வணக்கம் வைகுண்டராஜன்!


பத்தில்லாத வேலைகள் உண்டா?
‘நீர், நிலம், வனம்!’ தொடரைத் தொடங்கும்போதே அபாயகரமான சில பயணங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்திருந்தேன். கடல் மக்கள் வாழ்வை அருகிலிருந்து எழுத வேண்டும் என்ற உந்துதலில் அவர்களை நெருங்கியபோது, கடல் பயணங்களுக்குத் தயாரானேன். அலைகள் அற்ற கடலில், சௌகர்யமான சுற்றுலாப் படகில் உல்லாசப் பயணம் போவது வேறு; அடித்துத் தூக்கும் மாசாவில் ஏறி, பறந்து, விழுந்து செல்லும் கட்டுமரத்தில் போகும் தொழில் பயணம் வேறு. நீச்சல் தெரியாதவனுக்கு, கடல் பயணங்கள்தான் அபாயகரமானதாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். தமிழகத்தில் கடல் பயணத்தைவிடவும் கரைப் பயணங்கள் எவ்வளவு அபாயகரமானவை என்பதைக் கனிம மணல் கரைப் பயணங்கள் உணர்த்தின.

தனி உலகத்துக்கு நல்வரவு
இந்தியாவின் நீளமான கடற்கரையைப் பெற்றிருக்கும் மாநிலங்களில் ஒன்றான தமிழகக் கடற்கரையின் நீளம் 1,076 கி.மீ. நாட்டின் கடற்கரையில் 13% இது. கடற்கரை என்றால், உடனே நம் ஞாபகத்துக்கு வரும் மெரினா, வேளாங்கண்ணி, கன்னியாகுமரி ஆகிய கடற்கரைகளின் முகங்களையும் அங்கு காணப்படும் ஜன நெருக்கத்தையும் இதில் மிகச் சொற்ப இடங்களில், மிகச் சொற்பமான தூரத்திலே காண முடியும். நீரோடியில் புறப்பட்டு, பழவேற்காடு வரை கடற்கரை வழியாக வந்தால் இடையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்படும் நகரங்கள், 591 கடலோடிகளின் கிராமங்களைத் தவிர, ஏனைய இடங்கள் யாவும் மர்மப் பிரதேசங்கள். மனித நடமாட்டம் அற்ற இந்தப் பிரதேசங்கள் ஒருபுறம் இணையற்ற அழகு கொண்டவை; மறுபுறம் குற்றங்களுக்கேற்ற களங்கள். ஆலா கத்தும் காடுகளும் சவுக்குத் தோப்புகளும் நாட்டுக் கருவை மரங்களும் நிறைந்த இந்தப் பகுதிகளில் என்ன நடந்தாலும் யாருக்கும் தெரியாது.

விடை தர முடியவில்லை பி.கே. சார்!

பால கைலாசம்

நான் இதழியல் படித்து வேலைக்கு வந்தவன் அல்ல. நான் இன்றைக்குக் கற்றிருக்கும், பெற்றிருக்கும் பல விஷயங்கள் என்னுடைய ஆசிரியர்களிடமிருந்தே கற்றவை. முதன்முதலில் தினமலரில் சேகர் சார், தினமணியில் பாண்டியராஜன் சார், குருசாமி சார், அப்புறம் வைத்தியநாதன் சார், விகடனில் கண்ணன் சார், இப்போது தி இந்துவில் அசோகன் சார்...

எல்லா நல்லது கெட்டதுகளையும் தாண்டி - பணிப் பெயரால் அல்ல - உண்மையாகவே என்னுடைய ஆசிரியர்கள் இவர்கள். நான் அப்படித்தான் என்றைக்கும் பார்க்கிறேன்.

இந்த ஆசிரியர்களின் வரிசையிலேயே மிக முக்கியமான, நான் மிகக் குறைவான காலம் பணியாற்றிய, பேராசிரியர் திரு. பால.கைலாசம். சுருக்கமாக, பி.கே. சார்.

கரும் பிசாசு!


