அல்வா நகரம்!


 

  
                     னிப் பெருந்திருவிழாத் தேரோட்ட நாளில் திருநெல்வேலி புறப்பட்டு வர நேர்ந்தது எதேச்சையாக அமைந்தது. நெல்லை வந்ததும்தான் பயணத்தின் விசேஷம் நமக்கே புரிந்தது. ஒட்டுமொத்த ஊரும் விழாக் கோலம் பூண்டிருந்தது. ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் நெல்லையப்பர் திருக்கோயிலின் முக்கியத் திருநாளே திருத்தேரோட்டம்தான். ஏறத்தாழ 500 ஆண்டுகள் பழமையான  இந்தத் தேர், திருவாரூர் தேருக்கு அடுத்து மாநிலத்திலேயே பெரியது என்று கூறுகிறார்கள் (தொன்னூறு அடி உயரமும் இருநூற்று இருபது டன் எடையும் கொண்டது திருவாரூர் ஆழித்தேர்).

                         நீண்ட வீதிகள் எங்கும் மக்கள் சூழ, நடுவே முதலில் சுவாமித் தேர், அதைத் தொடர்ந்து அம்பாள் தேர், அதையடுத்து விநாயகர் தேர், அதற்குப் பின்னர் சுப்பிரமணியர் தேர், அதற்கும் பின்னர் சண்டிகேஸ்வரர் தேர் என்று வரிசையாக அசைந்தாடி தேர்கள் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சி என்றால், நெல்லையப்பர் திருக்கோயிலைக் காண்பது அற்புத தரிசனம். கோயில் அழகும் தேர் அழகும் ஒன்றுகூடிய திருநாள் அழகும் ஒரு முழு நாளை எடுத்துக்கொண்டன. நாம் வந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இன்னொரு நாள் தேவைப்பட்டது.

                          ஏற்கெனவே, கிடைத்திருந்த தகவலின்படி மாலை சரியாக 5 மணி அளவில் நெல்லையப்பர் கோயிலின் பிரதான வாயிலின் இடது திருப்பத்தையொட்டிய அந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருந்தோம். மரக்கதவுகளால் அடைக்கப்பட்டிருந்த அந்தச் சின்னக் கடையைப் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது. இந்தச் சின்ன இடமா ஒரு மாநகரின் அடையாள அடித்தளமாக இருக்கிறது? வியப்பு மேலிட்டது. பெயர்ப் பலகை இல்லாததால் அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் "இடம் இதுதானா?' என்று கேட்டு உறுதிசெய்துகொள்கிறோம். கடிகாரத்தைப் பார்க்கிறோம். மணி 5.30. சுற்றிக் கவனிக்கிறோம். இப்போது அந்த இடத்தில் நம்மையும் சேர்த்து ஒரு கூட்டம் நிற்கிறது. மணி 5.54. கூட்டம் அதிகரிக்கிறது. ஒருவரையொருவர் முந்திக்கொள்ளும் ஆர்வம் ஒவ்வொருவர் முகத்திலும் தெரிகிறது. சரியாக மணி 6. கடை திறக்கிறது. கடையில் எரியும் ஒரேயொரு ‘40 வாட்ஸ் பல்பு’ அந்தச் சூழலை எங்கோ கொண்டுசெல்கிறது. நாம் உறுதிப்படுத்திக்கொள்கிறோம். ஆம், நாம் இப்போது ‘இருட்டுக்கடை’யில் நின்றுகொண்டிருக்கிறோம்.

சிம்மக்கல் கறி தோசையும் கோலா உருண்டையும்

      
                    ன்னதான் வாழ்க்கை வசதிக்காக நகரங்களை நோக்கி ஓடினாலும் ஒவ்வொருவருக்கும் கிராமத்தின் மீது ஒரு காதல் இருக்கத்தானே செய்கிறது. நகரத்தின் எல்லா வசதிகளோடும் ஒரு பெரிய கிராமம் கிடைத்தால் எப்படி இருக்கும்? மதுரைக்காரர்களுக்குக் கொஞ்சம் கொடுப்பினை இருக்கிறது!

