தமிழகப் பள்ளிக்கல்வித் துறை உடனடியாக செய்ய வேண்டிய 5 மாற்றங்கள் என்ன?


தமிழகக் கல்வித் துறையை மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு (நீட்) விவகாரம் நடுத்தெருவில் நிறுத்திவிட்டிருக்கிறது. அறிக்கைகள், பிரதமருக்கு அனுப்பும் கடிதங்களைத் தாண்டி இந்த விவகாரத்தில் ஆர்வம் காட்ட முதல்வர் பழனிசாமியோ, அவர் சார்ந்திருக்கும் அதிமுகவோ தயாராக இல்லை. 98% மாணவர்கள் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்துவரும் ஒரு மாநிலத்தில், மத்தியப் பாடத்திட்டத்தின் அடிப்படையிலான இத்தேர்வு எவ்வளவு அப்பட்டமான திணிப்பு என்பதை எதிர்த்து எதிர்க்கட்சிகளாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. கல்வி பகிரங்கமாக மாநிலங்களின் அதிகாரத்திலிருந்து மத்திய அரசால் பறிக்கப்படுகிறது. மறுபக்கம், மாநிலத்தின் அதிகாரவசம் இருக்கும்  கல்வியின் தரம் நாளுக்கு நாள் எவ்வளவு மோசமடைந்துவருகிறது என்பதற்கு, நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்களின் தரம் ஒரு சாட்சியமாக நிற்கிறது. கடந்த இரு ஆண்டுகளில் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்திருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் விவரம் இது: 2014-15-ல் 37 பேர். 2015-16-ல் 24 பேர். மருத்துவக் கல்விக்குத் தேர்வாகும் 95% மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்கள்.

ஆட்சியாளர்களே கல்வி வியாபாரிகளாகவும் தரகர்களாகவும் மாறியிருக்கும் நாட்டில், மத்திய அரசு, மாநில அரசு இரண்டோடும் போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம். கல்வித் துறையில் ஒரு பெரிய அறுவைச் சிகிச்சைக்குத் தயாரானால் மட்டுமே அதிகாரப் பறிப்பில் ஈடுபட்டிருக்கும் மத்திய அரசை இனி தமிழக அரசு தார்மிகரீதியாக எதிர்கொள்ள முடியும். ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஆளும் அதிமுகவுக்குள் நடக்கும் அதிகாரச் சண்டை அரசின் பெரும்பாலான துறைகளை முடக்கியிருக்கும் நிலையில், விதிவிலக்காகப் பள்ளிக்கல்வித் துறையில் சலனங்கள் தெரிகின்றன. ஒரு பெரிய மாற்றத்துக்கான நீண்ட காலச் செயல்திட்டத்துடன் களமிறங்க வேண்டிய தமிழகப் பள்ளிக்கல்வித் துறை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய ஐந்து சீர்திருத்தங்கள் என்னென்ன?

மோடி உலகமயமாக்கலின் ஏக பிரதிநிதியானதில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கு என்ன?


சென்னையிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகத்தைக் கடக்கும்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன். எவ்வளவு பேருடைய உழைப்பும், தியாகமும் இன்று அர்த்தமற்ற ஒரு வெளிக்கூடாக உருமாறிவிட்டன! நடிகர் சிவாஜி கணேசன் வீட்டிற்குப் போகும் வழியில் உள்ள அந்தக் கட்டிடத்துக்கு, “கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம்” என்று வழி கேட்டு எங்கிருந்தேனும் ஒரு கிராமத்து விவசாயி வந்தால், அந்தக் கட்டிடத்தைப் பார்த்த மாத்திரத்தில் குழம்பிப்போவார். முழுக்க கார்ப்பரேட் அலுவலகப் பாணியில் கட்டப்பட்ட கட்டிடம். வெளியே கட்சியின் பெயர்ப் பலகைகூடக் கிடையாது. மாறாக, சர்வதேச சுற்றுலாக்களை ஏற்பாடு செய்யும் கார்ப்பரேட் நிறுவனமான ‘தாமஸ் குக்’ நிறுவனத்தின் பெயர்ப் பலகை இருக்கும். அந்த ஏழு மாடிக் கட்டிடத்தில் வாடகைக்கு இயங்கும் நிறுவனங்களில் அதுவும் ஒன்று. காந்திய அறிஞரும் நண்பருமான அண்ணாமலையிடம் இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகளின் வீழ்ச்சி தொடர்பில் ஒருநாள் பேசிக்கொண்டிருக்கையில், அவர் கேட்டார், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டிடத்திற்கும் ரிலையன்ஸ் அலுவலகத்தின் கட்டிடத்திற்கும் என்ன வேறுபாட்டை வெளியே மக்கள் உணருவார்கள்?”