ன்னியாகுமரி மாவட்டம். மணவாளக்குறிச்சி. உயரமான சுற்றுச்சுவர்களால் வளைக்கப்பட்டிருக்கும் அந்த வளாகத்தில், ‘இந்திய அரிய மணல் ஆலை' எனும் பெயர் பலகையைத் தாண்டி, உள்ளே ஒரு ஆலை இயங்குவதற்கான எந்த அடையாளமும் வெளியே இல்லை. உள்ளே மலை மாதிரி குவிக்கப்பட்டிருக்கும் மணலைப் பார்க்கும் வெளியூர்க்காரர்கள் எவருக்கும் அவர்களுடைய சிறு பிராயத்து மணல் ஆட்டம் ஞாபகத்துக்கு வரும். கடற்கரை யோர மக்களோ அதைக் கரும் பிசாசு என்கிறார்கள்.

கனிம மணல் என்றால் என்ன?
தமிழகத்தின் தென்பகுதி கடற்கரையின் மணலைக் கருமணல் என்று சொல்கிறார்கள். ஏராளமான கனிமங்களை உள்ளடக்கிய இந்த மணலிலிருந்து இலுமனைட், ரூட்டைல், சிர்கான், மோனசைட், சிலிமினேட், கார்னைட் உள்ளிட்ட கனிமங்கள் பிரித்தெடுக்கப்படு கின்றன. சர்வதேச அளவிலான சந்தையைக் கொண்ட தொழில் இது.

இந்தக் கருமணல் இயல்பிலேயே கதிரியக்கத் தன்மை கொண்டது. அதைத் தோண்டிக் கையாளும்போது, அதிலுள்ள கதிரியக்கம் மேலும் பல மடங்கு அதிகரிக்கும். புற்றுநோய்க்கான முக்கியமான காரணிகளில் கதிரியக்கமும் ஒன்று என்பதுதான் கருமணலைக் கரும் பிசாசு என்று கடற்கரை மக்கள் அழைக்கக் காரணம்.

கடலில் பாவிய பூதக்கால்கள்!


டலுக்கும் கடற்கரைக்கும் அழகான ஒரு நிறம் உண்டு. அது இயற்கையைச் சிதைத்துவிடாத, பாரம்பரியக் கடலோடிகளின் எளிமையான வாழ்க்கைக் கலாச்சாரத்தால் விளைந்த நிறம். இப்போது அந்த நிறம் வெளிரி புதிதாக வெளியிலிருந்து ஊடுருவும் நிறம் கடலையும் கடற்கரையையும் ஆக்கிரமிக்கிறது. பண வேட்கையும் சுரண்டும் வெறியும் நுகர்வுக் கலாச்சாரமும் சூழ்ந்த நிறம். பாரம்பரியக் கடலோடிகளை அவர்களுடைய பூர்வீகச் சொத்தான கடலிலிருந்தும் கடற்கரையிலிருந்தும் அடித்து விரட்டத் துடிக்கும் நிறம்.

கடல்புறத்தில் ஒரு பெண்

ரு இளம்பெண். கல்யாணமாகி மூன்று ஆண்டுகள். இரண்டு குழந்தைகள். இரண்டு வயதில் ஒன்று, ஒரு வயதில் ஒன்று. ஒரு நாள் கடலுக்குப் போன கணவன் திரும்பவில்லை. ஊர் தேடிப் போனது. ஆள் கிடைக்கவில்லை. ஒரு வாரம் கழித்துக் கடலோரப் பாதுகாப்புப் படையும் காவல் துறையும் பக்கத்து ஊரில் கரை ஒதுங்கிய ஒரு உடலைக் காட்டுகிறார்கள். உடல் என்று அதைச் சொல்ல முடியுமா? மீன் தின்ற மிச்சம். நீரில் ஊறி வெடித்த பிண்டத்தின் எச்சம். உயிர் உடைந்து, கதறித் துடிப்பவள் அப்படியே உறைந்து சரிகிறாள் சுவரோரம். சோறு இல்லை, தூக்கம் இல்லை. பித்துப் பிடித்தவளாய் உறைந்திருக்கிறாள்.

