அந்த விருதுக்குத் தகுதியானவர் கமல்: ஸ்ரீதேவி

ட்டகாசமான மறுவருகையை நிகழ்த்தி இருக்கிறார் ஸ்ரீதேவி. பத்ம விருதுக்கானத் தேர்வுப் பட்டியலில் அவர் பெயரைக் கொண்டுசேர்த்து இருக்கிறது ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’. வெற்றி சந்தோஷத்தில் இருந்தவருடன் பேசினேன்... எல்லாவற்றையும்பற்றி.

நம்புங்கள் இவர்கள் உங்களைக் காப்பற்றுவார்கள்!

னி இருளில் உறைந்து இருந்தது ஊர். தூக்கத்தில் இருந்த மக்களை முதலில் எழுப்பியது நாய்களின் ஊளை. தொடர்ந்து பறவைகளின் கூக்குரல். வீட்டுக்கு வெளியே வந்தார்கள். கண்கள் எரிந்தன. காற்றே எரிவதுபோல் இருந்தது. மூச்சுத் திணறியது. குழப்பமும் பதற்றமும் சூழ ஆரம்பித்த நேரத்தில், தூரத்துத் தொழிற்சாலையில் இருந்து ஒலித்தது அபாயச் சங்கு. ஓட ஆரம்பித்தார்கள். வீட்டில் உள்ளவர்களை எழுப்பிக்கொண்டு, குழந்தைகளை வாரிச் சுருட்டிக்கொண்டு தலைதெறிக்க ஓடினார்கள். ஓட ஓட விழுந்தார்கள். மூச்சடைத்து, கை - கால்கள் வெட்டி வெட்டி இழுக்க விழுந்து செத்தார்கள். காலையில் பார்த்தபோது கொத்துக் கொத்தாகப் பிணங்கள். பல நூற்றுக்கணக்கான பறவைகள், கால்நடைகள், மனிதர்கள்... அரசாங்கத்தின் துரோகத்தாலும் முதலாளிகளின் லாப வெறியாலும் ஒரு நகரம் உருக்குலையத் தொடங்கியது. போபால்... உலகின் மோசமான தொழில் வேட்டைக் கொலைக் களம்!

உருவாகிறார் இன்னொரு பிரதமர்!

ராபர்ட் வதேரா செம மச்சக்காரர் என்பதை எல்லோருமே ஏற்றுக்கொள்வர்கள். ஆனாலும், சிறப்புப் பாதுகாப்புப் படை சூழ அவர் பவனி வருவது டெல்லியில் ரொம்பக் காலம் பலருடைய கண்களையும் உறுத்திக்கொண்டு இருந்தது. சிறப்புப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு என்பது வெறுமனே துப்பாக்கி வீரர்களின் பாதுகாப்பு மட்டும் இல்லை; இந்திய விமான நிலையங்களில் எந்தச் சோதனையும் இல்லாமல் புகுந்து வரும் விதிவிலக்கு உட்பட பல சலுகைகளையும் கொண்டது. மன்மோகன் சிங்குக்கோ, அப்துல் கலாமுக்கோ அந்தப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்றால், வெறுமனே அவர்கள் மன்மோகன் சிங், அப்துல் கலாம் என்பதால் இல்லை. பிரதமர், முன்னாள் குடியரசுத் தலைவர் என்ற தகுதிகள் அவர்களின் பாதுகாப்புக்கான தகுதிக் குறிப்புகளில் இடம்பெற்று இருக்கின்றன. வதேராவுக்கு? வதேரா என்பதே தகுதிக் குறிப்பு. ''ஒரு சிறப்பு நேர்வாக வதேராவுக்குச் சிறப்புப் பாதுகாப்புப் படைப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது'' என்று விளக்கம் சொன்னது மத்திய அரசு. காந்திக்கே கிடைக்காத வாய்ப்பு இது. ஆக, வதேராவுக்குச் சிறப்புப் பாதுகாப்புப் படைப் பாதுகாப்பு அளிக்கப்பட்ட நியாயத்தை மக்கள் இப்படிப் புரிந்துகொண்டார் கள்: இந்தியாவில் வதேராவாக இருப்பதே சிறப்புதான்.

