நோஞ்சான் இந்தியா!


       இந்தியா தன்னுடைய 65-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருந்தபோது வெளியான மோசமான செய்தி இது. நாட்டின் சுகாதாரத் துறையில், கிட்டத்தட்ட 75 சதவிகிதம் அளவுக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. அதுவும் அரசு மருத்துவத் துறையில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டு இருக்கிறது. மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் 2011-ம் ஆண்டுக்கான கிராமப்புறச் சுகாதாரப் புள்ளிவிவரத்தின்படி, மருத்துவர்கள் பற்றாக்குறை 76 சதவிகிதம். 1,09,484 பேர் தேவைப்படும் இடத்தில், 26,329 பேர்தான் இருக்கிறார்கள். சிறப்பு நிபுணர்கள் பற்றாக்குறை 88 சதவிகிதம். 58,352 சிறப்பு பேர் தேவைப்படும் இடத்தில், 6,935 பேர்தான் இருக்கிறார்கள். செவிலியர்கள் பற்றாக்குறை 53 சதவிகிதம். 1,38,623 பேர் தேவைப்படும் இடத்தில் வெறும் 65,344 பேர்தான் இருக்கின்றனர். பரிசோதனைக்கூடத் தொழில்நுட்ப வல்லுநர்கள் நிலையோ படுமோசம். தேவை 94,896. இருப்பது 18,429 பேர்தான். 81 சதவிகிதம் பற்றாக்குறை. ஏழைகளின் ஆபத்பாந்தவனான ஆரம்ப சுகாதார நிலையங்கள் பற்றாக்குறை 18 சதவிகிதம்; அரசு மருத்துவமனைகள் பற்றாக்குறை 34 சதவிகிதம்!

இந்தியாவுக்கு புல்லட் ரயில் தேவையா?


           பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கடந்த வாரம் கவின்மிகு காட்சி ஒன்று காணக் கிடைத்தது. அரிதினும் அரிதுதான். பிரதமர் மன்மோகன் சிங் வாய்விட்டு சிரித்தார். பிரதமர் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம். இருக்காதா பின்னே? இந்திய ரயில்வே துறையின் பெருமையை ஒரே கையெழுத்தில் சீன ரயில்வே துறைக்கு இணையாக உயர்த்தி இருக்கிறார் அல்லவா? இது என்ன புதுக் கூத்து என்கிறீர்களா? ஆமாம், நாம் புல்லட் ரயில் விடப்போகிறோமே?!

நாம் எல்லோருமே அந்நியர்கள்தான்: ஆங் லீ

tamil journalist samas with director aang lee
இயக்குநர் ஆங் லீயுடன் சமஸ்
                   
            கடலில் ஒரு படகு; அதில் ஒரு பையன்; கூடவே ஒரு புலி. இதுதான் 'லைஃப் ஆஃப் பை’ படத்தின் கதை. ஆனால், இதை வெற்றிகரமான ஒரு புத்தகமாக்குவதையோ, சினிமாவாக்குவதையோ யோசித்துப்பாருங்கள். பெரிய சவால்! பாண்டிச்சேரியைச் சேர்ந்தவன் பை. மிருகக்காட்சி சாலை நடத்தும் அவனுடைய தந்தை, அரசியல் சூழல் காரணமாக, விலங்குகளை விற்றுவிட்டு வெளிநாட்டில் குடியேற நினைக்கிறார். பையின் குடும்பம் விலங்குகளுடன் ஒரு சரக்குக் கப்பலில் பயணப்படுகிறது. வழியில் பெரும் புயல். இறுதியில், உயிர் தப்பும் படகில் ஐந்து பேர். ஒரு கழுதைப்புலி, ஒராங்குட்டான், வரிக்குதிரை, புலி, பை. முதலில் வரிக்குதிரையையும் ஒராங்குட்டானையும் கழுதைப்புலி கொல்கிறது. அடுத்து கழுதைப்புலியைப் புலி கொல்கிறது. இப்போது மிச்சம் இருப்பது இரண்டே பேர். புலியும் பையும். ஒரு பக்கம் ஆள் அரவமற்ற நடுக்கடல். இன்னொரு பக்கம் இரையாக்கிக்கொள்ளத் துடிக்கும் புலி. 227 நாட்கள். பை எப்படி எதிர்கொள்கிறான்?
    