ஆர்எஸ்எஸ்ஸின் ஆயிரம் முகங்கள்!


நண்பரின் வீட்டுக்குப் பக்கத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரு பூங்கா திறந்திருக்கிறார்கள். திறந்த மறுநாளே ஆச்சரியம், பல நூறு பேர் காலையில் உடற்பயிற்சிக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள்! அடுத்த சில நாட்களிலேயே இரு இளைஞர்கள் யோகா பயிற்சி அளிக்க வந்திருக்கிறார்கள். நண்பரின் பிள்ளைகள் அவரிடம் வந்து கேட்டபோது, “சரி, நீங்களும் யோகா வகுப்பில் சேர்ந்துகொள்ளுங்கள்!” என்று சொல்லியிருக்கிறார். சில வாரங்கள் கழித்து அந்த இளைஞர்கள் சொன்ன கருத்துகளைக் குழந்தைகள் சொன்னபோது, வந்திருப்பவர்கள் யார் என்பதை நண்பர் புரிந்துகொண்டார்.

என்ன சொல்வது! ஜனநாயகக் களம் என்பது எண்ணிக்கைப் பெரும்பான்மையால் தீர்மானிக்கப்படுவது. காலத்துக்கேற்ப மக்களின் தேவைகளையும் மனப்போக்கையும் சமூகத்தின் கலாச்சார மாறுபாடுகளையும் உள்வாங்கிக்கொள்ளும் அரசியல் அமைப்புகளே அதிகாரத்தை வசப்படுத்த முடியும். மக்கள் மத்தியில் பணியாற்றுவோருக்கு, முக்கியமாக, தன்னார்வப் பணியில் ஈடுபடுத்திக்கொள்வோருக்கு இந்திய அரசியல் அரங்கில் எப்போதுமே ஒரு செல்வாக்கு இருக்கிறது. பெரும்பான்மை மக்கள் இங்கே சித்தாந்தங்கள், நோக்கங்கள் வாயிலாக அரசியல் இயக்கங்களை அணுகுவதில்லை. மனிதர்களின் வெளிப்புறத் தோற்றங்கள், காரியங்கள் வாயிலாகவே இயக்கங்களைப் புரிந்துகொள்கிறார்கள். காந்தி ஆக்கபூர்வமான அரசியல் உத்தியாக அறப்பணிகளைக் கையாண்டார். ஆர்எஸ்எஸ் அபாயகரமான அரசியல் கணக்குகளோடுஅதே காய்களை நகர்த்துகிறது. ஏனைய இயக்கங்கள் எல்லாம் எந்த அளவுக்கு இதன் முக்கியத்துவத்தைக் கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்கின்றன என்றே தெரியவில்லை.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மிகப் பெரிய பலம், அது நாடு முழுக்க நடத்திக்கொண்டிருக்கும் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட செயல்திட்டங்கள். அதன் அதிகாரபூர்வமற்ற ஷாகாக்கள் இவை. வெளியில் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்த முடியாத அவற்றின் முகங்கள். அது பள்ளிக்கூடமாக இருக்கலாம், முதியோர் இல்லமாக இருக்கலாம், மடமாக இருக்கலாம், கோயில் வழிபாட்டு மன்றமாக இருக்கலாம், யோகா பயிற்சிக் கூடமாக இருக்கலாம், தொழிலாளர் சங்கமாக இருக்கலாம், மாணவர் பேரவையாக இருக்கலாம்… எல்லாமே நேரடி அரசியல் தொடர்புடையவையாக இருக்க வேண்டியதில்லை. ஆனால், அவை உருவாக்கும் கலாச்சாரம் ஒரே தன்மையிலானது. அடிப்படையில் ஏதேனும் ஒரு புள்ளியிலேனும் இணைந்து பெரும்பான்மை மக்களை ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரே குடைக்குள் கொண்டுவருவது.

உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்ற நாட்களில், என்னுடைய வாராணசி பயணம் அமைந்தது இன்றைய போக்கைப் புரிந்துகொள்ள ஒருவகையில் கூடுதல் உதவியாக அமைந்தது என்று சொல்லலாம். யோகி ஆதித்யநாத் இன்று அடைந்திருக்கும் இடமும் அவருடைய கடந்த கால வரலாறும் எனக்குள் நிறையக் கேள்விகளை எழுப்பியிருந்தன. கோரக்நாத் மடாதிபதியாக ஆதித்யநாத் 22 வயதில் பொறுப்பேற்கிறார். 1998-ல் முதல் முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும்போது அவருடைய வயது 26. இப்போது 44 வயதில் நாட்டிலேயே பெரிய மாநிலத்தின் முதல்வர். இடைப்பட்ட 18 ஆண்டுகளில் தொடர்ந்து வெற்றிகள். 5 முறை மக்களவை உறுப்பினர். எல்லாமே பெருவாரி வாக்குகள் வித்தியாசத்தில். அப்பட்டமான ஒரு வெறுப்பரசியல்வாதி எப்படி திரும்பத் திரும்ப ஜெயிக்கிறார்?

மேலே நிற்கும் மோடியை அல்ல; கீழே பரவும் ஷாகாக்களைக் கவனியுங்கள்!


கொல்கத்தாவில் ஏதோ ஒன்று இருக்கிறது. உண்மையில் அது ஏதோ ஒன்று அல்ல. அங்கிருக்கும் எல்லாமும் கூடிக் கொடுக்கும் உணர்வு! அது சாலை நடைபாதையில் தொழிலாளர்கள் சர்வ சாதாரணமாகக் கூடி உட்கார்ந்து கேரம் விளையாடிக்கொண்டிருப்பதாக இருக்கலாம், வீதிகளில் வீடுகளுக்கு முன் ஆங்காங்கே மரத்தடிகளில் உட்கார்ந்து ஆண்-பெண் வேறுபாடின்றி பேசிக்கொண்டிருப்பதாக இருக்கலாம், பத்து ரூபாய்க்கு பூரி - சப்ஜி கிடைப்பதாக இருக்கலாம், பூங்காக்களில் ஒருவர் மடியில் ஒருவர் சாய்ந்தபடி குவிந்து கிடக்கும் காதல் ஜோடிகளை யாரும் வேடிக்கை பார்க்காமல், அவரவர் வேலையைப் பார்த்தபடி மக்கள் கடப்பதாக இருக்கலாம், நடைபாதை டீக்கடைகளில் தென்படும் இளைஞர் கூட்டத்தில் எந்த மாச்சரியமும் இல்லாமல் பசங்களுக்கு இணையாகப் பெண் பிள்ளைகளும் ஒரு கையில் சிகரெட், ஒரு கையில் டீ கிளாஸ் சகிதம் உட்கார்ந்து விவாதித்துக்கொண்டிருப்பதாக இருக்கலாம், ஓடும்போதே ஏறி இறங்கும் வேகத்தில் இயங்கும் டிராம் வண்டிகளாக இருக்கலாம், இவற்றையெல்லாம் பார்க்கும்போது எழும் சுதந்திர உணர்வு அது உண்டாக்கும் மனஎழுச்சி இருக்கிறதே… இந்தியா கிழக்கிலிருந்துதான் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது! இந்தச் சுதந்திர உணர்வை அனுபவிப்பதற்காகவே வருடத்துக்கு இரு முறையேனும் கொல்கத்தா ஓடிவிட வேண்டும் என்று நினைப்பதுண்டு. இந்தப் பயணத்தின்போதும் கொல்கத்தா சென்றிருந்தேன். ஆறு மாதங்களுக்குள் எவ்வளவு மாற்றங்கள்! இந்தியா வேகவேகமாக மாறிக்கொண்டிருப்பதை கொல்கத்தாவில்தான் முதல் முறை உணர்ந்தேன்!

