மீண்டும் ஒரு பயணம் - மனிதர்கள்

மீண்டும் ஒரு பயணம். வயலில், மலையில், காட்டில், கடலில்… நடைபாதையில், சாலையோரங்களில், ரயிலடிகளில்… பள்ளிக்கூடங்களில், மருத்துவமனைகளில், தொழிற்சாலைகளில்…

‘மனிதர்கள்!’ சகஜீவிகளை நோக்கிச் செல்லும் பயணம் இது. நம் பக்கத்து வீட்டில், எதிர்வீட்டில் வாழக் கூடியவர்கள், பயணத்தில் கடக்கும்போது நம் கண்ணில் படக்கூடியவர்கள், சட்டென ஒருகணம் வந்து யார் என்று யோசிக்கும் முன் மறைந்துவிடக் கூடியவர்கள், நாம் நினைத்தால் தோழமையுடன் தோள் மீது கை போட்டுக்கொள்ளக் கூடியவர்கள், நம்மைப் போலவே பிழைப்புக்காக ஓடிக்கொண்டிருப்பவர்கள், ஆனால், ஏதோ ஒருவகையில், நம் ஒவ்வொருவரின் உலகத்துடனும் பிணைக்கப் பட்டவர்கள், ஏதோ ஒரு வகையில், நம் வாழ்க்கைக்கு முக்கியமான பங்களிப்பைச் செய்பவர்கள், நமக்கு மிக நெருக்கமானவர்களை நெருங்கிச் செல்லும் பயணம் இது.

ஒரு மடக்கு தண்ணீர் நம் வாயைத் தேடி வர எத்தனை முகமற்ற மனிதர்களின் உழைப்பைக் கடக்க வேண்டியிருக்கிறது என்பதை நாம் யோசிப்பது இல்லை. சமூக வாழ்க்கையின் அடிப்படைக் கல்வி சக உயிரைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதில் இருந்தே தொடங்குகிறது என்றால், இந்தப் பயணம் ஒருவகையில் அப்படிப்பட்ட முயற்சி!

அக். 2015, ‘தி இந்து’

4 கருத்துகள்:

  1. சாதாரண மனிதர்களுக்கு தங்கள் எழுத்தின் மூலம் சாகாவரம் அளிக்கும் தங்களது இந்த முயற்சிக்கு தலைவணங்குகின்றேன்.

    பதிலளிநீக்கு
  2. சாதாரண மனிதர்களுக்கு தங்கள் எழுத்தின் மூலம் சாகாவரம் அளிக்கும் தங்களது இந்த முயற்சிக்கு தலைவணங்குகின்றேன்.

    பதிலளிநீக்கு
  3. பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி.
    thanku
    latha


    பதிலளிநீக்கு
  4. பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி.
    thanku
    jobs

    பதிலளிநீக்கு