கடல்புறத்தில் ஒரு பெண் தனித்துப் பிழைப்பது அத்தனை எளிதல்ல. ஒரு ஆண் தினமும் கடலோடும்போதே, பெண் வீட்டு வேலையோடு ஆயிரம் கரை வேலைகளையும் சேர்த்துப் பார்த்தால்தான் ஜீவனம் சாத்தியம். இந்த நடைப்பிணம் இனி என்ன செய்யும் என்று ஊரும் குடும்பமும் கூடிப் பேசுகிறது. அவளை நோக்கி, கடல் கொன்றவனின் தம்பியைக் கை காட்டுகிறது. உடனிருக்கும் இரண்டு உயிர்களைக் காட்டி வற்புறுத்துகிறது. உலுக்குகின்றன பிள்ளைகளின் பார்வைகள். அவள் கரம் பிடிக்கிறாள். ஓராண்டு ஓடுகிறது. இப்போது இன்னொரு பிள்ளை அந்தக் குடும்பத்தில்.

மேலும் ஓராண்டு ஆகிறது. கடலுக்குச் சென்றவனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். வீடு திரும்புகிறான் அவன். அதிர்ந்துபோகிறாள். வீடு திரும்பியவன் பிந்தையவன் அல்ல; முந்தையவன். எவன் செத்தவன் என்று ஊர் நினைத்து எரித்ததோ அவன். கொஞ்ச நேரத்தில் பிந்தையவன் வருகிறான். மூவரும் வாய் பொத்தி நிற்கிறார்கள். மூவரின் முன்னே மூன்று குழந்தைகள். முடிவெடுக்க வேண்டியவள் அவள். இப்போது அவள் என்ன செய்வாள்?

சம்மாட்டியார்: ஒரு கடல் கனவு!

ம்மாட்டியார். கடல்புறத்தில் இந்த வார்த்தை தரும் அங்கீகாரத்துக்கு இணையாக, சந்தோஷத்துக்கு இணையாக, போதைக்கு இணையாக ஒரு வார்த்தை தருமா என்று சொல்லத் தெரியவில்லை. ஒரு மனிதனின் பெயருக்குப் பின் சம்மாட்டியார் என்ற வார்த்தை சேரும்போதுதான் அவன் வாழ்க்கை முழுமை அடைகிறது என்றும்கூடச் சொல்லலாம். சம்பான் என்ற வார்த்தையிலிருந்து பிறந்த வார்த்தை சம்மாட்டியார். சம்பான் என்றால், வள்ளம். சம்மாட்டியார் என்றால், வள்ளத்தின் உரிமையாளர் என்று அர்த்தம்.

எம்ஜிஆரின் உயிரக்காரர்!



சென்னை சைதாப்பேட்டை. கலைஞர் கருணாநிதி வளைவை நெருங்கும்போதே மீன் வாடை தூக்குகிறது. அங்கிருந்து நூறடி தூரத்தில் இருக்கிறது திருக்காரணீஸ்வரர் மீன் சந்தை. சந்தைக்குள் கால் எடுத்துவைத்து நுழையும் முன்னரே, காதுக்குள் நுழைந்துவிட்டார் டி.எம்.சௌந்தரராஜன்.

‘ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ, ஆடும் மனதினிலே ஆறுதல் காணீரோ, ஆடும் மனதினிலே ஆறுதல் காணீரோ...’

வரிசையாக மீன் கடைகள், எதிர்ப்படும் இட்லி தோசை ஆயாக்கள், டீ பையன்களைத் தாண்டி ‘ஆயிரத்தில் ஒருவ’னை நூல் பிடித்துக்கொண்டே சென்றால், ஒரு சின்னக் கடையில் மீன் வெட்டிக்கொண்டிருக்கிறார் கண்ணாடி போட்ட பெரியவர் சேகர்.

“இங்கே எம்ஜிஆருக்கு மீன் அனுப்பியது...” வாக்கியத்தை முடிப்பதற்குள், “ஆமா, இங்கதான். அதுக்கு இன்னாபா?” என்கிறார்.

அப்பாடா என்று பெருமூச்சு விட்டேன்.

சென்னையில் உள்ள கடற்கரைகள், மீன் சந்தைகள் அத்தனையிலும் இவரைத் தேடிக்கொண்டிருந்தேன். விசேஷம் ஒன்றும் இல்லை. அவரிடம் ஒரு நல்ல கதை இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். அந்தக் கதை நான் தேடிக்கொண்டிருந்த கேள்விக்கான பதிலைத் தரலாம் என்று சொன்னார் ஒரு நண்பர்.