மோடியின் காலத்தை உணர்தல்


வாராணசியிலிருந்து புறப்பட்ட பாடலிபுத்திரா எக்ஸ்பிரஸ் சென்னையை நெருங்க இன்னும் கொஞ்ச தூரம் இருந்தது. குளிர்சாதன வசதியையும் தாண்டி வெயிலின் சூடு ரயிலுக்குள் தகித்தது. பெட்டிபடுக்கையைச் சரிசெய்தபடி தயாரானேன். இந்திய மக்களின் மனதை அறிய, பயணங்கள், குறிப்பாக ரயில் பயணங்களைப் போல ஒரு வழி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. முந்தைய பயணங்களைப் போல இது நெடுநாளைய பயணம் இல்லை என்றாலும், இன்றைய இந்திய அரசியலின் போக்குகளைத் தீர்மானிக்கும் திசைகளைத் தொட முடிந்த வகையில் என்னளவில் இதுவும் ஒரு முக்கியமான பயணம். எதிரே உட்கார்ந்திருந்த கன்னடக் குடும்பத்துக்கு நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். அவர்கள் பெங்களூரு செல்கிறார்கள். “கர்நாடகம் இன்னும் எவ்வளவு காலத்துக்குக் கன்னடியர்களின் நிலமாக இருக்கும் என்று தெரியவில்லை; ரொம்ப சீக்கிரம் சிதறடித்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறேன்” என்று முன்னதாகப் பேசிக்கொண்டிருந்தபோது குறிப்பிட்டார் அந்தக் குடும்பத்தின் பெரியவர். ஒவ்வொரு மாநிலத்திலும் இன்று ஒவ்வொரு விதமான பிரச்சினைகள். யாரும் உள்ளுக்குள் பேசிக்கொள்ள முற்படுவது இல்லை. நான் புறப்பட்டபோது அந்தப் பெரியவர் கையைப் பிடித்து அணைத்துக்கொண்டார்.

பாய்ந்து வரும் காற்றுக்கு முகங்கொடுத்தபடி கதவோரத்தில் நின்றிருந்தேன். ரயில் வேகமாகச் சென்னையின் எல்லைக்குள் நுழைந்துகொண்டிருந்தது. இந்தியாவில் 30 மாநிலங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இவற்றில் ஏதோ சில மாநிலங்களில் தேர்தல்கள் நடந்தபடிதான் இருக்கின்றன. என்றாலும், நாட்டிலேயே அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 325/403 என்ற பிரம்மாண்டமான பெரும்பான்மையுடன் பாஜக கூட்டணி அடைந்திருக்கும் சமீபத்திய வெற்றியை அப்படிப் பத்தோடு ஒன்றாகக் கடந்து செல்ல முடியுமா?

ஆங்கிலத்துக்காகத் தமிழகம் இன்னொரு மொழிப் போர் நடத்த வேண்டுமா?


கல்லூரி மாணவர்களுடனான உரையாடல்களின்போதெல்லாம், நான் சில கேள்விகளைக் கேட்பது வழக்கம். அவற்றில் கட்டாயம் இடம்பெறும் ஒரு கேள்வி: “மொழிப் போர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” மாணவர்களின் பதில் பெரும்பாலும் இப்படியிருக்கும். “தமிழகத்தின் நலனுக்காக, இந்திக்கு எதிராக நாம் நடத்தியது!”

நான் சொல்வேன், “தம்பி, தங்கைகளே... அது இந்திக்கு எதிராக நடத்தியது அல்ல, இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக நடத்திய போராட்டம். தமிழ்நாட்டின் நலனுக்காக மட்டும் நடத்தப்பட்டது அல்ல, உண்மையில் இந்தி பேசாத ஒவ்வொரு மாநிலத்துக்காகவும் நடத்தப்பட்டது, ஆங்கிலத்திற்காக நடத்தப்பட்டது! இந்நாட்டில் இன்றைக்கு ஆங்கிலம் நீடிக்கிறது என்றால் அது தமிழகம் நடத்திய போராட்டத்தினால்தான். அரசியலமைப்புச் சட்டம் 1950-ல் தீர்மானிக்கப்பட்டபோது, நாட்டினுடைய ஒரே அலுவல் மொழி இந்தி என்று முடிவெடுத்துவிட்டார்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம்? ரயில் நிலையத்திற்குப் போகிறோம். அங்கே பெயர்ப்பலகையில் இந்தி மட்டுமே இருக்கும். வங்கிகளுக்குப் போகிறோம். படிவங்களில் இந்தி மட்டுமே இருக்கும். நாடாளுமன்றத்தில் இந்தியில்தான் பேச முடியும். அப்படியென்றால், நாட்டின் 60% மக்கள், இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் நிலை என்ன? ஒரே நாளில் அவ்வளவு பேரையும் இரண்டாந்தரக் குடிமக்களாக்கும் ஏற்பாடு இல்லையா இது? இதை எதிர்த்து நம் முன்னோர் போராடினார்கள். இந்தி பேசாத மக்களின் நலனுக்காக, கூடுதல் அலுவல் மொழியாக ஆங்கிலத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று கோரினார்கள். போராட்டத்தின் விளைவாக, எண்ணற்றோரின் உயிர்த் தியாகத்தின் விளைவாக ஆங்கிலமும் அலுவல் மொழியானது. ஆனால், இன்றைக்கும் அந்த ஏற்பாடு ஊசலாடும் நிலையில்தான் இருக்கிறது!”

