எஸ்.வி.ராஜதுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எஸ்.வி.ராஜதுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சமகால வரலாற்றுக் களஞ்சியம் - எஸ். வி. ராஜதுரை

சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்பது ஒரு கலை. எல்லோருக்கும் கை கூடாதது. சமூகத்துக்குத் தேவையான செய்திகளை, ஆழமான பார்வையுடன், இதழியல் உலகம் விதித்திருக்கும் வரம்புகளைக் கருத்தில் கொண்டும், சாதாரண வாசகர்களுக்கும்கூட புரியும் வகையிலும் எழுதுவது அவ்வளவு எளிதானது அல்ல. சமஸ் இந்தக் கலையில் தேர்ச்சி பெற்றவர்.
தமிழக அரசியல், ஈழப் பிரச்சினை, சாதியம், ஜனநாயகம், சுதந்திரம், வேளாண்மை, பொருளாதாரம், சுற்றுச்சூழல், ஊடக நெறிகள், மருத்துவம், பாலினம், பாலியல் என வீச்சும் விரிவுமிக்க களங்களில் இறங்கி அவர் எழுதியுள்ள கட்டுரைகளைப் படிக்கையில், ஒரு சமகால வரலாற்றுக் களஞ்சியத்தைப் படிக்கும் உணர்வு உருவாகிறது. இன்னும் ஐம்பது, நூறாண்டுகளுக்குப் பிறகு தமிழக, இந்திய அரசியல், பொருளாதார, பண்பாட்டு வரலாற்றை எழுதப் போகிறவர்களுக்கு முக்கியத் தரவுகளைக் கொண்டிருக்கின்றன இந்தக் கட்டுரைகள்.