வரலாற்றுச் சிறப்புமிக்க
அந்த நாளில், அற்புதம்
அம்மாளைச் சந்திக்க முடியவில்லை; ஓரிரு நாட்கள் கழித்துச் சென்றபோது, வழக்கம்போல, மரண தண்டனைக்கு எதிரான புத்தகங்கள் கனக்கும் தோள்பையுடன்
கிளம்பியிருந்தார். “எம்
புள்ள மட்டும் இல்லப்பா, இன்னும் நெறையப் புள்ளைங்களைத் தூக்குக் கயித்துப் பிடிக்கு வெளியே
இழுத்துக்கிட்டு வர வேண்டியிருக்கு” என்றவர், வழியில் ஒரு பொரி பொட்டலத்தை வாங்குகிறார். “ரொம்ப அசத்தினா தவிர, நான் சாப்பாடு தேடுறதுல்ல; பல நாள் இந்தப் பொரிதான் நமக்குச் சாப்பாடு” என்கிறார் சிரித்துக்கொண்டே. நடந்துகொண்டே பேச
ஆரம்பித்தோம்.
ஜனநாயக அரசியல் என்பது வெகுஜன அரசியல்தானே?
ஒரு பொழுதாயினும் நீ என்னை அடித்தது கிடையாது. இருந்தும் உனது முகம்
சிவப்பதும் உரத்த குரலில் நீ கத்துவதும் வேகமாகக் காற்சட்டையைச் சரிசெய்வதும்.
இவையெல்லாம் ஒருத்தனைத் தூக்கிலிடுவதுபோல. தூக்கிலிட்டால் அவன் செத்துவிடுவான்.
எல்லாம் முடிந்துவிடும். ஆனால் தூக்கிலிடுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் அவனை
அருகிலிருந்து பார்க்க வைத்து, கழுத்துக்கு முன் கயிறு தொங்கும்
அந்தக் கணத்தில், ஆயுள் தண்டனை என அவனுக்குச்
சொல்வதைப் போல. வாழ்வு முழுதும் அவனை அந்த வலியில் துடிக்கவைப்பதைப் போல.”
- காஃப்கா தந்தைக்கு எழுதிய
கடிதத்தில்.
என்றும் அழியாத கோலம்
திடீரென்று அழைக்கிறார்: “இன்னைக்கு அலுவலகம் வர முடியுமா?”
பொதுவாக, சரியான நேரத்தைப் பின்பற்றுவார்
என்பதால், அவர் குறிப்பிட்டபடி சரியான நேரத்தில்
அங்கிருந்தேன். வழக்கத்துக்கு மாறாக அவருடைய நாற்காலியில் அமராமல், சோபாவில் அமர்ந்திருக்கிறார். நாற்காலியை இழுத்துப்போட்டு
அருகில் அமருமாறு சைகைசெய்கிறார்: “உடம்பு சரியில்லை, டாக்டரைப் போய்ப் பார்த்தேன். என்ன மருந்து எழுதினார்னு
தெரியலை. மாத்திரை முழுங்கினதிலேர்ந்து மயக்கமாவே இருக்கு” என்றவர், சத்யா என்பவரை அழைக்கிறார். சத்யா
வந்ததும் அவரிடம் சாப்பிட எடுத்துவரச் சொல்லி சைகை காட்டுகிறார். சத்யா அகன்றதும், “சத்யா என்னோட மகன் மாதிரி. தப்பு. அவன் என்னோட வளர்ப்பு
மகன்” என்கிறார். கொஞ்சம் இடைவெளி விட்டு, “சத்யா எம்.ஏ. தமிழ் இலக்கியம் படிச்சிருக்கான். டிரைவர்
வேலைக்குத்தான் என்கிட்ட வந்தான். ‘தமிழ் இலக்கியம் படிச்சுட்டு என்ன
செய்யப்போற’ன்னு கேட்டுட்டு, நான்தான் சினிமா கத்துக்கச் சொன்னேன். இப்போ சத்யா சினிமா
படிக்கிறான். அவனும் என்னுடைய மாணவன். ஏதோ, நம்மால முடிஞ்சது இப்படிப்பட்ட உதவிகள்தான்” என்கிறார்.
சத்யா ஒரு கோப்பையில் காய்கறி சூப்பைக் கொண்டுவந்து கொடுக்கவும், மெல்ல அதைக் கரண்டியால் எடுத்துச் சாப்பிட ஆரம்பிக்கிறார்.
அவருடைய கைகள் நடுங்கி, சட்டையில் சூப் சிந்துகிறது.
தொடர்ந்து ஒவ்வொரு முறை சூப்பை உறிஞ்ச வாய்க்குக் கொண்டுசெல்லும்போதும், சூப் சிந்துகிறது. ஆனால், அதை உணரவோ தடுக்கவோ அவரால் முடியவில்லை. நகரும் கணங்கள்
சங்கடமாக மாறுவதை உணர்ந்தவராக, அருகில் இருந்த ஒரு புகைப்படத்தைக்
கையில் எடுத்துக்கொடுத்து, “இந்தப் படத்தைப்
பார்த்திருக்கீங்களா?” என்கிறார்.
அது கொஞ்சம் அரிதான படம். ஒலிப்பதிவுக் கூடத்தில் கமலுக்கும் ஸ்ரீதேவிக்கும்
இடையில் அவர் ஓவெனக் கத்துவது போன்ற படம் அது. “‘மூன்றாம் பிறை’யில ஸ்ரீதேவி பயந்து கத்துவது மாதிரியான காட்சியில, எப்படிக் கத்தணும்னு நான் விளக்கினப்போ எடுத்த படம் இது.
ரவி எடுத்தது. ரவி எப்போ, எங்கேர்ந்து படம் எடுக்கிறார்னே
தெரியாது” என்பவருக்குள் இருக்கும்
புகைப்படக்காரர் வெளியே வருகிறார். “நான் ஸ்ரீதேவியை எடுத்த படத்தை நீங்க பார்க்கணுமே…” என்றவர் கொஞ்சம் உற்சாகம் வந்தவராக, மெல்ல எழுந்து, படங்கள் தொங்கும் அறைக்கு அழைத்துச் செல்கிறார்.ஸ்ரீதேவியின் அற்புதமான ஒரு
படத்தைக் காட்டுகிறார்: “என்னா அழகு!”
கூடவே அங்கு மாட்டப்பட்டிருக்கும் ஏராளமான படங்களிடையே ரஜினியோடு நிற்கும் ஒரு
படத்தைக் காட்டுகிறார். பாலு மகேந்திராவும் ரஜினியும் நின்றுகொண்டிருக்க, அவர்கள் அருகே கீழே அமர்ந்திருக்கும் மாதவி பாலு மகேந்திராவை
ரசித்துப் பார்க்கும் படம் அது.
“தனுஷ் இங்கே வந்தப்போ இந்தப்
படத்தைப் பார்த்தார். ‘சார்... மாதவியோட பார்வையைப்
பாருங்க சார்... எங்க மாமனாரைப் பார்க்கலை; உங்களையே பார்க்கிறாங்க'னு சொன்னார். அப்புறம்தான் கவனிச்சேன். மாதவி என்னைத்தான்
பார்த்துக்கிட்டுருக்கார்; இல்லையா?” - சிரிக்கிறார்.
“அந்தக் காலத்தில் அட்டகாசமாக
இருந்திருக்கிறீர்கள் சார்…”
“ஏன், இப்போது மட்டும் என்னவாம்?” மீண்டும் சிரிப்பு.
“எல்லோர் படமும் இருக்கு. சில்க்
ஸ்மிதா படம் இல்லையே?”