சம்பாரண் சத்தியாகிரகம்: இந்தியப் புரட்சியின் நூற்றாண்டுகள்!


பிஹாரைக் கடக்கும்போதெல்லாம் ஒருமுறையேனும் சம்பாரண் போய்வர வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. “மத்த ஊர் மாதிரி இல்ல. எல்லாத்துக்கும் தயாரா வரணும். தங்கணும். அப்படி வந்தா, எருமை வண்டிக்குச் சொல்லிடலாம்” என்று சிரிப்பார்கள் நண்பர்கள். நாட்டின் பின்தங்கிய பிராந்தியங்களில் ஒன்று சம்பாரண். நேபாள எல்லையையொட்டி இருக்கிறது. மேற்கு சம்பாரண், கிழக்கு சம்பாரண் என்று இரு மாவட்டங்களாகப் பிரித்திருக்கிறார்கள். அப்படிப் பிரித்தும் பிஹாரில் பாட்னாவுக்கு அடுத்து ஜனத்தொகை மிகுந்த மாவட்டங்கள் அவைதான். ஒவ்வொரு மாவட்டத்திலும் 39 லட்சம் பேர் இருக்கிறார்கள். 90% கிராமவாசிகள். எழுத்தறிவு விகிதம் இன்னும் 60%-ஐத் தொடவில்லை. பெரும்பான்மையோர் பேசும் மொழி போஜ்புரி. மோசமான அடிப்படைக் கட்டமைப்புகள். ரசாயனம் மிகுந்த நிலத்தடிநீர். தூசு. குப்பை. சாக்கடை. வறுமை.வேலைவாய்ப்பின்மை. எல்லாம் சேர்ந்து இயல்பாக ஆயுததாரிகளை உருவாக்கியிருக்கிறது. இன்றைக்கு மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் செலுத்தும் சிவப்புப் பிராந்தியத்தில் சம்பாரணும் ஒன்று. “எருமை வண்டிகளே போக லாயக்கில்லாத சாலைகளில் பயணிக்கும் திராணி இருந்தால்தான் நீங்கள் சம்பாரண் வர முடியும்” என்பார்கள் நண்பர்கள்.

இப்படிப்பட்ட பகுதியில் இன்றைக்கு நூறு வருடங்களுக்கு முன் எப்படி காந்தி பயணித்தார்? இங்குள்ள விவசாயிகளை எப்படி ஒருங்கிணைத்தார்? இந்தியாவின் முதல் சத்தியாகிரகப் போராட்டத்தை இங்கே எப்படி வெற்றிகரமாக நடத்தினார்? சம்பாரணை நினைக்கும்போதெல்லாம் இந்தக் கேள்விகள் வந்து போகும். தென்னாப்பிரிக்காவிலிருந்து 1915-ல் இந்தியா திரும்பிய காந்தி, இங்கு நடத்திய முதல் பெரும் சத்தியாகிரகப் போராட்டம் மட்டும் அல்ல அது; ஒரு அசலான அறப்போராட்டத்துக்கான என்றென்றைக்குமான முன்னுதாரணம்.

அரசியல் பணமயமாதல் ஒரு தேசிய பிரச்சினை... ஆர்கே நகர் அதன் எல்லை அல்ல!