நீவாடுகளுடன் ஓர் ஆட்டம்!


டல் நீரோட்டம் என்பது எவ்வளவு பெரிய சக்தி, அதைப் புரிந்துவைத்திருப்பது எவ்வளவு பெரிய அறிவியல் என்பதை தோமையர் மூலமாக அறிந்துகொண்டேன். குமரியில் கடலில் காணாமல்போன மீனவர்களைத் தேடும் பணி நடந்துகொண்டிருந்தபோது, நான் தோமையரைச் சந்தித்தேன். கடலில் மீனவர்கள் இப்படித் தவறும்போது, அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில், நம்முடைய கடலோரப் பாதுகாப்புப் படையினர் முழு அக்கறையோடு ஈடுபடுவதில்லை என்று குற்றம்சாட்டினார் தோமையர்.

“பேரு என்னவோ மீட்புப் பணின்னு பேரு. நடத்துறது என்னவோ நாடகம். குமரியில ஒருத்தன் வுழுந்தா பாகிஸ்தான் கடக்கரை வரைக்கும் தேடணும். அதான் அசலான அக்கறை. நீவாடுன்னா சும்மா இல்ல பாத்தியளா...” என்றார்.

நான் கேட்டேன்: “ஐயா, ஒருத்தரை எங்கே தவற விட்டோமோ, அந்தப் பகுதியைச் சுத்திதானே தேடணும்? தவிர, தமிழ்நாட்டுல தவறின ஒருத்தரை பாகிஸ்தான் கடற்கரையில ஏன் தேடணும்?”

“தம்பி... நெலத்துல ஒருத்தரைத் தவற விட்டோம்னா, அந்தப் பகுதியைச் சுத்தித் தேடறது முறையா இருக்கலாம். இது கடல்லோ? மனுஷன் பொழைச்சுக் கெடந்தா, இங்கேயே சுத்துப்பட்ட எதாவது கரையில ஏறியிருக்கலாம். இல்லேன்னா, சவத்தைக் கடல் கரையில தள்ளியிரும். கடலம்மா தேவையில்லாத எதையும் உள்ளே வெச்சுக்க மாட்டா, பாத்தியளா...

இதுவரைக்கும் நூத்தியம்பது பக்கம் பேரு குமரி மாவட்டக் கடக்கரையில மட்டும் காணாமப்போயிருக்கான். ஊர்க்காரங்க தேடயில, சுத்துப்பட்டு கடலைச் சலிச்சுடுவாங்க. பெறகும், வருஷக் கணக்கா சவம் கூடக் கெடைக்கலையின்னா, என்ன அர்த்தம்? நாம தேடுற மொறை சரியில்லேன்னுதானே அர்த்தம்? நீவாடு தெரியாதவன் மீனவனில்லே. இந்தக் கடல் பாதுகாப்புப் படையில எத்தனை பேருக்கு நீவாடு தெரியும்? நீங்க கடல் பாதுகாப்புப் படையில, ஒவ்வொரு எடத்துலேயும் பாதிக்குப் பாதி மீனவனைப் போடச் சொல்லுங்கங்கிறேன். பெறவு, ஒரு மீனவன் இங்கே காணாமப் போக மாட்டான்.”

“ஐயா, நீங்க எப்படி நீவாடு பார்ப்பீங்க? எனக்குக் கொஞ்சம் காட்டுவீங்களா?”

காற்றில் எத்தனை காற்று?