நடிகர்கள்தான் எங்களுக்குப் பணம் கொடுக்கணும்: ஜே.வி.ருக்மாங்கதன்

பிள்ளையார், பெருமாள், துர்கையில் தொடங்கி ஷீர்டி சாய் பாபா வரை எல்லாக் கடவுளர் படங்களும் அணிவகுத்து இருக்கின்றன ஜே.வி.ருக்மாங்கதனைச் சுற்றிலும். பக்திப் பழமாகக் காட்சி அளிக் கிறார். எதிரில் சுவரிலோ, படு ஆபாசமான அவருடைய பட ஸ்டில்கள். பலான பட இயக்குநர்களில் ஒருவரான ருக்மாங்கதனுக்குப் பல முகங்கள் உண்டு. விநியோகஸ்தர், தயாரிப்பாளர், தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர், 'ஃபிலிம் சேம்பர்’ முன்னாள் துணைத் தலைவர் என்பதை எல்லாம் தாண்டி, தணிக்கைக் குழு உறுப்பினர். திரை உலகின் கறுப்புப் பக்கங்களைப் பற்றிப் பேச சரியான ஆள்!

நாடு ஏன் இருண்டுக் கிடக்கிறது?

  
                                  து 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை. மகாராஷ்டிரத்தில் மின் உற்பத்தி நிலையம் அமைக்க அமெரிக்காவின் 'என்ரான்’ நிறுவனத்தைக் கொண்டுவந்தார் அன்றைய காங்கிரஸ் முதல்வர் சரத் பவார். மகாராஷ்டிரத்தின் மொத்தத் தேவையில் 18 சதவிகித மின்சாரத்தை 'என்ரான்’ கொடுத்தது. அதற்கு மகாராஷ்டிர மின் வாரியம் கொடுத்த விலை என்ன தெரியுமா? முழு திவால்.  தேசிய அனல் மின்சாரக் கழகம் ரூ.1.80-க்கு ஒரு  யூனிட் மின்சாரத்தை விற்ற காலத்தில், 'என்ரான்’ நிறுவனத்திடம் ரூ.6.80 கொடுத்து வாங்கியது அரசு. தவிர, மகாராஷ்டிர மின் வாரியம் மின்சாரத்தை வாங்குகிறதோ, இல்லையோ... மின் கட்டணம் போக மாதம் ரூ.95 கோடியை நிலைக்கட்டணம் என்ற பெயரில் 'என்ரான்’ நிறுவனத்துக்குக் கொடுத்துவிட வேண்டும். அப்படி ஓர் ஒப்பந்தம். இந்திய மின் துறை வரலாற்றில் மறக்கவே முடியாத கொள்ளை அது.  இப்படி எல்லாம் நடக்குமாஎன்றுதானே கேட்க வருகிறீர்கள்? தமிழக அரசு 2005-06-ல் 'அப்போலோ குழும’த்திடம் இருந்து வாங்கிய மின்சாரத்தின் விலை என்ன தெரியுமா? ஒரு யூனிட் ரூ. 17.78.  ஒருகட்டத்தில் கட்டுப்படி ஆகாமல், மின்சாரம் வாங்குவதை நிறுத்தியதற்காக அதே ஆண்டில் 'அப்போலோ குழும’த்துக்குத் தமிழக அரசு கொடுத்த நிலைக்கட்டணம் ரூ.330 கோடி. இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் வெளி மாநில நிறுவனங்களைவிடக் கூடுதலான விலையையே கேட்கின்றன.

ஆம்... பிரதமரே பணம் மரத்தில் காய்க்கவில்லை!

              
                 செலவுகளைக் குறைக்க ஓர் அதிரடி வழியாக, மரணத்தை யோசியுங்கள். - அமெரிக்கத் திரைப்பட இயக்குநர் உடி ஆலன் கிண்டலாகச் சொன்னது இது. இந்திய அரசோ அதை மறைமுகமாகச் சொல்கிறது.