தேர்தல் ஆணையம் ‘ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் ரத்து’ என்று அறிவித்தபோது, உடைந்து உட்கார்ந்தவர்களில் எங்களுடைய புகைப்படக்காரரும் ஒருவர். ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி. அவருடைய மரணத்துக்குப் பின் ஆளும் அதிமுக இரண்டாகிவிட்ட நிலையில், அடுத்து கட்சியின் லகான் யார் கையில் என்பதையும் தீர்மானிக்கும் காரணிகளால் ஒன்றாக இந்த இடைத்தேர்தல் மாற்றப்பட்டிருந்தது. விளைவாக, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ஊடகர்கள் பெரும் அலைச்சலில் இருந்தார்கள். இனி ஒரு இடைவெளி விட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டதும் திரும்பவும் அலைய வேண்டும். தேர்தல் ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்த அரசு அலுவலர்கள், களத்தில் நிற்கும் 62 வேட்பாளர்களில் பெரும்பாலான சிறிய கட்சிகள் / சுயேச்சை வேட்பாளர்களின் நிலையும் இதுதான். திரும்பவும் செலவழிக்க வேண்டும், திரும்பவும் அலைய வேண்டும். மாறாக, யாரை முன்வைத்துத் தேர்தலை ரத்துசெய்திருக்கிறார்களோ அவர்களுக்கு இதனால் பெரிய பாதிப்புகள் ஏதும் கிடையாது; இன்னும் சொல்லப்போனால், கூடுதல் அனுகூலம். இப்படியான அமைப்பை எப்போது மாற்றப்போகிறோம்?

தொகுதிக்குள் நான் ஒரு சுற்று சுற்றி வந்தேன். ஒரு ஓட்டுக்கு ரூ.7,000 கிடைப்பதாகச் சொன்னார்கள். ஆளுங்கட்சியின் ஒரு பிரிவின் சார்பில் ரூ.4,000; இன்னொரு பிரிவின் சார்பில் ரூ.3,000. பல இடங்களில் பிரதான எதிர்க்கட்சியின் சார்பிலும் ரூ.2,000 போயிருக்கிறது. “ஜெயலலிதாம்மா தேர்தல்ல நின்னப்பவே ரெண்டு முறையும் பணம் கொடுத்தாங்களே, இப்பம் என்ன எல்லாம் ஏதோ புதுசா நடக்குற மாதிரி பேசுறாங்க?” என்று ஒருவர் என்னிடம் கேட்டார்.

ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைப் பற்றி அதிமுகவினரிடம் கேட்டால், அவர்கள் ‘திருமங்கலம் ஃபார்முலா’ என்று சொல்லி திமுகவை நோக்கிக் கை காட்டுவார்கள். திமுகவினரைக் கேட்டால், “காமராஜர் ஆட்சிக் காலத்திலேயே ஓட்டுக்கு அரையணா காசு கொடுக்கும் கலாச்சாரம் இருந்ததே!” என்பார்கள். எல்லாவற்றுக்குமே ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி இருக்கிறது. அதனாலேயே அசிங்கங்களைத் தொடர்ந்து நியாயப்படுத்திக்கொண்டிருக்கவும் முடியாது. உண்மையில், இந்திய ஜனநாயகம் எதிர்கொள்ளும் நாள்பட்ட ஒரு புற்றுக்கட்டியின் சீழையே ஆர்.கே.நகர் தொகுதி வெளிப்படுத்துகிறது. ஆனால், அதை வெறும் கண் துடைப்பு நடவடிக்கைகளால் மறைத்து, புனுகுத் தைலம் பூசி இதுகுறித்த விவாதத்தைத் தமிழக எல்லையோடு, சுருக்கிவிட முற்படுகிறது இந்திய அரசு.


அய்யாக்கண்ணு ஆடி கார் வைத்திருந்தால்தான் என்ன பிரச்சினை?