“ஏன் இல்லை? என் மனசுல இருக்கு” என்கிறவர் கொஞ்சம் இடைவெளிவிட்டு,“சில்க் பேரழகி. அவளோட முகம், உடல், கால்கள்... சில்க் பேரழகி. அவளுடைய
உதட்டுச் சுழிப்பு போதுமே... கவர்ச்சிக்கும்
கிறக்கத்துக்கும். அத்தனை சக்தி உண்டு அவ அழகுக்கு. ”
“ஸ்ரீதேவியைவிடவும் சில்க் அழகா?”
“ஆமாம். திராவிட அழகோட உச்சம்
இல்லையா அவ?ஸ்ரீதேவியும் அழகிதான். ஆனா, அவளோட சிவப்பு நிறம் திகட்டக்கூடியது. சில்க் அப்படி அல்ல” என்றவர், அப்படியே சில நிமிஷங்கள் யோசனையில்
ஆழ்கிறார். “ஒரு பேரழகிங்கிறதைத் தாண்டி எத்தனை
அற்புதமான ஆன்மா அவள்? அப்படி ஒரு முடிவு அவளுக்கு
ஏற்பட்டிருக்கக் கூடாது. நல்ல ஆன்மாக்கள் நம்மகிட்ட நீண்ட நாளைக்கு நீடிக்க
முடியாமல்போறது ஒரு சாபக்கேடு” என்கிறார். பேச்சு அவருடைய பழைய
படங்கள், நண்பர்களைப் பற்றிச் செல்லும்
வேளையில், ஷோபாவிடம் போய் நிற்கிறது.
மீண்டும் யோசனையில் ஆழ்கிறார். “உங்களுக்கு ஒரு கனவு வரும்போது அதுல சந்தோஷமான, துக்கமான, குழப்பமான, நிம்மதியில்லாத இப்படி எல்லா உணர்வுகளும் அதிலே இருக்கும், இல்லையா? அப்படி ஒரு கனவு ஷோபா. வேறென்ன
சொல்ல?” என்றவர் இரும ஆரம்பிக்கிறார்.
சத்யாக்களைவிடவும் நாராயணமூர்த்திகளே இந்தியாவுக்குத் தேவை!
![]() |
சத்யா நாதெள்ள |
உலகின் பெரும் பணக்காரராக பில் கேட்ஸை உட்காரவைத்த இடம், உலகெங்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட, ஆண்டுக்கு ரூ. 4.8 லட்சம் கோடி வருமானம் வரும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக பீடம், ‘மைக்ரோ சாஃப்ட்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பணியிடம். அதில் உட்காருகிறார் சத்யா நாதெள்ள. ‘பெப்சிகோ’ நிறுவனத்தின் இந்திரா நூயி, ‘டாய்ச் வங்கி’யின் அன்ஷு ஜெயின், ‘டீயாஜீயோ’ நிறுவனத்தின் இவான் மெனிஸிஸ், ‘ரெக்கிட் பென்கிஸர்’ நிறுவனத்தின் ராகேஷ் கபூர், ‘பெர்க்ஷைர் ஹாத்வே’ நிறுவனத்தின் அஜித் ஜெயின் என ஏற்கெனவே சில பன்னாட்டுப் பெருநிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி பணியிடங்களில் இந்தியர்கள் பணியாற்றிவந்தாலும், சத்யா நாதெள்ள தேர்வு பெரும் செய்தியாகியிருக்கிறது. ஆண்டுக்கு
ரூ. 16.65 லட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யும் இந்தியா
போன்ற ஒரு நாட்டில், ரூ. 19.05 லட்சம் கோடி மதிப்பு கொண்ட ‘மைக்ரோ சாஃப்ட்’ நிறுவனத்தின் தலைமைப் பதவி ஏற்படுத்தும் பிரமாண்டமான
பிம்பம் பிரமிக்கத் தக்கது அல்ல.
சத்யா கொண்டாடப்பட
வேண்டியவர். சரிதான். ஆனால், நாம் பேச வேண்டிய விஷயம் அதுவல்ல; இப்படிப்பட்ட அபாரமான மூளைகளின் உழைப்பும் திறனும் ஏன்
இந்தியாவுக்குப் பயன்படவில்லை?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)