தமிழ்நாட்டின் ராஜ் தாக்ரேவா நான்? - சீமான்

                 
பத்திரிகையாளர் சமஸ் சீமானுடன்
சீமானுடன் சமஸ்
        

                    தமிழக அரசியலில் இனரீதியிலான தாக்குதல் கலாசாரத்தைத் தொடக்கிவைத்திருக்கிறார் சீமான். விளையாட்டுப் பயிற்சி, சுற்றுலா என்று தமிழகம் வந்த சிங்களர்கள் மீது அவருடைய ‘நாம் தமிழர்’ இயக்கத்தினர் முன்னின்று நடத்திய தாக்குதல்கள், இலங்கை அரசு தன்னுடைய பிரஜைகளை தமிழ்நாட்டுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தும் அளவுக்குச் சென்றது. தேசிய ஊடகங்கள் தமிழ் அமைப்புகளை வெறி பிடித்தவையாகச் சித்திரிக்கின்றன. ஆனால், சீமானோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் பேசுகிறார்.

கோமாளியைக் கேலி செய்வது ரொம்ப சிரமம்!

து ஒரு புத்தக வெளியீட்டு விழா. சிறப்பு விருந்தினர்கள் ஜவஹர்லால் நேருவும் சர்தார் வல்லபாய் படேலும். புத்தகத்தை வெளியிடுவதற்காக அதன் மீதுள்ள உறையைக் கிழிக்கிறார் நேரு. அதில் உள்ள கேலிச்சித்திரத்தைப் பார்த்து ஒரு கணம் அதிர்ந்துபோகிறார். நேருவின் முகத்தில் அதிர்ச்சியை உணர்ந்த படேல் புத்தகத்தை வாங்கிப் பார்க்கிறார். அவரும் அதிர்ந்துபோகிறார். அடுத்த நிமிஷம் இருவரும் சிரிக்கிறார்கள். கார்ட்டூனிஸ்ட்டைக் கட்டி அணைத்துக்கொண்டு புத்தகத்தை வெளி-யிடு-கிறார்கள். நேருவும் படேலும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி நிற்கும் நிலையில், அவர்கள் இருவரின் கைகளிலும் உள்ள கத்திகள் பரஸ்பரம் அடுத்தவர் முதுகைப் பதம் பார்க்கக் காத்திருப்பதாக வரையப்பட்டிருந்த கேலிச்சித்திரத்தைத் தாங்கி வந்த புத்தகம் அது!

வலியின்றி சாகவிடு அரசே!

       
                                    வாழ்வின் மோசமான நாட்களில் ஒன்று அது. மரண ஓலத்தை நேரில் கேட்ட நாள். வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் அவர். தொண்டையில் ஆரம்பித்து ஒரு பக்கக் கன்னம் முழுவதையும் நோய் சிதைத்து இருந்தது. மூக்கின் ஒரு பகுதிக்கும் நோய் பரவி, அங்கு சீழ் கோத்திருந்தது. கை, கால்களை எல்லாம் ஒடுக்கிக்கொண்டு அந்தப் பெண் படுத்திருந்தாள். ‘‘ம்ம்ம்...’’ என்று அரற்றல் மட்டும் அவளிடம் இருந்து வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. 100 மூட்டைகளுக்கு நடுவே அகப்பட்டுக்கொண்டவனிடம் இருந்து வெளிப்படுமே... அப்படி ஓர் அழுத்தம் அந்தக் குரலில். திடீரென்று அவளுடைய உடல் தூக்கிப்போடுகிறது. அந்தக் கட்டடமே நொறுங்கி விழுவதுபோல் அவளுடைய அலறல் வெளிப்படுகிறது... ‘‘அம்மா...’’

கொல்வது தீ அல்ல!


சென்னை பிரிட்டிஷ் கவுன்சில் அலுவலகம். ஆங்கிலப் பயிலரங்கு. முதல் நாள் வகுப்பு. பாடம் என்ன தெரியுமா? திடீரென ஓர் அசம்பாவிதம் நடந்தால் அந்த இடத்தில் இருந்து எப்படிப் பாதுகாப்பாக வெளியேறுவது என்ற விளக்கம். கட்டடத்தின் முழு அமைப்பு; அவசர வழிகள் எங்கெல்லாம் இருக்கின்றன; எப்படி எல்லாம் பாதுகாப்பாக வெளியேறலாம் என்று திரையில் ஓடுகிறது. இதுதான் முதல் பாடம்.