                    இதை எழுத்தாளர் யான் மார்டெல் நாவலாக்கிப் பதிப்பிக்க அணுகியபோது, லண்டனின் முக்கியமான பதிப்பகங்கள் பல நிராகரித்தன 'பெங்குவின் பதிப்பகம்’ உட்பட. ஆனால், 2001-ல் அது புத்தகமாக வந்தபோது விற்பனையின் உச்சத்துக்குச் சென்றது. 2002-ம் ஆண்டுக்கான 'மேன் புக்கர்’ பரிசை வென்றது. உலகெங்கும் 70 லட்சம் பிரதிகள் விற்றன. இப்போது 11 ஆண்டுகள் கழித்து சினிமாவாகி, திரையரங்குகளை அதிரடிக்கிறது. '3டி’ - 'சிஜிஐ’ தொழில்நுட்பத்தில், 'லைஃப் ஆஃப் பை’ படத்தைப் பார்த்தவர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். அது விவாதிக்கும் தத்துவ விசாரங்களால், 'இந்தப் படம் ஒரு மறக்க முடியாத அனுபவம்’ என்கிறார்கள். ஆனால், படத்தின் இயக்குநர் ஆங் லீயோ இவை எல்லாமே எதிர்பார்த்ததுதான் என்பதுபோல இருக்கிறார். சர்வதேச அளவில், சம கால இயக்குநர்களில் முக்கியமான ஒருவர் ஆங் லீ. ஆசியப் பின்னணியில் ஆஸ்கர் விருது பெற்ற முதல் இயக்கு நர். கடந்த 10 வருடங்களில் 13 படங் களை இயக்கியிருக்கிறார் ஆங் லீ; எல்லாமே வெவ்வேறு களங்களை அடிப்படையாகக் கொண்டவை. வசூலில் பட்டையைக் கிளப்பியதோடு 'ஆஸ்கர்’, 'பாஃப்டா’, 'கோல்டன் க்ளோப்’ என மதிப்புமிகு விருதுகளையும் அள்ளியவை. ஆங் லீயைச் சந்தித்தபோது அவரிடம் துளி பகட்டு இல்லை. வெளிப்படையாகப் பேசினார். விகடனுக்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணல் இது.

கொள்ளைநோய் டெங்கு; மறைக்கிறது அரசு!

       
                   இந்திய அரசும் இந்த நாட்டின் மாநில அரசுகளும் மிக அலட்சியமாகக் கையாளும் ஒரு பிரச்னை, இப்போது சர்வதேச மருத்துவச் சமூகமும் உலக சுகாதார நிறுவனமும் மிகத் தீவிரமாக விவாதிக்கும் பொருளாகி இருக்கிறது. சர்வதேச ஆராய்ச்சியாளர்களின் அனுமானமும் கணிப்புகளும் உறுதியானால், இந்தியா அதற்குப் பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும். இந்தக் கணிப்புகள் சொல்லும் அதிரவைக்கும் செய்தி... டெங்கு ஒரு கொள்ளைநோயாக உருவெடுக்கிறது!

தாக்கரேக்களின் இந்தியா!

      பால் தாக்கரே முதன்முதலில் எனக்கு அறிமுகமானது கையில் நுரை ததும்பும் பீர் கோப்பையுடன் குளிர் கண்ணாடி அணிந்த ஒரு புகைப்படத்தில். லட்சக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் ஒரு பொதுக்கூட்டத்தில், மேடையில் அனாயசமாக பைப்பில் புகைபிடிப்பார். இந்தியாவின் நவீனக் கலாசார நுழைவாயிலான மும்பையில் இருப்பவர்களை பால் தாக்கரேவின் இந்தத் தோற்றம் ஈர்த்தது இயல்பானது.

"ரிலையன்ஸின் வளர்ச்சி... இந்தியாவின் வளர்ச்சி இல்லை!"

journalist samas with mani shankar ayyar
மணி சங்கர் அய்யருடன் சமஸ்
                         
                     இந்திய அமைச்சரவையில் யார் இருக்கலாம்; இருக்கக் கூடாது என்பதையே அம்பானிகள்தான் தீர்மானிக்கிறார்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அம்பலப்படுத்தியபோது, அனைத்து ஊடகங்களின் பார்வையும் திரும்பிய இடம்... மணி சங்கர் அய்யர் எம்.பி. காரணம், இப்போது ஜெய்பால் ரெட்டியிடம் இருந்து பெட்ரோலியத் துறை பறிக்கப்படக் காரணமாகச் சொல்லப்படும் 'ரிலையன்ஸ் லாபி’தான் மணி சங்கர் அய்யர் பதவி பறிப்புக்கும் முன்பு சொல்லப்பட்டது. டெல்லி ஊடகங்கள் துரத்திக்கொண்டு இருந்தவரை மயிலாடுதுறையில் சந்தித்தேன்.

ஒற்றைக்கொம்பன்களுக்கு எமன்கள் யார்?

                             ந்திய ஒற்றைக்கொம்பன்களுக்கு இது போதாத காலம். நாட்டிலேயே அதிகமான எண்ணிக்கையில், காண்டாமிருகங்கள் வாழும் காஸிரங்கா தேசிய உயிரியல் பூங்காவில் மட்டும் கடந்த ஜனவரியில் இருந்து அக்டோபர் வரை 101 காண்டாமிருகங்கள் இறந்திருக்கின்றன. ஒரு பக்கம் வெள்ளம், இன்னொரு பக்கம் வேட்டையாடிகள்... சராசரியாக மூன்று நாட்களுக்கு ஒரு காண்டாமிருகம் இறந்திருக்கிறது.