தமிழர்களின் பிரச்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழர்களின் பிரச்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழர்கள் கற்க மறந்த பண்பு எது?

            
             மிழர்
அல்லாத நண்பர்களிடம் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு கேள்வி: "தமிழர்களின் குரல் முக்கியமான விஷயங்களில்கூட ஒரு சேர ஒலிப்பதில்லையே ஏன்?"
என்னையும்கூட நீண்ட காலமாக அரிக்கிற கேள்வி இது. தமிழர்களாகிய நாம் பெற்றிருக்கும் வளங்கள் - குறிப்பாக - அறிவுசார் வளங்கள், பல துறைகளில் நம்மவர்கள் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் - பிரமிப்பானவைஉலகின் எந்த ஓர் இனத்துக்கும் சவால்விடக் கூடியவை. எனினும், ஆங்கிலேயர்களைப்  போலவோ, ஐரோப்பியர்களைப் போலவோ ஏன் நம்மால் மகத்தான மாற்றங்களுக்கான பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியவில்லை? ஏன் சக்திமிக்க ஓரினமாக நாம் உருவெடுக்க முடியவில்லை?
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தக் கேள்வி  என்னை அழுத்துகிறதுகுறிப்பாக, ஈழப் போருக்குப் பின் இந்த அழுத்தம் மேலும் அதிகமாகி இருக்கிறது. நினைத்துப் பாருங்கள், இன்றைக்கு உலகின் மிகப் பெரிய தனி இனத்துவ சமூகம் ஈழத் தமிழினம். இதனால், அந்தச் சமூகம் அடைத்திருக்கும் அனுகூலம் என்ன