அது ஒரு பெரிய கட்டடம். பயிலரங்குக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் பெரியவர்கள். பயிற்சியோ சில நாட்கள். ஓர் ஆபத்தையும் எதிர்கொண்டிராத குழந்தைகளை நெருக்கடி மிக்க நம்முடைய பள்ளிக்கூடங்களுக்கு நாம் எப்படி அனுப்புகிறோம் என்பதுடன் இந்தச் சூழலை ஒப்பிட்டுப்பாருங்கள். நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம்?

கசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்?

        மும்பை தாக்குதலில் ஈடுபட்ட கசாப்புக்கு மரண தண்டனை விதித்திருப்பதன் மூலம் உலகத்துக்கு இந்தியா ஒரு தகவலைச் சொல்லியிருப்பதாகக் கூறுகிறார்கள் நம்முடைய ஆட்சியாளர்கள். குறிப்பாக, பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இது ஓர் எச்சரிக்கை என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆமாம். இது பாகிஸ்தானுக்கு ஓர் எச்சரிக்கை; இனி, அந்நாடு திருந்திவிடும். அங்குள்ள பயங்கரவாதிகளுக்கு ஓர் எச்சரிக்கை; இனி அவர்களும் திருந்திவிடுவார்கள். உள்நாட்டுப் பயங்கரவாதிகளுக்கு? ஆம். அவர்களுக்கும் ஓர் எச்சரிக்கை; அவர்களும் திருந்திவிடுவார்கள். இனி, இந்தியாவில் தவறே நடக்காது. நம்புங்கள். நாம் இப்படி நம்புவதைத்தான் நம்முடைய அரசாங்கம் விரும்புகிறது.

சச்சின் கொஞ்சம் காத்திருக்கலாம்!

        
ச்சின் ரமேஷ் டெண்டுல்கர். மங்களம் பள்ளி பாலமுரளிகிருஷ்ணா.
டெல்லியில் பாரத ரத்னா விருதுப் பந்தயத்தின் இறுதி ஆட்டத்தில் இப்போது இந்த இரு பெயர்கள்தான் அடிபடுகின்றன.

பஞ்சக் கால நினைவுகள்

                                           
                                      ருவ மழை பொய்ப்பதும் காலம் தாண்டிக் கொட்டித் தீர்ப்பதும் பருவநிலை மாற்றங்களில் சகஜம்தான். அமெரிக்காவில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவுகிறது. சீனாவிலோ, பெய்ஜிங்கில் அரை நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. கடந்த 33 ஆண்டுகளில் அதிகபட்ச வெப்பத்தை டெல்லி எதிர்கொண்டதையும், சரிபாதி இந்தியா தென்மேற்குப் பருவ மழை பற்றாக்குறையால் வறட்சியில் சிக்கி இருப்பதையும்கூட இப்படிச் சாதாரணமான ஒரு செய்தியாகக் கடந்துவிடலாம்... அது வேறு ஒரு நாடாக இருந்தால்!

வாழ்க்கை மேல் புகார்கள் கிடையாது: அசோகமித்திரன்


                                      சின்ன அறை. சுவரில் பெருமாள், சமயபுரம் மாரியம்மன், ராமர், சீதை என்று ஏகப்பட்ட கடவுளர் படங்கள். சின்ன கட்டில். அதையொட்டி மேஜை. சுற்றிலும் புத்தகங்கள். தமிழின் மகத்தான படைப்பாளி அசோகமித்திரனின் உலகம் இப்போது இவ்வளவுதான். ‘‘சமீபத்தில் ஓர் இலக்கிய விழாவுக்குச் சென்றிருந்தேன். பேசி முடிக்கும்போது, ‘இத்துடன் விடைபெறுகிறேன்...’ என்று சொன்னேன். விழாவில் இருந்த ஒரு கவிஞர் உடனே பதறிப்போய், ‘நீங்கள் நூறாண்டு வாழ வேண்டும்’ என்று சொன்னார். இப்போது எனக்கு 81 வயது ஆகிறது. நூறாண்டு வாழ்வதைவிடக் கொடுமையான தண்டனை இருக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை...’’ - கண்களை இடுக்கிச் சிரிக்கிறார்.

