வரலாற்றில் நம்முடைய இடம் எது?

  
                                            பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டபோதோ, சோவியத் ஒன்றியம் சிதறுண்டபோதோ, உங்களால் என்ன செய்திருக்க முடியும்? ஒன்றுமே செய்திருக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால், நீங்கள் அப்போது என்ன நினைத்தீர்கள் என்பதும் என்ன சொன்னீர்கள் என்பதும் முக்கியம். காலம் அதைக் குறித்து வைத்திருக்கும்.
 வரலாறு என்பது எப்போதுமே இப்படிதான். அரபு உலகில் இப்போது அதுதான் நடந்துகொண்டு இருக்கிறது. இந்த எளிய புரிதல் இந்தியாவுக்கு இருக்கிறதா?

புலி அரசியல்!


இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
- இந்திய அரசு சமீபத்தில் பெருமிதத்தோடு வெளியிட்ட அறிவிப்பு இது.
  ‘‘இந்தியக் காடுகளில் உள்ள புலிகளின் சராசரி எண்ணிக்கை 1,706. முன்னதாக, 2006-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது, 1,411 புலிகள் வரை இருந்தன. இப்போது 385 புலிகள் அதிகரித்திருக்கின்றன.’’
  இந்த ஒரு பத்தித் தகவல்தான் அரசாலும் ஊடகங்களாலும் தேசியப் புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையின் முக்கியச் செய்தியாக வெளியிடப்பட்டது. மேலோட்டமாகப் பார்த்தால், இது முக்கியமான செய்தி. ஆனால், அறிக்கையின் உள்ளேயுள்ள விவரங்களுடன் ஒப்பிட்டால் முக்கியச் செய்தி இதுவாக இல்லை!