ஆணைக் கொல்லுங்கள்!

           
           அடிக்கடி கை நீட்டும் கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட தோழி அவள். ஒருகட்டத்தில் சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் அவன் எல்லோர் முன்பும் கை நீட்ட, தோழி நொறுங்கிப்போனாள். கடுமையான மன அழுத்தத்தில் உறைந்திருந்த அவளும் அவனும் மனநல மருத்துவரிடம் கலந்தாய்வுக்காகச் சென்றார்கள். அவன் எதற்கெடுத்தாலும்அடிக்கிறான் என்று அவள் உடைந்து அழுதபோது மருத்துவர் சொன்னது இது... ‘‘உன்னுடைய தவறு இது. முதன் முதலாக அவர் அடித்தபோதே, பதிலுக்கு நீ ஓங்கி அறைந்திருக்க வேண்டும் அல்லது கையில் துடைப்பத்தை எடுத்திருக்க வேண்டும்.’’ அதிர்ச்சியோடு இருவரும் பார்க்க, அவர் தொடர்ந்திருக்கிறார்... ‘‘ஆமாம். ஓர் ஆணுக்கு எதிராகக் கை நீட்ட வேண்டும் என்று சொன்னால், இவ்வளவு அதிர்ச்சி அடைகிறீர்களே... ஒரு பெண் தாக்கப்படுவது ஏன் கொஞ்சமும்  அதிர்ச்சி தரக் கூடியதாக இல்லை? ஏனென்றால், இந்த அசிங்கத்தை வரலாற்றுக் காலம் தொட்டு நாம் பழகி இருக்கிறோம். நம்முடைய மரபணுக் களிலேயே பெண்கள் கையாளப் பிறந்தவர்கள் என்ற எண்ணம் புதைந்திருக்கிறது. வேட்கை யோடு அது காத்திருக்கிறது. சந்தர்ப்பம் கிடைக்கும்போது எல்லாம் அது பாய்கிறது!’’

என் வலியை அழுது காட்டி வெளிப்படுத்த விரும்பவில்லை - பாலு மகேந்திரா

    
                          சென்னை, சாலிகிராமத்தில் உள்ள நெரிசல் மிக்க காமராஜர் தெருவில், வரிசையாக விரிக்கப்பட்டு இருக்கும் மீன் கடைகளை ஒட்டி இருக்கிறது, ‘பாலுமகேந்திரா சினிமா பட்டறை.’ ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்பதைத் தாண்டி, தமிழ் சினிமாவுக்கு பாலு மகேந்திராவின் முக்கியமான பங்களிப்பு இது. ‘‘ஒரு வருஷத்துக்கு 12 மாணவர்கள். இது மூன்றாவது அணி. தமிழ்தான் பயிற்றுமொழி. வெளி மாநில மாணவர்களும் புரிந்துகொள்கிறார்கள்’’ என்கிறார். வீட்டுக் கூடம்போல் இருக்கிறது வகுப்பறை. கீழே அமர்ந்துதான் படிக்கிறார்கள். மாணவர்களோடு மாணவராக சிறுகதைகள், கவிதைகள் படிக்கிறார், படங்கள் பார்க்கிறார், விவாதிக்கிறார். வாத்தியார் வேலையின் சந்தோஷம் முகத்தில் தெறிக்கிறது!

சி.மு.-சி.பி.

சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்களிலேயே பிரதமர் மன்மோகன் சிங்தான் அதிகம் செயல்பட்டவர் என்றும் அவருடைய ஆட்சிக் காலம்தான் இந்தியாவின் முழு முகத்தையும் மாற்றி இருக்கிறது என்றும் சொன்னால், நீங்கள் நம்புவீர்களா? உண்மை!
சிங் செயல்பாடற்ற ஒரு பிரதமர் என்பது உண்மையில் அறியாமை. கல்வி, சுகாதாரம், தொழில், கனிம வளங்கள், பொருளாதாரம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல், அணுசக்தி, வெளியுறவு என எல்லாத் துறைகளிலும் கால் பதித்து இருக்கிறார் சிங். சுதந்திர இந்தியாவின் வரலாற்றை சிங்குக்கு முன்... சிங்குக்குப் பின் என்றுகூடப் பிரிக்கலாம். ஆனால், அவருடைய எல்லா முயற்சிகளும் இந்த நாட்டின் சாமானிய மக்களின் வாழ்க்கையை அடித்து நொறுக்கி இருப்பதுதான் வரலாற்றுத் துயரம்.
சிங்கின் ஆட்சி முதலில் இந்த நாட்டைப் பணக்காரர்களுக்கான இந்தியா, ஏழைகளுக்கான இந்தியா என்று இரண்டு தேசமாகப் பிளந்தது. பிறகு, அது மெள்ள மெள்ள சரியத் தொடங்கியது. இந்தியா இப்போது சரிந்துகொண்டு இருக்கும் தேசம்... ஒரு சீட்டுக்கட்டு மாளிகையைப் போல அது சரிகிறது... அதன் பொருளாதாரம், கூட்டாட்சித் தத்துவம், சர்வதேச உறவுகள், பாதுகாப்பு எனச் சகல கட்டுமானங்களும் சிதறுகின்றன!
 

இந்தியர்கள் பேச மறந்த கதை

ம் காலத்தின் மிகப் பெரிய ஆராய்ச்சி என்று அதைச் சொல்லலாம். இந்தப் பேரண்டத்தின் ஆதியையும் அது உருவான அடிப்படையையும் கண்டறியும் ஆராய்ச்சி. நாம் வாழும் இந்த பூமியையே ஒரு சின்ன புள்ளியாகத் தன்னில் சுமந்துகொண்டிருக்கும் இந்தப் பேரண்டம் எப்படி உருவாகி இருக்கும்?