பராக் ஒபாமா சிங்


 தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகளுக்குக் கிடைக்கும் அனுகூலம்... அரசியல் எதிரிகள் திடீர் நண்பர்கள் ஆவது. மக்களுக்குக் கிடைக்கும் அனுகூலம்... அரசியல் நண்பர் கள் திடீர் எதிரிகள் ஆவது. திடீர் எதிரிகள் புதிய சூழலில் உளறத் தொடங்கும்போது நிறைய ரகசியங்கள் சந்திக்கு வரும். ஜனநாயகத்தில் உண்மைகள் இப்படித்தான் வெளியே வர வேண்டும்!

இந்தியா உடையும் - அருந்ததி ராய்

                                   
samas with roy
அருந்ததி ராயுடன் சமஸ்
 

                                            அருந்ததி ராயுடன் பேசுவது மனசாட்சியுடன் உரையாடுவதுபோல. உரையாடல் மிக நெருக்கமானதாக இருக்கும். ஆனால், உண்மையை எதிர்கொள்ளும் திராணி உங்களுக்கு வேண்டும். பொதுவாக தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைபற்றிப் பேசுவதைத் தவிர்க்கும் அருந்ததி அன்றைக்கு எந்தக் கேள்வியையும் ஒதுக்காமல் பதில் அளித்தார்.

                               ‘‘இன்றைய அருந்ததி ராய் உருவாக, சின்ன வயது வாழ்க்கை எந்த அளவுக்கு அடிப்படையாக இருந்தது என்று சொல்ல முடியுமா?’’
‘‘எனக்கு ஒரு வயதானபோது என் பெற்றோருக்கு விவாகரத்து ஆனது. கலப்புத் திருமணம் செய்துகொண்டு, கணவனைப் பிரிந்த ஒரு பெண் ஊர் திரும்பும்போது நம் சமூகம் எப்படி வரவேற்கும் என்று நான் சொல்ல வேண்டியது இல்லை. எல்லோராலும் நிராகரிக்கப்பட்ட நிலையில் நானும் என் அம்மாவும் இருந்தோம். அப்படிப்பட்ட ஓர் இடத்தில் இருந்துதான் உறவுகளும் சமூகமும் எனக்கு அறிமுகம் ஆனார்கள்.’’

                               ‘‘உங்கள் வாழ்க்கையை வடிவமைத்ததில் உங்கள் அம்மாவுக்கு முக்கியப் பங்கு உண்டு என்று சொல்லி இருக்கிறீர்கள்...’’
‘‘நான் பார்த்த உன்னதமான பெண்களில் ஒருவர் என் அம்மா. ஒரு சாதாரன குடும்பத்தில் பிறந்த, சிந்திக்கத் தெரிந்த பெண் என்று அவரைச் சொல்லலாம். ஒரு குடும்ப நிகழ்ச்சிக்காக வெளியூர் போய் இருந்தபோது, வந்த இடத்தில் தன்னிடம் கல்யாணம் செய்துகொள்வோமா என்று கேட்ட மனிதனைத் திருமணம் செய்துகொண்டு அங்கேயே தங்கியவர் அவர். பெரிய காதல் எல்லாம் இல்லை. வாழ்க்கையை ஏதோ ஒரு வகையில் பிடித்துக்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம். ஆனால், அந்தக் குடிகாரக் கணவன் தன்னுடைய பிழைப்புக்காக எந்த எல்லைக்கும் போகலாம் என்று முடிவெடுத்தபோது உதறிவிட்டு வந்துவிட்டார்.  அப்பாவைவிட்டு பிரிந்து வந்த பிறகு, ஊட்டியில் சின்ன இடத்தில் நாங்கள் இருந்தோம். சாப்பாட்டுக்கே வழி இல்லை. அப்புறம் கேரளத்துக்குப் போனோம். வாழ்க்கையில் பெரிய போராட்டங்களை அம்மா நடத்தினார். வாழ்க்கையின் சங்கடங்களை அந்த வயதிலேயே நேரடியாகப் பார்த்ததால், ‘உன்னைப் பாதுகாக்க யாரும் இருக்க மாட்டார்கள்... நீதான் மற்றவர்களைப் பாதுகாக்க வேண்டும்’ என்கிற பாடம் கிடைத்துவிட்டது. முழுமையான சுதந்திரத்தின் பரவசம், பயங்கரம் இரண்டையும் அந்தச் சூழல்தான் எனக்குக் கற்றுக்கொடுத்தது.’’