கோவளம் சென்றிருந்தபோது, ரெமிஜியூஸைச் சந்தித்தேன். ரொம்பவும் வெள்ளந்தியான மனிதர். கோவளத்தில் அன்றைக்குக் கடலடி அதிகமாக இருந்ததால், யாரும் கடலுக்குப் போகவில்லை. அதற்குச் சில வாரங்களுக்கு முன்புதான் கடலடியில் ரெமிஜியூஸின் வள்ளம் சிக்கியிருந்தது. மனிதருக்குக் காலில் பலத்த அடி. ஊமைக்காயம். கடலுக்குப் போகக் கூடாது என்று சொல்லி, வீட்டிலேயே இருக்கச் சொல்லியிருந்திருக்கிறார் மருத்துவர். அப்படியும் மனிதருக்குக் கடலைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. கடற்கரையை விட்டுக் கொஞ்ச தூரத்தில் இருக்கும் வீட்டிலிருந்து விந்திவிந்தி நடந்து கடற்கரைக்கு வந்துவிட்டார். அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில், நெடுநாள் நண்பர்போல ஆகியிருந்தார். ஒருகாலத்தில் தொளுவைப் போட்டியில் முதலிடம் வந்து பரிசு வாங்கியிருக்கிறார். காலில் அடிபட்டது அவர் மனதைப் பெரிய அளவில் உலுக்கியிருந்தது.

ஆறுனபாட்டன் என் பாட்டன்!


வாள்முனிக்கு, இப்படி அவருடைய முழுப் பெயரையும் குறிப்பிட்டு எழுதியிருப்பது தெரிந்துபோனால், என்னைச் சபித்துப்போடுவார். கையில் கிடைத்தால் அடிக்கவும் செய்யலாம். “கும்புடுற சாமி பேரை முழுசா சொல்லுவாகளா? சாமி கோச்சுகிட்டா என்னா செய்யுறதாம்? மனுசம்னா ஒரு பணிவு, மரியாதி இருக்க வேண்டாமா?” என்பார்.


முனி முதல் அஜித் வரை

அந்தக் காலத்தில் பெரும்பாலான கடலோடிகளுக்கு அவரவர் வணங்கும் தெய்வங்களின் பெயர்களே பெயர்கள். வாள்முனி, கபாலி, அஞ்சாப்புலி, உமையா, குமரி, மாரியம்மா... இந்தப் பெயர்களை முழுவதுமாகக் குறிப்பிட்டு அழைப்பதைக் கடவுளுக்குச் செய்யும் அவமரியாதையாக நினைக்கிறார்கள். முனீஸ்வரன் என்றால் முனி என்றும், மாரியம்மா என்றால் மாரி என்றும் அழைப்பது மரபு.

கடலோரச் சமூகத்துடன் வாணிபத்துக்கு வந்த அரேபியர்கள் மண உறவு கொண்டபோது, தமிழகக் கடல்புறத்தில் மதமாற்றத்தோடு, இஸ்லாமியப் பெயர்கள் அறிமுகமாயின. எனினும், ஏனைய பகுதிகளைப் போல, கடலோர முஸ்லிம்கள் சமூகம் தங்கள் முழு அடையாளத்தையும் மாற்றிக்கொள்ள வில்லை. தாங்கள் கடலோடிகள் என்பதை அடையாளப்படுத்திக்கொள்ள பெயர்களிலும் இன அடையாளத்தைக் கலந்தார்கள். உதாரணமாக, கடலோரத்தில் உள்ள முஹம்மதுவுக்குத் திருமணமானால், அவர் பெயர் முஹம்மது மரைக்காயர். அதேபோல், கதீஜாவுக்குத் திருமணமானால், அவர் பெயர் கதீஜா நாச்சியார்.

கடலோரத்தில் கிறிஸ்தவ மதம் வேரூன்றிய பின், கிறிஸ்தவப் பெயர்கள் உலவ ஆரம்பித்தன. அதேசமயம், கடலோர மொழிக்கேற்ப இந்தப் பெயர்கள் மருவின. ஜோசப் சூசையப்பர் ஆனார். பாரடைஸ் பரதேசி ஆனார். ரோஸ்லின் ரோஸம்மா ஆனார்.

எம்ஜிஆர் வருகைக்குப் பின் இந்த எல்லாப் பெயர்களையும் தாண்டி நம்முடைய சினிமாக்காரர்கள் கடல்புறத்தில் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டார்கள். கோதண்டராமர்கோவில் சென்றிருந்தபோது சந்தித்த ஓர் இளைஞரின் பெயர் அஜித் குமார். வயது எத்தனை என்று கேட்டேன். பதினேழு என்றார். அறிமுகமான சில ஆண்டுகளிலேயே அஜித் கடலோர மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார்.