                           மதுரையின் ஒவ்வோர் அம்சத்திலும் ஒட்டிக்கொண்டிருக்கும் அந்தக் கிராமத்து வாசனைதான் சிம்மக்கல் கறி தோசை, கோலா உருண்டையின் விசேஷம். ஊர் உலகம் எல்லாம் ரவா தோசை, வெங்காய தோசை, மசாலா தோசை என்று நூறு ரகமாய்ப் போட்டும் மாறாத தோசையின் சைவ முகத்தை ஆராவாரம் இல்லாமல் அசைவமாக மாற்றியிருக்கிறார்கள் மதுரைக்காரர்கள். மதுரை சிம்மக்கல்லில் இரவில் மட்டும் திறந்திருக்கிறது ‘கோனார் மெஸ்’. பெயர்ப் பலகையெல்லாம் கிடையாது; கேட்டால் "இது மக்கள் வைத்த பெயர்'' என்கிறார்கள். வழக்கமாக அசைவச் சாப்பாட்டுக் கடைகளில் கிடைக்கும் புரோட்டா, சால்னா, பிரியாணி கதையெல்லாம் இங்கு கிடையாது. சகலமும் கறி தோசைதான். வெள்ளாட்டுக் கறி தோசை, மூளை தோசை, ஈரல் தோசை, நாட்டுக்கோழிக் கறி தோசை என்று கறிப் பித்துதான் பிடிக்கவைக்கிறார்கள். தொட்டுக்கொள்ளவும் இதே வகைகளில் தினுசு தினுசாய்க் குழம்பு; எதைக் கேட்கிறீர்களோ அதைத் தருகிறார்கள்.

அம்பலமாகும் இந்திய பயங்கரவாதம்!

              ல்லைப் பாதுகாப்புப் பணியின்போது, உயிரை இழக்க நேர்ந்த ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்களுக்குக் கிடைக்காத மரியாதை அது. ‘இந்தியாவின் வீரத்திருமகன்’ என்ற பிரதமரின் பட்டம், நாடாளுமன்ற அனுதாபத் தீர்மானம், மாநில அரசின் மூன்று நாள் துக்க அறிவிப்பு, இரங்கல் தெரிவிக்க சட்டப்பேரவைச் சிறப்புக் கூட்டம், அதில் ‘தேசிய தியாகி' என்ற அறிவிப்போடு, இந்த மரணம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்ற தீர்மானம், மகள்களுக்கு அரசுப் பணி உத்தரவாதம், மாநில அரசின் சார்பில் ரூ. 1 கோடி, மத்திய அரசின் சார்பில் ரூ. 25 லட்சம் நிதி,  துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையோடு நடந்த இறுதிச் சடங்கில் மாநில முதல்வரில் தொடங்கி ‘நாட்டின் இளவரசர்’ வரையிலான முக்கியஸ்தர்களின் பங்கேற்பு... யார் இந்த சரப்ஜித் சிங்?

பெண்கள் ஆண்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

         
  
                        முகநூலில், சமீபத்தில் ஓர் அழகான பெண்ணின் பக்கத்தில் அந்தப் பதிவைக் கண்டேன்: ‘ஒரு பெண் ஆணிடம் என்ன எதிர்பார்க்கிறாள்?’
ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்கள்  அந்தப் பதிவைப் பகிர்ந்திருந்ததால், ஆர்வமாகப் படிக்க ஆரம்பித்தேன்.

இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா


                           ஞ்சாவூர் பக்கத்திலுள்ள சின்ன கிராமம் நடுக்கடை. இந்த ஊரைச் சேர்ந்த பக்ரூதீன் பாவாவுக்குக் குடும்பத் தொழில் சமையல். தாய், தந்தை ஆரம்பித்த உணவகத்தில் வியாபாரம் சரியில்லாததால், தன் தாய்மாமன் பாண்டிச்சேரியில் வைத்திருந்த உணவகத்துக்கு வேலைக்குப் போனார் பாவா. மாமா இடியாப்பம், ஆட்டுக்கால் பாயா செய்வதில் கெட்டிக்காரர். மாமாவிடம் தொழிலைக் கற்றுக்கொண்ட பாவா பின்னாளில், தஞ்சாவூர், கீழவாசலில் தன் பெயரையும் ஊர்ப் பெயரையும் இணைத்து ‘நடுக்கடை பாவா ஹலால் உணவக’த்தைத் தொடங்கினார்.