பிஏ கிருஷ்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிஏ கிருஷ்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அரிய சமன்பாடுதான் சமஸிடம் பிடித்தது: பி.ஏ. கிருஷ்ணன்

மஸ் எழுதிய ’யாருடைய எலிகள் நாம்’ புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் தோன்றியது இதுதான்: அவருடைய வயதில் எனக்கு அவருக்கு இருக்கும் தெளிவும் சமன்பாடும் ஏன் இல்லாமல் போய்விட்டது? புத்தகம் முழுவதும் அவருக்கு நமது சாதாரண மக்களின் மீது இருக்கும் அக்கறை தெளிவாக வெளிப்படுகிறது. அந்த அக்கறையைத் தாரை தம்பட்டங்கள் இல்லாமல் வெளிப்படுத்தியிருப்பதே சமஸில் வெற்றி என்று நான் கருதுகிறேன். அவரோடு ஒத்துப்போக முடியாத பல இடங்கள் புத்தகத்தில் இருக்கின்றன. ஆனால் அவரிடம் பேசி அவரை மாற்ற முடியும் அல்லது அவரால் தெளிவு பெற்று நான் மாறலாம். என்ற எண்ணத்தை எனக்கு அவரது எழுத்து அளிக்கிறது.