அரசியலானது சாதாரணமானதல்ல. இன்றைக்கு நாடு எதிர்கொள்ளும் ‘இந்து - இந்தி - இந்துஸ்தான்’ ஆதிக்க அரசியலுக்கு நேர் எதிர் அரசியலை, தீர்வை முன்வைப்பது. அம்பேத்கரியத்துக்கு மிக நெருக்கமான அரசியல் கருத்தாக்கமாகவே பெரியாரியத்தைப் பார்க்கிறோம்.

இந்தப் பிறவி தலைவருக்கானது - சண்முகநாதன் பேட்டி

படம்: பிரபு காளிதாஸ்

கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல்லாமல் அவருக்கும் முடியாது. சண்முகநாதனுக்கும் இப்போது 75 வயது ஆகிவிட்டது. உடலில் ஏகப்பட்ட கோளாறுகள். முதுமையின் விளைவாக கருணாநிதி மௌனமாகி ஓராண்டு நெருங்கும் நிலையிலும், வழக்கம்போல அன்றாடம் கருணாநிதியின் வீட்டுக்கு வந்துவிடுகிறார் சண்முகநாதன். “தலைவர் சீக்கிரமே தேறிவிடுவார்; கூப்பிடுவார்” என்று கோபாலபுரம் வீட்டில் அவருக்கென உள்ள சின்ன அறையில் எந்த நேரமும் வேலைக்கான ஆயத்த நிலையில் கணினி முன் உட்கார்ந்திருக்கிறார். பத்திரிகையாளர்கள் சூழவே இருந்துவந்தாலும் இதுவரை சண்முகநாதன் தன் வேலையைத் தாண்டி யாரிடமும் பேசியதில்லை. தன் வாழ்வில் அவர் அளித்த முதல் பேட்டி இது.