தமிழர் அல்லாத நண்பர்களிடம் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு கேள்வி: "தமிழர்களின் குரல் முக்கியமான விஷயங்களில்கூட ஒரு சேர ஒலிப்பதில்லையே ஏன்?"
என்னையும்கூட நீண்ட காலமாக அரிக்கிற கேள்வி இது. தமிழர்களாகிய நாம் பெற்றிருக்கும் வளங்கள் - குறிப்பாக - அறிவுசார் வளங்கள், பல துறைகளில் நம்மவர்கள் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் - பிரமிப்பானவை; உலகின் எந்த ஓர் இனத்துக்கும் சவால்விடக் கூடியவை. எனினும், ஆங்கிலேயர்களைப் போலவோ, ஐரோப்பியர்களைப் போலவோ ஏன் நம்மால் மகத்தான மாற்றங்களுக்கான பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியவில்லை? ஏன் சக்திமிக்க ஓரினமாக நாம் உருவெடுக்க முடியவில்லை?

