பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டபோதோ, சோவியத் ஒன்றியம் சிதறுண்டபோதோ, உங்களால் என்ன செய்திருக்க முடியும்? ஒன்றுமே செய்திருக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால், நீங்கள் அப்போது என்ன நினைத்தீர்கள் என்பதும் என்ன சொன்னீர்கள் என்பதும் முக்கியம். காலம் அதைக் குறித்து வைத்திருக்கும்.
வரலாறு என்பது எப்போதுமே இப்படிதான். அரபு உலகில் இப்போது அதுதான் நடந்துகொண்டு இருக்கிறது. இந்த எளிய புரிதல் இந்தியாவுக்கு இருக்கிறதா?