தமிழ்நாடு சம்பந்தமான கோரிக்கைகளோடு, டெல்லியிலுள்ள அரசப் பிரதிநிதிகளை இங்குள்ளோர் சந்திக்கச் செல்கையில், எங்கள் டெல்லி செய்திப் பிரிவைத் தொடர்புகொண்டு “கொஞ்சம் விசேஷ கவனம் கொடுங்கள்” என்று கேட்டுக்கொள்வது வழக்கம். டெல்லி செய்தியாளர் ஷஃபி முன்னா, விவசாயிகளைப் பொறுத்தமட்டில் கூடுதலான அக்கறை எடுத்துக்கொண்டு உதவக் கூடியவர். அவர்களுடனான அனுபவங்களை அவர் சொல்லும்போது மிகுந்த வலி உண்டாகும்.  “டெல்லி நிலவரம் அரசியல் கட்சிக்காரர்களுக்கு நன்றாகத் தெரியும். அதற்கேற்ப சூதானமாக நடந்துகொள்வார்கள். விவசாயிகளின் நிலைமை அப்படி அல்ல. இவ்வளவு பெரிய நகரத்தில், பல்லாயிரக்கணக்கில் கூடாமல், தேசியக் கட்சிகள், ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பது சுலபமல்ல. நாடாளுமன்ற வளாகம், பிரதமர் – அமைச்சர்கள் வீடுகள், காங்கிரஸ், பாஜக அலுவலகங்கள் அமைந்திருக்கும் ‘லூட்டியன்ஸ் டெல்லி’ பகுதியில் பலத்த பாதுகாப்பு இருக்கும். கையில் கொடியுடனோ, பதாகைகளுடனோ போராட்டக்காரர் தோரணையில் யாராவது தென்பட்டாலே, சாலையில் வரிசையாக நிற்கும் பாதுகாப்புப் படையினர் அவர்களைப் பிடித்து ஜந்தர் மந்தருக்கு அனுப்பிவிடுவார்கள். ஜந்தர் மந்தர் சூழல்தான் உங்களுக்குத் தெரியுமே, அங்கே போனால், அங்குள்ள சூழலைப் பார்த்து வெறுத்துப் போய் ஊருக்குத் திரும்பும் மனநிலை தானாக வந்துவிடும். பாவம் எவ்வளவோ சிரமங்களுக்கு இடையில்தான் இங்கே வந்து போராடுகிறார்கள்” என்பார் ஷஃபி முன்னா.

அடுத்த நூற்றாண்டுக்கான திராவிட இயக்கம் எப்படி இருக்க வேண்டும்?


ஒரு புதிய யுகத்துக்குள் நுழைந்துகொண்டிருக்கிறது இந்தியா. இந்தப் புதிய யுகத்தின் பெரும்பான்மை தேசிய அரசியல் அலையை எதிர்கொள்ள மாநிலக் கட்சிகள் ஒவ்வொன்றின் எதிர்கால உத்தியிலும் மாற்றம் தேவைப்படுகிறது. குறிப்பாக, சமூகங்களை ஒருங்கிணைப்பதில்.

தமிழகத்தில் திராவிட இயக்கம், குறிப்பாக இரு திராவிடக் கட்சிகளும் தொடர்ந்து செல்வாக்கோடு நிற்க அவை இதுநாள் வரை மேற்கொண்டுவந்திருக்கும் மாற்றங்களுக்கு முக்கியமான பங்கு உண்டு. கடவுள் மறுப்பை முன்வைத்து வளர்ந்த மரபில் வந்த அண்ணா ‘‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’’ என்றதும் ‘‘நாங்கள் மதச்சார்பற்றவர்கள்; அதேசமயம் மதத்துக்கு எதிரிகள் அல்ல’’ என்றதும் அதன் போக்கில் நடந்த பெரும் மாற்றம். அங்கு தொடங்கி உலகமயமாக்கலை எல்லோருக்கும் முந்தி வரித்துக்கொண்டது வரை எவ்வளவோ மாற்றங்களைத் திராவிடக் கட்சிகள் தொடர்ந்து சுவீகரித்துவந்திருக்கின்றன.

திராவிட இயக்கம் நூற்றாண்டைக் கடந்து, திராவிடக் கட்சிகளின் ஆட்சி தமிழகத்தில் அரை நூற்றாண்டைக் கடந்திருக்கும் நிலையில், அடுத்த நூற்றாண்டுக்கேற்ப அவை எப்படித் தம்மைத் தகவமைத்துக்கொள்வது? சமூகங்களை அணுகுவதில் மூன்று முக்கியமான மாற்றங்களுக்கு அவை முகம் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது!