முஸ்லிம்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முஸ்லிம்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இந்திய முஸ்லிம்கள் கொண்டாட சில குரல்கள்!

முஸ்லிம் சமூகம் கர்வம் கொள்ளத் தக்க இரு கலைஞர்களுக்கு ஃபத்வா அறிவித்திருக்கிறார் சயீத் நூரி. யார் இந்த சயீத் நூரி? தெரியாது. அறிமுகமில்லாத ஓர் உலமா. ஆனால், ஃபத்வாவுக்கு உள்ளாகியிருக்கும் இரு கலைஞர்களும் சர்வதேச அளவில் புகழ்பெற்றவர்கள். ஒருவர், இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இன்னொருவர், ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி. இருவரும் சேர்ந்து பணியாற்றும் ‘முஹம்மத்: மெஸென்ஜர் ஆஃப் தி காட்’ படத்தின் தலைப்பு சயீத் நூரிக்குப் பிடிக்கவில்லை. ஃபத்வா போட்டுவிட்டார். கூடவே, அவர்கள் இருவரையும் மதத்தைவிட்டு விலக்கியிருப்பதோடு, அவர்களுடைய திருமணங்களையும் இவரே ரத்துசெய்திருக்கிறார். மேலும், படத்துக்குத் தடை கேட்பதோடு, மஜித் – ரஹ்மான் இருவர் மீதும் வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்திருக்கிறார். ரஹ்மான் அவருக்கே உரிய பணிவோடு உருக்கமாக ஒரு விளக்கம் அளித்திருக்கிறார். மஜித் அமைதியாகக் கவனித்துக்கொண்டிருக்கிறார்.

பொதுவாக, இப்படி மத அமைப்புகள் / மதத் தலைவர்களால் கலைஞர்கள் குறிவைக்கப்படும்போது, இந்தியாவில் அறிவுஜீவிகளிடமிருந்து வெளிவரும் எதிர்வினைகள் அலாதியானவை. மதவெறியர்கள் இந்துத்வர்கள் என்றால், அறிவுஜீவிகள் வர்க்கம் பாயும்; இஸ்லாமியத்துவர்கள் என்றால், கோமாவில் படுத்துவிடும். எரிகிற கொள்ளியில் நல்ல கொள்ளி, கெட்ட கொள்ளி என்ற வித்தியாசமெல்லாம் இருக்கிறதா என்ன? ரஹ்மான் - மஜிதி விவகாரமும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

ஒரு பிள்ளை போதுமா?


சீன அரசின் ஒரு குழந்தைக் கொள்கை சீக்கிரமே முடிவுக்கு வந்துவிடும் என்று தோன்றுகிறது. முன்னதாக 13-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் தொடக்கத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போதைய சீனப் பொருளாதாரத் தேக்கம் அதற்கு முன்னதாகவே, அந்த அறிவிப்பு வெளியாவதற்கான சாத்தியங்களைக் கட்டியம் கூறுகிறது.

பொருளாதார வளர்ச்சிக்காக மக்கள்தொகையைக் கட்டுக்குள் கொண்டுவருவது எனும் தாமஸ் ராபர்ட் மால்துஸின் மக்கள்தொகைக் கொள்கை பெரும்பாலான நாடுகளால் சுவீகரித்துக்கொள்ளப்பட்டது. எனினும், சீன கம்யூனிஸ்ட் அரசு 1979-ல் அறிவித்த ஒரு குழந்தைக் கொள்கை முன்னுதாரணமே இல்லாதது. மேலும், அதைச் செயல்படுத்த சீனா கையாண்ட வழிமுறைகள் எல்லோரையும் உறையவைத்தன.

ஒரு குழந்தைக் கொள்கையில் சில விதிவிலக்குகள் உண்டு. ஆனால், பெரும்பான்மை மக்களுக்கு அவற்றால் எந்தப் பயனும் இல்லை என்கிறார்கள். இந்த விஷயத்தில் சீனப் பெண்களுக்கு அவர்களுடைய கருப்பையின் மீது உரிமையே கிடையாது என்பதுதான் உண்மை. சீனப் பெண்கள் மாதவிடாய் சுழற்சியை அவரவர் பகுதியில் இருக்கும் சுகாதாரத் துறை அலுவலரிடம் தெரிவிக்க வேண்டியது கட்டாயம். சுகாதாரத் துறையினர் சந்தேகப்பட்டால், பரிசோதனை நடக்கும். விதி மீறப்பட்டிருப்பது தெரியவந்தால், கட்டாயக் கருக்கலைப்பு நடக்கும். 9 மாத, 8 மாதக் கர்ப்பங்கள் எல்லாம் கலைக்கப்படும் கொடூரம் சீனாவில் சகஜம். ஒரு குழந்தைத் திட்டத்தின் கீழ் 33.6 கோடி கருக்கலைப்புகள், 1.96 கோடி குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சைகளைச் செய்திருப்பதாகச் சில ஆண்டுகளுக்கு முன் சொன்னது சீன சுகாதாரத் துறை. இந்த அதிகாரபூர்வப் புள்ளிவிவரத்தைக் காட்டிலும் உண்மையான எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதேசமயம், இந்தக் காட்டுமிராண்டிக் கொள்கை அமலாக்கமெல்லாம் சாமானியர்களுக்குதான். ஒரு குழந்தைக் கொள்கையை மீறி குழந்தை பெற்றுக்கொள்பவர்கள், அவர்களுடைய ஆண்டு வருமானத்தைப் போல் 10 மடங்கு வரை அரசுக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்று ஒரு விதி உண்டு. பணக்காரர்கள் வெளியேற இந்த விதி ஓட்டை போதுமானதாக இருக்கிறது.

யாகூபைப் பின்தொடர்ந்த குரல்களை நாம் தவிர்க்க முடியுமா?


யிரக்கணக்கானோர் கூடிய யாகூப் மேமன் இறுதி ஊர்வலத்தைப் பத்தோடு ஒன்று பதினொன்று; அத்தோடு சேர்த்து இது ஒன்று என்று விட்டுவிட முடியுமா? இந்தியா அப்படி விட்டுவிட முடியாது என்று தோன்றுகிறது.