மோடியின் இரு முகங்கள்!
ஒரு சின்ன சம்பவம் கலவரமாக உருமாறும்போது என்னவாகும்?
மக்களாகிய நாம் உடைமைகளை இழப்போம்; உறவுகளை இழப்போம்; உயிரை இழப்போம்... அரசியல்வாதிகளுக்கோ லாபம், லாபம், லாபம்.
உத்தரப் பிரதேசத்தின், முஸாஃபர் நகரிலும் நடந்தது இதுதான். ஆகஸ்ட் 27 அன்று கவால் கிராமத்தைச் சேர்ந்த ஜாட் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை முஸ்லிம் இளைஞர் ஒருவர் கேலிசெய்ததாகச் சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து மூன்று கொலைகள் நடந்தன. முதல் கொலை... அந்த முஸ்லிம் இளைஞர். அடுத்த இரு கொலைகள்... அவரைக் கொன்ற இரு இளைஞர்கள் - பெண்ணுக்கு வேண்டப்பட்டவர்கள்.
அதிகபட்சம் இரு குடும்பங்களுக்கான அல்லது இரு ஊர்களுக்கான சண்டையாக மட்டும் மாறியிருக்கக் கூடிய ஒரு சம்பவம். உத்தரப் பிரதேசம் மட்டும் அல்ல; நாடு முழுவதும் அதிர்வுகளை உருவாக்கியிருக்கிறது; 48 பேர் உயிர் இழந்திருக்கின்றனர்; 1,000 பேர் காயம் அடைந்திருக்கின்றனர்; 40,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்... அரசியல்!
சின்ன விஷயங்களின் அற்புதம்
தமிழகத்தின் சின்ன ஊர்களில் ஒன்றான மறமடக்கிக்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். அங்குதான் ரமேஷைச் சந்தித்தேன்.
ரமேஷ்?
சொல்கிறேன். அதற்கு முன் ரமேஷின் உலகத்தைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்.
ஒரு சின்ன குடிசை. பத்துக்கு ஆறு. அதில் ஒரு லொடலொடத்த நாற்காலி. அதன் முன் ரசம் போன பழைய கண்ணாடி. ஒரு கிண்ணத்தில் தண்ணீர். கத்தரிக்கோல், மழிப்பான். இவ்வளவுதான் ரமேஷின் சலூன் – அவருடைய உலகம். அட, விசேஷத்தை இன்னும் சொல்லவில்லையே… ரமேஷ் சலூனில் கட்டணம் எவ்வளவு தெரியமா? முகம் மழிக்க ரூ. 5; முடிதிருத்த ரூ. 10. சரி, இரண்டும் சேர்த்து செய்ய? அதற்கும் ரூ.10 தான்.
நகரத்தில் ஒரு பிளேடு விலை ரூ. 10 விற்கும் காலகட்டத்தில் இது எனக்கு ஆச்சர்யமாகப் பட்டது. என்னுடைய சந்தேகம் சரிதான். மறமடக்கியிலேயே உள்ள ஏனைய சலூன்களில் முகம் மழிக்கக் கட்டணம் ரூ. 20. "நாட்டிலேயே குறைவான கட்டணம் வாங்குபவராக ரமேஷ்தான் இருப்பார்" என்றார் முடிதிருத்தக உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த ஒரு நண்பர். பொறுங்கள்… நான் எழுதவந்த விஷயம் ரமேஷ் வாங்கும் கட்டணம்பற்றி அல்ல; அவர் வாழும் வாழ்க்கைபற்றியது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)